செய்திகள்
மகளிர் போலீஸ் நிலையம் முன்பு ‘டிக்- டாக்’ வீடியோ எடுத்த 3 வாலிபர்கள் கைது
வேதாரண்யம் மகளிர் போலீஸ் நிலையம் முன்பு ‘டிக்- டாக்’ வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பிய 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே நெய்விளக்கு கிராமத்தை சேர்ந்தவர்கள் அசோகன் (வயது 22), ஆனந்த் (22), பத்மநாபம் (31).
இவர்கள் 3 பேரும் வேதாரண்யம் மகளிர் போலீஸ் நிலையம் முன்பு வாசலில் நடந்து வருவதை போன்றும், போலீஸ் ஜீப் அருகே நின்று கொண்டு அவதூறாக பேசி கொண்டு இருப்பது போன்றும் செல்போனில் வீடியோ எடுத்தனர். பின்னர் அந்த வீடியோவை ‘டிக்- டாக்’ சமூக வலைத்தள செயலியில் பதிவிட்டனர்.
இதனால் வேதாரண்யம் பகுதியில் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதால் பரபரப்பு ஏற்படுத்தியது. இதுபற்றிய தகவல் வேதாரண்யம் போலீசாருக்கும் தெரிய வந்தது.
மேலும் ‘டிக்-டாக்’ செயலியில் வீடியோ பதிவிட்ட வாலிபர்கள் அசோகன், ஆனந்த், பத்மநாபம் ஆகியோரை கைது செய்தனர்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே நெய்விளக்கு கிராமத்தை சேர்ந்தவர்கள் அசோகன் (வயது 22), ஆனந்த் (22), பத்மநாபம் (31).
இவர்கள் 3 பேரும் வேதாரண்யம் மகளிர் போலீஸ் நிலையம் முன்பு வாசலில் நடந்து வருவதை போன்றும், போலீஸ் ஜீப் அருகே நின்று கொண்டு அவதூறாக பேசி கொண்டு இருப்பது போன்றும் செல்போனில் வீடியோ எடுத்தனர். பின்னர் அந்த வீடியோவை ‘டிக்- டாக்’ சமூக வலைத்தள செயலியில் பதிவிட்டனர்.
இதனால் வேதாரண்யம் பகுதியில் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதால் பரபரப்பு ஏற்படுத்தியது. இதுபற்றிய தகவல் வேதாரண்யம் போலீசாருக்கும் தெரிய வந்தது.
இதையடுத்து வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார்.
கைதான 3 வாலிபர்களை படத்தில் காணலாம்
மேலும் ‘டிக்-டாக்’ செயலியில் வீடியோ பதிவிட்ட வாலிபர்கள் அசோகன், ஆனந்த், பத்மநாபம் ஆகியோரை கைது செய்தனர்.