search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "19 பேர் காயம்"

    ஜப்பானின் கவாசாகி பகுதியில் உள்ள பூங்காவில் மர்ம நபர் திடீரென கத்திக்குத்து தாக்குதல் நடத்தியதில் பெண் குழந்தை உள்பட 2 பேர் பலியாகினர்.
    டோக்கியோ:

    ஜப்பான் நாட்டின் கவாசாகி நகரின் நோபோரிடோ பகுதியில் பூங்கா ஒன்று அமைந்துள்ளது. அந்த பூங்காவில் குழந்தைகள், பெரியவர்கள் என பல்வேறு தரப்பினர் கூடியிருந்தனர். 

    இந்நிலையில், அந்த பூங்காவுக்குள் நுழைந்த மர்ம நபர் திடீரென அங்கிருந்தவர்களை கத்தியால் சரமாரியாக குத்தினார். இந்த தாக்குதலில் பெண் குழந்தை உள்பட 2 பேர் பலியானதாகவும், மேலும் 17 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

    தகவலறிந்து அங்கு விரைந்து சென்ற போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைகளில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். கத்திக்குத்து தாக்குத்ல் நடத்திய நபரை போலீசார் மடக்கிப் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

    பூங்காவில் மர்ம நபர் நடத்திய கத்திக்குத்து சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    தான்சானியாவில் மினி பஸ்சும் லாரியும் மோதிய விபத்தில் பெண்கள் உள்பட 19 பேர் பரிதாபமாக பலியாகினர். #TanzaniaAccident
    டர் எஸ் சலாம்:

    தான்சானியா நாட்டின் சோங்வே பகுதியில் மினி பஸ் ஒன்று நேற்று இரவு சென்று கொண்டிருந்தது. அதில் ஏராளமானோர் பயணம் செய்தனர்.

    டுண்டுமா பகுதி அருகே மினி பஸ் சென்றபோது எதிரே வந்த லாரியுடன் வேகமாக மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே பெண்கள் உள்பட 17 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.

    விபத்து குறித்து அறிந்த மீட்புக்குழுவினர் விரைந்து சென்று போக்குவரத்தை சரிசெய்தனர். சாலை விபத்து குறித்து அறிந்த அந்நாட்டு அதிபர் ஜான் மொகபுலி, விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். #TanzaniaAccident
    உகாண்டா நாட்டின் கப்ச்சோர்வா மாவட்டத்தில் மலைப்பாதை வழியே சென்ற பஸ் நிலைதடுமாறி கவிழ்ந்த விபத்தில் 19 பேர் உயிரிழந்தனர். #UgandaBusAccident
    கம்பாலா:

    உகாண்டா நாட்டில் சரியான சாலைகள் இல்லாததாலும், வாகனங்கள் முறையாக பராமரிக்கப்படாததாலும் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன.

    இந்நிலையில், உகாண்டா நாட்டின் கப்ச்சோர்வா மாவட்டத்தில் உள்ள கப்ச்சோர்வா - பேல் நெடுஞ்சாலை அருகிலுள்ள மலைப்பாதை வழியே பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, திடீரென நிலைதடுமாறிய பஸ் மலைமுகட்டில் கவிழ்ந்து விழுந்தது.



    இந்த விபத்தில் பஸ்சில் பயணித்த 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் படுகாயம் அடைந்த 6 பேர் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சேர்த்து சிகிச்சை பெற்று வருகின்றனர் என போலீசார் தெரிவித்தனர். #UgandaBusAccident
    பாகிஸ்தானின் தேரா காஜி கான் நகரில் இரு பேருந்துகள் மோதிய விபத்தில் 19 பேர் பரிதாபமாக பலியாகினர். #Accident
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் நாட்டின் தேரா காஜி கான் நகரில் சென்று கொண்டிருந்த இரு பேருந்துகள் திடீரென மோதிக் கொண்டன. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி 15 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் 40க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

    தகவலறிந்து அங்கு சென்ற மீட்பு படையினர் காயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மேலும் 4 பேர் இறந்தனர். இதையடுத்து, சாலை விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது.



    பேருந்துகள் மோதிய விபத்தில் 19 பேர் பலியானது குறித்து அறிந்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மற்றும் ஜனாதிபதி ஆரிப் அல்வி ஆகியோர் பலியானோர் குடும்பத்துக்கு தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.

    காயம் அடைந்து சிகிச்சை பெறுபவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை உயரலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர். #Accident
    19 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கொலை வழக்கில் முதல்-மந்திரியாக இருக்கும் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பா.ஜனதா கட்சியினருக்கு மகாராஜ்கஞ்ச் கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியது. #YogiAdiyanath #UPCourt #MurderCase
    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலத்தில் 1999-ம் ஆண்டு நடந்த பேரணியின் போது நடந்த தாக்குதலில் சமாஜ்வாடி கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான தலத் அஜீசின் பாதுகாப்பு அதிகாரி சத்யபிரகாஷ் யாதவ் கொல்லப்பட்டார். இதற்கு யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பா.ஜனதா கட்சியினர் தான் காரணம் என குற்றம்சாட்டப்பட்டது.

    சத்யபிரகாஷ் யாதவ் கொல்லப்பட்ட வழக்கில் யோகி ஆதித்யநாத் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடுமாறு மகாராஜ்கஞ்ச் கோர்ட்டில் தலத் அஜீஸ் மனுதாக்கல் செய்தார். ஆனால் போதிய ஆதாரம் இல்லை என கோர்ட்டு அந்த மனுவை தள்ளுபடி செய்தது. இதனால் லக்னோ ஐகோர்ட்டில் தலத் அஜீஸ் மேல்முறையீடு செய்தார்.

    மகாராஜ்கஞ்ச் கோர்ட்டு இந்த வழக்கை மீண்டும் விசாரிக்கும்படி லக்னோ ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதை தொடர்ந்து தற்போது முதல்-மந்திரியாக இருக்கும் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பா.ஜனதா கட்சியினருக்கு மகாராஜ்கஞ்ச் கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியது. இந்த நோட்டீசுக்கு ஒரு வாரத்தில் பதில் அளிக்கும்படி கோர்ட்டு உத்தரவிட்டது.

    இதையடுத்து முதல்-மந்திரி பதவியில் இருந்து யோகி ஆதித்யநாத் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி உள்ளன. #YogiAdiyanath #UPCourt #MurderCase 
    முக்கொம்பு அணையில் 19-வது மதகின் மேல் பகுதியில் தடுப்பு சுவரில் விரிசல் ஏற்பட்டுள்ளதால், இந்த மதகு பகுதியிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். #MukkombuDam
    திருச்சி:

    திருச்சி மாவட்டம் முக்கொம்புவில் உள்ள கொள்ளிடம் அணை கடந்த 22-ந் தேதி இரவு உடைந்தது. 45 மதகுகளில் 6 முதல் 14 வரை உள்ள 9 மதகுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட் டன. இதனால் கொள்ளிடத்தில் தண்ணீர் வீணாக வெளியேறியது.

    இதை தடுக்க ரூ.95 லட்சம் மதிப்பில் உடைந்த பகுதியில் சீரமைப்பு பணி நடந்து வருகிறது. தண்ணீரின் வேகம் காரணமாக சீரமைப்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டது. முதற்கட்டமாக மதகுகள் உடைந்த பகுதி வழியாக ஆற்றில் தண்ணீர் வீணாக செல்வதை தடுக்கும் பணி முடிந்துள்ளது.

    மதகுகள் உடைந்த இடத்தில் 125 மீட்டர் இடைவெளியில் பாறாங்கற்கள் கொண்டு அடைக்கப்பட்டது. தற்போது பாறாங்கற்கள் மீது கிராவல் மண் நிரப்பப்பட்டது. ஆனாலும் பெரிய மற்றும் சிறிய பாறாங்கற்களுக்கிடையே உள்ள இடைவெளி வழியாக தண்ணீர் வெளியேறி வருகிறது.

    இதனை தடுப்பதற்காக அணையின் மேற்குப்பகுதியில் மணல் மூட்டைகள், வாழை சருகுகள், கரும்பு சக்கைகள், வைக்கோல் கொண்டு வரப்பட்டு துளைகளுக்குள் செலுத்தும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். ஆனாலும் தண்ணீர் கசிந்து வருவதால் பிளாஸ்டிக் தார்ப்பாய்களை கொண்டு அடைக்கும் பணியில் பொதுப் பணித்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

    மதகு உடைந்த பகுதி 20 அடி ஆழமானது. 260 மீட்டர் நீளத்துக்கு மணல் மூட்டைகள் அடுக்கி தடுப்புகள் அமைக்கும் பணி நிறைவடைந்தது. இன்னும் 75 முதல் 80 மீட்டர் வரை மணல் மூட்டைகள் அடுக்கும் பணி நடந்து வருகிறது.

    இந்த நிலையில் வடகரை மதகு பகுதியிலிருந்து 19-வது மதகிலிருந்து தெற்கு நோக்கி மணல் முட்டைகளை அடுக்கும் பணி நடந்து வந்தது. தண்ணீரின் வேகத்தால் பணிகள் பாதிக்கப்பட்டது. தற்போது வடகரை பகுதியில் மணல் மூட்டைகள் அடுக்கும் பணி நடந்து வருகிறது. 19-வது மதகின் மேல் பகுதியில் தடுப்பு சுவரில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

    அந்த மதகு உடையும் அபாயத்தில் உள்ளது. அப்பகுதியில் ஏராளமான தொழிலாளர்கள் மணல் மூட்டைகளை அடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அசம்பாவிதத்தை தவிர்க்க 19-வது மதகு பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    இதுபற்றி பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், அணையின் மற்ற மதகுகளில் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். 19-வது மதகில் விரிசல் இல்லை. அப்படி எந்த பாதிப்பு ஏற்பட்டாலும் அதை சமாளிக்கும் வகையில் அப்பகுதியில் மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தினமும் அணையை பராமரித்து வருகிறோம்.

    உடைந்த பகுதிகளில் சீரமைப்பு பணிகள் ஓரளவு நிறைவடைந்தாலும் சிறிய இடைவெளி வழியாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. கரும்பு சக்கை, கிராவல் மண் கொண்டும் அடைத்து வருகிறோம். தொடர்ச்சியாக பாறையின் இடுக்குகளில் இருந்து தண்ணீர் வெளியேறுவதை தடுக்க கான்கிரீட் வைத்து பூச்சுகள் பூசப்பட உள்ளது.

    தண்ணீர் வெளியேறுவதை நிறுத்திவிட்டாலே 99 சதவீத பணிகள் நிறைவடைந்து விடும். புதிய பாலம் கட்ட தேர்வு செய்த இடத்தில் ஆய்வு பணிகள் முடிந்துவிட்டது. திட்ட மதிப்பீடு அரசுக்கு விரைவில் அனுப்பப்படும். விவசாய காலம் முடியும் வரை கண்காணிக்கப்படும். பின்னர் அரசு அனுமதி கிடைத்து நிதி ஒதுக்கப்பட்டதும் டெண்டர் விடப்பட்டு 2 அல்லது 3 மாதத்தில் புதிய பாலம் கட்டுமான பணிகள் துவங்கும்.

    அதுவரை டெல்டா மாவட்டங்களுக்கு பாசனம் பாதிக்காத வகையில் கண்காணித்து வருகிறோம். தற்போது காவிரியில் 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. காவிரியிலிருந்து கொள்ளிடத்துக்கு தண்ணீர் பாய்வது 3 நாட்களுக்கு முன்பே தடுக்கப்பட்டு விட்டது. தற்போது கொள்ளிடத்தில் ஆயிரம் கனஅடி நீரே திறக்கப்பட்டுள்ளது என்றனர்.  #MukkombuDam


    இலங்கையில் நடைபெற்று வந்த இளையோர் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இலங்கையை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. #IND19
    19 வயதிற்கு உட்பட்டோருக்கான ஒருநாள் கிரிக்கெட் தொடர் இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையில் நடைபெற்றது. ஐந்து போட்டிகள் கொண்ட இந்த தொடரில் முதல் நான்கில் இரு அணிகளும் தலா இரண்டு வெற்றிகள் பெற்று சமநிலையில் இருந்தது.

    இந்நிலையில் 5-வது மற்றும் கடைசி போட்டி இன்று நடைபெற்றது. இலங்கை அணி டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க வீரரான பெர்னாண்டோ 95 ரன்களும், 4-வது வீரராக களம் இறங்கிய நுவாநிது பெர்னாண்டோ 56 ரன்களும் அடிக்க 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் சேர்த்தது.

    பின்னர் 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. யாஷவி ஜெய்ஸ்வால், தேவ்தத் படிக்கல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். தேவ்தத் படிக்கல் 38 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பவன் ஷா 36 ரன்னில் வெளியேறினார்.

    மற்றொரு தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் 128 பந்தில் 114 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருக்க இந்திய அணி 42.4 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய இளையோர் அணி 3-2 வென்றது. 
    சிவகாசி, திருத்தங்கல் பகுதிகளில் வெறிநாய்கள் தொல்லை உள்ள நிலையில், நேற்று ஒரே நாளில் நாய்கள் கடித்து 19 பேர் காயமடைந்து அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    சிவகாசி:

    சிவகாசி, திருத்தங்கல் நகராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் தற்போது நாய்கள் அதிக அளவில் உள்ளன. இதில் பல நாய்கள் வெறிபிடித்த நிலையில் சுற்றி திரிகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்பு சிவகாசி-விஸ்வத்தம் ரோட்டில் குப்பையில் கொட்டப்பட்ட கழிவுகளை சாப்பிட வந்த நாய்களுக்குள் மோதல் ஏற்பட்டு அந்த பகுதியில் வீட்டின் வெளியே விளையாடிக்கொண்டிருந்த 2 வயது சிறுமியை நாய்கள் கடித்து குதறின. இதில் படுகாயமடைந்த சிறுமி, சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டாள்.

    இந்தநிலையில் நேற்று ஒரேநாளில் சிவகாசி, திருத்தங்கல் பகுதியில் 19 பேரை நாய்கள் துரத்தி, துரத்தி கடித்துள்ளன. செவல்பட்டியை சேர்ந்த முத்துவீரன்(வயது 50) என்பவர் சிவகாசி பிச்சாண்டி தெருவில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு விருந்துக்கு வந்துள்ளார். வந்த இடத்தில் அவரை நாய் கடித்துள்ளது. அதேபோல் சிவகாசி நகராட்சி துப்புரவு தொழிலாளி கணேசன்(49) என்பவரை பிச்சாண்டி தெருவில் உள்ள நாய்கள் கடித்து காயப்படுத்தி உள்ளது. திருத்தங்கல் எஸ்.ஆர்.என். பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவி சங்கீதாவை பள்ளி வளாகத்தின் உள்ளே புகுந்த வெறிநாய் கடித்துள்ளது. காயம் அடைந்த மாணவி சங்கீதா சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இதேபோல் முத்துமுனியப்பன்(25), சுதாகர்(47), பரமகுரு(35), பாண்டியராஜன்(31), குமார்(40), முத்துலட்சுமி(63), தங்கேஸ்வரி(18), தமிழ்செல்வி(45) உள்பட 19 பேர் சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.

    சிவகாசி மற்றும் திருத்தங்கல் நகராட்சி பகுதிகளில் நாய்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. நாய்களால் பொதுமக்கள் அதிக அளவில் பாதித்து வருகிறார்கள். எனவே நகராட்சி அதிகாரிகள் நாய்களுக்கு தடுப்பூசிகளை போடவும், வெறிநாய்களை கட்டுப்படுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
    விசாரணை அதிகாரிகளிடம் தனது செல்போனை ஒப்படைக்க மறுத்த குற்றத்துக்காக மாலத்தீவு முன்னாள் அதிபர் மம்மூன் அப்துல் கயூமுக்கு 19 மாதம் ஜெயில் தண்டனை விதித்து மாலத்தீவு கோர்ட்டு நேற்று தீர்ப்பு அளித்தது. #MaumoonAbdulGayoom
    மாலே:

    மாலத்தீவு முன்னாள் அதிபர் மம்மூன் அப்துல் கயூம். 80 வயதான இவர், 1978-ம் ஆண்டு முதல் 2008-ம் ஆண்டு வரை சர்வாதிகாரியாக இருந்தார். தன்னுடைய சகோதரரும், தற்போதைய அதிபருமான யாமீன் அப்துல் கயூமின் ஆட்சியை கவிழ்க்க சதி செய்ததாக, கடந்த பிப்ரவரி மாதம் கயூம் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், விசாரணை அதிகாரிகளிடம் தனது செல்போனை ஒப்படைக்க மறுத்த குற்றத்துக்காக மம்மூன் அப்துல் கயூமுக்கு 19 மாதம் ஜெயில் தண்டனை விதித்து, மாலத்தீவு கோர்ட்டு நேற்று தீர்ப்பு அளித்தது.

    அவருடன் கைது செய்யப்பட்ட தலைமை நீதிபதி அப்துல்லா சயீதுக்கும் அதே குற்றத்துக்காக 19 மாத ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. 
    19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான இந்திய அணியில் அர்ஜூன் டெண்டுல்கர் இடம்பெற்றது தொடர்பாக சச்சின் கூறுகையில், அர்ஜூன் கிரிக்கெட் வாழ்க்கையில் இது ஒரு முக்கிய மைல்கல் என்றார். #SachinTendulkar #ArjunTendulkar #IndiaUnder19
    மும்பை: 

    இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர். உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களுள் இவர் ஒரு முக்கிய இடத்தை பிடித்துள்ளார். சர்வதேச ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன் அடித்த வீரர்கள் பட்டியலில் சச்சின் தான் முதலிடத்தில் உள்ளார். மேலும் சர்வதேச போட்டிகளில் அதிக சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலிலும் சச்சின் 100 சதங்களுடன் முதலிடத்தில் உள்ளார்.

    சச்சின் டெண்டுல்கரின் மகன், அர்ஜூன் டெண்டுல்கர். இவரும் கிரிக்கெட் விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்டவர். நீண்ட நாட்களாக ஆடி வரும் அர்ஜூன் டெண்டுல்கர், தற்போது இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் களமிறங்கும் 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார். உள்ளூர் கிரிக்கெட்டில் ஆல் ரவுண்டராக திகழும் அர்ஜூன் டெண்டுல்கர் முதல் முறையாக 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.



    இந்நிலையில், 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான இந்திய அணியில் அர்ஜூன் டெண்டுல்கர் இடம்பெற்றது தொடர்பாக சச்சின் கூறுகையில், அர்ஜூன் கிரிக்கெட் வாழ்க்கையில் இது ஒரு முக்கிய மைல்கல் என்றார். 

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய கிரிக்கெட் அணியில் என் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் இடம்பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. அர்ஜூன் வெற்றியடைய நானும், எனது குடும்பத்தினரும் பிரார்த்திப்போம். அர்ஜூனின் கிரிக்கெட் வாழ்க்கையில் இது ஒரு முக்கிய மைல்கல் ஆகும் என தெரிவித்துள்ளார். #SachinTendulkar #ArjunTendulkar #IndiaUnder19
    கேரளாவில் 18 வயது வாலிபரும், 19 வயது பெண்ணும் சேர்ந்து வாழலாம் என கோர்ட்டு தீர்ப்பளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் ஆலப்புழா பகுதியைச் சேர்ந்தவர் முகம்மது ரியாஸ்.

    முகம்மது ரியாசுக்கு 19 வயதில் ஒரு மகள் உள்ளார். இவர்கள் வீடு அருகே 18 வயது வாலிபர் ஒருவரும் வசித்து வந்தார். அந்த வாலிபருடன் முகம்மது ரியாசின் மகளுக்கு காதல் மலர்ந்தது.

    இதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் முகம்மது ரியாசின் மகள் வீட்டை விட்டு வெளியேறினார். அவரை முகம்மது ரியாஸ் தேடியபோது அவர் 18 வயது வாலிபருடன் சேர்ந்து வாழ்வது தெரிய வந்தது.

    18 வயது வாலிபரை மகள் திருமணம் செய்து கொண்டதை அறிந்த முகம்மது ரியாஸ் இதுபற்றி கேரள ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு வழக்கு தொடர்ந்தார்.

    அதில், 18 வயது வாலிபருடன் வசிக்கும் மகளை தன்னிடம் ஒப்படைக்க வேண்டுமென்று கூறி இருந்தார். இந்த மனு நேற்று ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.

    வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஒன்றாக வாழ்பவர்களை கோர்ட்டால் பிரிக்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. வயதுக்கு வந்த ஆணும், பெண்ணும் சேர்ந்து வாழ்வதில் தவறில்லை.

    திருமண வயது வரவில்லை என்பதற்காக அவர்களை பிரிக்க முடியாது. எனவே 18 வயது வாலிபரும், 19 வயது பெண்ணும் ஒன்றாக சேர்ந்து வாழலாம் என்று தீர்ப்பளித்தனர்.

    இந்தியாவில் ஒரு பெண் திருமணம் செய்து கொள்ள 18 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். இதுபோல ஆணுக்கு 21 வயது நிறைவடைந்தால் மட்டுமே திருமணம் செய்து கொள்ளலாம் என்று வரையறுக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் 18 வயது வாலிபரும், 19 வயது பெண்ணும் சேர்ந்து வாழலாம் என கோர்ட்டு தீர்ப்பளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #Tamilnews
    கறம்பக்குடி அருகே உள்ள வாண்டான் விடுதியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 19 பேர் காயமடைந்தனர்.
    கறம்பக்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ள வடக்களூர் நாட்டை சேர்ந்த வாண்டான்விடுதியில் முத்துகருப்பையா, முத்து முனீஸ்வரர் கோவில் திருவிழாவையொட்டி பொதுமக்கள் சார்பில் ஜல்லிக்கட்டு நடத்த முடிவு செய்யப்பட்டது. இதையொட்டி கடந்த சில நாட்களுக்கு முன்பு வாடிவாசல் அமைப்பது, பாதுகாப்பு வேலிகள் அமைப்பது உள்பட பல்வேறு முன்னேற்பாடு பணிகள் தொடங்கி நிறைவுபெற்றது.

    இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் கலெக்டர் கணேஷ் ஜல்லிக்கட்டு முன்னேற்பாடு பணிகளை நேரில் பார்வையிட்டு ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கினார். இதையடுத்து நேற்று காலை ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ள வந்த அனைத்து காளைகளையும் கால்நடை மருத்துவக்குழுவினர் பரிசோதனை செய்தனர். இதைபோல மாடுபிடி வீரர்களையும் மருத்துவக்குழுவினர் பரிசோதனை செய்து களத்தில் செல்ல அனுமதித்தனர். மாடுபிடி வீரர்கள், காளைகளின் உரிமையாளர்கள் ஜல்லிக்கட்டு உறுதிமொழி எடுத்து கொண்டனர். இதைத்தொடர்ந்து நேற்று காலை ஜல்லிக்கட்டு தொடங்கியது. இதனை மாவட்ட உதவி கலெக்டர் கே.எம்.சரயு, மாவட்ட வருவாய் அதிகாரி ராமசாமி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

    பின்னர் வாடிவாசலில் இருந்து முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அதனை மாடுபிடி வீரர்கள் யாரும் அடக்க முன்வரவில்லை. தொடர்ந்து புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், சிவகங்கை, மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து அழைத்து வரப்பட்ட 604 காளைகள் வாடிவாசலில் இருந்து ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன. அவிழ்த்து விடப்பட்ட காளைகள் சீறிபாய்ந்து சென்றன. அதனை 200 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு போட்டி போட்டு அடக்க முயன்றனர். இதில் சில காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்கினர். சில காளைகள் மாடுபிடி வீரர்களை பந்தாடியது. ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள் இளம்பரிதி, அழகர்சாமி உள்பட 19 பேர் காயமடைந்தனர். இதையடுத்து காயமடைந்தவர்களுக்கு மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்தனர். இதில் 2 பேர் மட்டும் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதில் காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் தங்க நாணயம், சைக்கிள், கட்டில், பீரோ, குக்கர், வெள்ளி நாணயம், குத்துவிளக்கு, ரொக்கப்பரிசு உள்பட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டை கந்தர்வகோட்டை தொகுதி எம்.எல்.ஏ. ஆறுமுகம், கறம்பக்குடி தாசில்தார் சக்திவேல், கறம்பக்குடி, வாண்டான்விடுதி மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த திரளான பொதுமக்கள், இளைஞர்கள் கண்டு களித்தனர். ஜல்லிக்கட்டையொட்டி ஆலங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அப்துல் முத்தலிபு தலைமையில், கறம்பக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகைசாமி மற்றும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 
    ×