ஆன்மிகம்

கல்லக்குடியில் புனித சவேரியார் ஆலய சப்பர பவனி

Published On 2019-06-05 03:26 GMT   |   Update On 2019-06-05 03:26 GMT
கல்லக்குடியில் உள்ள புனித சவேரியார் ஆலயத்தில் இந்தாண்டுக்கான திருவிழா நடந்தது. இதில் திராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
கல்லக்குடியில் உள்ள புனித சவேரியார் ஆலயத்தில் ஆண்டுதோறும் மே மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்தாண்டும் திருவிழா நடந்தது.

இந்நிலையில் மழை வேண்டியும், உலக நன்மைக்காகவும் கிராம மக்கள் சார்பில் புனித சவேரியார் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. தொடர்ந்து கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக மாதா சொரூபம் தாங்கிய வேண்டுதல் சப்பர பவனி நடைபெற்றது. இதில் கல்லக்குடி, பளிங்காநத்தம், முதுவத்தூர், மேலரசூர், வரகுப்பை பகுதிகளில் இருந்து ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

இதற்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை அடைக்கலராஜ், கிராம பட்டையதாரர்கள், லயன் சங்க தலைவர் ஜான் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News