என் மலர்
நீங்கள் தேடியது "US"
- பாகிஸ்தானின் ஆத்திரமூட்டல்களுக்கு மோடி தலைமையின் கீழ் ராணுவ பதிலடிக்கு வாய்ப்பு அதிகம் என அறிக்கையில் தகவல்
- 2020-ம் ஆண்டு ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து இந்தியா-சீனா எல்லை விவகாரம் அதிகரித்து காணப்படுகிறது.
வாஷிங்டன்:
அமெரிக்காவின் தேசிய புலனாய்வு இயக்குனரக அலுவலகம் சார்பில் 2023-ம் ஆண்டுக்கான அச்சுறுத்தல் ஆய்வறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. இந்தியாவுக்கு எதிராக செயல்படும் பயங்கரவாத குழுக்களை ஆதரிக்கும் போக்கை கொண்ட நீண்டகால வரலாற்றை பாகிஸ்தான் கொண்டுள்ளது. ஆனால் பாகிஸ்தானின் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளுக்கு கடந்த காலத்தில் போல் இல்லாமல், பிரதமர் மோடி தலைமையிலான இந்தியா, ராணுவ பலத்துடன் பதிலடி கொடுக்கும் சாத்தியம் அதிகமாக உள்ளது, என அந்த அறிக்கையில் தெரிவித்து உள்ளது.
காஷ்மீரில் வன்முறை, அமைதியின்மை அல்லது இந்தியாவின் மீது நடத்தப்படும் பயங்கரவாத தாக்குதல் ஆகியவற்றால் பதற்றம் அதிகரித்து இரு நாடுகள் இடையே போர் ஏற்படும் ஆபத்து உள்ளது என அறிக்கை கூறுகிறது.
இதேபோன்று அறிக்கையில், கிழக்கு லடாக் எல்லை பகுதியில் படைகளை குவித்து, ஆக்கிரமிப்பில் ஈடுபட்டு, இந்திய வீரர்கள் மீது அத்துமீறி தாக்குதல் நடத்திய சீனாவை பற்றியும் குறிப்பிடப்பட்டு உள்ளது.
அதில், 2020-ம் ஆண்டு ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து இந்தியா-சீனா எல்லை விவகாரம் அதிகரித்து காணப்படுகிறது. இரு நாடுகளும் இருதரப்பு பேச்சுவார்த்தைகளின் வழியே எல்லை விவகாரத்தில் தீர்வு கண்டுள்ளது. எனினும், எல்லை பகுதியில் தொடர்ந்து பதற்ற நிலை நீடித்து, இரு நாடுகளுக்கு இடையேயான உறவு பாதிக்கப்பட்ட சூழலும் காணப்படுகிறது. இது கடந்த பல தசாப்தங்களில் இல்லாத வகையில் தீவிர கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது என்றும் தெரிவித்து உள்ளது.
அணுசக்தி நாடுகளான இந்தியாவும், சீனாவும் சர்ச்சைக்குரிய எல்லை விவகாரத்தில் படைகளை குவித்து வருவதனால், ஆயுத மோதலை ஏற்படுத்தும் ஆபத்து அதிகரித்து உள்ளது. இதனால், அமெரிக்கா மற்றும் அதன் நலன்களுக்கு நேரடி அச்சுறுத்தல் ஏற்பட கூடிய சாத்தியமும் உள்ளது. அமெரிக்காவை தலையிட அழைக்கக்கூடிய நிலையும் காணப்படுகிறது என்றும் அந்த அறிக்கை தெரிவித்து உள்ளது.
- உக்ரைனுக்கு மேலும் 1.80 பில்லியன் மதிப்பிலான ராணுவ உதவிகளை அமெரிக்கா வழங்குகிறது.
- அதிநவீன வான்பாதுகாப்பு ஏவுகணை, போர் விமானங்களில் பொருத்தப்படும் அதிநவீன குண்டுகளும் இதில் அடக்கம்.
வாஷிங்டன்:
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 10 மாதங்களைக் கடந்துள்ளது. இந்தப் போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவளித்து வருகின்றன.
உக்ரைனுக்கு தேவையான ஆயுத உதவியை வழங்குவதுடன் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ரஷியா மீது பல்வேறு பொருளாதார தடைகளையும் விதித்துள்ளன. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் ஆயுத உதவியால் இந்த போர் பல மாதங்களாக நீடித்து வருகிறது.
இந்நிலையில், உக்ரைனுக்கு அதிநவீன பேட்ரியாட் வான்பாதுகாப்பு ஏவுகணை, போர் விமானங்களில் பொருத்தப்படும் அதிநவீன குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்கள் உள்பட மேலும் 1.80 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான ராணுவ உதவிகளை வழங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பை அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க அரசு விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவதன் மூலம், அமெரிக்கா போரில் பங்கேற்றுள்ளதாக புகார்.
- உக்ரைனுக்கு வழங்கப்பட்ட ஆயுத உதவி, ரஷிய படையை இலக்காக கொண்டுள்ளது.
உக்ரைன் மீது ரஷிய தொடுத்துள்ள போர் 10வது மாதமாக நடந்து வரும் நிலையில், உக்ரைனுக்கு அமெரிக்கா அதி நவீன வான் பாதுகாப்பு அமைப்புகளை வழங்குவதாக ரஷியா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ரஷிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜாகரோவா, உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்குவதன் மூலமும், அதன் வீரர்களுக்கு பயிற்சியளிப்பதன் மூலமும் அமெரிக்கா இந்த போரில் பங்கேற்றுள்ளதாக கூறினார்.
நிலத்திலிருந்து இலக்கை தாக்கும் ஏவுகணைகள் மற்றும் பேட்ரியாட் தடுப்பு ஏவுகணை போன்ற பாதுகாப்பு அமைப்புகளை வழங்குவதற்கான அமெரிக்காவின் நோக்கங்கள் பற்றிய அறிக்கை உண்மை என நிரூபிக்கப்பட்டால், அது ரஷியாவிற்கு எதிரான மற்றொரு ஆத்திரமூட்டும் நடவடிக்கையாக மாறும் என்று கூறினார்.
உக்ரைனுக்கு வழங்கப்பட்ட எந்த ஆயுத உதவியும், ரஷிய படைகளையே இலக்காக கொண்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். இந்நிலையில் ரஷியாவின் எச்சரிக்கைய நிராகரித்துள்ள அமெரிக்க பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளர் ஜெனரல் பாட் ரைடர், உக்ரைனுக்கு நாங்கள் வழங்கும் பாதுகாப்பு உதவி குறித்து ரஷியாவின் கருத்துக்களை ஏற்று கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளார்.
- 1992ம் ஆண்டில் உறைய வைக்கப்பட்ட கரு முட்டை பயன்படுத்தப்பட்டது.
- அமெரிக்க தம்பதியினருக்கு ஏற்கனவே நான்கு குழந்தைகள் உள்ளன.
அமெரிக்காவின் மேற்கு பகுதியை சேர்ந்த ஒரேகான் மாகாணத்தில் வசிக்கும் பிலிப் - ரேச்சல் தம்பதியினருக்கு செயற்கை முறை கருத்தரித்தல் மூலம் கடந்த அக்டோபர் மாதம் 31ம் தேதி இரட்டை குழந்தை பிறந்துள்ளது. ஆனால் இதில் உள்ள அதிசயம், இந்த குழந்தைகள் 30 வருடங்களுக்கு முன்பு அதாவது 1992ம் ஆண்டில் கிரையோபிரிசர்வ் முறையில் உறைய வைக்கப்பட்ட கரு முட்டை மூலம் பிறந்துள்ளன.
பிலிப்- ரேச்சல் தம்பதியினருக்கு ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகளும், இரண்டு ஆண் குழந்தைகளும் உள்ளன. இந்த நிலையில் கரு மூட்டையை தானமாக பெற்று செயற்கை கருத்தரிப்பு மூலம் மேலும் குழந்தை பெற முடிவு செய்த அவர்கள், அதற்காக அமெரிக்காவில் உள்ள தேசிய கருமுட்டை மையத்தை நாடினர்.

அந்த மையத்தில் 1992ம் ஆண்டில் இருந்து திரவ நைட்ரஜனில் பூஜ்ஜியத்திற்குக் கீழே 200 டிகிரி மைனஸ் வெப்ப நிலையில் உறைய வைக்கப்பட்ட கரு முட்டை அவர்களுக்கு தானமாக வழங்கப்பட்டது. இந்த கருமுட்டையை பயன்படுத்தி செயற்கை கரூவூட்டல் மூலம் உருவான இரட்டை குழந்தைகள் தற்போது பிறந்துள்ளது.
மருத்துவ உலகத்தில் இது புதிய சாதனையாக கருதப்படுகிறது. இதற்கு முன்பு 27 ஆண்டுகளாக உறைய வைக்கப்பட்டிருந்த கருமுட்டையிலிருந்து கடந்த 2020ம் ஆண்டு பிறந்த மோலி கிப்சனின் சாதனையை இந்த குழந்தைகள் தற்போது முறியடித்துள்ளன.
ஆண் குழந்தைக்கு திமோத்தி என்றும், பெண் குழந்தைக்கு லிடியா என பெயர் சூட்டியுள்ள இரட்டை குழந்தைகளின் தந்தை பிலிப், நாங்கள் பெற விரும்பும் குழந்தைகளின் எண்ணிக்கையை மனதில் வைத்திருக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

கடவுள் நமக்குக் கொடுக்க விரும்பும் அளவுக்கு எங்களிடம் குழந்தைகள் இருக்க வேண்டும் என்று நாங்கள் எப்போதுமே நினைத்ததாக அவர் கூறினார். மேலும் கரு தத்தெடுப்பு பற்றி கேள்விப்பட்டபோது, நாங்கள் அதை செய்ய விரும்பினோம், எங்களுக்கு ஏற்கனவே குழந்தைகள் இருந்தாலும் இவர்கள்தான் எங்களுடைய மூத்த குழந்தைகள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் 1992ம் ஆண்டிலிருந்து உறைய வைக்கப்பட்ட கருமுட்டை மூலம் பிறந்துள்ளதால், திமோத்தியும், லிடியாவும் தற்போது உலகிலேயே வயதான குழந்தைகளாக கருதப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
- பாதுகாப்பான மற்றும் வளமான பாகிஸ்தானைத்தான் அமெரிக்கா விரும்புகிறது.
- பாகிஸ்தானும் அமெரிக்கா முக்கியமானதாக கருதும் ஒரு உறவு நாடாகும்.
வாஷிங்டன்:
பாகிஸ்தான் அணு ஆயுதங்களை வைத்திருக்கும் உலகின் ஆபத்தான நாடுகளில் ஒன்று என, அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சில் ஒன்றில் பேசும் போது தெரிவித்தார். அமெரிக்க அதிபர், பாகிஸ்தானுக்கு எதிராக பேசியது சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்தது.
இதற்கு பாகிஸ்தான் தனது அதிருப்தியை தெரி வித்தது. தலைநகர் இஸ்லா மாபாத்தில் உள்ள பாகிஸ்தா னுக்கான அமெரிக்க தூதரை நேரில் அழைத்து சம்மன் வழங்கியது. இந்த நிலையில் ஜோ பைடன் கருத்துக்கு பதில் அளித்த பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், பாகிஸ்தான் ஒரு பொறுப்பான அணுசக்தி நாடு என்றும், நாங்கள் மிகவும் தீவிரமாக பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் பாகிஸ்தானை ஆபத்தான நாடு என்று கூறிய விவகாரத்தில் அமெரிக்கா திடீர் பல்டி அடித்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் வேதாந்த் பட்டேல் கூறியதாவது:-
பாகிஸ்தானின் அணு ஆயுதங்களை கட்டுப்படுத்தும் திறன் மீது அமெரிக்கா நம்பிக்கை கொண்டுள்ளது. பாதுகாப்பான மற்றும் வளமான பாகிஸ்தானைத்தான் அமெரிக்கா விரும்புகிறது. பாகிஸ்தான் உடனான நீண்ட கால ஒத்துழைப்பை அமெரிக்கா மதிக்கிறது. பாகிஸ்தானும் நாங்கள் முக்கியமானதாக கருதும் ஒரு உறவு நாடாகும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- பாலியல் வன்கொடுமை போன்ற குற்றங்கள் சுற்றுலாத் தலங்களிலும் பிற இடங்களிலும் நிகழ்ந்துள்ளன.
- ஜம்மு மற்றும் காஷ்மீருக்கு அமெரிக்கர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தி உள்ளது.
வாஷிங்டன்:
வெளிநாடுகளுக்கு செல்லும் அமெரிக்க மக்களுக்கு அமெரிக்க அரசு அவ்வப்போது பயண ஆலோசனைகளை வழங்கி வருகிறது. அவ்வகையில், அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள புதிய பயண ஆலோசனையில் இந்தியாவுக்கு பயணம் செய்யும்போது அதிக எச்சரிக்கையுடன் இருக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளது. குற்றச் செயல்கள் மற்றும் பயங்கரவாதம் காரணமாக இந்த ஆலோசனை வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு லடாக் மற்றும் அதன் தலைநகர் லே தவிர ஜம்மு மற்றும் காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் மற்ற பகுதிகளுக்கு அமெரிக்கர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தி உள்ளது.
இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் குற்றங்களில் ஒன்று கற்பழிப்பு என்று இந்திய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். பாலியல் வன்கொடுமை போன்ற வன்முறைக் குற்றங்கள் சுற்றுலாத் தலங்களிலும் பிற இடங்களிலும் நிகழ்ந்துள்ளன. சுற்றுலா தலங்கள், போக்குவரத்து மையங்கள், மார்க்கெட்டுகள், ஷாப்பிங் மால்கள் மற்றும் அரசு அலுவலங்களை குறிவைத்து பயங்கரவாதிகள் சிறிய அளவிலோ அல்லது திடீரென்றோ தாக்குதல் நடத்தலாம் என்றும் பயண ஆலோசனையில் கூறப்பட்டுள்ளது.
- பொறுப்பற்ற அச்சுறுத்தல் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
- ரஷியா மேலும் தனிமைப்படுத்தப்பட வேண்டும்.
வாஷிங்டன்:
அண்மையில் ரஷிய தொலைக்காட்சி மூலம் அந்நாட்டு மக்கள் மத்தியில் உரையாற்றிய ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், மேற்கத்திய நாடுகள் அணு ஆயுதத்தை வைத்து ரஷியாவை மிரட்டுகின்றன. அவ்வாறு மிரட்டல் விடும் நாடுகளுக்கு நான் ஒன்றை நினைவு கூற விரும்புகிறேன். பதிலடி கொடுக்க எங்களிடமும் நிறைய ஆயுதங்கள் (அணு ஆயுதங்கள்) உள்ளன.
அவை நேட்டோ அமைப்பின் ஆயுதங்களை விட அதிக ஆற்றல் மிக்கவை. எங்கள் நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாட்டிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் பட்சத்தில் நாட்டையும், நாட்டு மக்களையும் பாதுகாக்க எங்களிடம் உள்ள அனைத்து ஆயுதங்களையும் பயன்படுத்துவோம் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில்,வாஷிங்டனில் நடைபெற்ற ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் பேசியதாவது:
ஒவ்வொரு கவுன்சில் உறுப்பினரும் (ரஷியாவின்) இந்த பொறுப்பற்ற அணு ஆயுத அச்சுறுத்தல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று தெளிவான செய்தியை அனுப்ப வேண்டும். அதிபர் புதின் தொடங்கிய போரை நிறுத்தச் சொல்லுங்கள். உக்ரைன் மீதான படையெடுப்பிற்காக, ரஷியா மேலும் தனிமைப்படுத்தப்பட வேண்டும். அமெரிக்காவின் வலிமையான கண்டனங்களுடன் பிற நாடுகளும் சேர்ந்து ரஷியாவிற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- உக்ரைன் போர் குறித்து ரஷிய அதிபர் புதினிடம் பிரதமர் மோடி கவலை தெரிவித்தார்.
- ரஷிய அதிபருடனான பிரதமர் மோடியின் பேச்சை அமெரிக்கா வரவேற்றுள்ளது.
வாஷிங்டன்:
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு உஸ்பெகிஸ்தான் நாட்டின் சமர்கண்ட் நகரில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட இந்திய பிரதமர் மோடி, மாநாட்டுக்கு இடையே உலக நாடுகளின் தலைவர்களைச் சந்தித்துப் பேசினார்.
அந்த வகையில் ரஷிய அதிபர் புதினை பிரதமர் மோடி சந்தித்தார். அப்போது இரு தரப்பு விவகாரங்கள் உள்பட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து இரு தலைவர்களும் பேசினர். உக்ரைன் மீது ரஷியா படையெடுத்த பிறகு புதினும் மோடியும் நேருக்கு நேர் முதல் முறையாக சந்தித்தனர். அந்த சந்திப்பின்போது, இது போருக்கான காலம் அல்ல என உக்ரைன் போர் குறித்து பிரதமர் மோடி கவலை தெரிவித்தார்.
ஐ.நா. பொதுச்சபையின் 77-வது கூட்டத்தில் பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான் பேசுகையில், ரஷிய அதிபருடனான பிரதமர் மோடியின் பேச்சை வரவேற்றார்.
இந்நிலையில், ரஷிய அதிபருடனான பிரதமர் மோடியின் பேச்சை அமெரிக்கா வரவேற்றுள்ளது. வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் ஜாக் சல்லிவன், நீண்ட காலமாக ரஷியாவுடன் உறவு பாராட்டி வரும் இந்தியாவின் பிரதமர், போரை முடிவுக்கு கொண்டு வருமாறு புதினிடம் வலியுறுத்தியது பாராட்டுக்குரியது என்று தெரிவித்தார்.

விண்வெளியில் வலம் வரும் செயற்கைக்கோள்களை தாக்கி அழிக்கும் ஏவுகணையை ரஷியா நேற்று முன்தினம் சோதித்தது. இந்த ஏவுகணை சோதனையில், ரஷியாவுக்கு சொந்தமான செயற்கைக்கோள் ஒன்று வெடித்து சிதறியது. இது விண்வெளியில் குப்பைகளை உருவாக்கியதால், சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. மேலும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள விண்வெளி வீரர்கள் பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு விண்கலத்துக்குள் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனிடையே ரஷியாவின் இந்த ஏவுகணை சோதனை ஆபத்தான மற்றும் பொறுப்பற்றது என கூறி அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ் கூறுகையில் “இன்று, ரஷிய கூட்டமைப்பு பொறுப்பற்ற முறையில் அதன் சொந்த செயற்கைக்கோள்களில் ஒன்றுக்கு எதிராக, நேரடியாக தாக்கக்கூடிய செயற்கைக்கோள்களுக்கு எதிரான ஏவுகணை சோதனையை நடத்தியது. இந்த சோதனையானது, இதுவரை 1,500 க்கும் மேற்பட்ட கண்காணிக்கக்கூடிய சுற்றுப்பாதையில் பயணிக்கும் கழிவு பொருட்கள் மற்றும் லட்சக்கணக்கான சிறிய சுற்றுப்பாதை குப்பைகளை உருவாக்கியுள்ளது, அவை இப்போது அனைத்து நாடுகளின் நலன்களையும் அச்சுறுத்துகின்றன” என கூறினார்.