search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குப்பையில்லா இந்தியா திட்டத்தில் குமரி மாவட்டத்தில் தூய்மை பணிகள் தீவிரம்
    X

    குப்பையில்லா இந்தியா திட்டத்தில் குமரி மாவட்டத்தில் தூய்மை பணிகள் தீவிரம்

    • சுகாதார ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் உள்பட அனைத்து தரப்பு மக்களும் கலந்துகொண்டு தூய்மை பணிகளை மேற் கொண்டனர்.
    • நாகரா்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட 52 வார்டுகளிலும் தூய்மை பணிகள் நடந்தது.

    நாகர்கோவில் :

    குப்பையில்லா இந்தியா என்பதை கருத்தில் கொண்டு நாடு முழுவதும் கடந்த செப்டம்பர் மாதம் 15-ந்தேதி முதல் அக்டோபர் 2-ந்தேதி வரை தூய்மை பாரத் இயக்கம் என்ற பெயரில் நாட்டில் உள்ள அனைத்து கிராம ஊராட்சி பகுதிகளில் தொடர்ந்து தூய்மை பணிகள் நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று கன்னியா குமரி மாவட்டம் முழுவதும் தூய்மை பாரத் இயக்கம் என்ற பெயரில் பொது மற்றும் தனியார் இடங்களில் தூய்மை பணிகள் மேற் கொள்ளப்பட்டன.

    இதில் குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிக்குட்பட்ட பொது இடங்களில் கிராம ஊராட்சி தலைவர்கள் தலைமையில் உள்ளாட்சி பிரதிநிதிகள், தொண்டு நிறுவனங்கள், சுய உதவி குழுவினர், இளைஞர் அமைப்புகள், தன்னார்வலர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாண வா்கள், சுகாதார ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் உள்பட அனைத்து தரப்பு மக்களும் கலந்துகொண்டு தூய்மை பணிகளை மேற் கொண்டனர்.

    மேலும் தனியார் இடங் களில் உள்ள குப்பைகளை அப்புறப்படுத்தி தூய்மை செய்ய சம்பந்தப்பட்ட நபர்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தினர். அதனைத் தொடர்ந்து தனியார் இடங்களிலும் தூய்மை பணிகள் நடந்தது. நாகரா்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட 52 வார்டுகளிலும் தூய்மை பணிகள் நடந்தது.

    குறிப்பாக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரி, கோட் டார் அரசு ஆயுர்வேத கல்லூரி ஆஸ்பத்திரி, துணை சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், மாநகராட்சி அலுவலகம், கலெக்டர் அலுவலகம், தீயணைப்புத்துறை அலுவலகம், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், போலீஸ் நிலையங்கள், அண்ணா விளையாட்டு அரங்கம், வடசேரி பஸ் நிலையம், அண்ணா பஸ் நிலையம், செட்டிகுளம் சந்திப்பு, பார்வதிபுரம், ஒழுகினசேரி அப்டா மார்க்கெட், வடசேரி சந்தை மற்றும் அனைத்து அரசு, தனியார் அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங் களில் குப்பைகள் அகற்றப் பட்டு தூய்மை பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப் பட்டன.

    இதேபோல வனத்துறை சார்பில் மலையோர கிரா மங்களும், பொதுப்பணித் துறை சார்பில் நீர்பிடிப்பு பகுதிகளிலும் தூய்மை பணிகள் நடந்தது. மாவட்டம் முழுவதும் நடந்த இந்த தூய்மை பணிகளில் சுமார் 7 ஆயிரத்துக்கும் அதிக மானோர் கலந்து கொண்ட னர்.

    Next Story
    ×