சினிமா

தீயாக தொடங்கிய நெருப்புடா படப்பிடிப்பு

Published On 2016-07-11 06:51 GMT   |   Update On 2016-07-11 06:51 GMT
விக்ரம் பிரபு நடிக்கவுள்ள ‘நெருப்புடா’ படத்தின் படப்பிடிப்பு இன்று தீயாக தொடங்கியுள்ளது. அதுகுறித்து பார்ப்போம்...
ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ‘கபாலி’ படத்தின் பாடல் தலைப்பான ‘நெருப்புடா’ என்ற தலைப்பை தனது அடுத்த படத்தின் தலைப்பாக வைத்துள்ளார் விக்ரம் பிரபு. இப்படத்தின் பூஜை சமீபத்தில் சென்னையில் சிவாஜியின் அன்னை இல்லத்தில் கோலாகலமாக நடந்தது.

இப்படத்தின் பூஜையின் போதே விக்ரம் பிரபு, தனது புதிய தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கினார். பர்ஸ்ட் ஆர்ட்டிஸ்ட் என்ற தயாரிப்பு நிறுவனம் சார்பில் இந்த படத்தை விக்ரம் பிரபு தயாரிக்கவும் செய்கிறார். இந்த தயாரிப்பு நிறுவனம் மற்றும் படப்பூஜையில் திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு விக்ரம் பிரபுவுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், ‘நெருப்புடா’ படத்தின் படப்பிடிப்பை இன்று சென்னையில் படக்குழுவினர் தீயாக தொடங்கியுள்ளனர். கண்ணகி நகரில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்படத்தில் விக்ரம் பிரபு தீயணைப்பு வீரராகவும் ரஜினி ரசிகராகவும் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடிக்கிறார். அசோக் குமார் இயக்குகிறார்.

Similar News