என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
அக்டோபர் இறுதிக்குள் போட்டிக்கு திரும்புவேன்: சாய்னா நேவால் நம்பிக்கை
Byமாலை மலர்28 Sep 2016 1:28 PM GMT (Updated: 28 Sep 2016 1:28 PM GMT)
காயம் காரணமாக ஓய்வு எடுத்து வந்த பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால், அக்டோபர் இறுதிக்குள் போட்டிக்கு திரும்புவதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஐதராபாத்:
ஒலிம்பிக் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் தொடக்க சுற்றுடன் அதிர்ச்சிகரமாக வெளியேறிய இந்திய வீராங்கனை சாய்னா நேவால், வலது கால் மூட்டு காயத்தால் பாதிக்கப்பட்டார். முட்டுப்பகுதியில் வீக்கம் ஏற்பட்டதால் தன்னால் இயல்பாக விளையாட முடியாமல் போனதாக சாய்னா வேதனையுடன் கூறினார்.
இந்த நிலையில் சாய்னா ஐதராபாத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் கடந்த மாதம் அனுமதிக்கப்பட்டார். காயத்தால் அவதிப்பட்ட அவருக்கு முழங்கால் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து மூன்று முதல் நான்கு மாதங்களுக்கு கட்டாயம் ஓய்வு எடுக்க வேண்டும் மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.
இதனால், அடுத்த 4 மாதங்களுக்கு சாய்னா நேவால் போட்டிகளில் கலந்து கொள்ள வாய்ப்பு இல்லை என்று கூறப்பட்டது.
இந்த நிலையில், காயம் காரணமாக ஒய்வு எடுத்து வந்த பேட்மிண்டன் சாய்னா நேவால், அக்டோபர் இறுதிக்குள் போட்டிக்கு திரும்புவதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-
அக்டோபர் இறுதி வரை முழுமையாக குணமடைய வாய்ப்பில்லை. அதனால், அதுவரையிலான போட்டிகளில் கலந்து கொள்ள முடியாத நிலை உள்ளது. தற்போது நான் உலக தரவரிசையில் 8-வது இடத்தில் உள்ளேன். இந்த இடம் மேலும் சரியலாம்.
குணமடைந்து விட்டால் நவம்பர் மாதங்களில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்ளலாம். நன்றாக உள்ளேன். மருத்துவர்களின் ஆலோசனைகளை பெற்று வருகிறேன்.
இவ்வாறு சாய்னா தெரிவித்தார்.
ஒலிம்பிக் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் தொடக்க சுற்றுடன் அதிர்ச்சிகரமாக வெளியேறிய இந்திய வீராங்கனை சாய்னா நேவால், வலது கால் மூட்டு காயத்தால் பாதிக்கப்பட்டார். முட்டுப்பகுதியில் வீக்கம் ஏற்பட்டதால் தன்னால் இயல்பாக விளையாட முடியாமல் போனதாக சாய்னா வேதனையுடன் கூறினார்.
இந்த நிலையில் சாய்னா ஐதராபாத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் கடந்த மாதம் அனுமதிக்கப்பட்டார். காயத்தால் அவதிப்பட்ட அவருக்கு முழங்கால் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து மூன்று முதல் நான்கு மாதங்களுக்கு கட்டாயம் ஓய்வு எடுக்க வேண்டும் மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.
இதனால், அடுத்த 4 மாதங்களுக்கு சாய்னா நேவால் போட்டிகளில் கலந்து கொள்ள வாய்ப்பு இல்லை என்று கூறப்பட்டது.
இந்த நிலையில், காயம் காரணமாக ஒய்வு எடுத்து வந்த பேட்மிண்டன் சாய்னா நேவால், அக்டோபர் இறுதிக்குள் போட்டிக்கு திரும்புவதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-
அக்டோபர் இறுதி வரை முழுமையாக குணமடைய வாய்ப்பில்லை. அதனால், அதுவரையிலான போட்டிகளில் கலந்து கொள்ள முடியாத நிலை உள்ளது. தற்போது நான் உலக தரவரிசையில் 8-வது இடத்தில் உள்ளேன். இந்த இடம் மேலும் சரியலாம்.
குணமடைந்து விட்டால் நவம்பர் மாதங்களில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்ளலாம். நன்றாக உள்ளேன். மருத்துவர்களின் ஆலோசனைகளை பெற்று வருகிறேன்.
இவ்வாறு சாய்னா தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X