வயநாடா? ரேபரேலியா? ராகுல் காந்தியின் பதில்...

வயநாடு மற்றும் ரேபரேலி ஆகிய இரண்டு தொகுதிகளிலும் ராகுல் காந்தி வெற்றி பெற்றுள்ளார்.ஒரே தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்தாக வேண்டும்.
வயநாடா? ரேபரேலியா? ராகுல் காந்தியின் பதில்...
Published on

மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. ராகுல் காந்தி வயநாடு மற்றும் ரேபரேலி தொகுதியில் போட்டியிட்டார். இரண்டு தொகுதிகளிலும் ராகுல் காந்தி வெற்றி பெற்றுள்ளார். இரண்டில் ஒரு தொகுதியை விட்டுக்கொடுக்க வேண்டும்.

இதனால் வயநாடு தொகுதியை விட்டுக்கொடுப்பாரா? ரேபரேலி தொகுதியை விட்டுக்கொடுப்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இன்று தேர்தல் முடிவு வெளியான நிலையில், மாலை பத்திரிகையாளர்களை சந்தித்த்தார். அப்போது வயநாடு, ரேபரேலி ஆகிய இரண்டு தொகுதிகளில் எந்த தொகுதியை விட்டுக்கொடுப்பீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு ராகுல் காந்தி "நான் இரண்டு தொகுதியிலும் எம்.பி.யாக இருக்க முடியாது. ஆனால் இரண்டு தொகுதிகளில் ஒன்றை விட்டுகொடுப்பது குறித்து முடிவு எடுக்கவில்லை" எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த 2019-ம் ஆண்டு அமேதி மற்றும் வயநாடு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். காந்தி குடும்பத்திற்கு பாரம்பரியமான அமேதி தொகுதியில் தோல்வியடைந்தார். அதேவேளையில் வயநாடு தொகுதியில் வெற்றி பெற்றார்.

இந்த முறை அமேதி தொகுதியில் இருந்து ரேபரேலி தொகுதிக்கு மாறி அங்கு வெற்றி பெற்றுள்ளார். பாரம்பரிய தொகுதி கைவிட்டபோது கைக்கொடுத்த வயாநாடு தொகுதி எம்.பி.யாக நீடிப்பாரா? அல்லது பாரம்பரிய தொகுதிக்காக வயநாடு தொகுதியை விட்டுக்கொடுப்பாரா? என்பது ராகுல் கையில்தான் உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com