செய்திகள்
டெல்லியில் இரு தரப்பினருக்கு இடையே மோதல் - 2 பேர் சுட்டுக்கொலை
டெல்லியின் பரபரப்பான பகுதியில் இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
புது டெல்லி:
டெல்லியின் பரபரப்பான பகுதியான துவாரகா மோர் மெட்ரோ ரெயில்வே நிலையத்தின் அருகில் நேற்று மாலை சொத்து பிரச்சனையின் காரணமாக இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
இதில் ஒரு காரில் 3 பேர் வந்துள்ளனர். மற்றொரு காரில் வந்த பிரவீன் கெலோட் என்பவரை, சினிமாவில் வருவது போல் சேஸ் செய்து துப்பாகிச் சூடு நடத்தினர். பதிலுக்கு பிரவீனும், அவருடன் இருந்தவர்களும் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இரு தரப்பினரும் 15 முறைக்கு மேலாக துப்பாக்கியால் சண்டைப்போட்டுக் கொண்டனர்.
இந்த துப்பாகிச் சூட்டில் ஈடுபட்ட மேலும் 2 பேர் தப்பியோடினர். அவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும், விரைவில் கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் போலீசார் கூறியுள்ளனர்.
டெல்லியின் பரபரப்பான பகுதியான துவாரகா மோர் மெட்ரோ ரெயில்வே நிலையத்தின் அருகில் நேற்று மாலை சொத்து பிரச்சனையின் காரணமாக இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
இதில் ஒரு காரில் 3 பேர் வந்துள்ளனர். மற்றொரு காரில் வந்த பிரவீன் கெலோட் என்பவரை, சினிமாவில் வருவது போல் சேஸ் செய்து துப்பாகிச் சூடு நடத்தினர். பதிலுக்கு பிரவீனும், அவருடன் இருந்தவர்களும் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இரு தரப்பினரும் 15 முறைக்கு மேலாக துப்பாக்கியால் சண்டைப்போட்டுக் கொண்டனர்.
டெல்லியின் டிராபிக் அதிகமாக இருக்கும் பகுதியில் ஏற்பட்ட இந்த மோதலை, அப்பகுதியில் பிசிஆர் வாகனத்தில் வந்த போலீசார் தடுக்க முற்பட்டனர். தடுக்க முடியாத நிலையில், போலீசாரும் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இதில் டெல்லி, அரியானாவில் பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய பிரவீன் கெலோட், விகாஸ் தலால் ஆகிய இருவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்த துப்பாகிச் சூட்டில் ஈடுபட்ட மேலும் 2 பேர் தப்பியோடினர். அவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும், விரைவில் கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் போலீசார் கூறியுள்ளனர்.