என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
நண்பர்கள் கேலி கிண்டல் செய்ததால் சிறுவன் தூக்கிட்டு தற்கொலை
Byமாலை மலர்24 April 2017 8:00 AM GMT (Updated: 24 April 2017 8:00 AM GMT)
வாணியம்பாடியில் நண்பர்கள் கிண்டல் செய்ததால் சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாணியம்பாடி:
வாணியம்பாடி டவுன் மில்லத் நகரை சேர்ந்தவர் பிரபு. கூலித் தொழிலாளி. இவரது மகன் அஜய்குமார் (வயது 15). நேற்று மாலை தனது நண்பர்களுடன் அஜய்குமார் விளையாடினார். அப்போது ஏற்பட்ட தகராறில் ஒருசிலர், அஜய்குமாரை கேலி, கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த அஜய்குமார், தனது வீட்டிற்கு சென்று பெற்றோர் உள்பட யாரிடமும் பேசாமல் மவுனம் காத்தார். இரவு 10 மணியளவில் தனது அறை கதவை உள்பக்கமாக பூட்டிக் கொண்டு திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பெற்றோர் சில நிமிடங்கள் கழித்து சென்று பார்த்த போது, மகன் அஜய்குமார் தூக்கில் பிணமாக தொங்கியதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுப்பற்றி தகவலறிந்ததும் வாணியம்பாடி டவுன் போலீசார் விரைந்து வந்தனர்.
சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் சிறுவன் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வாணியம்பாடி டவுன் மில்லத் நகரை சேர்ந்தவர் பிரபு. கூலித் தொழிலாளி. இவரது மகன் அஜய்குமார் (வயது 15). நேற்று மாலை தனது நண்பர்களுடன் அஜய்குமார் விளையாடினார். அப்போது ஏற்பட்ட தகராறில் ஒருசிலர், அஜய்குமாரை கேலி, கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த அஜய்குமார், தனது வீட்டிற்கு சென்று பெற்றோர் உள்பட யாரிடமும் பேசாமல் மவுனம் காத்தார். இரவு 10 மணியளவில் தனது அறை கதவை உள்பக்கமாக பூட்டிக் கொண்டு திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பெற்றோர் சில நிமிடங்கள் கழித்து சென்று பார்த்த போது, மகன் அஜய்குமார் தூக்கில் பிணமாக தொங்கியதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுப்பற்றி தகவலறிந்ததும் வாணியம்பாடி டவுன் போலீசார் விரைந்து வந்தனர்.
சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் சிறுவன் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X