சினிமா

கவர்ச்சியாக நடித்தாலும் நல்ல கதைக்கே முதல் இடம்: ஐஸ்வர்யா மேனன்

Published On 2016-06-17 12:05 GMT   |   Update On 2016-06-17 12:05 GMT
மலையாள நடிகை ஐஸ்வர்யா மேனன், கவர்ச்சியாக நடித்தாலும் நல்ல கதைக்கே முதல் இடம் என்று கூறியிருக்கிறார்.
எல்ரெட்குமார் தயாரிக்கும் ‘வீரா’ படத்தில் கிருஷ்ணா நாயகனாக நடிக்கிறார். இதில் நாயகியாக அறிமுகமாகி இருப்பவர் மலையாள நடிகை ஐஸ்வர்யா மேனன்.

மலையாளத்தில் ஒரு சில படங்களில் நடித்துள்ள ஐஸ்வர்யா மேனன் முதன் முதலில் தமிழ் படத்தில் நடிப்பது பற்றி கூறுகிறார்....

“தமிழில் நல்ல படத்தில் நடிக்க வேண்டும் என்று விரும்பினேன். பல கதைகளை கேட்டேன். நல்ல கதை என்பதால் இதில் நடிக்கிறேன். வடசென்னை பகுதியில் நடைபெறுவது போன்ற கதை. இதில் வடசென்னை பெண்ணாக நடித்திருக்கிறேன். என்றாலும், முழுக்க, முழுக்க குடிசை பகுதி பெண்ணாக இல்லாமல் சராசரி ‘கெட்அப்’ல் வருகிறேன்.

இந்த படத்தில் சென்னை தமிழ்பேசி நடிக்கிறேன். பாடல் காட்சிகளில் கவர்ச்சியாக நடித்திருக்கிறேன். ஆனால், எனது நடிப்புத்திறமையை காட்ட நிறைய வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்த படம் எனக்கு திருப்புமுனை படமாக அமையும். ‘வீரா’ திரைக்கு வரும்போது நிச்சயம் நான் தமிழ் ரசிகர்களால் பேசப்படும் நடிகையாக இருப்பேன்.

பெரும்பாலான படப்பிடிப்பு முடிந்துவிட்டது. விரைவில் ‘வீரா’ திரைக்கு வரும். தமிழில் இந்த படத்தில் நடித்த போது தெலுங்கிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இப்போது ஒரு தெலுங்கு படத்திலும் நடிக்கிறேன். அதிலும் ஓரளவு கவர்ச்சி காட்டி நடிக்கிறேன். என்றாலும், எனது நடிப்புத்திறமையை காட்ட வாய்ப்புள்ள கதைகளுக்கே முதல் இடம் கொடுப்பேன்” என்றார்.

Similar News