சினிமா

அம்மாயி வித்தியாசமான பேய் கதை: வரலட்சுமி பேட்டி

Published On 2016-06-10 07:54 GMT   |   Update On 2016-06-10 07:54 GMT
‘அம்மாயி’ படம் மற்ற பேய் படங்களை போல் இல்லாமல் வித்தியாசமான பேய் படமாக இருக்கும் என்று வரலட்சுமி பேட்டி அளித்துள்ளார்.
‘தாரை தப்பட்டை’ படத்திற்கு வரலட்சுமி தமிழில் ‘அம்மாயி’ என்ற பேய் படத்தில் நடிக்கவிருக்கிறார். வினய் கதநாயகனாக நடிக்கவிருக்கும் இப்படத்தை சங்கர் என்ற புதுமுக இயக்குனர் இயக்குகிறார். இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. இந்நிலையில், முதன்முறையாக பேய் படத்தில் நடிப்பது குறித்து வரலட்சுமி அளித்த பேட்டி வருமாறு:-

நான் இப்போது வெளிநாட்டில் இருக்கிறேன். என்னால் ‘அம்மாயி’ படத்தின் படப்பிடிப்பு தொடக்கவிழாவில் கலந்துகொள்ள முடியவில்லை. இதற்காக வருந்துகிறேன். என்னை நம்பி இந்த கதாபாத்திரத்தை எனக்கு கொடுத்த இயக்குனர் சங்கருக்கு நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இளையராஜா சாரோடு மீண்டும் இணைந்து பணியாற்றுவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுக்கிறது. வினய் என்னுடைய சிறந்த நண்பர். அவருடன் இணைந்து பணியாற்றுவதற்காக காத்திருக்கிறேன்.

கதையை பற்றி சொல்ல வேண்டுமென்றால், இது மற்ற பேய் படங்களைப் போல் இல்லாமல் வித்தியாசமான பேய் கதையாக இருக்கும். அழகான கதை, ரசிகர்கள் கண்டிப்பாக இதை ரசிப்பார்கள். நிறைய டுவிஸ்டுகள், நிறைய திருப்புமுனைகள், நிறைய சர்ப்ரைஸ் இருக்கும். நான் இந்த கதையை கேட்கும்போதே மிகவும் ரசித்து கேட்டேன். விரைவில் இந்த படக்குழுவுடன் இணைய காத்திருக்கிறேன் என்று கூறினார்.

Similar News