search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேரளாவில் 18 வயது வாலிபரும், 19 வயது பெண்ணும் சேர்ந்து வாழ அனுமதி
    X

    கேரளாவில் 18 வயது வாலிபரும், 19 வயது பெண்ணும் சேர்ந்து வாழ அனுமதி

    கேரளாவில் 18 வயது வாலிபரும், 19 வயது பெண்ணும் சேர்ந்து வாழலாம் என கோர்ட்டு தீர்ப்பளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் ஆலப்புழா பகுதியைச் சேர்ந்தவர் முகம்மது ரியாஸ்.

    முகம்மது ரியாசுக்கு 19 வயதில் ஒரு மகள் உள்ளார். இவர்கள் வீடு அருகே 18 வயது வாலிபர் ஒருவரும் வசித்து வந்தார். அந்த வாலிபருடன் முகம்மது ரியாசின் மகளுக்கு காதல் மலர்ந்தது.

    இதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் முகம்மது ரியாசின் மகள் வீட்டை விட்டு வெளியேறினார். அவரை முகம்மது ரியாஸ் தேடியபோது அவர் 18 வயது வாலிபருடன் சேர்ந்து வாழ்வது தெரிய வந்தது.

    18 வயது வாலிபரை மகள் திருமணம் செய்து கொண்டதை அறிந்த முகம்மது ரியாஸ் இதுபற்றி கேரள ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு வழக்கு தொடர்ந்தார்.

    அதில், 18 வயது வாலிபருடன் வசிக்கும் மகளை தன்னிடம் ஒப்படைக்க வேண்டுமென்று கூறி இருந்தார். இந்த மனு நேற்று ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.

    வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஒன்றாக வாழ்பவர்களை கோர்ட்டால் பிரிக்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. வயதுக்கு வந்த ஆணும், பெண்ணும் சேர்ந்து வாழ்வதில் தவறில்லை.

    திருமண வயது வரவில்லை என்பதற்காக அவர்களை பிரிக்க முடியாது. எனவே 18 வயது வாலிபரும், 19 வயது பெண்ணும் ஒன்றாக சேர்ந்து வாழலாம் என்று தீர்ப்பளித்தனர்.

    இந்தியாவில் ஒரு பெண் திருமணம் செய்து கொள்ள 18 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். இதுபோல ஆணுக்கு 21 வயது நிறைவடைந்தால் மட்டுமே திருமணம் செய்து கொள்ளலாம் என்று வரையறுக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் 18 வயது வாலிபரும், 19 வயது பெண்ணும் சேர்ந்து வாழலாம் என கோர்ட்டு தீர்ப்பளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #Tamilnews
    Next Story
    ×