ஆன்மிக களஞ்சியம்

பங்குனி உத்திர நாளில் பக்தர்களை தேடி வரும் சிவனும் அம்பிகையும்

Published On 2024-03-24 05:59 GMT   |   Update On 2024-03-24 05:59 GMT
  • பொதுவாக பக்தர்கள் திருவிழா நாட்களில் தெய்வ தரிசனம் காண ஆலயங்களுக்கு செல்வது வழக்கம்.
  • முஸ்லீம்கள் கூட சிவாலய விழாக்களுக்கு வருவது உண்டு!

பொதுவாக பக்தர்கள் திருவிழா நாட்களில் தெய்வ தரிசனம் காண ஆலயங்களுக்கு செல்வது வழக்கம்.

ஆனால் தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி சிவாலயத்தில் பங்குனி உத்திர நாளில் சிவனும், அம்பிகையும் மக்கள் இருக்கும் இடங்களுக்கு வரும் புதுமை நடந்து வருகிறது.

பங்குனி உத்திர நாளன்று காவிரிஆற்று மணலில் வீற்றிருக்கும் தெய்வங்களுக்கு விசேஷ அலங்காரங்களும், அபிஷேக ஆராதனைகளும் செய்யப்படுகின்றன.

விழாநாளில் சில பக்தர்கள் நாவில் அலகு குத்திக் கொள்கிறார்கள்.

வேறு சிலர் தீ மதிக்கிறார்கள்.

இந்த ஊரில் பல ஜாதி, மதத்தைச் சார்ந்தவர்கள் ஒற்றுமையோடு வாழ்ந்து வருவதால் இவ்வாலயத்தில் நடைபெறும் திருவிழாக்களுக்கு அனைவரும் மத வேறுபாடு இல்லாமல் வருகிறார்கள்.

முஸ்லீம்கள் கூட சிவாலய விழாக்களுக்கு வருவது உண்டு!

Tags:    

Similar News