சினிமா

விளம்பர படங்களில் 40 நாட்கள் நடிக்க பிரியங்கா சோப்ராவுக்கு ரூ.100 கோடி சம்பளம்

Published On 2016-05-26 03:50 GMT   |   Update On 2016-05-26 03:50 GMT
இந்தி நடிகைகள் சம்பள தொகை பல கோடி உயர்ந்துள்ளது. பிரியங்கா சோப்ரா 24 விளம்பர படங்களில் 40 நாட்கள் நடிக்க ரூ.100 கோடி வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தி பட கதாநாயகிகள் தமிழ், தெலுங்கு, மலையாள நடிகைகளை விட பல மடங்கு சம்பளம் வாங்குகிறார்கள்.

தென்னிந்திய நடிகைகளில் கூடுதல் சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியலில் நயன்தாரா முதல் இடத்தில் இருக்கிறார். அவர் ஒரு படத்துக்கு ரூ.2.50 கோடி வாங்குகிறார். ஆனால் இந்தியில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் கங்கனா ரனாவத் ஒரு படத்துக்கு வாங்கும் சம்பளம் ரூ.11 கோடி.

இரண்டாவது இடத்தில் இருக்கும் கரீனா கபூர் ஒரு படத்துக்கு ரூ.10 கோடி வாங்குகிறார். தீபிகா படுகோனே, பிரியங்கா சோப்ரா ஆகியோர் தலா ரூ. 9 கோடியும் வித்யாபாலன், கத்ரினா கைப் ஆகியோர் தலா ரூ.7 கோடியும் அனுஷ்கா சர்மா ரூ.6 கோடியும் அலியாபட் ரூ.5 கோடியும் சோனாக்சி சின்ஹா ரூ.4 கோடியும் சம்பளம் வாங்குகிறார்கள்.

இது தவிர விளம்பர படங்களில் நடித்தும் கோடி கோடியாய் சம்பாதிக்கிறார்கள். சில நடிகைகள் சினிமாவை விட விளம்பர படங்களுக்கு அதிக சம்பளம் வாங்குகிறார்கள்.

பிரியங்கா சோப்ரா ஒரே நேரத்தில் 24 விளம்பர படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். இந்த படங்களில் நடிக்க அவர் ரூ.100 கோடி சம்பளம் பேசி இருப்பதாக இந்தி பட உலகில் தகவல் பரவி உள்ளது.

பழரச பானங்கள் தயாரிக்கும் நிறுவனம், நகைக்கடைகள், தனியார் விமான கம்பெனி, ஆன் லைன் வர்த்தக கம்பெனிகள் போன்றவை இதில் அடக்கம்.

பழரச பானம் தயாரிக்கும் நிறுவனம் மட்டும் பிரியங்கா சோப்ராவுக்கு ரூ.6 கோடி கொடுத்து விளம்பர படத்தில் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த விளம்பர நிறுவனங்களுக்கான படப்பிடிப்பு மும்பையில் தற்போது நடந்து வருகிறது.

40 நாட்கள் இந்த நிறுவனங்களுக்கு கால்சீட் கொடுத்து பிரியங்கா சோப்ரா நடித்து வருகிறார். இதுபோல் மற்ற நடிகைகளும் விளம்பர படங்களில் நடிக்க கோடிகோடியாய் வாங்குகிறார்கள்.

Similar News