என் மலர்
நீங்கள் தேடியது "Rahul Gandhi"
- "சீனாக்காரன்", "மோமோஸ் விற்பவன்" என்று சிறுமைப்படுத்தியுள்ளனர்.
- பாஜக தலைமையிலான அரசு இத்தகைய வெறுப்புணர்வைச் சாதாரணமான ஒன்றாக மாற்றி வருகிறது
வடகிழக்கு மாநிலமான திரிபுராவைச் சேர்ந்த மாணவர் ஏஞ்சல் சக்மா உத்தரகாண்டில் இனவெறி தாக்குதலால் கொள்ளப்பட்டது நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.
24 வயதான ஏஞ்சல் சக்மா உத்தரகாண்ட் தலைநகர் டேராடூனில் எம்பிஏ பயின்று வந்தார். கடந்த டிசம்பர் 9-ம் தேதி, ஏஞ்சல் சக்மா மற்றும் அவரது சகோதரர் மைக்கேல் ஆகியோர் டேராடூனில் உள்ள சந்தைக்குச் சென்றிருந்தனர்.
அப்போது அங்கிருந்த ஒரு கும்பல்அவர்களை இனரீதியாக இழிவுபடுத்தி பேசியுள்ளது. "சீனாக்காரன்", "மோமோஸ் விற்பவன்" என்று அவர்களைச் சிறுமைப்படுத்தியுள்ளனர்.
இதனை ஏஞ்சல் சக்மா தட்டிக்கேட்டபோது, ஆத்திரமடைந்த கும்பல் கையில் கிடைத்த கற்கள் மற்றும் இரும்புத் கம்பிகளால் ஏஞ்சல் சக்மாவை கொடூரமாக தாக்கியுள்ளது.
இதில் பலத்த காயமடைந்த அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 15 நாட்களுக்கும் மேலாக உயிருக்கு போராடிய நிலையில், டிசம்பர் 26 அன்று சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு மற்ற இந்திய மாநிலங்களில் உரிய பாதுகாப்போ குறைந்தபட்ச மரியாதையோ இல்லை என இனவெறி தாக்குதலுக்கு சகோதரனை பறிகொடுத்த மைக்கேல் வேதனையுடன் தெரிவித்தார்.
தொடக்கத்தில் இந்த விவகாரத்தில் காவல்துறை மெத்தனமாகச் செயல்பட்டதாகவும், உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அவர் குற்றம்சாட்டினார்.
இந்த இனவெறி கொலைக்கு மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், "இது வெறுப்புணர்வால் தூண்டப்பட்ட பயங்கரமான குற்றம். பாஜக தலைமையிலான அரசு இத்தகைய வெறுப்புணர்வைச் சாதாரணமான ஒன்றாக மாற்றி வருகிறது" என்று கடுமையாகச் சாடியுள்ளார்.
"இது ஒரு தேசிய அவமானம். நம் நாட்டு மண்ணிலேயே ஒரு இந்தியரை அந்நியர் போல உணரச் செய்வது நாகரீக சமூகத்திற்கு அழகல்ல," என்று காங்கிரஸ் எம்.பி சசி தரூர் வருத்தம் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, இந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், குற்றவாளிகள் எவரும் தப்ப முடியாது என்றும் உறுதியளித்துள்ளார். இந்த வழக்கில் இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளியைத் தேட காவல்துறை தனிப்படை அமைத்துள்ளது.
இந்தக் கொடூரமான கொலையைக் கண்டித்து திரிபுராவில் மாணவர்கள் அமைப்பினர் மெழுகுவர்த்தி ஏந்தி அமைதிப் பேரணி நடத்தினர்.
- ஒரு எளிய லாஜிக்கை ராகுல் பாபாவுக்குப் புரிய வைப்பது என் சக்திக்கு அப்பாற்பட்டது.
- ஏனென்றால் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களே அதை அவருக்குப் புரிய வைப்பதில் தோல்வியடைந்து விட்டனர்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற கிராம மக்கள் வாழும் நிலத்திற்கான பட்டா வழங்கும் நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
சமீபத்தில் மக்களவையில் நடைபெற்ற விவாத்தின்போது, எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி என்னிடம், ஒவ்வொரு முறையும் தன்னுடைய கட்சி தேர்தலில் ஏன் தோல்வியடைகிறது என என்னிடம் விசித்திரமான கேள்வியை கேட்டார். மக்களிடம் கேட்பதற்குப் பதில் என்னிடம் கேட்டார். ராகுல் பாபா, நான் இங்கு தொடங்கியுள்ள இந்த இரண்டு முயற்சிகளை நீங்கள் புரிந்துகொண்டால், உங்களுக்குப் பதில் கிடைத்துவிடும்.
தோல்விக்காக ராகுல் காந்தி காந்தி சோர்வு அடையக்கூடாது. ஏனென்றால், தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் வரவிருக்கும் தேர்தலில் உறுதியாக காங்கிரஸ் தோல்வியடைய இருக்கிறது.
எங்களுடைய வெற்றிக்கு பின்னால் உள்ள காரணம், மக்கள் எங்களுடைய கொள்கையோடு இணைக்கப்பட்டுள்ளனர். காங்கிரஸ் ராமர் கோவில், பயங்கரவாதிகள் மீது சர்ஜிகல் தாக்குதல், சட்டப்பிரிவு 370 நீக்கம், பொது சிவில் சட்டம், முத்தலாக் சட்டம், வங்கதேச ஊடுருவல்காரர்களுக்கு எதிராக பிரசாரம் ஆகியவற்றை எதிர்த்தது.
மக்கள் விரும்புவதை, நீங்கள் எதிர்த்தால், நீங்கள் எப்படி வாக்குகளை பெறுவீர்கள்? என்பதை எனக்கு சொல்லுங்கள்.
ஆனால், இத்தகைய ஒரு எளிய லாஜிக்கை ராகுல் பாபாவுக்குப் புரிய வைப்பது என் சக்திக்கு அப்பாற்பட்டது, ஏனென்றால் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களே அதை அவருக்குப் புரிய வைப்பதில் தோல்வியடைந்து விட்டனர்.
- பிரதமர் மோடிக்கும், பிரதமராக நினைக்கும் காங்கிரசின் ராகுல் காந்திக்கும்தான் நேரடி போட்டி.
- நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மை பெற்றால் மட்டுமே அவருக்கு பிரதமராக வாய்ப்பு.
புதுடெல்லி:
இந்தியாவில் பல தலைமுறைகளாகக் கொண்டாடப்படும், படிக்க படிக்கத் திகட்டாத கதைகளில் விக்கிரமாதித்தன் கதைகளும் ஒன்று.
உஜ்ஜயினி மன்னன் விக்கிரமாதித்தன் மற்றும் வேதாளம் (ஒரு பூதம்) இடையிலான தர்க்கம் நிறைந்த, நீதிபோதனை கொண்ட அற்புதமான கதைகளின் தொகுப்பே விக்கிரமாதித்தன் கதை ஆகும்.
வேதாளம் ஒரு மரத்திலிருந்து தொங்கிக்கொண்டிருக்கும் உடலுடன் வரும். விக்கிரமாதித்தன் அதைத் தூக்கிக் கொண்டு செல்லும்போது, வேதாளம் ஒரு கதையைச் சொல்லி, இறுதியில் ஒரு கேள்வியைக் கேட்கும். அதற்கு விக்கிரமாதித்தன் பதிலளிக்கத் தவறினால், வேதாளம் மீண்டும் மரத்திற்குத் திரும்பிவிடும். இதனால் விக்கிரமாதித்தன் சாகசம் தொடரும்.
தன் முயற்சியில் சற்றும் சளைக்காத விக்கிரமாதித்தன் முருங்கை மரம் ஏறி வேதாளத்தைச் சுமந்தது போல, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு எம்.பி.யுமான ராகுல் காந்தி தொடர்ந்து தேர்தல்களில் அக்கட்சியை வெற்றி பெற வைக்க போராடி வருகிறார்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலிலும் பிரசாந்த் கிஷோரை அழைத்துப் பேசியது அதற்காகவே. ஆனாலும், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரளவு இடங்கள் கிடைத்தது என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

மத்தியில் பிரதமர் நாற்காலியில் அமர்ந்துள்ள மோடிக்கும், பிரதமராக அமர நினைக்கும் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கும்தான் நேரடி போட்டி. நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மை பெற்றால் மட்டுமே ராகுல்காந்தி பிரதமராக அமர வாய்ப்பு உள்ளது.
காங்கிரஸ் கட்சி தலைவராக ராகுல் காந்தி நியமனம் செய்யப்பட்ட பின் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் தோல்விகளைச் சந்தித்திருந்தார். ஆனலும் ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் உள்பட 3 மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தல்களில் ஆளும் பாஜக அரசை வீட்டுக்கு அனுப்பி ஆட்சியை பிடித்தது காங்கிரஸ்.
சினிமாவில் ஹீரோவுக்குத் துணையாக காமெடி நடிகர்கள் வருவார்கள். அதனால் படமும் சுவாரசியமாகப் போகும். ஆனால், நிஜத்தில் யாருடைய துணையும் இல்லாமல் ஹீரோவாக தனி ஆளாக நின்று போராடி வருகிறார் ராகுல் காந்தி. அவரை 'பப்பு' என விமர்சிக்கும் பா.ஜ.க.வினரும் ஒப்புக்கொள்ளும் ஒரு விஷயம் என்னவென்றால் ராகுலின் தைரியம். சுருக்கமாகச் சொன்னால் ராகுல் காந்தி ஒன் மேன் ஆர்மி.
அண்மைக் காலங்களில் ராகுல் காந்தி அளவுக்குக் கிண்டலடிக்கப்பட்ட, தனிப்பட்ட முறையில் தாக்கப்பட்ட, இன்னொரு தலைவர் இந்திய அரசியலில் இல்லை.
கடந்த 2004-ம் ஆண்டு முதல் 2025-ம் ஆண்டு வரை 20 ஆண்டுகளில் நடைபெற்ற 95 தேர்தல்களில் ராகுல் காந்தி தோல்வி அடைந்துள்ளார் என பா.ஜ.க. வரைபடம் வெளியிட்டு விமர்சனம் செய்துள்ளது.

காங்கிரஸ் ஒரு போராட்ட இயக்கம். போராடிப் போராடி மக்கள் மத்தியில் வலுவடைந்த இயக்கம். ஆனால், இன்று போராட்டம் என்றால் என்ன என கேட்கிறார்கள்.
எனவே ராகுல் காந்தி மத்தியில் மீண்டும் காங்கிரஸ் கட்சியை ஆட்சிக்கு அமர்த்த வேண்டும் என்பதே அக்கட்சி தொண்டர்களின் கருத்தாக உள்ளது என்றால் நிச்சயம் மிகையில்லை.
- மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
- அதற்குப் பதிலாக VB-G RAM G மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மந்திரிசபையை கேட்காமலும், இதுகுறித்து ஆய்வு நடத்தாமலும் பிரதமர் மோடி, தானாகவே MGNREGA-ஐ அழித்துவிட்டார். நாங்கள் அதை தடுத்துக் கொண்டிருக்கிறோம். ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் எங்களுடன் இணைந்து நிற்கும் என நம்பிக்கையுடன் இருக்கிறேன்.
பண மதிப்பிழப்பை போன்று, பிரதமர் மோடி ஒரு நபராக மாநிலங்கள் மற்றும் ஏழை மக்கள் மீது நடத்திய பேரழிவு தாக்குதல் இது.
இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
20 ஆண்டு கால மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டம் VB-G RAM G மசோதாவாக மாற்றப்பட்டு நிறைவேற்றப்பட்டது. புதிய சட்டத்தில் 125 நாட்கள் வேலை வழங்கும் வகையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
- மன்மோகன் சிங் தனது தொலைநோக்கு தலைமையின் மூலம், அவர் இந்தியாவை பொருளாதார ரீதியாக மேம்படுத்தினார்.
- அவரது பணிவு, கடின உழைப்பு மற்றும் நேர்மை எப்போதும் நம் அனைவருக்கும் ஒரு உத்வேகமாக இருக்கும்.
முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கின் முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டி காங்கிரஸ் அலுவலகத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.
இந்தியாவை பொருளாதார ரீதியாக மேம்படுத்திய கொள்கைகள் மற்றும் நாட்டின் உலகளாவிய நிலையை வலுப்படுத்திய தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவர் மன்மோகன் சிங் என்று அவர் தெரிவித்தார்.
மன்மோகன் சிங் நினைவு தினத்தையொட்டி ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களின் நினைவு நாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன்.
அவர் தனது தொலைநோக்கு தலைமையின் மூலம், அவர் இந்தியாவை பொருளாதார ரீதியாக மேம்படுத்தினார். நாட்டின் நலிந்த மற்றும் ஏழை மக்களுக்காக அவர் எடுத்த வரலாற்று சிறப்புமிக்க முயற்சிகளும், துணிச்சலான முடிவுகளும் உலக அரங்கில் இந்தியாவுக்கு ஒரு புதிய அடையாளத்தை அளித்தன.
அவரது பணிவு, கடின உழைப்பு மற்றும் நேர்மை எப்போதும் நம் அனைவருக்கும் ஒரு உத்வேகமாக இருக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கிறிஸ்துமஸ் பண்டிகை நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது.
- இந்த கிறிஸ்துமஸ் உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி, செழிப்பைக் கொண்டு வந்து அன்பால் நிரப்பட்டும்.
இயேசு கிறிஸ்து பிறந்த தினம் உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,
அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்.
இந்த கிறிஸ்துமஸ் உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி, செழிப்பைக் கொண்டு வந்து அன்பால் நிரப்பட்டும்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
- 16 வயதான சிறுமி செங்காரால் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.
- 2019 ஆம் ஆண்டு செங்காருக்கு வாழ்நாள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
புதுடெல்லி:
கடந்த 2017-ம் ஆண்டு வேலை வாங்கித் தருவதாகக் கூறி அழைத்துச் செல்லப்பட்ட சிறுமி உத்தர பிரதேசத்தின் உன்னாவ் தொகுதியின் பா.ஜ.க. எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்காரால் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த வழக்கை உ.பி.யில் இருந்து டெல்லி நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் 2019-ம் ஆண்டு எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்காருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. தண்டனையை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மனு உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
இதற்கிடையே, குல்தீப் சிங் செங்கார் தாக்கல் செய்த மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியது. இதற்கு பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது தாயார் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில், இதுதொடர்பாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
கூட்டு பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட ஒருவரை கையாளும் முறை இதுதானா?
நீதிக்காக குரல் எழுப்பும் துணிச்சல் அவருக்கு இருப்பதுதான் அவருடைய குற்றமா?
குறிப்பாக பாதிக்கப்பட்டவர் மீண்டும் மீண்டும் துன்புறுத்தப்பட்டு பயத்தின் நிழலில் வாழ்ந்து வரும் குற்றவாளிக்கு ஜாமின் வழங்கப்பட்டது மிகவும் ஏமாற்றமளிக்கிறது. வெட்கக் கேடானது.
பாலியல் குற்றவாளிகளுக்கு ஜாமின் வழங்குவதும், பாதிக்கப்பட்டவர்களைக் குற்றவாளிகளைப் போல் நடத்துவதும் என்ன வகையான நீதி.
நாம் ஒரு இறந்த பொருளாதாரமாக மாறுவது மட்டுமல்லாமல், இதுபோன்ற மனிதாபிமானமற்ற சம்பவங்களால் ஒரு இறந்த சமூகமாகவும் மாறிக் கொண்டிருக்கிறோம்.
மக்களாட்சியில் குரல் எழுப்புவது உரிமை, அதை ஒடுக்குவது குற்றம். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி வேண்டும் என தெரிவித்தார்.
- எதிர்க்கட்சியாக விளங்கும் காங்கிரசுக்கு இந்த ஆண்டு சொல்லிக் கொள்ளும்படி இல்லை.
- டெல்லியில் காங்கிரசுக்கு ஒரு இடம் கூட கிடைக்காதது அக்கட்சியை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
புதுடெல்லி:
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா. 145 கோடி மக்கள்தொகையைக் கொண்டுள்ள இந்தியாவில் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்கள் மிகப்பெரிய அளவில் திருவிழா போன்று நடைபெற்று வருகின்றன.
இந்த ஆண்டு நடைபெற்ற மாநில தேர்தல்கள் முதல் உள்ளாட்சி தேர்தல்கள் வரை மத்தியில் ஆளும் பா.ஜ.க.வுக்கு உற்சாகம் அளித்த ஆண்டாகவே அமைந்தது.
ஆனால், பிரதான எதிர்க்கட்சியாக விளங்கும் காங்கிரசுக்கு இந்த ஆண்டு சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை.
தலைநகர் டெல்லி மற்றும் பீகார் மாநிலங்களில் நடந்த சட்டசபைத் தேர்தல்களிலும் அக்கட்சி தோல்வியே அடைந்துள்ளது.

தலைநகர் டெல்லிக்கு பிப்ரவரி மாதம் சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 48 தொகுதிகளை பா.ஜ.க. கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றி அசத்தியது. ரேகா குப்தா முதலமைச்சர் ஆனார்.
தொடர்ந்து 10 ஆண்டாக ஆட்சியில் இருந்த ஆம் ஆத்மி கட்சி 22 இடங்களில் மட்டுமே வென்றது. ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்காதது அக்கட்சியினரை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது.
தலைநகரிலேயே ஒரு இடம் கூட வாங்க முடியாத அளவுக்கு காங்கிரஸ் தேய்ந்து வருகிறது என அரசியல் விமர்சகர்கள் கூறிவருகின்றனர்.
இதேபோல், நாடு முழுவதும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட பீகார் மாநில தேர்தலிலும் இந்தியா கூட்டணி தோல்வி அடைந்தது.
பா.ஜ.க. மகத்தான வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 202 இடங்களைக் கைப்பற்றி அசத்தியது. பாஜகவுக்கு 89 இடமும், கூட்டணிக்கு தலைமை தாங்கிய நிதிஷ்குமார் கட்சிக்கு 85 இடமும் கிடைத்தது.
காங்கிரஸ் கட்சி 61 இடங்களில் போட்டியிட்டு வெறும் 6 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.
இதுபோலவே, இந்தியா முழுவதும் நடந்த உள்ளாட்சி தேர்தல்களிலும் காங்கிரஸ் சொல்லிக் கொள்ளும் அளவு வெற்றி பெறவில்லை.
பொதுவாக 2025-ம் ஆண்டு பா.ஜ.க.வுக்கு அதிர்ஷ்டகரமான ஆண்டாகவே அமைந்தது. காங்கிரசுக்கு இந்த ஆண்டு ராசி இல்லாத ஆண்டாகவே முடியப் போகிறது.

சிறந்த ஜனநாயகத்திற்கு வலுவான எதிர்க்கட்சி அவசியம். எதிர்க்கட்சிதான் மக்களின் பிரதிநிதியாக, அரசை விழிப்புடன் செயல்படவைக்க வேண்டும். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியாக அமர்வதற்கு 543 தொகுதிகளில் குறைந்தது 55 தொகுதிகளை வென்றிருக்க வேண்டும்.
கடந்த 10 ஆண்டுகளில் எதிர்க்கட்சி இல்லாமல்தான் பா.ஜ.க ஆட்சிசெய்தது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில்தான் 99 தொகுதிகளை வென்ற காங்கிரஸ், ராகுல் காந்தியை எதிர்க்கட்சித் தலைவராக அமர்த்தியது.
பல்வேறு மாநிலங்களில் மாநில கட்சிகளுடன் கூட்டணியில் இருந்து வருகிறது. அப்படி இருக்கும் நிலையில், வரும் தேர்தல்களில் மாநில கட்சிகள் ஒதுக்கீடு செய்யும் தொகுதிகளும் குறைந்துவிடும். இதே நிலை மற்ற மாநிலங்களில் நீடித்தால், நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பான்மைக்கு தேவையான இடத்தில்கூட இந்தியா கூட்டணியில் காங்கிரசால் போட்டியிட முடியாத நிலை ஏற்படலாம். எனவே, இதுபோன்ற சிக்கல்களை சரியாகக் கையாண்டால் மட்டுமே காங்கிரசால் மீண்டும் தீவிர அரசியல் களத்தில் நிலைத்து நிற்க முடியும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
- பாராளுமன்ற நடவடிக்கையில் ராகுல் காந்தி பங்கேற்கவில்லை.
- பாராளுமன்ற நடவடிக்கையில் ராகுல் காந்தி பங்கேற்கவில்லை.
இந்திய பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நடைபெற்று முடிவடைந்துள்ளது. மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி ஐந்து நாட்கள் அவை நடவடிக்கையில் பங்கேற்கவில்லை. ஜெர்மனிக்கு இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸ் நிகழ்ச்சிக்காக சென்றார்.
ராகுல் காந்தி ஜெர்மனி சென்றதை. பா.ஜ.க. கடுமையாக விமர்சனம் செய்தது. தற்போது வாக்காளர் பட்டியல் திருத்தம், ஜி ராம் ஜி மசோதா குறித்து பாராளுமன்றத்தில் கடுமையான விவாதம் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர், தலைமை தாங்குவார் என்று எதிர்பார்த்தோம் என சி.பி.எம். எம்.பி. ஜான் பிரிட்டாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஜான் பிரிட்டாஸ் கூறியதாவது:-
நாங்கள் எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி அவை நடவடிக்கையில் ஆளும் கட்சிக்கு எதிராக விவாதத்தில் தலைமை தாங்குவார் என்று எதிர்பார்த்தோம். அது எங்களுடைய எதிர்பார்ப்பும், விருப்பமுமாக இருந்தது. ராகுல் காந்தி அந்த நேரத்தில் அவையில் இருந்திருந்தால், அனைத்தும் வேறு மாதிரி இந்திருந்திருக்கும்.
மேலும், பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நடைபெறும் தேதி ஏறக்குறைய கடந்த மூன்று முதல் நான்கு தசாப்தங்களாக ஒரே மாதிரியாக இருந்து வருகிறது. ஏறக்குறைய டிசம்பர் 22-ந்தேதி வாக்கில் முடிவடையும் என்று எல்லோருக்கும் தெரியும்.
இந்த நேரத்தில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் மற்ற அட்டவணையை திட்டமிட வேண்டாம் மற்றும் இந்தியாவில் இருக்க வேண்டும் என்று நாங்கள் (இந்தியா கூட்டணி கட்சிகள்) சொல்ல வேண்டுமா?. அல்லது காங்கிரஸ் தலைவர்கள் அவருக்கு சொல்ல வேண்டுமா?
இவ்வாறு ஜான் பிரிட்டாஸ் தெரிவித்தார்.
- பெரும்பாலான அரசியல் வழக்குகள் அவர்களை எதிர்ப்பவர்களுக்கு எதிராகவே உள்ளன.
- ஒரு தொழில் அதிபர் காங்கிரசை ஆதரித்தால் அவர் உடனடியாக அமலாக்கத்துறையால் மிரட்டப்படுகிறார்.
பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கடந்த 15-ந்தேதி ஜெர்மனிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் முடிவதற்குள் வெளிநாட்டுக்கு சென்றதால் அவரை பா.ஜ.க. கடுமையாக விமர்சித்தது.
இந்த நிலையில் சி.பி.ஐ, அமலாக்கத்துறையை ஆயுதமாக பயன்படுத்துகிறது என்றும், அரசியலமைப்பை ஒழிக்க பா.ஜ.க. முயற்சித்து வருகிறது என்றும் ராகுல்காந்தி குற்றம் சாட்டி உள்ளார்.
கடந்த வாரம் பெர்லினில் உள்ள ஹெர்டி பள்ளியில் மாணவர்களுடனான உரையாடலின் போது அவர் பேசிய வீடியோவை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. அதில் ராகுல்காந்தி பேசியதாவது:-
நமது அரசுத்துறைகள் மீது கடுமையான தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. சி.பி.ஐ, உளவுத் துறை, அமலாக்கத்துறை ஆகியவற்றை பா.ஜ.க. ஒரு ஆயுதம் போல் பயன்படுத்தி வருகிறது. பா.ஜ.க.வுக்கு எதிராக சி.பி.ஐ, அமலாக்கத்துறை எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை.
பெரும்பாலான அரசியல் வழக்குகள் அவர்களை எதிர்ப்பவர்களுக்கு எதிராகவே உள்ளன. ஒரு தொழில் அதிபர் காங்கிரசை ஆதரித்தால் அவர் உடனடியாக அமலாக்கத்துறையால் மிரட்டப்படுகிறார்.
காங்கிரஸ் கட்சி தான் அமலாக்கத்துறை, மத்திய புலனாய்வுத்துறை போன்ற துறைகளை உருவாக்கியது. அவற்றை ஒருபோதும் சொந்த துறைகளாக பார்க்கவில்லை. ஆனால் பா.ஜ.க. இதை இப்படி பார்க்கவில்லை. அவர்கள் தங்களுக்கு சொந்தமானதாக பார்க்கிறார்கள். அரசியல் அதிகாரத்தை கட்டியெழுப்ப அமலாக்கத்துறையையும், சி.பி.ஐ.யையும் ஒரு கருவியாக பயன்படுத்துகின்றனர்.
ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளது. அனைவருக்கும் சம உரிமைகளை வழங்கும். அரசியல் அமைப்பை ஒழிப்பதற்கு பா.ஜ.க. முயற்சித்து வருகிறது. மாநிலங்கள் இடையேயான சமத்துவம் என்ற கருத்தை ஒழிப்பது, அரசியலமைப்பு மைய கருவான ஒவ்வொரு தனி மனிதனுக்கும் ஒரே மதிப்பு உண்டு என்ற கருத்தை ஒழிப்பது என்பது பா.ஜ.க. நிலைப்பாடாகும்.
நாங்கள் பா.ஜ.க.வை எதிர்த்து போராடவில்லை. இந்தியாவில் உள்ள அமலாக்கத்துறை, சி.பி.ஐ போன்ற துறைகளை காப்பாற்றுவதற்காகவே போராடுகிறோம்.
ஜனநாயக அமைப்பின் மீது தாக்குதல் நடக்கும் போது எதிர்க்கட்சிகள் அதை எதிர்கொள்ள வழிகளை கண்டறிய வேண்டும். இந்திய நிறுவன கட்டமைப்பை கைப்பற்றியதற்கு எதிராகவே நாங்கள் போராடுகிறோம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
இந்தியாவில் தேர்தல் எந்திரத்தில் ஒரு சிக்கல் இருப்பதாக நாங்கள் உறுதியாக நம்புகிறோம். இந்திய ஜனநாயக அமைப்பின் மீதான தாக்குதலை பற்றி பேசும்போது அதை வெளிப்படையாக சொல்லவில்லை. ஆனால் அது உண்மையில் இந்திய ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் மட்டுமல்ல. உலக ஜனநாயக அமைப்பின் மீதான தாக்குதல் ஆகும்.
இந்தியா கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் ஆர்.எஸ்.எஸ்-ன் அடிப்படை கொள்கையுடன் உடன்படவில்லை. அந்த கேள்வியில் நாங்கள் மிகவும் ஒற்றுமையாக உள்ளோம். எங்களுக்குள் சில விஷயங்களில் போட்டிகள் உள்ளன. அவை தொடரும். ஆனால் எதிர்க்கட்சிகளுக்குள் ஒற்றுமை இருப்பதை பாராளுமன்றத்தில் பார்த்து இருப்பீர்கள்.
நாங்கள் மிகவும் ஒற்றுமையாக இருக்கிறோம். நாங்கள் உடன்படாத சட்டங்கள் குறித்து பா.ஜ.க.வை எதிர்த்து போராடுவோம்.
இவ்வாறு ராகுல்காந்தி அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.
- இதற்கான விலையைக் கோடிக்கணக்கான உழைக்கும் இந்தியர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழப்பதன் மூலம் செலுத்தப் போகிறார்கள்.
- இந்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டார்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் (MGNREGA) மற்றும் நாட்டின் ஜனநாயகம் ஆகிய இரண்டின் மீதும் மோடி அரசு புல்டோசரை ஏற்றி அழித்து வருவதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையாகச் சாடியுள்ளார்.
MGNREGA திட்டத்தின் மகாத்மா காந்தியின் பெயரை நீக்கி, விதிகளில் திருத்தம் செய்து மத்திய அரசு கொண்டுவந்துள்ள 'விபி ஜி ராம் ஜி, 2025' மசோதா குறித்து ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் , "இந்த மசோதா குறித்து எந்தவிதமான பொது விவாதமோ அல்லது நாடாளுமன்றத்தில் முறையான விவாதமோ நடத்தப்படவில்லை.
மாநில அரசுகளிடம் இருந்தும் இதற்கான ஒப்புதல் பெறப்படவில்லை. இதன் மூலம் மோடி அரசு மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் மற்றும் நாட்டின் ஜனநாயகம் ஆகிய இரண்டின் மீதும் புல்டோசரை ஏற்றி தரைமட்டமாக்கியுள்ளது. இது வளர்ச்சி அல்ல, அழிவு.
இதற்கான விலையைக் கோடிக்கணக்கான உழைக்கும் இந்தியர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழப்பதன் மூலம் செலுத்தப் போகிறார்கள்.
இந்த மசோதா திட்டத்தை மேம்படுத்துவதற்காக அல்ல, மாறாக அந்தத் திட்டத்தையே சிதைப்பதற்காகக் கொண்டு வரப்பட்டுள்ளது" என்று குற்றம்சாட்டி உள்ளார்.
டிசம்பர் 18-ம் தேதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டார்.
- உரிமைகள் அடிப்படையிலான, தேவைக்கேற்ப வழங்கப்படும் உத்தரவாதங்களை அழித்து, மத்திய அரசிடம் இருந்து கட்டுப்படுத்தப்படும் ஒரு பங்கீட்டுத் திட்டமாக மாற்றுகிறது.
- கோடிக்கணக்கான தொழிலாளர்களைப் பாதிக்கும் ஒரு சட்டத்தை ஆய்வு செய்யாமல், நிபுணர் ஆலோசனை பெறாமல் மற்றும் பொது மக்கள் கருத்து கேட்காமல் ஒரு போதும் திணிக்கப்பட்டிருக்கக் கூடாது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டமான விக்சித் பாரத்-ரோஜ்கர் மற்றும் அஜீவிகா மிஷன் (விபி-ஜி ராம் ஜி) என்ற புதிய ஊரக வேலை திட்ட மசோதா எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்து உள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
20 ஆண்டுகால மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை (எம்.ஜி.என்.ஆர்.இ.ஜி.ஏ) நேற்று ஒரே இரவில் மோடி அரசாங்கம் தகர்த்துவிட்டது.
விபி - ஜி ராம் ஜி என்பது எம்.ஜி.என்.ஆர்.இ.ஜி.ஏ திட்டத்தின் மறுசீரமைப்பு அல்ல. உரிமைகள் அடிப்படையிலான, தேவைக்கேற்ப வழங்கப்படும் உத்தரவாதங்களை அழித்து, மத்திய அரசிடம் இருந்து கட்டுப்படுத்தப்படும் ஒரு பங்கீட்டுத் திட்டமாக மாற்றுகிறது. இது அடிப்படையிலேயே மாநிலங்களுக்கும், கிராமங்களுக்கும் எதிரானது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் பெண்களுக்குத்தான் அதிகம் உதவியது. இந்த திட்டத்தை மாநில அரசுடன் நிதிப்பங்கீடு செய்யும்போது பெண்கள், தலித்துகள், பழங்குடியினர், நிலமற்ற தொழிலாளர்கள், ஏழ்மையில் உள்ள இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரும்தான் முதலில் வெளியேற்றப்படுவார்கள்.
விபி-ஜி ராம் ஜி மசோதா எவ்வித ஆய்வுமின்றி பாராளுமன்றத்தில் வலுக்கட்டாயமாக நிறைவேற்றப்பட்டது. மசோதாவை நிலைக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
கோடிக்கணக்கான தொழிலாளர்களைப் பாதிக்கும் ஒரு சட்டத்தை ஆய்வு செய்யாமல், நிபுணர் ஆலோசனை பெறாமல் மற்றும் பொது மக்கள் கருத்து கேட்காமல் ஒரு போதும் திணிக்கப்பட்டிருக்கக் கூடாது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டமானது உலகின் மிகவும் வெற்றிகரமான வறுமை ஒழிப்பு மற்றும் அதிகாரமளிப்புத் திட்டங்களில் ஒன்றாகும்.
கிராமப்புற ஏழைகளின் கடைசிப் பாதுகாப்பு அரணை அழிக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம். இந்த நடவடிக்கையைத் தோற்கடிக்கவும், சட்டத்தை திரும்பப் பெறுவதை உறுதி செய்யவும், தொழிலாளர்கள், பஞ்சாயத்துகள் மற்றும் மாநிலங்களுடன் நாங்கள் துணை நிற்போம். இவ்வாறு ராகுல்காந்தி கூறி உள்ளார்.






