search icon
என் மலர்tooltip icon

    மகாராஷ்டிரா

    • பூபேந்தர் யாதவ் பொறுப்பாளரான நியமிக்கப்பட்டுள்ளார்
    • அஷ்வினி வைஷ்ணவ் துணை பொறுப்பாளரான நியமிக்கப்பட்டுள்ளனர்.

    மக்களவை தேர்தல் முடிவுகள் கடந்த 4-ந்தேதி வெளியான நிலையில் விரைவில் மகாராஷ்டிரா மற்றும் அரியானா மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது.

    இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்திற்கான தேர்தல் பொறுப்பாளர்களை பாஜக நியமித்துள்ளது. பூபேந்தர் யாதவ் பொறுப்பாளராகவும், அஷ்வினி வைஷ்ணவ் துணை பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    அரியானா மாநில தேர்தல் பொறுப்பாளராக தர்மேந்திர பிரதான் மற்றும் பிப்லாப் குமார் தேவ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    அரியானா மாநிலத்தில் பாஜக அரசு நடைபெற்று வருகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக, தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்), சிவ சேனா (ஏக் நாத் ஷிண்டே) ஆகிய கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.

    தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்), சிவ சேனா (உத்தவ் தாக்கரே), காங்கிரஸ் கட்சிகள் மகா விகாஸ் அகாதி என்ற பெயரில் கூட்டணி அமைத்துள்ளன. இந்த கூட்டணி எம்.பி. தேர்தலில் 48 இடங்களில் 30 இடங்களில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி சட்டமன்ற தேர்தலிலும் பிரதிபலிக்கும் என நம்புகிறது.

    இதனால் ஆட்சியை பிடிக்க பாஜக கூட்டணி சிறப்பான வகையில் வியூகம் அமைக்க விரும்பும்.

    சிவராஜ் சிங் சவுகான் மற்றும் ஹிமாந்தா பிஸ்வா சர்மா ஜார்கண்ட் மாநில பொறுப்பாளரான நியமிக்கப்பட்டுள்ளனர். ஜி. கிஷண் ரெட்டி ஜம்மு-காஷ்மீர் மாநில தேர்தல் பொறுப்பாளரான நியமிக்கப்பட்டுள்ளார்.

    • சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மும்பையில் நடந்த ஒரு விழாவில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.
    • வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி வலைத்தளவாசிகளின் பாராட்டையும் பெற்றது.

    சர்வதேச யோகா தினம் வருகிற 21-ந்தேதி கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி முதியவர் ஒருவர் யோகா செய்யும் வீடியோ காட்சிகள் இணையத்தை கலக்கியது. சுவாமி சிவானந்தா என்று அழைக்கப்படும் யோகா ஆசிரியரான அவருக்கு தற்போது 127 வயதாகிறது. யோகா கலையில் அவரது செயல்பாடுகளை பாராட்டி பத்மஸ்ரீ கவுரவம் பெற்றுள்ளார்.

    தீவிர யோகா பயிற்சியால் இந்த வயதிலும் ஆரோக்கியமாக இருக்கும் அவர், சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மும்பையில் நடந்த ஒரு விழாவில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். அப்போது அவர் சில யோகா பயிற்சிகளை செய்து காண்பித்தது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

    அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்தனர். இது பற்றிய வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி வலைத்தளவாசிகளின் பாராட்டையும் பெற்றது. யோகா மற்றும் உடல்நலம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியது.

    • இந்தியாவிலேயே குறைவான வாக்கு வித்தியாசத்தில் ஷிண்டே சிவசேனா கட்சி வேட்பாளர் வென்றார்.
    • மின்னணு தபால் மூலம் வாக்குகளை பெற்றபோது செல்போனை இயக்கி மோசடி ?

    மும்பை வடமேற்கு தொகுதியில் ஒரு வாக்கு கூடுதலாகப் பெற்றிருந்த உத்தவ் கட்சி வேட்பாளர், தபால் வாக்கு எண்ணப்பட்ட பிறகு 48 வாக்குகளில் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டார்.

    மின்னணு வாக்கு எந்திரங்களில் பதிவான வாக்குகளில் உத்தவ் கட்சி வேட்பாளர் அமோல் கிருத்திகர் 4,51,095 வாக்குகள் பெற்றார். ஏக்நாத் ஷிண்டே சிவசேனா கட்சி வேட்பாளர் ரவீந்திர வெய்க்கர் 4,51,094 வாக்குகள் பெற்றார்.

    எனினும், தபால் வாக்குகளை எண்ணியபோது கிருத்திகருக்கு 1,501 வாக்குகளும் வெய்க்கருக்கு 1,550 வாக்குகளும் கிடைத்தன. முடிவில் 48 வாக்குகள் குறைவாகப் பெற்று உத்தவ் தாக்கரே கட்சி வேட்பாளர் கிருத்திகர் தோற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்தியாவிலேயே குறைவான வாக்கு வித்தியாசத்தில் ஷிண்டே சிவசேனா கட்சி வேட்பாளர் வென்றார்.

    இந்நிலையில், 48 வாக்குகளில் தோல்வி அடைந்த உத்தவ் தாக்கரே சிவசேனா வேட்பாளர் அமோல் கிருத்திகர், மோசடி நடந்துள்ளதாக புகார் அளித்துள்ளார்.

    சிவசேனா வேட்பாளர் ரவீந்திர வெய்க்கரை எதிர்த்துப் போட்டியிட்ட அரோரா, பரத்ஷா அளித்த புகாரில் மும்பை போலீஸ் வழக்கு பதிந்துள்ளனர்.

    மின்னணு தபால் மூலம் வாக்குகளை பெற்றபோது செல்போனை இயக்கி மோசடி நடந்துள்ளதாக குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தேர்தல் அதிகாரி வந்தனா சூர்யவன்ஷி விளக்கம் அளித்துள்ளார்.

    அப்போது, " மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வயர்லெஸ் தகவல் தொடர்பு திறன் இல்லை " என அவர் விளக்கம் அளித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை திறக்க ஓடிபி எதுவும் தேவையில்லை.

    மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் ப்ரோக்ராமிங் செய்ய முடியாது என்பதால், அதனை திறப்பதற்கு ஓடிபி எதுவும் தேவையில்லை.

    குறிப்பிட்ட நிறுவனத்தால் பரப்பப்பட்ட முற்றிலும் பொய் செய்தி" என்றார்.

    • சாலையில் சென்றுக் கொண்டிருந்தவர்கள் மீது ஆட்டோ மோதி விபத்தை ஏற்படுத்தியது.
    • விபத்தில், 5 பேர் காயமடைந்துள்ளனர்.

    மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரில் ஆட்டோ மீது பைக் ஒன்று வேகமாக மோதியது. இதில், ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ சாலையில் சுழன்றடித்தது.

    இதனால், சாலையில் சென்றுக் கொண்டிருந்தவர்கள் மீது ஆட்டோ மோதி விபத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்தில், 5 பேர் காயமடைந்துள்ளனர்.

    இந்த விபத்தின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில்," ஆட்டோ ஒன்று யு டர்ன் எடுக்க முயல்கிறது. அப்போது அந்த வழியாக வந்த பைக் ஆட்டோ மீது மோதியது.

    இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் வாகனத்தில் இருந்து கீழே விழுந்தார்.

    அப்போது, ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து ஓட்டுனர் இல்லாமலேயே வேகமாக சுற்றி தாறுமாறாக ஓடியது. இதில், பொது மக்கள் மீது மோதி கீழே விழுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

    • 48 வாக்குகள் குறைவாகப் பெற்று உத்தவ் தாக்கரே கட்சி வேட்பாளர் கிருத்திகர் தோற்றதாக அறிவிக்கப்பட்டது.
    • இந்தியாவிலேயே குறைவான வாக்கு வித்தியாசத்தில் ஷிண்டே சிவசேனா கட்சி வேட்பாளர் வென்றார்.

    மும்பை வடமேற்கு தொகுதியில் ஒரு வாக்கு கூடுதலாகப் பெற்றிருந்த உத்தவ் கட்சி வேட்பாளர், தபால் வாக்கு எண்ணப்பட்ட பிறகு 48 வாக்குகளில் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டார்.

    மின்னணு வாக்கு எந்திரங்களில் பதிவான வாக்குகளில் உத்தவ் கட்சி வேட்பாளர் அமோல் கிருத்திகர் 4,51,095 வாக்குகள் பெற்றார். ஏக்நாத் ஷிண்டே சிவசேனா கட்சி வேட்பாளர் ரவீந்திர வெய்க்கர் 4,51,094 வாக்குகள் பெற்றார்

    எனினும், தபால் வாக்குகளை எண்ணியபோது கிருத்திகருக்கு 1,501 வாக்குகளும் வெய்க்கருக்கு 1,550 வாக்குகளும் கிடைத்தன. முடிவில் 48 வாக்குகள் குறைவாகப் பெற்று உத்தவ் தாக்கரே கட்சி வேட்பாளர் கிருத்திகர் தோற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்தியாவிலேயே குறைவான வாக்கு வித்தியாசத்தில் ஷிண்டே சிவசேனா கட்சி வேட்பாளர் வென்றார்.

    இந்நிலையில், 48 வாக்குகளில் தோல்வி அடைந்த உத்தவ் தாக்கரே சிவசேனா வேட்பாளர் அமோல் கிருத்திகர், மோசடி நடந்துள்ளதாக புகார் அளித்துள்ளார்.

    சிவசேனா வேட்பாளர் ரவீந்திர வெய்க்கரை எதிர்த்துப் போட்டியிட்ட அரோரா, பரத்ஷா அளித்த புகாரில் மும்பை போலீஸ் வழக்கு பதிந்துள்ளனர்.

    இது தொடர்பாக சிவசேனா வேட்பாளர் ரவீந்திர வெய்க்கரின் உறவினர் மங்கேஷ் பண்டில்கர், தேர்தல் பணியாளர் தினேஷ் குராவ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    நெஸ்கோ வாக்குச்சாவடியில் இருந்த EVM எந்திரத்துடன் தொடர்புகொள்ளும் வசதி சிவசேனா வேட்பாளர் ரவீந்திர வெய்க்கரின் உறவினர் மங்கேஷ் செல்போனில் இருந்தது அம்பலமாகியுள்ளது. EVM எந்திரத்தை திறப்பதற்கான ஓ.டி.பி.யை பெறும் வசதி மங்கேஷிடம் இருந்த செல்போனில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    எல்லைப் பணியில் உள்ள ராணுவத்தினர் வாக்குகளை பதிவு செய்ய மின்னணு முறையில் வாக்குகளை பதிவு செய்யும் முறை உள்ளது. தொலைதூரத்தில் இருந்து கொண்டே மின்னணு முறையில் வாக்குகளை செலுத்தும் வசதிக்கு இ.டி.பி.பி.எஸ். என்று பெயர்.

    அப்படி எல்லையில் உள்ள ராணுவ வீரர்களின் வாக்குகளை பதிவு செய்யும் போது தனது செல்போனை அவர் கொண்டு சென்றுள்ளார். மின்னணு மூலம் அனுப்பப்படும் வாக்குகளைப் பெற வாக்குப்பதிவு எந்திரத்தை ஆன் செய்ய ஓ.டி.பி. எண் அவசியம். மங்கேஷின் நண்பரான, தேர்தல் ஆணைய பணியில் இருந்த தினேஷ் குராவ்தான் செல்போனை இயக்கி ஓடிபி பெற்றுள்ளார்.

    மின்னணு தபால் மூலம் வாக்குகளை பெற்றபோது செல்போனை இயக்கி மோசடி நடந்துள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    விசாரணைக்கு மங்கேஷம், தினேஷம் ஒத்துழைக்காவிடில் கைது செய்யப்படுவார்கள் என்று மும்பை போலீஸ் தெரிவித்துள்ளனர்.மங்கேஷிடம் கைப்பற்றப்பட்ட செல்போனை தடய அறிவியல் சோதனைக்கு அனுப்பி விவரம் கேட்டுள்ளது மும்பை போலீஸ்.

    நெஸ்கோ வாக்குச்சாவடியில் இருந்த சிசிடிவி பதிவுகளையும் மும்பை வன்ராய் போலீஸ் ஆராய்ந்து வருகிறது.

    மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஒழித்துக்கட்ட வேண்டும். மனிதர்கள் அல்லது ஏ.ஐ. போன்ற தொழில்நுட்பங்களை கொண்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை எளிதில் ஹேக் செய்துவிட முடியும் என்று டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், உலக பணக்காரர்களில் ஒருவருமான எலான் மஸ்க் தற்போது குற்றம்சாட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சம்பளத்தை ஜூன் 20 ஆம் தேதி தருவதாக கூறி அன்சாரி தட்டிக்கழித்த நிலையில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
    • 1,250 ரூபாய்காக நடந்த இந்த கொலை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மகாராஷ்டிர மாநிலம் மும்பை மாநகரில் வேலை செய்ததற்கான சம்பளத்தைத் தர மறுத்த முதலாளியை தொழிலாளி ஒருவர் குத்திக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நவி மும்பை நகரின் கலம்போலி பகுதியில் பர்வேஸ் அன்சாரி என்பவரிடம் வேலை பார்த்து வந்த தொழிலாளி ஒருவர் நேற்று முன் தினம் [ஜூன் 14] வெள்ளிக்கிழமையன்று தனது சம்பளமாக 1,250 ரூபாயை தரும்படி அன்சாரியிடம் கேட்டுள்ளார்.

     

     

    ஆனால் சம்பளத்தை ஜூன் 20 ஆம் தேதி தருவதாக கூறி அன்சாரி தட்டிக்கழித்த நிலையில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த அந்த தொழிலாளி அன்சாரியை குத்திக் கொலை செய்துள்ளார். மேலும் அருகில் நின்றிருந்த அன்சாரியின் நண்பரையும் தாக்கிவிட்டு அங்கிருந்து அவர் தப்பியோடியுள்ளார்.

     

    இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் கொலையாளியான தொழிலாளியை தீவிரமாக தேடி வருகின்றனர். 1,250 ரூபாய்காக நடந்த இந்த கொலை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    • பாஜக கடந்த முறை 23 இடங்களில் வெற்றி பெற்றது. தற்போது 9 இடங்களில்தான் வெற்றிபெற முடிந்தது.
    • சரத் பவார் கட்சி 8 இடங்களில் வெற்றி பெற்றது. அஜித் பவார் கட்சி ஒரு இடத்தில் வெற்றி பெற்றது.

    மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மாநிலங்களில் மகாராஷ்டிராவும் ஒன்று. 48 தொகுதிகளை கொண்ட இந்த மாநிலத்தில் 35-க்கும் மேற்பட்ட இடங்களை எதிர்பார்த்தது. ஆனால் காங்கிரஸ், உத்தவ் தாக்கரே கட்சி, சரத் பவார் கட்சி இணைந்து பாஜக கூட்டணி பலத்த அடி கொடுத்தது. 30 தொகுதிகளை வென்று அசத்தியது.

    இந்த நிலையில் இன்று மூன்று கட்சிகள் சார்பில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது சரத் பவார் "அரசியல் சூழ்நிலையை மகா விகாஸ் அகாதிக்கு சாதகமாக்கிய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்" என்றார்.

    மோடி மற்றும் பாஜக 18 தொகுதிகளில் தீவிர தேர்தல் பிரசாரம் செய்த நிலையில் 15 தொகுதிகளில் தோல்வியடைந்தது. சரத் பவார் கட்சி 8 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில் அஜித் பவார் கட்சி ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது.

    மக்களவை தேர்தலில் மகாராஷ்டிரா மாநிலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு (பாஜக, தேசியவாத காங்கிரஸ்- அஜித் பவார், சிவசேனா- ஏக்நாத் ஷிண்டே) மிகப்பெரிய அளவில் வெற்றி கிடைக்கவில்லை.

    பாஜக 9 இடங்களிலும், அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி ஒரு இடத்திலும், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா 7 இடங்களிலும் வெற்றி பெற்றது. இந்த கூட்டணிக்கு மொத்தம் 17 இடங்கள் மட்டுமே கிடைத்தன.

    30 இடங்களில் மகா விகாஸ் அகாதி (காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ்- சரத்பவார், சிவசேனா-உத்தவ் தாக்கரே) வெற்றி பெற்றது. பிரிந்து சென்றவர்களுக்கு மக்கள் வாக்களிக்கவில்லை என இந்த கூட்டணி நம்புகிறது. மேலும், விரைவில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலிலும் இந்த வெற்றி நீடிக்கும் என எதிர்பார்க்கிறது.

    சிவ சேனா (UBT) தலைவர் உத்தவ் தாக்கரே கூறுகையில் "மக்களவை தேர்தல் வெற்றி மகா விகாஷ் அகாதிக்கான முடிவு அல்ல. தொடக்கம்" என்றார்.

    காங்கிரஸ் கட்சி தலைவர் சவான், "மக்களவை தேர்தல் முடிவுக்குப் பிறகு மகாராஷ்டிராவில் விரைவில் அரசு மாறும்" என்றார்.

    கடந்த முறை 23 இடங்களில் வெற்றி பெற்ற பாஜக இந்த முறை 9 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.

    • மகா விகாஸ் அகாதிக்கான சாதகமான சூழ்நிலையை உருவாக்கிய பிரதமருக்கு நாங்கள் நன்றி- சரத் பவார்.
    • மக்களவை தேர்தல் முடிவுக்குப் பிறகு மகாராஷ்டிராவில் விரைவில் அரசு மாறும்- காங்கிரஸ் தலைவர்.

    மக்களவை தேர்தலில் மகாராஷ்டிரா மாநிலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு (பாஜக, தேசியவாத காங்கிரஸ்- அஜித் பவார், சிவசேனா- ஏக்நாத் ஷிண்டே) மிகப்பெரிய அளவில் வெற்றி கிடைக்கவில்லை.

    பாஜக 9 இடங்களிலும், அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி ஒரு இடத்திலும், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா 7 இடங்களிலும் வெற்றி பெற்றது. இந்த கூட்டணிக்கு மொத்தம் 17 இடங்கள் மட்டுமே கிடைத்தன.

    30 இடங்களில் மகா விகாஸ் அகாதி (காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ்- சரத்பவார், சிவசேனா-உத்தவ் தாக்கரே) வெற்றி பெற்றது. பிரிந்து சென்றவர்களுக்கு மக்கள் வாக்களிக்கவில்லை என இந்த கூட்டணி நம்புகிறது. மேலும், விரைவில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலிலும் இந்த வெற்றி நீடிக்கும் என எதிர்பார்க்கிறது.

    இந்த நிலையில் சிவ சேனா (UBT) தலைவர் உத்தவ் தாக்கரே கூறுகையில் "மக்களவை தேர்தல் வெற்றி மகா விகாஷ் அகாதிக்கான முடிவு அல்ல. தொடக்கம்" என்றார்.

    காங்கிரஸ் கட்சி தலைவர் சவான், "மக்களவை தேர்தல் முடிவுக்குப் பிறகு மகாராஷ்டிராவில் விரைவில் அரசு மாறும்" என்றார்.

    சரத் பவார் "மகா விகாஸ் அகாதிக்கான சாதகமான சூழ்நிலையை உருவாக்கிய பிரதமருக்கு நாங்கள் நன்றி தெரிவிக்கிறோம்" என்றார்.

    மக்களவை தேர்தலில் காங்கிரஸ் 13 இடங்களிலும், சிவ சேனா (UBT) 9 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார்) 8 இடங்களிலும் வெற்றி பெற்றன.

    உத்தவ் தாக்கரே கட்சி 21 இடங்களில் போட்டியிட்டது. காங்கிரஸ் 17 இடங்களில் போட்டியிட்டது. தேசியவாத காங்கிரஸ் கட்சி (சரத்பவார்) 10 இடங்களில் போட்டியிட்டது.

    பாஜக போட்டியிட்டு 9 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.

    • நடிகை ஷில்பா ஷெட்டி, அவரது கணவர் ராஜ்குந்த்ரா உள்ளிட்ட சிலர் சத்யக் கோல்டு என்ற நிறுவனத்தை 2014-ம் ஆண்டு தொடங்கினர்.
    • சத்யக் கோல்டு நிறுவனத்தில் ரூ.90 லட்சம் முதலீடு செய்தேன்.

    மும்பை:

    மும்பையை சேர்ந்த நகை வியாபாரி பிரிதிவிராஜ் கோதாரி செசன்ஸ் கோர்ட்டில் வழக்கு ஒன்றை தொடர்ந்து இருந்தார். மனுவில் அவர் கூறியிருந்ததாவது:-

    நடிகை ஷில்பா ஷெட்டி, அவரது கணவர் ராஜ்குந்த்ரா உள்ளிட்ட சிலர் சத்யக் கோல்டு என்ற நிறுவனத்தை 2014-ம் ஆண்டு தொடங்கினர். அவர்கள் நிறுவனத்தில் முதலீடு செய்தால் குறைந்த விலைக்கு தங்கம் பெறலாம் என கூறினர்.

    இதை நம்பி நான் அவர்களது நிறுவனத்தில் ரூ.90 லட்சம் முதலீடு செய்தேன். ஆனால் அவர்கள் சொன்னது போல தங்கமும் தராமல், எனது பணத்தையும் திருப்பி தராமல் மோசடியில் ஈடுபட்டனர். மோசடியில் ஈடுபட்ட நடிகை ஷில்பா ஷெட்டி, ராஜ்குந்த்ரா உள்ளிட்டவர்கள் மீது பி.கே.சி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

    இந்த வழக்கை நீதிபதி என்.பி. மேத்தா விசாரித்தார். வழக்கை விசாரித்த நீதிபதி மனுதாரரின் குற்றச்சாட்டில் முகாந்திரம் இருப்பதாக கூறினார். எனவே அவர் நடிகை ஷில்பா ஷெட்டி, அவரது கணவர் உள்ளிட்டவர்கள் மீதான மோசடி புகார் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரிக்க பி.கே.சி. போலீசாருக்கு உத்தரவிட்டார்.

    • மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன.
    • அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் உடனான கூட்டணி குறித்து ஆர்எஸ்எஸ் விமர்சனம்.

    மக்களவை தேர்தலில் பாஜக-வுக்கு நினைத்த மாதிரி வெற்றி கிடைக்கவில்லை. மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 48 இடங்களில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக 9 இடங்களிலும், அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி ஒரு இடத்திலும், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா 7 இடங்களிலும் வெற்றி பெற்றது. இந்த கூட்டணிக்கு மொத்தம் 17 இடங்கள் மட்டுமே கிடைத்தன.

    இந்த நிலையில்தான் ஆர்எஸ்எஸ் தனது வாரந்திர பத்திரிகையில் (Organiser) மகாராஷ்டிரா மாநில தோல்வி குறித்து கட்டுரை எழுதியிருந்தது. அதில் பாஜக-அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி கூட்டணி குறித்து விமர்சித்திருந்தது.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் அஜித் பவார் கட்சியுடன் கூட்டணி வைத்தது தேவையில்லாத அரசியல். தேசிய ஜனநாயக கூட்டணியில் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியை இணைத்தது பாஜகவின் பிராண்ட் மதிப்பை குறைத்துள்ளது. பாஜக எந்தவித மாறுபாடு இன்றி மற்றொரு அரசியல் கட்சியாகியுள்ளது என விமர்சித்திருந்தது.

    இதனால் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ்- பாஜக கட்சி தலைவர்கள் இடையே வார்த்தை போர் மூண்டுள்ளது.

    ஆர்எஸ்எஸ் கருத்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மாநில முதல்வருமான சாகன் புஜ்வால் கூறுகையில் "அதில் மேலும் எழுதப்பட்ட சில கருத்துகள் உண்மையாக இருக்கலாம். சிலர் ஏற்கனவே பாஜகவை காங்கிரஸ் தலைவர்களை இணைத்ததால் விமர்சனம் செய்தனர். அசோக் சவான் உள்ளிட்டோர் இணைந்தது குறித்து விமர்சனம் செய்தனர். ஏக்நாத் ஷிண்டே முன்னாள் காங்கிரஸ் தலைவர் மிலிந்த் தியோராவை இணைத்துக்கொண்டு ஆர்எஸ்எஸ் உறுப்பினராக்கியது குறித்துகூட விமர்சனம் எழுந்தது.

    உத்தர பிரதேச மாநிலத்தில் பாஜக-வுக்கு பெரும்பாலான இடங்கள் குறைந்ததே, அதைப்பற்றி யார் பேசுவார்கள்?. மற்ற மாநிலங்களில் கூட கடந்த முறையை விட குறைவான இடங்கள்தான் கிடைத்தது. இதைப் பற்றி யார் பேசுவார்கள்?" என்றார்.

    தேசியவாத காங்கிரஸ் தலைவரும் மாநிலங்களவை எம்.பி.யுமான பிரபுல் பட்டேல் "ஆர்எஸ்எஸ் கட்டுரை பாஜக-வின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தாது. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணி தலைவர் சூரஜ் சவான், பாஜக சிறப்பாக செயல்பட்டபோது, கிரெடிட் ஆர்எஸ்எஸ்-க்கு கொடுக்கப்படுகிறது. ஆனால், தோல்வியடைந்தால் அஜித் பவாரை குறை கூறுவதா? என ததக்க பதிலடி கொடுத்துள்ளார்" என்றார்.

    ஆர்எஸ்எஸ் கருத்து ஆதரிக்கும் பாஜக எம்எல்சி பிரவின் தரேகார் "எங்களுக்கு எல்லாம் ஆர்எஸ்எஸ் தந்தை போன்றது. ஆர்எஸ்எஸ் குறித்து கருத்துகளை கூற வேண்டியதில்லை. ஆர்எஸ்எஸ் மீது சூரஜ் சவான் அதுபோன்று கடுமையான கருத்துகளை தெரிவித்திருக்கக் கூடாது. பாஜக தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு எதிராக கருத்து கூறவில்லை. தேசியஜனநாயக கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் இது குறித்து விவாதம் செய்தால் சிறந்ததாக இருக்கும்" என்றார்.

    • ஆனந்த அம்பானியின் திருமணத்திற்கு முன் ஐரோப்பாவில் சொகுசு கப்பலில் பிரமாண்ட விழா ஒன்று நடந்தது.
    • சொகுசு கப்பலில் நடந்த கொண்டாட்ட நிகழ்ச்சிகள் பற்றிய புகைப்படங்கள் வெளியாகி வருகின்றன.

    மும்பை:

    இந்தியாவின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகனான ஆனந்த் அம்பானிக்கும், அவரது காதலியும், வைர வியாபாரியின் மகளுமான ராதிகா மெர்ச்சன்ட்டுக்கும் திருமணம் முடிவானது.

    இவர்களது திருமணம் ஜூலை 12-ம் தேதி மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டரில் உள்ள பிரமாண்ட வளாகத்தில் 3 நாள் நடைபெறவுள்ளது.

    திருமணத்திற்கு முன்னதாக ஐரோப்பாவில் சொகுசு கப்பலில் பிரமாண்ட விழா ஒன்று நடந்தது. இது அவர்களது இரண்டாவது திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டமாகும்.

    சமீபத்தில் ஐரோப்பாவில் சொகுசு கப்பலில் நடந்த கொண்டாட்ட நிகழ்ச்சிகள் பற்றிய புகைப்படங்கள் வெளியாகி வருகின்றன.


    இந்நிலையில், இந்த விழாவில் ராதிகா மெர்ச்சன்ட் அணிந்திருந்த கவுன் விசேஷமாக தயாரிக்கப்பட்டது. அது என்னவெனில், ராதிகாவுக்கு ஆனந்த் அம்பானி தனது 22 வயதில் அவருக்கு எழுதிய காதல் கடிதம் மொத்தமாக அச்சிடப்பட்டிருந்தது. இந்த கவுனை லண்டனைச் சேர்ந்த பிரபல ஆடை டிசைனர் ராபர்ட் வன் வடிவமைத்துள்ளார். ராதிகா அணிந்திருந்த கருப்பு கவுன் வெள்ளை நிற ஷிபான் துணியால் ஆனது.

    இதுதொடர்பாக ராதிகா மெர்ச்சண்ட் கூறுகையில், என் பிறந்தநாளுக்காக அவர் எனக்கு நீண்ட காதல் கடிதம் ஒன்றை எழுதினார். அதில் என்னைப் பற்றி என்ன நினைக்கிறார் என்பதை அவர் வெளிப்படுத்தியிருந்தார். இந்த கவுனை என் குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகளிடம் காட்டுவேன் என தெரிவித்தார்.

    தற்போது இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

    • பதிவு 2 லட்சத்திற்கும் மேற்பட்ட விருப்பங்களை பெற்றது.
    • பயனர்களின் கவனத்தை ஈர்த்த பதிவு பலரது பாராட்டுக்களையும் பெற்றது.

    சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அரசு பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் சாங்லி மிராஜ் குப்வாட் முனிசிபல் கார்ப்பரேஷன் கமிஷனரும், ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான சுபம் குப்தா தனது உபயோகத்திற்காக உருவாக்கி உள்ள தனித்துவமான விசிட்டிங் கார்டுகளின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    அந்த விசிட்டிங் கார்டில் சாமந்தி செடிகளின் விதைகள் பதிக்கப்பட்டுள்ளது. இந்த விசிட்டிங் கார்டுகளின் புகைப்படத்தை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள சுபம் குப்தாவின் பதிவில், இனிமேல் எனது அலுவலகத்துக்கு வருபவர்கள் இந்த அட்டையை பெறுவார்கள். அதனை நடும் போது அழகான சாமந்தி செடியாக வளரும் என கூறியுள்ளார். அவரது இந்த பதிவு 2 லட்சத்திற்கும் மேற்பட்ட விருப்பங்களை பெற்றது. மேலும் பயனர்களின் கவனத்தை ஈர்த்த இந்த பதிவு பலரது பாராட்டுக்களையும் பெற்றது.

    சுற்றுச்சூழலை காப்பதற்கான நல்ல முயற்சி. நம் நாட்டில் இப்படிப்பட்ட ஒரு பொறுப்பான அதிகாரி இருப்பதற்காக பெருமைப்படுகிறேன் என ஒரு பயனர் பதிவிட்டுள்ளார். மற்றொரு பயனர், உங்களது புதுமையான யோசனை பாராட்டுக்குரியது. மறுசுழற்சி செய்யக்கூடிய அட்டைகளை எங்கு அச்சிடுவது என்பதை தயவு செய்து பகிரவும் என பதிவிட்டுள்ளார்.

    ×