ஆன்மிகம்

வீரக்குறிச்சி புனித அந்தோணியார் ஆலயத்தில் 21-ந்தேதி தேர்பவனி

Published On 2019-05-18 03:18 GMT   |   Update On 2019-05-18 03:18 GMT
பட்டுக்கோட்டையை அடுத்த வீரக்குறிச்சி சுக்கிரன்பட்டியில் உள்ள புனித அந்தோணியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு வருகிற 21-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) இரவு தேர்பவனி நடைபெற உள்ளது.
பட்டுக்கோட்டையை அடுத்த வீரக்குறிச்சி சுக்கிரன்பட்டியில் உள்ள புனித அந்தோணியார் ஆலய திருவிழா கடந்த 15-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து இந்த திருவிழா நடந்து வருகிறது.

வருகிற 21-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) இரவு தேர்பவனியும், 22-ந் தேதி (புதன்கிழமை) இரவு மின் அலங்காரத்துடன் புனித அந்தோணியார் பெரிய தேர்பவனியும் நடக்கிறது. 21, 22-ந் தேதிகளில் இன்னிசை கச்சேரி, கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. 
Tags:    

Similar News