search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருவாரூர் இடைத்தேர்தல்"

    திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தலை நிறுத்த மு.க.ஸ்டாலின் கெஞ்சினார். அது குறித்த ஆடியோ எங்களிடம் உள்ளது என்று அமைச்சர் சீனிவாசன் பேசினார். #dindigulsrinivasan #thiruvarurelection #mkstalin

    பழனி:

    பழனியில் அ.தி.மு.க. சார்பில் வீரவணக்கநாள் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது:-

    மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கநாள் பொதுக்கூட்டம் நடத்த தி.மு.க.வுக்கு எந்த தகுதியும் கிடையாது.

    இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்கு கருணாநிதி தலைமை தாங்கினார். ஆனால் அவரது மகன், மகள், பேரன்கள் என அனைவரும் இந்தி பேசி வருகின்றனர்.

    மு.க.ஸ்டாலின் வடமா நிலத்திற்கு சென்று இந்தியில் பேசுகிறார். எனவே மொழிப் போர் தியாகிகளுக்காக தி.மு.க. கூட்டம் நடத்துவது வேதனையான செயல்.


    திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தலை நிறுத்த மு.க.ஸ்டாலின் கெஞ்சினார். அது குறித்த ஆடியோ எங்களிடம் உள்ளது. ஆனால் எங்களை பார்த்து இடைத்தேர்தலை சந்திக்க பயப்படுவதாக பிரசாரம் செய்து வருகின்றார்.

    எப்போது தேர்தல் வந்தாலும் அதனை சந்திக்க அ.தி.மு.க. தயங்காது. பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி இந்த அரசை கலைக்க நினைக்கும் ஸ்டாலின், தினகரனின் கனவு ஒருபோதும் நிறைவேறாது.

    உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது மக்களை சந்திக்காத மு.க.ஸ்டாலின் தற்போது கிராமம் கிராமமாக கூட்டம் நடத்தி வருகிறார். தரையில் அமர்ந்தாலும், உருண்டு புரண்டாலும் அவரால் முதல்வர் ஆக முடியாது.


    சசிகலாவின் அக்கா மகன் என்ற தகுதியை தவிர தினகரனுக்கு வேறு எந்த தகுதியும் கிடையாது. சசிகலாவால் போயஸ் தோட்டத்திற்குள் புகுந்து பல கோடி சொத்துக்களை கொள்ளையடித்தார். தற்போது அந்த பணத்தை வைத்து அரசியல் நடத்தி வருகிறார். அவரது முதல்வர் கனவு பலிக்காது.

    இவ்வாறு அவர் பேசினார். #dindigulsrinivasan #thiruvarurelection #mkstalin

    திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் 50ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க. வெற்றி பெறும் என்று அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். #ministermrvijayabaskar #Thiruvarurelection #admk

    கரூர்:

    கரூர் ஆண்டாங்கோவில் புதூர் பகுதியில் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1000 வழங்கும் நிகழ்ச்சியை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்று தொடங்கி வைத்தார். பினனர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1000 வழங்க ரூ.2ஆயிரம் கோடி நிதி ஒதுக்கியுள்ளார். வருகிற 8,9-ந்தேதிகளில் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்துள்ளனர். அண்ணா தொழிற் சங்கத்தில் ஏராளமான தொழிலாளர்கள் உள்ளனர். அவர்கள் அரசுக்கும், பொதுமக்களுக்கும் சிரமம் அளிக்காமல் வேலைக்கு வருவார்கள். அவர்கள் மூலம் பஸ்கள் இயக்கப்படும்.

    பொங்கல்பண்டிகையையொட்டி மக்கள் அதிகம் கூடும் இடங்களில் மொபைல் டாய்லெட், தண்ணீர் வசதி, மின்கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசல் இல்லாமல் இருக்க முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச பஸ்-பாஸ் இன்னும் 2, 3 நாட்களில் வழங்கப்பட்டு விடும். அப்படி வழங்கப்படாத பட்சத்தில் மாணவர்கள் சீருடை அணிந்து பஸ்களில் இலவசமாக பயணிக்கலாம்.


    திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் 50ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க. வெற்றி பெறும். ஆர்.கே.நகர் தேர்தல் போன்று 20ரூபாய் நோட்டு இத்தேர்தலில் எடுபடாது. நாளை ரெட் பஸ் மற்றும் 550 புதிய பஸ்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைக்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார். அப்போது கீதா எம்.எல்.ஏ., மற்றும் பலர் உடனிருந்தனர். #ministermrvijayabaskar #Thiruvarurelection #admk

    திருவாரூர் இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளரை வரும் 10-ந்தேதி அறிவிப்போம் என்று தம்பிதுரை எம்பி தெரிவித்துள்ளார். #thiruvarurByelection
    பேரளம்:

    திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள ஸ்ரீவாஞ்சியம் பகுதியில் உள்ள வாஞ்சிநாத சுவாமி கோவிலில் தம்பிதுரை எம்.பி. தனது மனைவி, மகளுடன் வந்து இன்று சாமி தரிசனம் செய்தார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தேர்தல் எந்த நேரத்தில் வந்தாலும் சந்திப்பதற்கு அதிமுக தயாராக இருக்கிறது. அதில் எந்த கருத்து வேறுபாடுகளும் கிடையாது. தேர்தல் வைப்பதும், தள்ளி வைப்பதும் தேர்தல் ஆணையத்தின் முடிவு.

    ஆனால் இன்று என்னுடைய சொந்தக் கருத்தாக சொல்கிறேன். உங்களுக்கு நினைவிருக்கும் பென்னாகரம் இடைத்தேர்தல் வந்தபோது அப்போது திமுக ஆட்சி. அந்த சமயத்தில் ஜெயலலிதா, பொங்கல் நேரத்தில் தேர்தல் நடத்தக்கூடாது. தேர்தல் வைத்தால் சரியாக இருக்காது என்று கூறியதால் தேர்தலை தள்ளி வைத்தார்கள். இது ஒரு முன்னுதாரணம்.

    தேர்தல் ஆணையம் தமிழகத்தின் நிலையை அறிந்து அதற்கேற்றாற்போல் அறிவித்திருந்தால் இந்த பிரச்சனை வந்திருக்காது. தேர்தல் என்பது ஜனவரி மாதத்தில் நடத்துவது சரியாக இருக்காது. அதே நேரத்தில் திருவாரூர் மாவட்டம் கஜா புயலால் மிகப்பெரிய அளவில் பாதிப்படைந்துள்ளது. நிவாரண பணிகளை அரசு செய்து வருகிறது. அதே நேரத்தில் தேர்தல் ஆணையம் தேர்தலையும் நடத்தலாம் நிவாரணத்தையும் வழங்கலாம் என கூறுவது சில பிரச்சனைகளை உருவாக்கும்.

    அதிமுக வேட்புமனு தாக்கல் முன்புதான் தேர்தலில் வேட்பாளரை அறிவிக்கும். தற்போது 10-ந்தேதி அதிமுக வேட்பாளரை அறிவிப்பார்கள். அதிமுக வெற்றி வாய்ப்பு அதிகமாக இருப்பதால்தான் 52 வேட்பாளர்கள் விருப்ப மனு கொடுத்திருக்கிறார்கள். திருவாரூரில் அதிமுக ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறும். தேர்தல் நடக்குமா? நடக்காதா? என்பதை தேர்தல் ஆணையம்தான் முடிவெடுக்க வேண்டும்.

    இவ்வாறு தம்பிதுரை எம்பி கூறினார.
    ×