search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "troubled"

    பெரம்பலூர் மாவட்டத்தில் 78 வாக்குச்சாவடிகள் பதற்றம் மற்றும் நெருக்கடி மிகுந்தவை என மாவட்ட கலெக்டர் சாந்தா தெரிவித்துள்ளார்.
    பெரம்பலூர்:

    பாராளுமன்ற பொதுத்தேர்தலை (2019) முன்னிட்டு பதற்றமான மற்றும் நெருக்கடியான வாக்குச்சாவடி மையங்களில் சுமூகமான முறையில் தேர்தல் நடத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில் கலெக்டர் சாந்தா கூறியதாவது:-

    பாராளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருப்பதை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பெரம்பலூர் (தனி) மற்றும் குன்னம் சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்ற கடந்த கால நிகழ்வுகளின் அடிப்படையில் பதற்றமானவை, 90 சதவீதத்திற்கு மேல் பதிவான வாக்குச்சாவடி மையங்கள் மற்றும் நெருக்கடியானவை என பிரிக்கப்பட்டுள்ளது.

    அதன் அடிப்படையில், பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் மொத்தம் உள்ள 332 வாக்குச்சாவடி மையங்களில் 36 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவை எனவும், 4 வாக்குச்சாவடி மையங்கள் நெருக்கடியானவை எனவும் மற்றும் குன்னம் சட்டமன்ற தொகுதியில் மொத்தம் உள்ள 320 வாக்குச்சாவடி மையங்களில் 37 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவை எனவும், 1 வாக்குச்சாவடி மையம் நெருக்கடியானவை எனவும் கண்டறியப்பட்டுள்ளது.

    எனவே குறிப்பிட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களில் சுமூகமான முறையில் தேர்தல் நடத்த போலீஸ் துறையினர் மூலமாக உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இந்த கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திஷாமித்தல், மாவட்ட வருவாய் அலுவலர் அழகிரிசாமி, வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன், தனி வட்டாட்சியர் (தேர்தல்) பாலசுப்ரமணியன், அனைத்து வட்டாட்சியர்கள் மற்றும் போலீஸ் அலுவலர்கள் கலந்து கொண்டனர். 
    சிவகாசி, திருத்தங்கல் பகுதிகளில் வெறிநாய்கள் தொல்லை உள்ள நிலையில், நேற்று ஒரே நாளில் நாய்கள் கடித்து 19 பேர் காயமடைந்து அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    சிவகாசி:

    சிவகாசி, திருத்தங்கல் நகராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் தற்போது நாய்கள் அதிக அளவில் உள்ளன. இதில் பல நாய்கள் வெறிபிடித்த நிலையில் சுற்றி திரிகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்பு சிவகாசி-விஸ்வத்தம் ரோட்டில் குப்பையில் கொட்டப்பட்ட கழிவுகளை சாப்பிட வந்த நாய்களுக்குள் மோதல் ஏற்பட்டு அந்த பகுதியில் வீட்டின் வெளியே விளையாடிக்கொண்டிருந்த 2 வயது சிறுமியை நாய்கள் கடித்து குதறின. இதில் படுகாயமடைந்த சிறுமி, சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டாள்.

    இந்தநிலையில் நேற்று ஒரேநாளில் சிவகாசி, திருத்தங்கல் பகுதியில் 19 பேரை நாய்கள் துரத்தி, துரத்தி கடித்துள்ளன. செவல்பட்டியை சேர்ந்த முத்துவீரன்(வயது 50) என்பவர் சிவகாசி பிச்சாண்டி தெருவில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு விருந்துக்கு வந்துள்ளார். வந்த இடத்தில் அவரை நாய் கடித்துள்ளது. அதேபோல் சிவகாசி நகராட்சி துப்புரவு தொழிலாளி கணேசன்(49) என்பவரை பிச்சாண்டி தெருவில் உள்ள நாய்கள் கடித்து காயப்படுத்தி உள்ளது. திருத்தங்கல் எஸ்.ஆர்.என். பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவி சங்கீதாவை பள்ளி வளாகத்தின் உள்ளே புகுந்த வெறிநாய் கடித்துள்ளது. காயம் அடைந்த மாணவி சங்கீதா சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இதேபோல் முத்துமுனியப்பன்(25), சுதாகர்(47), பரமகுரு(35), பாண்டியராஜன்(31), குமார்(40), முத்துலட்சுமி(63), தங்கேஸ்வரி(18), தமிழ்செல்வி(45) உள்பட 19 பேர் சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.

    சிவகாசி மற்றும் திருத்தங்கல் நகராட்சி பகுதிகளில் நாய்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. நாய்களால் பொதுமக்கள் அதிக அளவில் பாதித்து வருகிறார்கள். எனவே நகராட்சி அதிகாரிகள் நாய்களுக்கு தடுப்பூசிகளை போடவும், வெறிநாய்களை கட்டுப்படுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
    ×