சினிமா
தஞ்சை கோவிலில் பூஜை செய்துவிட்டு சத்யநாராயணா வெளியே வந்தபோது எடுத்த படம்

நதிநீர் இணைப்புக்கு ரஜினி ரூ. 1 கோடி நிதி உதவி: தஞ்சையில் அவரது அண்ணன் சத்யநாராயணா பேட்டி

Published On 2016-06-27 08:19 GMT   |   Update On 2016-06-27 08:19 GMT
நதிநீர் இணைப்புக்கு ரஜினி ரூ. 1 கோடி நிதி உதவி செய்ய முடிவெடுத்துள்ளதாக தஞ்சையில் அவரது அண்ணன் சத்யநாராயணா பேட்டி அளித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்தின் அண்ணன் சத்யநாராயணா இன்று குடும்பத்துடன் தஞ்சை வந்தார். அவர் பெரிய கோவிலில் சிறப்பு பூஜை செய்தார். பின்னர் வெளியே வந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

ரஜினியின் ‘கபாலி’ படம் வெற்றி பெற தஞ்சை பெரிய கோவில், திருநாகேஸ்வரம் கோவில்களில் சிறப்பு பூஜை செய்ய வந்துள்ளேன். அரசியல் பற்றி சொல்ல விரும்பவில்லை. அவர் (ரஜினி) தான் சொல்ல வேண்டும்.

நதி நீர் திட்டம் செயல்படுத்தப்படுவதாக அறிவித்து உள்ளனர். இதற்காக ரஜினிகாந்த் ரூ. 1 கோடி டெபாசிட் செய்து வைத்துள்ளார். அவர் ஒரு தடவை சொன்னது சொன்னதுதான்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News