search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தூய்மை பணிகள்"

    • வெங்காடம்பட்டி ஊராட்சியில் தூய்மை சேவை திட்டத்தின் கீழ் சிறப்பு தூய்மையே விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
    • ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து வந்த பற்றாளர் மாரியப்பன் நிகழ்ச்சியை ஆய்வு செய்தார்.

    கடையம்:

    கடையம் யூனியனுக்குட்பட்ட வெங்காடம்பட்டி ஊராட்சியில் தூய்மை சேவை திட்டத்தின் கீழ் சிறப்பு தூய்மை விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் ஊராட்சிமன்ற தலைவர் ஸாருகலா ரவி, ஊராட்சி செயலர் பாரத், முக்கூடல் சொக்கலால் பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சுத்தம் செய்யும் பணியினை மேற்கொண்டனர்.

    ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து வந்த பற்றாளர் மாரியப்பன் நிகழ்ச்சியை ஆய்வு செய்தார். நிகழ்ச்சியில் முக்கூடல் சொக்கலால் பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் லாரன்ஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சுகாதார ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் உள்பட அனைத்து தரப்பு மக்களும் கலந்துகொண்டு தூய்மை பணிகளை மேற் கொண்டனர்.
    • நாகரா்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட 52 வார்டுகளிலும் தூய்மை பணிகள் நடந்தது.

    நாகர்கோவில் :

    குப்பையில்லா இந்தியா என்பதை கருத்தில் கொண்டு நாடு முழுவதும் கடந்த செப்டம்பர் மாதம் 15-ந்தேதி முதல் அக்டோபர் 2-ந்தேதி வரை தூய்மை பாரத் இயக்கம் என்ற பெயரில் நாட்டில் உள்ள அனைத்து கிராம ஊராட்சி பகுதிகளில் தொடர்ந்து தூய்மை பணிகள் நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று கன்னியா குமரி மாவட்டம் முழுவதும் தூய்மை பாரத் இயக்கம் என்ற பெயரில் பொது மற்றும் தனியார் இடங்களில் தூய்மை பணிகள் மேற் கொள்ளப்பட்டன.

    இதில் குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிக்குட்பட்ட பொது இடங்களில் கிராம ஊராட்சி தலைவர்கள் தலைமையில் உள்ளாட்சி பிரதிநிதிகள், தொண்டு நிறுவனங்கள், சுய உதவி குழுவினர், இளைஞர் அமைப்புகள், தன்னார்வலர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாண வா்கள், சுகாதார ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் உள்பட அனைத்து தரப்பு மக்களும் கலந்துகொண்டு தூய்மை பணிகளை மேற் கொண்டனர்.

    மேலும் தனியார் இடங் களில் உள்ள குப்பைகளை அப்புறப்படுத்தி தூய்மை செய்ய சம்பந்தப்பட்ட நபர்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தினர். அதனைத் தொடர்ந்து தனியார் இடங்களிலும் தூய்மை பணிகள் நடந்தது. நாகரா்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட 52 வார்டுகளிலும் தூய்மை பணிகள் நடந்தது.

    குறிப்பாக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரி, கோட் டார் அரசு ஆயுர்வேத கல்லூரி ஆஸ்பத்திரி, துணை சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், மாநகராட்சி அலுவலகம், கலெக்டர் அலுவலகம், தீயணைப்புத்துறை அலுவலகம், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், போலீஸ் நிலையங்கள், அண்ணா விளையாட்டு அரங்கம், வடசேரி பஸ் நிலையம், அண்ணா பஸ் நிலையம், செட்டிகுளம் சந்திப்பு, பார்வதிபுரம், ஒழுகினசேரி அப்டா மார்க்கெட், வடசேரி சந்தை மற்றும் அனைத்து அரசு, தனியார் அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங் களில் குப்பைகள் அகற்றப் பட்டு தூய்மை பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப் பட்டன.

    இதேபோல வனத்துறை சார்பில் மலையோர கிரா மங்களும், பொதுப்பணித் துறை சார்பில் நீர்பிடிப்பு பகுதிகளிலும் தூய்மை பணிகள் நடந்தது. மாவட்டம் முழுவதும் நடந்த இந்த தூய்மை பணிகளில் சுமார் 7 ஆயிரத்துக்கும் அதிக மானோர் கலந்து கொண்ட னர்.

    • உறுதிமொழி ஏற்ற பின் அருகில் உள்ள கடைகளில் விழிப்புணர்வு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.
    • செண்பக கால்வாய் கழிவு நீர் ஓடையில் கூட்டு துப்புரவு பணி நடைபெற்றது.

    சுரண்டை:

    சுரண்டை நகராட்சியில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் மற்றும் தூய்மையே சேவை நிகழ்ச்சியின் மூலமாக பஸ் நிலையத்தில் நகர்மன்ற தலைவர் வள்ளிமுருகன் தலைமையில் பிளாஸ்டிக்கை ஒழிப்போம் என விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் நகர்மன்ற உறுப்பினர்கள், நகராட்சி பணியாளர்கள், மேற்பார்வையாளர்கள், தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். அனைவரும் இணைந்து பிளாஸ்டிக்கை ஒழிப்போம் என உறுதிமொழி ஏற்ற பின் அருகில் உள்ள கடைகளில் விழிப்புணர்வு பிரசுரங்களை வழங்கினர்.

    பின்பு சுரண்டை நகராட்சியில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் மற்றும் தூய்மையை சேவை நிகழ்ச்சியின் மூலமாக செண்பக கால்வாய் கழிவு நீர் ஓடையில் ஒட்டு மொத்த கூட்டு துப்புரவு பணி நடைபெற்றது. நகராட்சி தூய்மை பணியாளர்களை கொண்டு ஓடையில் தேங்கி கிடந்த கழிவுகள் அகற்றப்பட்டன.

    • சிவகிரி பேரூராட்சி பகுதியில் வடிகால் சுத்தம் செய்தல்,போஸ்டர்கள் அகற்றுதல் பணிகள் நடைபெற்றது.
    • பேரூராட்சி தலைவர் கோமதிசங்கரி சுந்தரவடி வேலு உள்ளிட்டோர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    சிவகிரி:

    சென்னை பேரூராட்சி இயக்குநர் உத்தரவின்பேரில், நெல்லை மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் அறிவுரையின்படி, சிவகிரி பேரூராட்சி பகுதியில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தின்படி வடிகால் சுத்தம் செய்தல், பஸ் நிலையத்தில் போஸ்டர்களை அகற்றுதல் ஆகிய பணிகளை தொடர்ந்து சிவகிரி வனச்சரக அலுவலகம் அருகே மரக்கன்றுகள் நடும் பணி நடை பெற்றது. பேரூராட்சி தலைவர் கோமதிசங்கரி சுந்தரவடி வேலு, துணைத்தலைவர் லட்சுமிராமன், செயல் அலுவலர் வெங்கடகோபு ஆகியோர் மரக்கன்றுகளை நட்டு வைத்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் அனைத்து கவுன்சிலர்கள், அலுவலர்கள், பணியாளர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • நெல்லையப்பர் கோவிலில் ஆனி பெருந்தேர் திருவிழா வருகிற 24-ந்தேதி தொடங்குகிறது.
    • சொக்கப்பனை முக்கு பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

    நெல்லை:

    நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் ஆனி பெருந்தேர் திருவிழா வருகிற 24-ந்தேதி தொடங்குகிறது.

    இதனையொட்டி டவுனில் உள்ள 4 ரத வீதிகளிலும் தூய்மை பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் அந்த ரத வீதிகளில் பந்தல் போடும் நிகழ்வுக்காக சொக்கப் பனை முக்கு பகுதியில் இருந்து பேரிகார்டு அமைக்கப்பட்டு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில் ரதவீதி களில் சிறப்பு கவனம் செலுத்தி தூய்மை பணி களை மேற்கொள்ள மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி உத்தரவிட்டிருந்தார். அதன் அடிப்படையில் உதவி கமிஷனர் வெங்கட்ராமன் மற்றும் மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில் சாக்கடை கால்வாய் அடைப்புகள் உள்ளிட்ட பிரச்சினைகளை மண்டல சுகாதார அலுவலர் இளங்கோ தலைமையில் தூய்மை பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

    அதன் ஒரு பகுதியாக டவுன் போலீஸ் குடியிருப்பு பின்புறம் உள்ள அறிஞர் அண்ணா தெருவில் சிறப்பு துப்புரவு பணி இன்று நடைபெற்றது. அந்த வார்டு கவுன்சிலர் ராமகிருஷ்ணன் முன்னிலையில் நடந்த தூய்மை பணியில் சாக்கடை கழிவுகள் அப்புறப் படுத்தப்பட்டு தெரு முழுவதும் சுத்தப்படுத்தப்பட்டது.

    • ராமநாதபுரம் நகரில் தன்னார்வலர்கள், அறக்கட்டளையினர், சுய உதவிக்குழுவினருடன் இணைந்து தூய்மை பணிகள் நடைபெற்று வருகிறது.
    • விழிப்புணர்வு போட்டி நடத்தப்பட்டு 175 மாணவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ் வழங்கப்பட்டது.

    ராமநாதபுரம்

    ஆணையாளர் அஜிதா பர்வீன் கூறியதாவது:-

    ராமநாதபுரம் நகராட்சி எல்லைக்குட்பட்ட மக்கள் கூடும் இடங்களான புதிய, பழைய பஸ் நிலையம், ரெயில் நிலையம், அரண்மனைரோடு போன்ற பகுதிகள் சுத்தம் செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

    165 தன்னார்வலர்கள், அறக்கட்டளையினர், சுய உதவிக்குழுவினர் ஆகியோருடன் இணைந்து தூய்மை பணிகள் நடைபெற்று வருகிறது. குப்பைகளை தரம் பிரித்து கொடுப்பது தொடர்பான விளக்கத்துடன் கூடிய பிரசுரங்கள் வீடு வீடாக தன்னார்வலர்கள், மாண வர்கள், மற்றும் சுய உதவிக்குழுக்கள் மூலமாக எடுத்துரைக்கப்பட்டது.

    அதன்படி குப்பைகளை சரியான முறையில் மக்கும் மற்றும் மறுசுழற்சி கழிவு களை பிரித்து வழங்கிய பொதுமக்கள் 58 பேருக்கு நினைவு பரிசுகள், சான்றி தழ் வழங்கப்பட்டது.நகராட் சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் அனுமதி யின்றி ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் மற்றும் விளம் பர பலகைகள் அப்புறப்படுத்தப்பட்டு விழிப்புணர்வு ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.

    நகரில் உள்ள நீர் நிலைகளில் குப்பை கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை போர்டுகள் வைக்கப்பட்டு உள்ளது. ஊரணிகளில் மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

    தினசரி குப்பைகளை சரியான முறையில் மக்கும் மற்றும் மறுசுழற்சி கழிவுகளாக பிரித்து வழங்கிய 130 தூய்மை பணியாளர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது. நகராட்சி எல்லைக் குட்பட்ட பகுதிகளில் 15 டன் கட்டுமான மற்றும் கழிவுகள் அகற்றப்பட்டு மேடு பள்ளமான பகுதிகளில் கொட்டி சரி செய்யப்பட்டது. நகராட்சிக்குட்பட்ட 25 பள்ளிகள் மற்றும் 1 கல்லூரியில் தூய்மை நகரத்திற்கான மக்கள் இயக்க திட்டம் குறித்து விழிப்புணர்வு போட்டி நடத்தப்பட்டு 175 மாணவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ் வழங்கப்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கலெக்டர் வளர்ச்சி திட்ட பணிகள் என்னென்ன நடைபெற்று உள்ளது என்பதனை அதிகாரிகளிடம் கேட்டு ஆய்வு மேற்கொண்டார்.
    • பணிகளுக்கான தொகையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கடலூர்:

    கடலூர் கலெக்டராக அருண் தம்பராஜ் நேற்று முன்தினம் பதவி யேற்றுக் கொண்டார். இந்த நிலை யில் இன்று காலை கடலூர் மாநகராட்சி அலுவல கத்தில் கலெக்டர் அருள் தம்புராஜ் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இதனை தொடர்ந்து கடலூர் மாநகராட்சி அலுவல கத்தில் கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை யில் ஆய்வு கூட்டம் நடை பெற்றது. மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன், ஆணையாளர் கிருஷ்ண மூர்த்தி, பொறியாளர் மாலதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதனை தொடர்ந்து கலெக்டர் அருண் தம்புராஜ், கடலூர் மாநகராட்சியில் குடிநீர், சாலை, தூய்மை பணிகள், தெரு மின்விளக்கு மற்றும் வளர்ச்சி திட்ட பணிகள் என்னென்ன நடைபெற்று உள்ளது என்பதனை அதி காரிகளிடம் கேட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் ஒவ்வொரு திட்டப் பணிகள் குறித்தும் அந்த பணி நடைபெறும் மாதங்கள், எவ்வளவு நிதி ஒதுக்கீடு, தற்போது பணிகளின் நிலவரம் என்ன என்பது குறித்து விரிவாக கேட்டறிந்தார். அப்போது சென்னையில் உள்ள சாலைகள் போல் கடலூர் மாநகராட்சியில் உள்ள சாலைகளை மேம்படுத்த வேண்டும். மக்களை கண் கவர கூடிய தெரு மின்விளக்குகள், சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தவிர்க்கும் விதமாக பார்க்கிங் வசதி, சாலைகளில் முகம் சுளிக்கும் வகையில் ஒட்டப்படும் போஸ்டர் மற்றும் பேனர்களை அகற்றி தூய்மையாக வைத்திருக்க வேண்டும். நமக்கு நாமே திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட வரும் பணிகளை உடனுக்கு டன் முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

    சாலை, குடிநீர் போன்ற அத்தியாவசிய அடிப்படைத் தேவைகளை விரைந்து முடித்து மக்களுக்கு சிரமம் ஏற்படுத்தாத வகை யில் அனைத்து நடவடிக்கை களும் மேற்கொள்ள வேண்டும். கடலூர் மாநகராட்சியில் நிர்ணயிக்கப்படும் அனைத்து பணிகளையும் அந்தந்த கால அவகா சத்திற்குள் தரமாக கட்ட மைத்து முடித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இது மட்டும் இன்றி பணிகள் மேற்கொள்ளும் ஒப்பந்த தாரர்களுக்கு உடனுக்குடன் அந்தந்த பணிகளுக்கான தொகையை வழங்க நட வடிக்கை எடுக்க வேண்டும். இது மட்டும் இன்றி மாநகராட்சி முழுவதும் அனைத்து இடங்களிலும் குப்பைகள் தேங்காத வகையில் துப்புரவு பணி யாளர்களை கொண்டு குப்பைகளை அகற்றி தூய்மையான மாநகராட்சி யாக வைத்திருக்க நட வடிக்கை மேற்கொள்ள வேண்டும். மாநகராட்சியில் நடை பெறும் பணிகள் தொய்வு ஏற்படாத வகையி லும், பணிகள் காலதாம தமானால் அதற்கான காரணங்கள் தெரிவிக்காத வகையில் அதிகாரிகளின் செயல்பாடுகள் திருப்தி அடையும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனகேட்டுக் கொண்டார். இதில் மாநக ராட்சி கவுன்சிலர்கள், அனைத்துதுறை அதிகாரி கள் கலந்து கொண்டனர்.

    • தூய்மைப்பணிகள் மேற்கொள்ளும் தூய்மை பணியாளர்களின் வருகை பதிவேடுகளை ஆய்வு செய்தார்.
    • தூய்மை பணிகளை தங்கு தடையின்றி மேற்கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி புதிய கமிஷனராக பொறுப்பேற்றுள்ள பவன்குமார் இன்று காலை முதல் மாநகராட்சியின் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டார். அதன்படி மாநகராட்சி பகுதிகளில் தூய்மைப்பணிகள் மேற்கொள்ளும் தூய்மை பணியாளர்களின் வருகை பதிவேடுகளை ஆய்வு செய்தார். தொடர்ந்து அவர்கள் மேற்கொள்ளும் பணிகள் குறித்து கேட்டறிந்து, தூய்மை பணிகளை தங்கு தடையின்றி மேற்கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

    மேலும் முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம் மற்றும் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் மற்றும் தூய்மை பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

    • தூய்மை பாரதம் திட்டம் மூலம் நகரின் பல பகுதிகளில் தூய்மை பணிகளை, மாவட்டத் தலைவர் மோகன் ராஜ் தொடங்கி வைத்தார்.
    • மகாத்மா காந்தி ஜெயந்தி விழா உதகை நகர பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மிக சிறப்பாக நடைபெற்றது

    ஊட்டி

    மகாத்மா காந்தி ஜெயந்தி விழா உதகை நகர பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மிக சிறப்பாக நடைபெற்றது

    காந்திஜெயந்தியை முன்னிட்டு, ஊட்டி சேரிஙகிராஸ் பகுதியில் அமைந்துள்ள அவரது சிலைக்கு மாவட்ட தலைவர் மோகன்ராஜ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    கதர் துணியின் விற்பனையை ஊக்குவிக்கும் விதமாக மாவட்டத் தலைவர் மோகன்ராஜ் காதிகிராப்ட் சென்று நிர்வாகிகள் அனைவருக்கும், காதி துணி வாங்கிக் கொடுத்தார்.

    தொடர்ந்து தூய்மை பாரதம் திட்டம் மூலம் நகரின் பல பகுதிகளில் தூய்மை பணிகளை, மாவட்டத் தலைவர் மோகன் ராஜ் தொடங்கி வைத்தார்.

    இதில் மண்டல் தலைவர் பிரவீன்,பொதுச் செயலாளர் சுரேஷ்குமார், ராஜேந்திரன், கார்த்திக், துணைத்தலைவர்கள் சுதாகர், ஹரி கிருஷ்ணன், இளைஞரணி மாவட்ட துணைத்தலைவர் பிரேமி யோகன், மாவட்ட மகளிர் அணி பொதுச் செயலாளர் அனிதா கிருஷ்ணன் ,மாவட்ட கூட்டுறவு துறை செயலாளர் விசாலி, மாவட்ட முன்னாள் ராணுவ பிரிவு தலைவர் கண்ணன், நகர செயலாளர் ராகேஷ். தடவியல் துறை மாவட்டத் தலைவர் உமா மகேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர்,

    • வாடிப்பட்டியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் தூய்மை பணிக்கான மக்கள் இயக்கம் தொடங்கப்பட்டது.
    • வீடுகள் தோறும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள், மஞ்சள்பை வழங்கப்பட்டது.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் ''எனது குப்பை எனது பொறுப்பு'' நகரங்களில் தூய்மைக் கான மக்கள்இயக்கத்தின் சார்பில் வீடுகள் தோறும் மக்கும், மக்காத குப்பைகள் பிரித்து வழங்க கோரியும், பிளாஸ்டிக் பாலிதின் ஒழிப்பு, பாலிதீன் மஞ்சள்பை பயன் பாடு பற்றிய விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது. 1-வது வார்டு சாணம்பட்டி முத்தாலம்மன் கோவில்முன்பு விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவர் பால்பாண்டியன் தலைமை தாங்கினார். முன்னாள் பேரூராட்சி தலைவர் கிருஷ்ணவேணி முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் சண்முகம் உறுதி மொழி வாசித்தார். துணைத் தலைவர் கார்த்திக் விழிப்புணர்வு பிரசாரத்தை தொடங்கி வைத்தார். இதில் திடக்கழிவு மேலாண்மை திட்ட பயிற்சியாளர் சிலம்பரசன் பேசினார். மக்கும், மக்காத குப்பைகள் பற்றிய கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. மேலும் வீடுகள் தோறும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள், மஞ்சள்பை வழங்கப்பட்டது. மக்கும், மக்காத குப்பைகளை பிரித்து வழங்கும் பெண்களுக்கும், வீட்டு தோட்டம் அமைத்து அதில் மக்கும் குப்பையை உரமாக பயன் படுத்தும் பெண்களுக்கும் பரிசுகளும், வீடுகள் தோறும் மஞ்சள் பைகளை பேரூராட்சித் தலைவர் பால்பாண்டியன் வழங்கினார். பாண்டியராஜபுரம் சாலையில் ஒருங்கிணைந்த சிறப்பு துப்புரவு பணி முகாம் மூலம் செடி கொடிகள் அகற்றி வடிகால் சுத்தம் செய்யப் பட்டது. சுகாதாரப் பணி மேற்பார்வையாளர் தீலிபன் சக்ரவர்த்தி நன்றி கூறினார்.

    • ‘‘நம்ம ஊரு சூப்பர்” தூய்மை திட்ட பணிகள் தொடங்கப்பட்டது.
    • வீட்டில் மழை நீர் சேமிப்பு அமைப்புகளை முறையாக பராமரிக்க வேண்டும்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம், களிமண் குண்டு ஊராட்சியில் வளர்ச்சித்துறை மற்றும் வனத்துறை இணைந்து பசுமை தமிழகம் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் தொடக்க விழா கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் முன்னிலையில் நடந்தது.

    அரசு முதன்மைச் செயலர் மற்றும் மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் தர்மேந்திர பிரதாப் யாதவ் தலைமை தாங்கி களிமண்குண்டு ஊராட்சி யில் உள்ள கடற்கரைப் பகுதியில் மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்தார்.

    பின்னர் திருப்பு ல்லாணி ஊராட்சியில் ஊரக வளர்ச்சி துறையின் மூலம் "நம்ம ஊரு சூப்பர்" தூய்மை திட்ட பணிகள் தொடக்க நிகழ்ச்சி நடந்தது. இதில் கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் முன்னிலையில் பொதுமக்களுடன் அரசு முதன்மைச் செயலர் தர்மேந்திர பிரதாப் யாதவ் தலைமையில் "நம்ம ஊரு சூப்பரு''க்கான உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.

    இதில் முதன்மைச் செயலர் தர்மேந்திர பிரதாப் யாதவ் பேசியதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் கிராமங்கள் தோறும் குப்பையில்லா கிராமங்களை உருவாக்கி, சுகாதாரத்தை காப்பதற்காக நம்ம ஊரு சூப்பர் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    பொதுமக்கள் குப்பைகளை மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என தரம் பிரிக்க வேண்டும். மக்கும் குப்பைகளை வீட்டிலேயே உரமாக்கி வீட்டு தோட்டத்திற்கு பயன்படுத்த வேண்டும். தரம் பிரிக்கப்பட்ட குப்பைகளை மட்டுமே தூய்மை காவலர்களிடம் கொடுக்க வேண்டும்.

    பொது இடங்களில் குப்பைகளை கொட்டி அசுத்தம் செய்யக் கூடாது. வீடு மற்றும் தெருக்களில் கழிவுநீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வீட்டில் மழை நீர் சேமிப்பு அமைப்புகளை முறையாக பராமரிக்க வேண்டும்.

    ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த கூடாது. கடைக்குச் செல்லும் போது கண்டிப்பாக துணிப்பை எடுத்துச் செல்ல வேண்டும். சுற்றுச்சூழலை பாதுகாக்க வீட்டிலும் பொது இடங்களிலும் மரங்களை நட வேண்டும்,

    இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர் மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் தர்மேந்திர பிரதாப் யாதவ், கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் ஆகியோர் பொதுமக்களுடன் சேர்ந்து தூய்மைப் பணியில் ஈடுபட்டு குப்பைகளை அப்புறப்படுத்தினர்.

    தொடர்ந்து திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம், தாதனேந்தல் ஊராட்சியில் ஊரக வளர்ச்சித் துறை சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊராக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பராமரிக்கப்பட்டு வரும் காய்கறி தோட்டத்தை மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் தர்மேந்திர பிரதாப் யாதவ் பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.

    இந்த நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) பிரவீன் குமார், மாவட்ட வன உயிரின காப்பாளர் பகான் ஜக்தீஸ் சுதாகர், தோட்டக்கலை துணை இயக்குநர் நாகராஜன், திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் புல்லாணி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • கடலூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகள் திறக்கப்படுகிறது. இதையொட்டி 2,180 பள்ளிகளில் தூய்மைப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
    • கடலூர் மாவட்டத்தில் 245 உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள், 1188 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள், 282 நிதி உதவி பெறும் பள்ளிகள், 465 தனியார் பள்ளிகள் ஆகமொத்தம் 2180 பள்ளிகள் 13.6.2022 அன்று 1 முதல் 10-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படுகிறது.

    கடலூர்: கடலூர் அருகே காரைக்காடு அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித் துறை சார்பில் தூய்மைப் பள்ளிகள் இயக்கத்தினையும் மற்றும் காரைக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்த்திட வலியுறுத்தி சேர்க்கை விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் பாலசுப்ரமணியம் தொடங்கிவைத்து பேசியதாவது:- கடலூர் மாவட்டத்தில் 245 உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள், 1188 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள், 282 நிதி உதவி பெறும் பள்ளிகள், 465 தனியார் பள்ளிகள் ஆகமொத்தம் 2180 பள்ளிகள் 13.6.2022 அன்று 1 முதல் 10-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படுவதை தொடர்ந்து அனைத்து பள்ளிகளிலும் தூய்மைப் பள்ளிகள் இயக்கம் தொடங்கப்பட்டு தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உள்ளாட்சி அமைப்புகள், பெற்றோர் ஆசிரியர் கழகம், பள்ளி மேலாண்மைக்குழு, தூய்மைப்பணியாளர்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள், முன்னாள் மாணவர்கள் ஆகியோர் ஒத்துழைப்புடன் அனைத்து பள்ளிகளிலும் தூய்மைப்பணிகள் தொடர்ந்து செயல்படுத்தப்படும். பள்ளிகளில் வகுப்பறைகள், வளாகங்கள் மற்றும் கழிவறைகள் உள்ளிட்டவற்றை தூய்மைப்படுத்தியும், குடிநீர் வசதி, மின் வசதி மற்றும் சத்துணவு கூடங்களை நல்ல முறையில் பராமரித்தல் உள்ளிட்ட பணிகளை விரைந்து முடித்திடவும் அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார். தொடர்ந்து காரைக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முதலாம் வகுப்பு மாணவர் சேர்க்கையை கலெக்டர் தொடங்கி வைத்து பள்ளி மாணவர்களுக்கு பாடபுத்தகங்கள் மற்றும் இனிப்பு வழங்கி சால்வை அணிவித்து வரவேற்று தெரிவித்ததாவது:- அரசுப் பள்ளிகள் நமது சொத்தாகும், நமது பள்ளியின் பெருமையினை நாம் உணர்ந்து அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க நாம் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும், அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பொறியியல் மற்றும் மருத்துவ உயர்படிப்புகளில் சேர்வதற்கு வழங்கப்பட்டு வரும் 7.5% இட ஒதுக்கீடு, பெண்கல்வி ஊக்கத்தொகை ஆகியவற்றினை பயன்படுத்திக் கொள்ளவேண்டும் எனவும், மேலும் அரசுப் பள்ளியில் பயின்று வரும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 14 வகையான நலத்திட்ட உதவிகளை எடுத்துக்கூறி மாணவர்கள் நல் ஒழுக்கத்தோடு பெற வேண்டிய கல்வியின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார். சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நீர்நிலை பாதுகாப்பின் முக்கியத்துவம் ஆகியன குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் மற்றும் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு மாற்றாக மஞ்சப்பை பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தினையும் விளக்கினார். இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி)பவன்குமார் ஜி.கிரியப்பனவர், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் பூபதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வட்டாரக்கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    ×