search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சுரண்டை நகராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
    X

    சுரண்டை நகராட்சியில் நகர்மன்ற தலைவர் வள்ளிமுருகன் தலைமையில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்ற போது எடுத்த படம்.

    சுரண்டை நகராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

    • உறுதிமொழி ஏற்ற பின் அருகில் உள்ள கடைகளில் விழிப்புணர்வு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.
    • செண்பக கால்வாய் கழிவு நீர் ஓடையில் கூட்டு துப்புரவு பணி நடைபெற்றது.

    சுரண்டை:

    சுரண்டை நகராட்சியில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் மற்றும் தூய்மையே சேவை நிகழ்ச்சியின் மூலமாக பஸ் நிலையத்தில் நகர்மன்ற தலைவர் வள்ளிமுருகன் தலைமையில் பிளாஸ்டிக்கை ஒழிப்போம் என விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் நகர்மன்ற உறுப்பினர்கள், நகராட்சி பணியாளர்கள், மேற்பார்வையாளர்கள், தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். அனைவரும் இணைந்து பிளாஸ்டிக்கை ஒழிப்போம் என உறுதிமொழி ஏற்ற பின் அருகில் உள்ள கடைகளில் விழிப்புணர்வு பிரசுரங்களை வழங்கினர்.

    பின்பு சுரண்டை நகராட்சியில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் மற்றும் தூய்மையை சேவை நிகழ்ச்சியின் மூலமாக செண்பக கால்வாய் கழிவு நீர் ஓடையில் ஒட்டு மொத்த கூட்டு துப்புரவு பணி நடைபெற்றது. நகராட்சி தூய்மை பணியாளர்களை கொண்டு ஓடையில் தேங்கி கிடந்த கழிவுகள் அகற்றப்பட்டன.

    Next Story
    ×