search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Deputy Speaker"

    • பாராளுமன்ற மக்களவையில் இருவர் நுழைந்து வண்ண புகை குண்டு வீசினர்.
    • உயர்மட்ட விசாரணைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு.

    இந்திய பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று மதியம் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து இருவர் மக்களவை எம்.பி.க்கள் அமர்ந்திருக்கும் இடத்திற்குள் குதித்து ஓடினர்.

    தொடர்ந்து அவர்கள் வண்ணப் புகை குண்டுகளை வீசினர். இதனால் மக்களவை புகை மண்டலமாக காட்சி அளித்தது. அதேவேளையில் பாராளுமன்றத்திற்கு வெளியேயும் இருவர் அதே சம்பவத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேரும் கைது செய்யப்பட்டனர்.

    இந்த விவகாரத்தில் ஆறு பேருக்கு தொடர்பு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ள நிலையில், ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    பாராளுமன்றத்தை பாதுகாக்க துணை சபாநாயகர் இல்லை என்பதை இந்த சம்பவம் உணர்த்தியுள்ள நிலையில், உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    பொதுவாக மக்களவையில் சபாநாயகர் தேர்வு செய்யப்படுவார்கள். அதன்பின் துணை சபாநாயகரும் தேர்வு செய்யப்படுவார்கள். துணை சபாநாயகர் பதவி கூட்டணி கட்சி அல்லது எதிர்க்கட்சிக்கு வழங்கப்படும். ஆனால் பல ஆண்டுகளாக துணை சபாநாயகர் இல்லாமல் சபை செயல்பட்டு வருகிறது.

    சபாநாயகர் ஓம் பிர்லா இல்லாத நேரத்தில், பா.ஜனதா எம்.பி.க்களும் ஒருவர் அவையை வழிநடத்துவார். துணை சபாநாயகர் இருந்தால், அவர்தான் பாராளுமன்ற பாதுகாப்பு குறித்த அம்சங்களை கவனிப்பார்.

    2001 பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு துணை சபாநாயகர் தலைமையில்தான் கூட்டு பாராளுமன்ற கமிட்டி அமைக்கப்பட்டது.

    பாதுகாப்பு ஒத்திகை

    சோம்நாத் சட்டர்ஜி சபாநாயகராக இருக்கும்போது, சரண்ஜித் சிங் அத்வால் துணை சபாநாயகராக இருந்தார். அப்போது பல பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது. பாராளுமன்ற கூட்டம் நடைபெறும்போது இவ்வாறு நடத்தப்பட்டதற்கு அரசு மற்றும் எம்.பி.க்களிடம் இருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

    2007-ல் சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்தில் இருந்து பாதுகாப்பு தொடர்பாக கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில் பாராளுமன்றம் மூடப்பட்டது.

    தற்போது புது கட்டடத்தில் பாதுகாப்பு அம்சங்கள் மிகவும் சிறப்பாக செய்யப்பட்டிருக்கும் என நினைத்திருக்கையில் இதுபோன்ற சம்பவம் நடைபெற்றுள்ளது.

    விமான நிலையம் போன்று

    இதனால் பாதுகாப்பு நடவடிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் உள்ள உடல் முழுவதும் பரிசோதனை செய்யும் இயந்திரம் (body scanner machines) பாராளுமன்றத்தில் நிறுவப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கேட்டுக்கொண்டதன் பேரின் மத்திய உள்துறை அமைச்சகம் உயர்மட்ட விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது. 

    • முதல்வர் பசவராஜ் பொம்மை மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆனந்த் மாமணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
    • ஆனந்த் மாமணியின் தந்தை சந்திரசேகர் எம் மாமணியும் 1990களில் துணை சபாநாயகராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    பாஜக சட்டமன்ற உறுப்பினரும், கர்நாடக சட்டமன்ற துணை சபாநாயகருமான ஆனந்த் மாமணி உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மரணமடைந்துள்ளார். இவருக்கு வயது 56.

    சவுதாட்டி சட்டமன்ற தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தி மூன்று முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவர். இவருக்கு மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

    இந்நிலையில், முதல்வர் பசவராஜ் பொம்மை மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆனந்த் மாமணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

    இதையடுத்து, பசவராஜ் பொம்மை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,"எங்கள் கட்சியின் எம்.எல்.ஏ.வும், மாநில சட்டமன்ற துணை சபாநாயகருமான ஆனந்த் சந்திரசேகர் மாமணியின் மறைவு குறித்து அறிந்து ஆழ்ந்த வருத்தம் அடைந்தேன். அவரது ஆன்மா நித்திய சாந்தி அடையட்டும். அவரது குடும்பத்திற்கு அவரது இழப்பை தாங்கும் சக்தியை கடவுள் அளிக்கட்டும். ஓம் சாந்தி" என்று குறிப்பிட்டிருந்தார்.

    ஆனந்த் மாமணியின் தந்தை சந்திரசேகர் எம் மாமணியும் 1990களில் துணை சபாநாயகராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவை துணை சபாநாயகர் மாரடைப்பால் மரணமடைந்தார்.
    • மனோஜ் சின்ஹா மறைவுக்கு அம்மாநில முதலமைச்சர், அரசியல் கட்சியினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில சட்டப்பேரவையின் துணை சபாநாயகராக காங்கிரஸ் எம்.எல்.ஏ. மனோஜ் சின்ஹா மந்தவி செயல்பட்டு வருகிறார். மனோஜ் கன்கீர் மாவட்டம் பானுபிரதாபூர் தொகுதி எம்.எல்.ஏ. ஆவார்.

    இந்நிலையில், 58 வயதான மனோஜ் சின்ஹாவுக்கு நேற்று நள்ளிரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவர் தம்தரி நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், மாரடைப்பு ஏற்பட்ட சட்டப்பேரவை துணை சபாநாயகர் மனோஜ் சின்ஹா இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அம்மாநில முதலமைச்சர், அரசியல் கட்சியினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    தமிழகத்தில் எத்தனை சிபிஐ சோதனை நடைபெற்றாலும் அதிமுக யாரிடமும் பணியாது என்று துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்தார். #DeputySpeaker
    கோவை:

    கோவையில் இன்று அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், கட்சி வளர்ச்சி மற்றும் செயல்பாடுகள் குறித்து பேசினார்.

    குட்கா ஊழல் தொடர்பாக சமீபத்தில் நடந்த சிபிஐ சோதனைகள் பற்றி பேசிய அவர், தமிழகத்தில் எத்தனை சிபிஐ சோதனைகள் நடைபெற்றாலும் அதிமுக யாரிடமும் பணியாது என தெரிவித்தார்.



    ‘அச்சுறுத்தல்களுக்கு நாங்கள் பயப்பட மாட்டோம். கட்சிக்கும் ஆட்சிக்கும் உறுதுணையாக இருப்போம். ஜெயலலிதாவால் பத்தாண்டு கட்சியில் இருந்து நீக்கி வைக்கப்பட்ட தினகரன் ஆட்சியைப் பிடிக்க முயல்கிறார். பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக முதலமைச்சர் முடிவு செய்வார்’ என அமைச்சர் வேலுமணி தெரிவித்தார். #DeputySpeaker
    கரூரில் 2-வது புதித்தகத் திருவிழா பிரேம் மஹாலில் தொடங்கியது. இதில் சபாநாயர், அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
    கரூர்:

    கரூர் மாவட்ட பள்ளிக் கல்வித்துறை, மைய நூலகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம், பாரதி புத்தகலாலயம் சார்பில் கரூரில் 2-வது புதித்தகத் திருவிழா கரூர் பிரேம் மஹாலில் தொடங்கியது. தொடக்க  விழாவுக்கு கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கினார். கவுரவதலைவர் பி.டி.கோச் தங்கராசு வரவேற்றார். 

    இதில் பாராளுமன்ற துணை சபாநாயர் மு.தம்பித்துரை,போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர்  கலந்து கொண்டு புத்தக கண்காட்சியை தொடங்கி வைத்து பேசினர். விழாவில் நூலோர் தொகுத் தவற்றுள் எல்லாம் தலை என்கிற தலைப்பில் கவிஞர் தங்கம் ராமமூர்த்தி பேசினார். இந்த விழாவில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அனந்தநாராயணன்,  நகராட்சி ஆணையர் அசோக்குமார், நூலக அலுவலர் தனலட்சுமி, தமிழ்நாடு அறிவியல் இயக்க செயலாளர் ஜான்பாஷா உள்பட பலர் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. 

    இந்த புத்தகத் திருவிழாவில் மொத்தம் 100 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. வருகிற 22-ந்தேதி வரை புத்தகத்திருவிழா நடக்கிறது. அனுமதி இலவசம். மாணவர்களுக்கு பல்வேறு குலுக்கல் போட்டிகள் நடத்தப்பட்டு புத்தகங்கள் பரிசளிக்கப்படுகிறது. கடந்த ஆண்டைவிட கூடுதலாக அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. புதிய பதிப்பகங்களும் வந்துள்ளன.
    பொள்ளாச்சி மகாலிங்க புரத்தில் செயல்பட்டு வரும் அரசு கலைக் கல்லூரியில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் ஆய்வு செய்தார்.

    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சி மகாலிங்கபுரம் சமத்தூர் ராம ஐயங்கார் மேல்நிலைப்பள்ளியில் அரசு கலைக்கல்லூரி 5 பாடப்பிரிவுகளுடன் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த ஆண்டு கூடுதலாக பாடப்பிரிவுகள் தேவை என பொள்ளாச்சி மக்கள் பொள்ளாச்சி ஜெயராமனிடம் கோரிக்கை வைத்தனர்.

    இதையடுத்து, இந்த ஆண்டு, பி.ஏ.தமிழ், பி.சி.ஏ., பி.எஸ்.சி.கம்பியூட்டர் சயின்ஸ்., பி.காம்., பி.ஏ., எக்கனாமிக்ஸ்., ஆகிய பாடப் பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளது.

    மாணவர்களின் வசதிக்காக பொள்ளாச்சி பஸ் நிலையத்தில் இருந்து நெகமம் செல்லும் பேருந்துகள் கல்லூரி வழியாக இயக்க துணை சபாநாயகர் போக்குவரத்து துறைக்கு அறிவுறுத்தியுள்ளார். இந்நிலையில், கல்லூரியை பொள்ளாச்சி ஜெயராமன் ஆய்வு செய்தார். கழிப்பிட வசதி, குடிநீர், கூடுதல் வகுப்பறைகள் போன்றவை குறித்து கேட்டறிந்தார்.

    அவருடன் நகராட்சி முன்னாள் தலைவர் கிருஷ்ணகுமார், கல்லூரி முதல்வர் கிருஷ்ணராஜ், அதிமுக நிர்வாகிகள் கார்த்திக், வக்கீல் தனசேகர், வீராச்சாமி, நீலகண்டன், செந்தில் உட்பட பலர் இருந்தனர்.

    ×