செய்திகள்

இலங்கையில் விடுதலையான 16 மீனவர்கள் சென்னை திரும்பினர்

Published On 2019-01-09 10:27 GMT   |   Update On 2019-01-09 10:27 GMT
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு, விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 16 பேர் விமானம் மூலம் சென்னை திரும்பினர். #Fishermen

ஆலந்தூர்:

கடந்த ஆகஸ்டு மாதம் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தூத்துக்குடி, ராமேஸ்வரத்தை சேர்ந்த 16 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மத்திய-மாநில அரசுகளின் முயற்சியால் நேற்று விடுதலை செய்யப்பட்டனர்.

விடுதலையான 16 பேரும் இன்று விமானம் மூலம் சென்னை திரும்பினார்கள். அவர்களை விமான நிலையத்தில் மீனவ சங்கத்தினர் வரவேற்றனர். #Fishermen

Tags:    

Similar News