search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Perambalur district"

    பெரம்பலூர் மாவட்டத்தில் 78 வாக்குச்சாவடிகள் பதற்றம் மற்றும் நெருக்கடி மிகுந்தவை என மாவட்ட கலெக்டர் சாந்தா தெரிவித்துள்ளார்.
    பெரம்பலூர்:

    பாராளுமன்ற பொதுத்தேர்தலை (2019) முன்னிட்டு பதற்றமான மற்றும் நெருக்கடியான வாக்குச்சாவடி மையங்களில் சுமூகமான முறையில் தேர்தல் நடத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில் கலெக்டர் சாந்தா கூறியதாவது:-

    பாராளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருப்பதை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பெரம்பலூர் (தனி) மற்றும் குன்னம் சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்ற கடந்த கால நிகழ்வுகளின் அடிப்படையில் பதற்றமானவை, 90 சதவீதத்திற்கு மேல் பதிவான வாக்குச்சாவடி மையங்கள் மற்றும் நெருக்கடியானவை என பிரிக்கப்பட்டுள்ளது.

    அதன் அடிப்படையில், பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் மொத்தம் உள்ள 332 வாக்குச்சாவடி மையங்களில் 36 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவை எனவும், 4 வாக்குச்சாவடி மையங்கள் நெருக்கடியானவை எனவும் மற்றும் குன்னம் சட்டமன்ற தொகுதியில் மொத்தம் உள்ள 320 வாக்குச்சாவடி மையங்களில் 37 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவை எனவும், 1 வாக்குச்சாவடி மையம் நெருக்கடியானவை எனவும் கண்டறியப்பட்டுள்ளது.

    எனவே குறிப்பிட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களில் சுமூகமான முறையில் தேர்தல் நடத்த போலீஸ் துறையினர் மூலமாக உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இந்த கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திஷாமித்தல், மாவட்ட வருவாய் அலுவலர் அழகிரிசாமி, வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன், தனி வட்டாட்சியர் (தேர்தல்) பாலசுப்ரமணியன், அனைத்து வட்டாட்சியர்கள் மற்றும் போலீஸ் அலுவலர்கள் கலந்து கொண்டனர். 
    பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோஜியோ கூட்டமைப்பு சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. #JactoGeo
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தில் ஜாக்டோஜியோ கூட்டமைப்பு சார்பாக  ஆர்ப்பாட்டம் நடந்தது. புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஊதியக்குழு முரண்பாடுகள் களையப்பட வேண்டும், சத்துணவு, ஊராட்சி செயலாளர், அங்கன்வாடி மையப்பணியாளர்கள், வனக்காவலர் முதலிய ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும் உள்பட பல்வேறு  கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஜாக்டோ, ஜியோ கூட்டமைப்பு சார்பாக தொடர் போராட்டங்கள் நடந்து வருகிறது.

    இந்தநிலையில்  பெரம்பலூர் கலெக்டர் அலுவலக சிறுவர் பூங்கா முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் தயாளன், தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி பட்டதாரிகள் ஆசிரியர் சங்க மாவட்ட தலைவர் ராமர், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் சங்க மாவட்ட தலைவர் அருள்ஜோதி ஆகியோர்  தலைமை வகித்தனர்.

    கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட செயலாளர் இளங்கோவன், மாவட்ட தலைவர் மரியதாஸ், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் குமரிஅனந்தன், தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி பட்டதாரிகள் ஆசிரியர்கள் சங்க மாநில துணை தலைவர் கணேசன்,  தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்க மாவட்ட தலைவர் சிலம்பரசன், தமிழ்நாடு கூட்டுறவு அலுவலர்கள் சங்க மாநில துணை தலைவர் சிவக்குமார் மற்றும் பலர் கண்டன உரையாற்றினர். தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் கொளஞ்சியம்மாள் நன்றி கூறினார்.

    துறையூரில்  ஜாக்டோ ஜியோ அமைப்பினர் துறையூர் பஸ் நிலையம் முன்பு  ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில்  ஜாக்டோ ஜியோ வட்டார தலைவர் தியாகராஜன் , ஒருங்கிணைப்பாளர் அசோகன்,  கிருஷ்ணமூர்த்தி, அருணகிரி, பழனிச்சாமி, சந்திர சேகரன, நேரு உள்ளிட்ட பலர் கலந்து  கொண்டனர். ஆலங்குடி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

    ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொறுப்பாளார் செபஸ்தியான் தலைமை வகித்தார்.தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி  ராஜேந்திரன், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் மணியன், சத்துணவு மாவட்ட பொருளாளர் அன்னப்பூரணி  ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.  அரசு ஊழியர் சங்க மாவட்ட துணைத்தலைவர் ரமாநாதன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். #JactoGeo
    ×