search icon
என் மலர்tooltip icon

    பாராளுமன்ற தேர்தல் 2024

    • நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் மூளையாக செயல்பட்ட அப்சல் குரு தூக்கிலிடப்பட்டபோது,
    • அவருக்கு ஆதரவாக ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜேஎன்யு) முழக்கங்கள் எழுப்பப்பட்டபோது, ராகுல் காந்தி அங்கே சென்றார்.

    குஜராத் மாநிலம் தஹோத் என்ற இடத்தில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் கலந்து கொண்டு பா.ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    சோனியா காந்தி தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி உச்சநீதிமன்றத்தில் ஒரு பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது. அதில் கடவுள் ராமர் கற்பனையே. வரலாற்று ரீதியாக அல்லது அறிவியல்பூர்வமாக அவர் இருந்ததற்கான எந்த சான்றுகள் இல்லை எனக் குறிப்பிட்டிருந்தது.

    அவர்கள் தடைகளை ஏற்படுத்திய நிலையில், பிரதமர் மோடி கடவுள் ராமருக்கு கோவில் கட்டுவதற்கான வழியை ஏற்படுத்தினார். 10 நாட்கள் சடங்குகளுக்குப் பிறகு ராமர் கோவில் கும்பாபிஷேகம் ஜனவரி மாதம் 22-ந்தேதி நடைபெற்றது.

    நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் மூளையாக செயல்பட்ட அப்சல் குரு தூக்கிலிடப்பட்டபோது, அவருக்கு ஆதரவாக ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜேஎன்யு) முழக்கங்கள் எழுப்பப்பட்டபோது, அடுத்த நாளே அவர்களுக்கு ஆதரவாக ராகுல் காந்தி அங்கே சென்றார்.

    அப்சல் குருவுக்கு ஆதரவான துண்டாக்க விரும்பும் கும்பலுக்கு ஆதரவு தெரிவித்தார். அவருடைய கட்சி அந்த கும்பலைச் சேர்ந்த ஒருவருக்கு (கணையா குமார் வடகிழக்கு டெல்லி மக்களவை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார்) மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கியுள்ளது. அவர்கள் தேச விரோத சக்திகளுடன் இல்லையா? அவர்களுக்கு வாக்களிக்க வேண்டுமா?

    அம்பேத்கர் மதத்தின் பெயரால் இடஒதுக்கீடு வழங்கப்படமாட்டாது, சமூக நீதிக்காக இடஒதுக்கீடு எனக் கூறியதை பிரதமர் மோடி மிகவும் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.

    எஸ்.சி., எஸ்.டி., ஓபிசி சமூகத்தினருக்கு இடஒதுக்கீட்டை முஸ்லிம்களுக்கு வழங்க அவர்கள் முயற்சி செய்கிறார்கள். இது நமது அரசியலமைப்ப சூறையாடுவதற்கு சமம். நாட்டை பலவீனப்படுத்தும் மற்றும் பிளவுபடுத்தும் சக்திகளை வலுப்படுத்த காங்கிரஸ் செயல்படுகிறது.

    இவ்வாறு ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார்.

    • ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுகிறார்.
    • அமேதி தொகுதியில் கே.எல். சர்மா களம் இறக்கப்பட்டுள்ளார்.

    உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள அமேதி மற்றும் ரேபரேலி ஆகிய தொகுதிகள் காந்தி குடும்பத்தின் பாரம்பரிய தொகுதிகள் பல ஆண்டுகளாக காந்தி குடும்பத்தை சேர்ந்தவர்கள்தான் போட்டியிட்டு வருகிறார்கள். சோனியா காந்தி மக்களவை தொகுதியில் போட்டியிடவில்லை என முடிவு செய்ததால் ரேபரேலிக்கு யாரை வேட்பாளராக நிறுத்துவது என்ற கேள்வி எழுந்தது.

    அதேநேரத்தில் வயநாடு தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தி மீண்டும் அமேதி தொகுதியில் போட்டியிடுவாரா? என்ற கேள்வியும் எழுந்தது. இதனால் அமேதி மற்றும் ரேபரேலி ஆகிய தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்படாமல் இருந்தது.

    இந்த நிலையில் வேட்புமனு தாக்கலுக்கு கடைசி நாளான இன்று இரு தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவதாகவும், அமேதி தொகுதியில் கே.எல். சர்மாவும் போட்டியிடுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இருவரும் இன்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இந்த நிலையில் காந்தி குடும்பம் அமேதி தொகுதியில் போட்டியிடாத நிலையில், காங்கிரஸ் ஏற்கனவே தோல்வியை ஏற்றுக் கொண்டுவிட்டது என அமேதி தொகுதியின் பாஜக வேட்பாளர் ஸ்மிரிதி இரானி தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக இஸ்மிரிதி இரானி கூறுகையில் "அமேதி தொகுதியில் காந்தி குடும்பம் போட்டியிடாதது, இந்த தொகுதியில் தேர்தல் நடைபெறுவதற்கு முன்னதாகவே, காங்கிரஸ் கட்சி தோல்வியை ஒப்புக்கொண்டுவிட்டது என்பதை குறிக்கிறது.

    இந்த தொகுதியில் வெற்றி பெறுவதற்கு ஏதாவது வாய்ப்பு இருந்திருந்தால், அவர்கள் போட்டியிட்டிருப்பார்கள். அவர்களுக்கு வேண்டியவர்களை நிறுத்தியிருக்க மாட்டார்கள்.

    இவ்வாறு ஸ்மிரிதி இரானி தெரிவித்துள்ளார்.

    • அமேதி காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு மிக்க தொகுதிகளில் ஒன்றாகும்.
    • கேஎல் சர்மா சோனியா குடும்பத்துக்கு மிக மிக நெருக்கமானவர்.

    அமேதி தொகுதி காங்கி ரஸ் வேட்பாளராக கேஎல் சர்மா அறிவிக்கப்பட்டதும் காங்கிரஸ் கட்சியினரே ஆச்சரியம் அடைந்தனர். நாடு முழுவதும் யார் இந்த கேஎல் சர்மா என்ற கேள்வி எழுந்துள்ளது.

    அமேதி தொகுதி காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு மிக்க தொகுதிகளில் ஒன்றாகும். கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் முதல் முதலாக இந்த தொகுதியில் ராகுல் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜ.க. வேட்பாளர் ஸ்மிருதிஇரானியிடம் தோல்வியை தழுவினார்.

    இதன் மூலம் இந்த தொகுதி காங்கிரசிமிருந்து பா.ஜ.க. கைக்கு மாறியது. அங்கு மீண்டும் ஸ்மிருதி இரானி இந்த தடவை களம் இறக்கப்பட்டுள்ளார். இந்த தடவையும் ராகுல் அங்கு போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் வயநாடு தொகுதியில் களம் இறங்கிய ராகுல் அமேதியில் போட்டியிட ஆர்வம் காட்டவில்லை எனவே பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேரா, இந்திராகாந்தியின் உறவினர் ஷீலா கவுலின் பேரன் ஆகிய இருவரில் ஒருவர் வேட்பாளராக தேர்வு பெறலாம் என்று தகவல்கள் வெளியானது.

    இந்த நிலையில் அனை வரது எதிர்ப்பார்ப்பையும் தகர்க்கும் வகையில் கேஎல் சர்மா வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இவர் சோனியா குடும்பத்துக்கு மிக மிக நெருக்கமானவர்.

    பஞ்சாப் மாநிலம் லூதியானாவை சேர்ந்த இவர் காங்கிரஸ் பாரம்பரிய குடும்பத்தில் பிறந்தவர். காங்கிரசில் சேர்ந்து அந்த கட்சிக்காக சேவையாற்றி வந்த அவர் 1983-ம் ஆண்டு ரேபரேலி தொகுதிக்கு வந்து தொகுதி பொறுப்பாளராக பதவி ஏற்றார்.

    அன்று முதல் ராஜீவ்காந்தி, சோனியாகாந்தியின் தனிப்பட்ட அன்பை சம்பாதித்தார். ராஜீவ்காந்திக்காக அவரது பிரதிநிதி போல அவர் ரேபரேலி தொகுதியில் பணியாற்றி வந்தார்.

    ராஜீவ் மறைவுக்கு பிறகு சோனியா குடும்பத்தினருடன் சர்மாவுக்கு மேலும் நட்புறவு அதிகரித்தது. சோனியா ரேபரேலி தொகுதி எம்.பி.யாக இருந்த 4 தடவையும் அவரது பிரதிநிதியாக ரேபரேலி தொகுதியில் பணியாற்றி வந்தார்.

    இன்னும் சொல்லப் போனால் அறிவிக்கப்படாத எம்.பி. போலவே அவர் ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் கட்சி பணிகளில் ஈடுபட்டார். இதன் காரணமாக அந்த தொகுதியில் அவருக்கு அதிக பேருடன் தொடர்பு ஏற்பட்டது.

    2004-ம் ஆண்டு ராகுல்காந்தி அமேதி தொகுதியில் போட்டியிட்ட போது அங்கும் சென்று ராகுலுக்காக கட்சி பணிகளிலும், தேர்தல் பணிகளிலும் ஈடுபட்டார். 2009, 2014, 2019 தேர்தல்களிலும் அமேதி, ரேபரேலி தொகுதிகளின் காங்கிரஸ் பொறுப்பாளராக பணியாற்றினார்.

    அவரது சேவையை கவுரவிக்கும் வகையிலேயே சோனியா அவரை அமேதி தொகுதி வேட்பாளராக களம் இறக்கி உள்ளார். ராகுலுக்கு பதில் அவர் போட்டியிடுவதாக காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

    ஆனால் அமேதி தொகுதியை தன்வசமாக்கி வைத்திருக்கும் மத்திய மந்திரி ஸ்மிருதிஇரானிக்கு கேஎல் சர்மாவால் நெருக்கடி கொடுக்க இயலுமா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 2019 மக்களவைத் தேர்தலில், பிரிஜ் பூஷன் இரண்டு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் கைசர்கஞ்ச் தொகுதியில் வெற்றி பெற்றார்
    • ப்ரஜ்பூஷன் சிங் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகாரளித்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது

    உத்தரப் பிரதேசத்தின் கைசர்கஞ்ச் தொகுதியில் 2009 ஆம் ஆண்டிலிருந்து ப்ரஜ்பூஷன் சிங் எம்.பியாக உள்ளார். கடைசியாக நடைபெற்ற 2019 மக்களவைத் தேர்தலில், பிரிஜ் பூஷன் இரண்டு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் கைசர்கஞ்ச் தொகுதியில் வெற்றி பெற்றார்.

    இந்நிலையில், சிட்டிங் பாஜக எம்.பி. ப்ரஜ்பூஷன் சிங்குக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்காமல், அவரது மகன் கரண்பூஷன் சிங்கை உத்தரப் பிரதேசத்தின் கைசெர்காஞ் தொகுதியின் வேட்பாளராக பாஜக. அறிவித்துள்ளது.

    ப்ரஜ்பூஷன் சிங் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகாரளித்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அதன் விளைவாக தான் ப்ரஜ்பூஷன் சிங்குக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று சொல்லப்படுகிறது.

    பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கரண் பூஷன் சிங் தற்போது உத்தரபிரதேச மல்யுத்த சங்கத்தின் தலைவராக உள்ளார். முன்னதாக, கரண் உபி மல்யுத்த சங்கத்தின் மூத்த துணைத் தலைவராக இருந்தார்.

    பாராளுமன்ற தேர்தலின் ஐந்தாவது கட்டமாக கைசர்கஞ்சில் மே 20ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. கரண் பூஷன் சிங் மே 3ம் தேதி கைசர்கஞ்ச் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்.

    • இந்த வருடம் நாம் இதுவரை இல்லாத அளவிற்கு வெப்பத்தை சந்தித்து வருகிறோம்.
    • கடந்த சில வருடங்களில் நாம் ஏப்ரல் மாதம் இதுபோன்ற வெப்பத்தை எதிர்கொண்டது கிடையாது.

    பெங்கால் சூப்பர் ஸ்டார் தேவ் (தீபக் அதிகாரி) திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் கட்டல் (Ghatal) மக்களவை தொகுதியில் போட்டியிடுகிறார். இன்று அவர் வேட்பு மனு தாக்கல் செய்தார். 3-வது முறையாக தொடர்ந்து களம் காண்கிறார்.

    இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ரத்த தானம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-

    ரத்த வங்கிகள் நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றன. ரத்த தானம் செய்வது மிகப்பெரிய பணி. மக்கள் ரத்த தானம் செய்ய வேண்டும் என நான் வலியுறுத்துகிறேன். ரத்த தானம் செய்வது யாரோ ஒருவருக்கு புதிய வாழ்வு கொடுப்பதாகும்.

    இந்த வருடம் நாம் இதுவரை இல்லாத அளவிற்கு வெப்பத்தை சந்தித்து வருகிறோம். கடந்த சில வருடங்களில் நாம் ஏப்ரல் மாதம் இதுபோன்ற வெப்பத்தை எதிர்கொண்டது கிடையாது. ஆகவே, மரங்கள் நடும் இந்த முயற்சியை எடுத்துள்ளேன். நான் 9 லட்சம் வாக்குகள் பெற்றால், 9 லட்சம் மரங்கள் நடுவேன்.

    இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    இவரை எதிர்த்து பா.ஜனதா ஹிரன் சட்டர்ஜி என்ற பெங்கால் நடிகரை களம் இறக்கியுள்ளது. காங்கிரஸ் ஆதரவில் சிபிஐ தபன் கங்குலியை நிறுத்தியுள்ளது. இந்த தொகுதிக்கு மே 25-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.

    • பாஜக-வுக்கு கேரளா, தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம் ஆகிய தென் மாநிலங்களில் ஒரு சீட் கூட கிடைக்காது.
    • தெற்கில் 2019-ஐ விட மிகவும் மோசமான முடிவுதான் பா.ஜனதாவுக்கு கிடைக்கும்.

    கேரள மாநிலம் திருவனந்தபுரம் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் சசி தரூர் போட்டியிட்டுள்ளார். வாக்குப்பதிவு முடிந்த நிலையில் வாக்கு எண்ணிக்கைக்காக காத்திருக்கிறார்.

    இவர் பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:-

    பா.ஜனதா சொல்லும் 400 இலக்கு என்பது ஜோக். 300 என்பது சாத்தியமற்றது. 200 என்பது கூட அந்த கட்சிக்கு சவாலானதாக இருக்கும்.

    கேரளா, தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம் ஆகிய தென் மாநிலங்களில் ஒரு சீட் கூட கிடைக்காது. தெற்கில் 2019-ஐ விட மிகவும் மோசமான முடிவுதான் பா.ஜனதாவுக்கு கிடைக்கும். கடந்த மாதம் 26-ந்தேதி வாக்குப்பதிவு முடிந்துள்ளது. வெற்றியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

    இரண்டு கட்ட தேர்தல் வாக்குப்பதிவு மூலம் 190 இடங்களில் தேர்தல் முடிந்துள்ளது. என்னுடைய தரவுகள்படி, எங்கள் கூட்டணிக்கு மிகப்பெரிய அளவில் நேர்மறையாக முடிவு கிடைக்கும் என தெரியவந்துள்ளது. மிகப்பெரிய அலையாக இருக்கும் என நாங்கள் கூறவில்லை. ஆனால், அரசாங்கத்திற்கு ஆதரவாக இல்லை. தற்போது வரை நாங்கள் முன்னணியில் உள்ளோம். தேவையில்லாத இந்த நீண்ட கால தேர்தலில் இன்னும் ஐந்து கட்ட வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.

    இவ்வாறு சசி தரூர் தெரிவித்துள்ளார்.

    திருவனந்தபுரம் தொகுதியில் சசி தரூர் வெற்றி பெற்றால், இந்த தொகுதியில் தொடர்ந்து நான்கு முறை வெற்றி பெற்றவர் என்ற பெருமையையும், நீண்ட காலம் இந்த தொகுதியின் எம்.பி.யாக இருந்தவர் என்ற பெருமையையும் பெறுவார்.

    • உங்கள் பேச்சுகளில் உள்ள பொய்கள் நீங்கள் நினைத்ததை கொண்டிருக்கவில்லை என்பதுபோல் கடிதம் தோற்றமளிக்கிறது.
    • இப்போது உங்கள் வேட்பாளர்கள் உங்கள் பொய்களைப் பெரிதாக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்.

    காங்கிரஸ் கட்சி எஸ்.சி., எஸ்.டி., ஓபிசி-யின் இடஒதுக்கீடுகளை பறித்து அவர்களுக்கு வாங்கி வங்கிக்கு கொடுக்க இருப்பதாகவும், மதம் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க இருப்பதாகவும் பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தின்போது தொடர்ந்து கூறி வருகிறார்.

    இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    ஏழை, விளிம்பு நிலையில் இருப்பவர்கள், பெண்கள், ஆர்வமுள்ள இளைஞர்கள், தொழிலாளர் வகுப்பை சேர்ந்தவர்கள், தலித் மற்றும் பழங்குடியினர் உள்ளிட்ட ஒவ்வொரு இந்தியனும் எங்களுடைய வாக்கு வங்கி. வெறுப்பு பேச்சில் ஈடுபடுவதற்குப் பதிலாக கடந்த 10 ஆண்டுகளில் உங்களுடைய அரசு செய்த செயல்பாட்டை மக்களிடம் தெரிவித்து வாக்கு கேளுங்கள்.

    தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு நீங்கள் எழுதிய கடிதத்தில், வேட்பாளர்களிடம் வாக்கு கேட்கும்போது என்ன தெரிவிக்க வேண்டும் என்பது குறித்து பார்த்தேன்.

    கடிதத்தின் உள்ளடக்கத்தைப் பார்க்கும்போது உங்களுக்குள் மிகுந்த விரக்தியும் கவலையும் இருப்பதாகத் தெரிகிறது. இது பிரதமரின் அலுவலகத்திற்குப் பொருந்தாத மொழியைப் பயன்படுத்த உங்களை வழி நடத்துகிறது.

    உங்கள் பேச்சுகளில் உள்ள பொய்கள் நீங்கள் நினைத்ததை கொண்டிருக்கவில்லை என்பதுபோல் அந்தக் கடிதம் தோற்றமளிக்கிறது. இப்போது உங்கள் வேட்பாளர்கள் உங்கள் பொய்களைப் பெரிதாக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள். பொய்யை ஆயிரம் முறை சொன்னாலும் அது உண்மை ஆகாது.

    எங்கள் தேர்தல் அறிக்கை உத்தரவாதங்கள் மிகவும் எளிமையானவை மற்றும் தெளிவானவை, நாங்கள் அதை விளக்க வேண்டியதில்லை. உங்கள் நலனுக்காக, அவற்றை மீண்டும் இங்கு வலியுறுத்துகிறேன் (தேர்தல் அறிக்கையில் உள்ள முக்கியமான விசயங்களை குறிப்பிட்டுள்ளார்).

    காங்கிரஸ் திருப்திப்படுத்தும் அரசியலை மேற்கொள்கிறது என்று நீங்களும் உள்துறை அமைச்சரும் சொல்வதை நாங்கள் கேட்டிருக்கிறோம். கடந்த 10 ஆண்டுகளில் நாங்கள் கண்ட ஒரே திருப்திப்படுத்தும் கொள்கை, நீங்களும் உங்கள் அமைச்சர்களும் சீனர்களைத் திருப்திப்படுத்துவதுதான். இன்னும் நீங்கள் சீனாவை ஊடுருவிகள் என அழைக்க மறுக்கிறீர்கள். நீங்கள் ஒருவர் கூட ஊடுருவவில்லை எனக்கூறி கல்வான் பள்ளத்தாக்கில் வீர மரணம் அடைந்து 20 வீரர்களை இழிவு படுத்துகிறீர்கள்.

    சீனாவுக்கு க்ளின் சீட் வழங்கி, இந்தியாவின் வழக்கை பழவீனப்படுத்தி, மேலும் போர்க்குணமாக்கியுள்ளனர். ராணுவ கட்டமைப்புகளை அருணாச்சல பிரதேசம், லடாக், உத்தரகாண்ட் எல்லையில் உருவாக்கி தொடர்ந்து பதற்றம் அதிகரித்த நிலையில்தான் உள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களில் மதிப்பு 54.76 சதவீதம் அதிகரித்து, 2023-24-ல் 101 பில்லியன் அமெரிக்க டாலரை கடந்துள்ளது.

    மக்கள் தொகை அடிப்படையில் அரசியலமைப்பு 16-வது பிரிவின்படி எஸ்.சி, எஸ்.டி., ஓபிசி இடஒதுக்கீட்டிற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறீர்கள் என்பது குறித்து விளக்க வேண்டும்.

    உங்கள் கடிதத்தில் மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் பறிக்கப்பட்டு கொடுக்கப்படும் என்று கூறியுள்ளீர்கள். குஜராத்தில் ஏழை தலித் விவசாயிகளிடம் இருந்து மோசடி செய்து பாஜகவுக்கு தேர்தல் பத்திரமாக வழங்கப்பட்ட ரூ.10 கோடியை உங்கள் கட்சி திருப்பி கொடுக்குமாறு இந்தச் சந்தர்ப்பத்தில் கேட்டுக் கொள்கிறேன்.

    முதல் இரண்டு கட்டத் தேர்தல்களில் குறைந்த வாக்காளர்கள் வாக்களித்ததால் நீங்கள் கவலைப்படுகிறீர்கள். உங்கள் கொள்கைகள் அல்லது உங்கள் பிரச்சார உரைகளில் மக்கள் ஆர்வமாக இல்லை என்பதை இது காட்டுகிறது. இது கோடை வெயிலால் அல்ல, உங்களின் கொள்கைகளால் ஏழைகள் வாடுகிறார்கள்.

    உங்கள் தலைவர்களால் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரித்து வருவதைப் பற்றி பேச உங்களுக்கு ஆர்வம் இல்லை.

    வெறுப்புப் பேச்சுக்களுக்குப் பதிலாக, கடந்த பத்து வருடங்களில் உங்கள் அரசாங்கத்தின் செயல்பாடுகளுக்கு வாக்குஅளிக்கும்படி கேட்பது சிறந்ததாக இருக்கும். தேர்தல் முடிந்ததும், தவிர்க்க முடியாத தோல்வியைத் தவிர்க்கும் வகையில் மக்களைப் பிளவுபடுத்தும் மற்றும் வகுப்புவாதப் பேச்சுக்களில் ஈடுபட்ட பொய்கள் நிறைந்த பிரதமராக மட்டுமே மக்கள் உங்களை நினைவு கூர்வார்கள்.

    இவ்வாறு மல்லிகார்ஜூன கார்கே அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    • தபாஸ் ராய் உண்மையான தலைவர். அவருடைய கதவு கட்சியின் தொண்டர்கள் மற்றும் மக்களுக்காக எப்போதும் திறந்தே இருக்கும்.
    • பல தசாப்தங்களாக அவரை எனக்குத் தெரியும். துரதிருஷ்டவசமாக அவரது வழி தற்போது மாறுபட்டுள்ளது.

    திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் குணால் கோஷ். இவர் பா.ஜனதா வேட்பாளருடன் மேடையில் தோன்றியதுடன், அவரை பாராட்டி பேசியுள்ளார். இதனால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி குணால் கோஷை மாநில பொதுச் செயலாளர் பதவியில் இருந்து அதிரடியாக நீக்கியுளள்து.

    கட்சியின் கொள்கைக்கு எதிராக கருத்து தெரிவித்ததால் நீக்கப்பட்டுள்ளதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

    கட்சியின் அடுத்த தலைமுறை தலைவர்களில் ஒருவராக கருதப்பட்ட குணால் கோஷ், கடந்த மாதம் செய்தி தொடர்பாளர் மற்றும் மாநில பொதுச் செயலாளர் பதவிகளை ராஜினாமா செய்ய விருப்பும் தெரிவித்திருந்தார்.

    திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அவருடைய செய்தி தொடர்பாளர் பதவிக்கான ராஜினாமாவை ஏற்றுக் கொண்டது. மற்ற பதவிகளில் நீடிக்க கேட்டுக் கொண்டது.

    இருந்த போதிலும் தொடர்ந்து அறிக்கை வெளியிட்டுக் கொண்டிருந்தார். அவரது அறிக்கைக்கும் கட்சிக்கும் தொடர்பு இல்லை என திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தெரிவித்திருந்தது.

    இந்த நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் கொல்கத்தாவின் வடக்கு தொகுதியின் சுதிப் பந்தோபாத்யாய் பேரணியில் குணால் கோஷ் கலந்து கொள்ளவில்லை. ஆனால், பா.ஜனதா வேட்பாளர் தபாஸ் ராய் நடத்திய ரத்த தானம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

    இந்த நிகழ்ச்சியில் குணால் கோஷ் பேசும்போது "தபாஸ் ராய் உண்மையான தலைவர். அவருடைய கதவு கட்சியின் தொண்டர்கள் மற்றும் மக்களுக்காக எப்போதும் திறந்தே இருக்கும். பல தசாப்தங்களாக அவரை எனக்குத் தெரியும். துரதிருஷ்டவசமாக அவரது வழி தற்போது மாறுபட்டுள்ளது.

    தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடைபெறும் என்றும், பதவியை தக்கவைக்க எந்த விதமான நேர்மையற்ற வழிமுறைகளும் பயன்படுத்தப்பட மாட்டாது என்றும் நான் நம்புகிறேன். மக்கள் அவர்களுடைய வாக்குகளை சுதந்திரமாக வாக்களிக்கட்டும்" எனக் கூறியிருந்தார்.

    இந்த நிலையில்தான் மாநில பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

    • மதம் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க காங்கிரஸ் முடிவு என பிரதமர் மோடி புகார்.
    • பிரதமர் மோடியின் குற்றச்சாட்டை காங்கிரஸ் தொடர்ந்து மறுத்து வருகிறது.

    கர்நாடகா மாநிலத்தில் இஸ்லாமியர்கள் ஓபிசி இடஒதுக்கீட்டில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதன்மூலமாக மத அடிப்படையில் காங்கிரஸ் கட்சி இடஒதுக்கிடு வழங்கியுள்ளது. எஸ்.சி, எஸ்டி, ஓபிசி இடஒதுக்கீட்டு இடங்களை முஸ்லிம்களுக்கு வழங்குகிறது. இதை நாடு முழுவதும் செயல்படுத்த காங்கிரஸ் கட்சி விரும்புகிறது. இதை ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன் என பிரதமர் மோடி தெரிவித்து வருகிறார்.

    ஆனால், மத அடிப்படையில் இடஒதுக்கீடு என்ற பேச்சுக்கே இடமில்லை என காங்கிரஸ் தெரிவித்து வருகிறது.

    இந்த நிலையில் பிரதமர் மோடி இன்று குஜராத் மாநிலம் பனாஸ்கந்தா என்ற இடத்தில் நடத்த தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசினார்.

    அப்போது பிரதமர் மோடி கூறியதாவது:-

    காங்கிரஸ் கட்சி, அதன் கூட்டணி கட்சிகள் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை தவறாக பயன்படுத்தமாட்டோம் அல்லது அரசியலைப்போடு விளையாடமாட்டோம் அல்லது மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கமாட்டோம் என அறிவிக்க வேண்டும் என்பதில் காங்கிரஸ் கட்சியின் இளவரசருக்கு (ராகுல் காந்தி) சவால் விடுகிறேன்.

    மதம் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க மாட்டோம் என காங்கிரஸ் எழுத்துப்பூர்வமாக அளிக்க வேண்டும். இது மோடி என்பதை காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கவனமாக கேட்க வேண்டும். நான் உயிரோடு இருக்கும் வரை, அரசியலமைப்பு பெயரில் இடஒதுக்கீடு் விளையாட்டை விளையாட நான் அனுமதிக்கமாட்டேன்.

    இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

    • கிழக்கு டெல்லி, மேற்கு டெல்லி மக்களவை தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளர்களை ஆதரித்து ரோடு ஷோ மேற்கொண்டார்.
    • குஜராத்தில் இரண்டு இடங்களில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடுகிறது.

    அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனால் மக்களவை தேர்தலில் அவரால் பிரசாரம் மேற்கொள்ள முடியவில்லை. அவரது மனைவி சுனிதா, டெல்லி மாநில அமைச்சர்களுக்கு கெஜ்ரிவால் வழங்கும் ஆலோசனைகள் தெரிவித்து வருகிறார். இந்த நிலையில்தான் டெல்லி, குஜராத், அரியானா, பஞ்சாப் மாநிலங்களில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்வார் என ஆம் ஆத்மி கட்சி தெரிவித்திருந்தது.

    இந்த நிலையில் நாளை குஜராத் மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார். அம்மாநிலத்தில் பரூச் மற்றும் பவ்னாநகர் ஆகிய இடங்களில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடுகிறது. இந்த இரண்டு வேட்பாளர்களையும் ஆதரித்து ரோடு ஷோ நடத்துகிறார்.

    டெல்லியில் உள்ள கிழக்கு டெல்லி, மேற்கு டெல்லி மாநிலங்களவை தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளர்களை ஆதரித்து ரோடு ஷோ மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    டெல்லி ராம்லீலா ஜந்தர் மந்தரில் அரவிந்த் கெஜ்ரிவால் கைதை கண்டித்து மாபெரும் கண்டன கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, கார்கே உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் சுனிதா கெஜ்ரிவாலும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • வானிலை காரணமாக தேர்தலை ஒத்தி வைக்க வேண்டும் என பா.ஜனதா உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தல்.
    • மெகபூபா முப்தி உள்பட 21 பேர் போட்டியிடுகிறார்கள்.

    ஜம்மு-காஷ்மீர் அனந்த்நாக்-ரஜோரி மக்களவை தொகுதிக்கு மே 7-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    மோசமான வானிலை காரணமாக தேர்தலை ஒத்தி வைக்க வேண்டும் என பா.ஜனதா உள்ளிட்ட பல கட்சிகள் வலியுறுத்தின. அதேவேளையில் உமர் அப்துல்லா மற்றும் மெகபூபா முப்தி உள்ளிட்டோர் தேர்தலை ஒத்தி வைக்கக் கூடாது தேர்தல் ஆணையத்திற்கு வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

    இதற்கிடையே ஜம்மு-காஷ்மீர் நிர்வாகத்திடம் இது தொடர்பாக உடனடியாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் கேட்டிருந்தது.

    இந்த நிலையில் அனந்த்நாக்-ரஜோரி மக்களவை தொகுதியில் மே 7-ந்தேதிக்குப் பதிலாக மே 25-ந்தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் மெகபூபா முப்தி போட்டியிடுகிறார். தேசிய மாநாடு கட்சி சார்பில் மியான் அல்டாஃப் போட்டியிடுகிறார். 21 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

    இதனால் அனந்த்நாக்-ரஜோரி தொகுதி 3-ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவில் இருந்து 6-ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

    • பாராளுமன்ற தேர்தல் இந்தியாவில் 7 கட்டங்களாக நடைபெறுகிறது
    • முதல் 2 கட்ட தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்துள்ளது.

    பாராளுமன்ற தேர்தல் இந்தியாவில் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. அதில் முதல் 2 கட்ட தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்துள்ளது.

    ஆனால் இரண்டு கட்ட தேர்தல் நடைபெற்று பல நாட்களாகியும் வாக்குப்பதிவு விபரங்களை தேர்தல் ஆணையம் வெளியிடாமல் இருந்தது.

    தேர்தல் ஆணையத்தின் தாமதத்திற்கு காரணம் என்ன என்று எதிர்க்கட்சிகள் இதற்கு கண்டனம் தெரிவித்து வந்தன.

    இது தொடர்பாக காங்கிரஸ் எம்.பி ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில், "இரண்டு கட்ட வாக்குப்பதிவுகள் நடந்து முடிந்து பல நாட்கள் ஆகியும், வாக்குப்பதிவு விவரங்களை முதன்முறையாக தேர்தல் ஆணையம் வெளியிடவில்லை. கடந்த காலங்களில் வாக்குப்பதிவு நிறைவடைந்து 24 மணி நேரத்திற்குள் இறுதி வாக்குப்பதிவு விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிடும். ஆனால் தற்போது இந்த தாமதத்திற்கு காரணம் என்ன?" என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

    இந்நிலையில் தேர்தல் ஆணையம் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு விபரங்களை வெளியிட்டுள்ளது.

    தேர்தல் ஆணையம் வெளியிட்ட விபரங்களின்படி முதற்கட்ட வாக்குப்பதிவில் 66.14% மற்றும் இரண்டாம் கட்டத்தில் 66.71% வாக்குகள் பதிவாகியிருக்கிறது.

    ×