என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
ஆசிய கோப்பை பெண்கள் கிரிக்கெட்: இந்திய அணியிடம் பாகிஸ்தான் தோல்வி
Byமாலை மலர்30 Nov 2016 4:17 AM GMT (Updated: 30 Nov 2016 4:17 AM GMT)
பாங்காக்கில் நடந்து வரும் ஆசிய கோப்பை பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியிடம் பாகிஸ்தான் தோல்வி அடைந்தது.
பாங்காங் :
ஆசிய கோப்பை பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பாங்காக்கில் நடந்து வருகிறது. டிசம்பர் 4-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், நேபாளம், தாய்லாந்து ஆகிய 6 நாடுகள் கலந்து கொண்டுள்ளன.
இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் ஆட்டங்கள் முடிவில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும். இந்த போட்டியில் நேற்று நடந்த 7-வது லீக் ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 97 ரன்கள் எடுத்தது. பின்னர் 98 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இந்திய அணி 19.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 98 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி தொடர்ந்து பெற்ற 3-வது வெற்றி இதுவாகும்.
2 ஆட்டங்களில் தொடர்ந்து வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி சந்தித்த முதல் தோல்வி இது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆசிய கோப்பை பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பாங்காக்கில் நடந்து வருகிறது. டிசம்பர் 4-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், நேபாளம், தாய்லாந்து ஆகிய 6 நாடுகள் கலந்து கொண்டுள்ளன.
இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் ஆட்டங்கள் முடிவில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும். இந்த போட்டியில் நேற்று நடந்த 7-வது லீக் ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 97 ரன்கள் எடுத்தது. பின்னர் 98 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இந்திய அணி 19.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 98 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி தொடர்ந்து பெற்ற 3-வது வெற்றி இதுவாகும்.
2 ஆட்டங்களில் தொடர்ந்து வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி சந்தித்த முதல் தோல்வி இது என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X