search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூய்மை பணிக்கான மக்கள் இயக்கம் தொடக்கம்
    X

    தூய்மை பணிக்கான மக்கள் இயக்கம் தொடக்கம்

    • வாடிப்பட்டியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் தூய்மை பணிக்கான மக்கள் இயக்கம் தொடங்கப்பட்டது.
    • வீடுகள் தோறும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள், மஞ்சள்பை வழங்கப்பட்டது.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் ''எனது குப்பை எனது பொறுப்பு'' நகரங்களில் தூய்மைக் கான மக்கள்இயக்கத்தின் சார்பில் வீடுகள் தோறும் மக்கும், மக்காத குப்பைகள் பிரித்து வழங்க கோரியும், பிளாஸ்டிக் பாலிதின் ஒழிப்பு, பாலிதீன் மஞ்சள்பை பயன் பாடு பற்றிய விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது. 1-வது வார்டு சாணம்பட்டி முத்தாலம்மன் கோவில்முன்பு விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவர் பால்பாண்டியன் தலைமை தாங்கினார். முன்னாள் பேரூராட்சி தலைவர் கிருஷ்ணவேணி முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் சண்முகம் உறுதி மொழி வாசித்தார். துணைத் தலைவர் கார்த்திக் விழிப்புணர்வு பிரசாரத்தை தொடங்கி வைத்தார். இதில் திடக்கழிவு மேலாண்மை திட்ட பயிற்சியாளர் சிலம்பரசன் பேசினார். மக்கும், மக்காத குப்பைகள் பற்றிய கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. மேலும் வீடுகள் தோறும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள், மஞ்சள்பை வழங்கப்பட்டது. மக்கும், மக்காத குப்பைகளை பிரித்து வழங்கும் பெண்களுக்கும், வீட்டு தோட்டம் அமைத்து அதில் மக்கும் குப்பையை உரமாக பயன் படுத்தும் பெண்களுக்கும் பரிசுகளும், வீடுகள் தோறும் மஞ்சள் பைகளை பேரூராட்சித் தலைவர் பால்பாண்டியன் வழங்கினார். பாண்டியராஜபுரம் சாலையில் ஒருங்கிணைந்த சிறப்பு துப்புரவு பணி முகாம் மூலம் செடி கொடிகள் அகற்றி வடிகால் சுத்தம் செய்யப் பட்டது. சுகாதாரப் பணி மேற்பார்வையாளர் தீலிபன் சக்ரவர்த்தி நன்றி கூறினார்.

    Next Story
    ×