search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிவகிரி பேரூராட்சி பகுதியில் மரக்கன்றுகள் நடும் பணி
    X

    சிவகிரி பேரூராட்சி பகுதியில் மரக்கன்றுகள் நடும் பணி

    • சிவகிரி பேரூராட்சி பகுதியில் வடிகால் சுத்தம் செய்தல்,போஸ்டர்கள் அகற்றுதல் பணிகள் நடைபெற்றது.
    • பேரூராட்சி தலைவர் கோமதிசங்கரி சுந்தரவடி வேலு உள்ளிட்டோர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    சிவகிரி:

    சென்னை பேரூராட்சி இயக்குநர் உத்தரவின்பேரில், நெல்லை மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் அறிவுரையின்படி, சிவகிரி பேரூராட்சி பகுதியில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தின்படி வடிகால் சுத்தம் செய்தல், பஸ் நிலையத்தில் போஸ்டர்களை அகற்றுதல் ஆகிய பணிகளை தொடர்ந்து சிவகிரி வனச்சரக அலுவலகம் அருகே மரக்கன்றுகள் நடும் பணி நடை பெற்றது. பேரூராட்சி தலைவர் கோமதிசங்கரி சுந்தரவடி வேலு, துணைத்தலைவர் லட்சுமிராமன், செயல் அலுவலர் வெங்கடகோபு ஆகியோர் மரக்கன்றுகளை நட்டு வைத்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் அனைத்து கவுன்சிலர்கள், அலுவலர்கள், பணியாளர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×