என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
பரங்கிப்பேட்டை அருகே குடிநீர் வசதி கேட்டு பெட்டி, படுக்கையுடன் கல்லூரி மாணவர்கள் போராட்டம்
Byமாலை மலர்23 Sep 2016 10:41 AM GMT (Updated: 23 Sep 2016 10:42 AM GMT)
பரங்கிப்பேட்டை அருகே சி.முட்லூரில் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் குடிநீர் வசதி கேட்டு பெட்டி, படுக்கையுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பரங்கிப்பேட்டை:
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே சி.முட்லூரில் அரசு கலைக்கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் 1,500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். கல்லூரி விடுதியில் 100-க்கும் மேற்பட்டவர்கள் தங்கியுள்ளனர்.
விடுதியை சுற்றிலும் சுற்றுச்சுவர் கட்ட வேண்டும், மின் விளக்கு வசதி ஏற்படுத்தி தர வேண்டும், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால். அவர்களது கோரிக்கை நிறைவேறவில்லை.
இந்த நிலையில் முதுகலை மாணவர்கள் பெட்டி, படுக்கைகளுடன் விடுதியை விட்டு வெளியேறினர். விடுதி முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி கோஷமிட்டனர்.
தகவல் அறிந்ததும் கிள்ளை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட விடுதி மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது போலீசார், கோரிக்கைகளை கல்லூரி முதல்வர் மூலம் உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு மாணவர்கள் கலைந்து சென்றனர்.
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே சி.முட்லூரில் அரசு கலைக்கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் 1,500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். கல்லூரி விடுதியில் 100-க்கும் மேற்பட்டவர்கள் தங்கியுள்ளனர்.
விடுதியை சுற்றிலும் சுற்றுச்சுவர் கட்ட வேண்டும், மின் விளக்கு வசதி ஏற்படுத்தி தர வேண்டும், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால். அவர்களது கோரிக்கை நிறைவேறவில்லை.
இந்த நிலையில் முதுகலை மாணவர்கள் பெட்டி, படுக்கைகளுடன் விடுதியை விட்டு வெளியேறினர். விடுதி முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி கோஷமிட்டனர்.
தகவல் அறிந்ததும் கிள்ளை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட விடுதி மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது போலீசார், கோரிக்கைகளை கல்லூரி முதல்வர் மூலம் உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு மாணவர்கள் கலைந்து சென்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X