search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "IND19vSL19"

    டாக்காவில் நடைபெற்ற ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இலங்கையை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. #IND19vSL19 #U19AsiaCup
    துபாய் மற்றும் அபு தாபியில் நடைபெற்ற ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் வங்காள தேசத்தை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.

    அதன்பின் தற்போது 19 வயதிற்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வந்தது. வங்காள தேசம் டாக்காவில் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியா - இலங்கை அணிகள் சாம்பியன் பட்டத்தை வெல்ல பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது. யாஷவி ஜெய்ஸ்வால் (85) , அனுஜ் ராவத் (57) ஆகியோர் நல்ல தொடக்கம் கொடுத்தனர்.

    அதன்பின் வந்த கேப்டன் சிம்ரான் சிங், ஆயுஷ் படோனி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இதனால் இந்தியாவின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. இருவரும் அரைசதம் அடித்து ஆட்டமிழக்காமல் இருக்க இந்தியா 50 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 305 ரன்கள் குவித்தது. படோனி 28 பந்தில் 2 பவுண்டரி, 5 சிக்சருடன் 52 ரன்களும், சிம்ரான் சிங் 37 பந்தில் 3 பவுண்டர, 4 சிக்சருடன் 65 ரன்களும் விளாசினார்கள்.



    பின்னர் 305 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை களம் இறங்கியது. இந்தியாவின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இலங்கை இளைஞர்கள் சீரான இடைவெளியில் வெளியேறினார்கள். ஹர்ஷ் தியாகி 6 விக்கெட்டுக்கள் வீழ்த்த, இலங்கை அணி 38.4 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 160 ரன்னில் சுருண்டது. இதனால் இந்தியா 144 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

    இலங்கை அணியில் பெர்னாண்டே 49 ரன்களும், பரனவிதனா 48 ரன்களும், சூரியபண்டாரா 31 ரன்களும் சேர்த்தனர்.
    19 வயதிற்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இலங்கை வெற்றிக்கு 305 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா. #IND19vSL19
    துபாய் மற்றும் அபு தாபியில் நடைபெற்ற ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் வங்காள தேசத்தை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.

    அதன்பின் தற்போது 19 வயதிற்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வந்தது. இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியா - இலங்கை அணிகள் சாம்பியன் பட்டத்தை வெல்ல பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது. யாஷவி ஜெய்ஸ்வால், அனுஜ் ராவத் ஆகியோர் தொடக்க வீரர்களான களம் இறங்கினார்கள்.

    இருவரும் விக்கெட் இழக்காமல் விளையாடினார்கள். அதேசமயம் அதிரடியாக ரன்கள் குவிக்காமல் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 25.1 ஓவரில் 121 ரன்கள் எடுத்தது. 79 பந்தில் 4 பவுண்டரி, 3 சிக்சருடன் 57 ரன்கள் சேர்த்த நிலையில் ராவத் ஆட்டமிழந்தார். மறுமுனையில் விளையாடிய ஜெய்ஸ்வால் 113 பந்தில் 8 பவுண்டரி, 1 சிக்சருடன் 85 ரன்கள் சேர்த்தார். அடுத்து வந்த தேவ்தத் படிக்கல் தனது பங்கிற்கு 43 பந்தில் 31 ரன்கள் சேர்த்தார்.



    கேப்டனும் விக்கெட் கீப்பரும் ஆன சிம்ரான் சிங் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவருடன் ஆயுஷ் படோனியும் இலங்கை பந்து வீச்சை துவம்சம் செய்தார். இதனால் இந்தியாவின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.

    இருவரும் அரைசதம் அடித்து ஆட்டமிழக்காமல் இருக்க இந்தியா 50 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 304 ரன்கள் குவித்தது. படோனி 28 பந்தில் 2 பவுண்டரி, 5 சிக்சருடன் 52 ரன்களும், சிம்ரான் சிங் 37 பந்தில் 3 பவுண்டர, 4 சிக்சருடன் 65 ரன்களும் விளாசினார்கள். பின்னர் 304 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை களம் இறங்க இருக்கிறது.
    இலங்கையில் நடைபெற்று வந்த இளையோர் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இலங்கையை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. #IND19
    19 வயதிற்கு உட்பட்டோருக்கான ஒருநாள் கிரிக்கெட் தொடர் இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையில் நடைபெற்றது. ஐந்து போட்டிகள் கொண்ட இந்த தொடரில் முதல் நான்கில் இரு அணிகளும் தலா இரண்டு வெற்றிகள் பெற்று சமநிலையில் இருந்தது.

    இந்நிலையில் 5-வது மற்றும் கடைசி போட்டி இன்று நடைபெற்றது. இலங்கை அணி டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க வீரரான பெர்னாண்டோ 95 ரன்களும், 4-வது வீரராக களம் இறங்கிய நுவாநிது பெர்னாண்டோ 56 ரன்களும் அடிக்க 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் சேர்த்தது.

    பின்னர் 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. யாஷவி ஜெய்ஸ்வால், தேவ்தத் படிக்கல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். தேவ்தத் படிக்கல் 38 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பவன் ஷா 36 ரன்னில் வெளியேறினார்.

    மற்றொரு தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் 128 பந்தில் 114 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருக்க இந்திய அணி 42.4 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய இளையோர் அணி 3-2 வென்றது. 
    இலங்கையில் நடைபெற்று வரும் இளையோர் ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் இந்தியா எளிதில் வெற்றி பெற்றது. #IND19vSL19
    இந்தியா - இலங்கை 19 வயதிற்கு உட்பட்டோருக்கான இளையோர் கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இரண்டு போட்டிகள் கொண்ட நான்கு நாள் டெஸ்ட் தொடரை இந்தியா 2-0 என வென்றது. இந்நிலையில் இன்று ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் தொடங்கியது. கொழும்பில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இலங்கை அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.

    இந்திய அணியின் நேர்த்தியான பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இலங்கை இளைஞர்கள் 38.4 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 143 ரன்கள் சுருண்டது.

    பின்னர் 144 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய இளைஞர அணி களம் இறங்கியது. தொடக்க வீரர்களாக பவன் ஷா, அனுஜ் ராவத் ஆகியோர் களம் இறங்கினார்கள். பவன் ஷா 12 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 15 ரன்னும், ஆர்யன் ஜூயல் 20 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தார். தொடக்க வீரர் அனுஜ் ராவத் சிறப்பாக விளையாடி 50 ரன்கள் சேர்த்தார்.

    ஐந்தாவது வீரராக களம் இறங்கிய சமீர் சவுத்ரி 35 பந்தில் 31 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருக்க இந்தியா 37.1 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

    இரு அணிகளுக்கு இடையிலான 2-வது போட்டி வியாழக்கிழமை நடக்கிறது.
    19 வயதிற்கு உட்பட்டோருக்கான டெஸ்ட் தொடரில் இலங்கையை இன்னிங்ஸ் மற்றும் 147 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா. #IND19vSL19
    இந்தியா - இலங்கை 19 வயதிற்கு உட்பட்டோருக்கான இளைஞர் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் இலங்கை கம்பன்டோட்டாவில் கடந்த 24-ந்தேதி தொடங்கியது.

    டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இந்தியா அதர்வா டைட் (177), பவன் ஷா (282) வதேரா (64) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 128.5 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 613 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

    பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை இளைஞர்கள் அணி 316 ரன்னில் சுருண்டு பாலோ-ஆன் ஆனது. இலங்கை அணியின் சூரியபந்தாரா 115 ரன்னும், தினுஷா 51 ரன்னும், மெண்டிஸ் 49 ரன்களும் சேர்த்தனர். இந்திய அணி சார்பில் ஜங்கா அதிகபட்சமாக நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.


    பவன் ஷா

    இந்தியா பாலோ-ஆன் கொடுத்ததால் இலங்கை அணி 297 ரன்கள் பின்தங்கிய நிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 47 ரன்கள் எடுத்திருந்தது.

    இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய இலங்கை 150 ரன்னில் சுருண்டது. இதனால் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 147 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தேசாய் 4 விக்கெட் வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 2-0 எனக் கைப்பற்றியது.
    தெண்டுல்கர் மகன் அர்ஜூன் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் விக்கெட் வீழ்த்தி அசத்தினார். #IND19vSL19
    19 வயதிற்கு உட்பட்டோருக்கான இந்திய அணி இலங்கையில் சுற்றுப் பயணம் சென்று இரண்டு நான்கு நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. முதல் ஆட்டம் இன்று கொழும்பில் தொடங்கியது.

    டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி கே மிஷரா, விக்கெட் கீப்பர் பெர்னாண்டோ ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். சச்சின் தெண்டுல்கர் மகன் அர்ஜூன் தெண்டுல்கர் முதல் ஓவரை வீசினார். இந்த ஓவரில் ஒரு பவுண்டரியுடன் நான்கு ரன்கள் விட்டுக்கொடுத்தார்.



    3-வது ஓவரை அர்ஜூன் வீசினார். இந்த ஓவரின் 5-வது பந்தில் பவுண்டரி விட்டுக்கொடுத்த அர்ஜூன், அடுத்த பந்தில் மிஷராவை எல்பிடபிள்யூ மூலம் வீழ்த்தினார். இதனால் இந்திய அணிக்காக தனது முதல் விக்கெட்டை பதிவு செய்தார். இலங்கை அணி 55 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் எடுத்துள்ளது. அர்ஜுன் தெண்டுல்கர் 11 ஓவர்கள் வீசி 2 மெய்டன் ஓவருடன் 33 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.
    ×