என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
மது போதையில் இருந்த ஒன்பதாம் வகுப்பு மாணவியை கற்பழித்துக் கொன்ற மா.கம்யூனிஸ்டு தலைவி மகன் கைது
Byமாலை மலர்27 March 2017 7:35 AM GMT (Updated: 27 March 2017 9:15 AM GMT)
திரிபுரா மாநிலத்தில் 16 வயதான சிறுமியை கற்பழித்துக் கொன்ற மா.கம்யூனிஸ்டு கட்சியின் மகளிர் அணித் தலைவியின் மகனை போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.
அகர்தலா:
திரிபுரா மாநிலத்தின் தர்மாநகர் மாவட்டத்தில் உள்ள பத்மபூர் கிராமத்தைச் சேர்ந்த 16 வயது பள்ளி மாணவியை நேற்று மாலை முதல் காணாததால், அக்கம்பக்கத்தில் தேடிய மாணவின் பெற்றோர் போலீசில் சென்று புகாரளித்தனர்.
புகாரின் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் மாணவியை தீவிரமாக தேடி வந்தனர். அக்கிராமத்தில் உள்ள பயன்படுத்தப்படாத கழிவறை அருகே ஒரு சடலம் ரத்த வெள்ளத்தில் கிடப்பதாக ரஜாட் டாண்டி (22) என்பவர் போலீசுக்கு தகவலளித்துள்ளார்.
அந்த இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அங்கு கிடந்தது காணமல் போன மாணவியின் சடலம்தான் என்பதை உறுதி செய்தனர். பின்னர், மாணவியின் சடலத்தை பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இக்கொலை தொடர்பாக ரஜாட் டாண்டி மீது சந்தேகம் அடைந்த போலீசார், அவரிடம் துருவித் துருவி விசாரணை நடத்தினர்.
போலீசாரின் தீவிர விசாரணைக்கு பின்னர், மாணவிக்கு மதுவை கொடுத்து மயக்க நிலையில் கற்பழித்து கொன்றது டாண்டி தான் என்பது உறுதியானது. மேலும், கொலை செய்த பின்னர் மாணவின் சடலத்தை சிதைத்த டாண்டி, அங்கிருந்த தடயங்களை அப்புறப்படுத்தும் வேலைகளிலும் ஈடுபட்டுள்ளார். உடனே, டாண்டியை கைது செய்த போலீசார், கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
திரிபுரா மாநிலத்தின் தர்மாநகர் மாவட்டத்தில் உள்ள பத்மபூர் கிராமத்தைச் சேர்ந்த 16 வயது பள்ளி மாணவியை நேற்று மாலை முதல் காணாததால், அக்கம்பக்கத்தில் தேடிய மாணவின் பெற்றோர் போலீசில் சென்று புகாரளித்தனர்.
புகாரின் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் மாணவியை தீவிரமாக தேடி வந்தனர். அக்கிராமத்தில் உள்ள பயன்படுத்தப்படாத கழிவறை அருகே ஒரு சடலம் ரத்த வெள்ளத்தில் கிடப்பதாக ரஜாட் டாண்டி (22) என்பவர் போலீசுக்கு தகவலளித்துள்ளார்.
அந்த இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அங்கு கிடந்தது காணமல் போன மாணவியின் சடலம்தான் என்பதை உறுதி செய்தனர். பின்னர், மாணவியின் சடலத்தை பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இக்கொலை தொடர்பாக ரஜாட் டாண்டி மீது சந்தேகம் அடைந்த போலீசார், அவரிடம் துருவித் துருவி விசாரணை நடத்தினர்.
போலீசாரின் தீவிர விசாரணைக்கு பின்னர், மாணவிக்கு மதுவை கொடுத்து மயக்க நிலையில் கற்பழித்து கொன்றது டாண்டி தான் என்பது உறுதியானது. மேலும், கொலை செய்த பின்னர் மாணவின் சடலத்தை சிதைத்த டாண்டி, அங்கிருந்த தடயங்களை அப்புறப்படுத்தும் வேலைகளிலும் ஈடுபட்டுள்ளார். உடனே, டாண்டியை கைது செய்த போலீசார், கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X