ஆன்மிகம்

சொக்கன்குடியிருப்பு அதிசய மணல்மாதா ஆலய தேர்ப்பவனி

Published On 2018-09-18 03:19 GMT   |   Update On 2018-09-18 03:19 GMT
திசையன்விளை அருகே செம்மண் தேரியால் சூழப்பட்ட சொக்கன்குடியிருப்பு அதிசய மணல் மாதா ஆலய தேர்ப்பவனி நடைபெற்றது.
திசையன்விளை அருகே செம்மண் தேரியால் சூழப்பட்ட சொக்கன்குடியிருப்பு அதிசய மணல் மாதா ஆலய திருவிழா கடந்த 7-ந் தேதி சேவியர் டெரன்ஸ் தலைமையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் மன்றாட்டு மாலையும், திருப்பலியும் நடந்தது. 9-ம் திருநாளன்று மாலையில் தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் இவோன் அம்புரோஸ் தலைமையில் சிறப்பு மாலை ஆராதனையும், அன்னையின் தேர்ப்பவனியும் நடந்தது. 10-ம் திருநாள் காலையில் திருவிழா கூட்டு திருப்பலி நடந்தது.

நேற்று காலையில் நன்றி திருப்பலி நடந்தது. விழாவில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். திருவிழா ஏற்பாடுகளை சொக்கன்குடியிருப்பு பங்குத்தந்தை மைக்கிள் ஜெகதீஸ் மற்றும் பங்கு நிதிக்குழுவினர், பங்கு இறை மக்கள் செய்திருந்தனர். 
Tags:    

Similar News