என் மலர்
அமெரிக்கா
- லோயர் மன்ஹாட்டனில் இந்திய திருமண ஊர்வலம் நடைபெற்றது.
- இதில் பங்கேற்ற இந்தியர்கள் வால் ஸ்ட்ரீட் உள்ளிட்ட தெருக்களில் ஊர்வலமாகச் சென்று நடனமாடினர்.
வாஷிங்டன்:
இந்திய கலாசாரத்தில் திருமணங்களுக்கு மிக முக்கிய பங்கு இருக்கிறது. கொண்டாட்டங்கள் அதிகம் நிறைந்த திருமணமாக இருக்கும். மணமகன், மணமகள் ஊர்வலங்களில் ஆட்டம் பாட்டத்திற்கும் ஒரு முக்கியமான இடம் இருக்கும்.
இந்நிலையில், நியூயார்க்கில் நடந்த இந்திய திருமணம் ஒட்டுமொத்த அமெரிக்காவை வியக்க வைத்துள்ளது.
நியூயார்க்கில் புகழ்பெற்ற வால் ஸ்ட்ரீட்டில் இந்த திருமணத்திற்காக ஒரு பிரமாண்ட ஊர்வலம் நடந்தது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகப் பரவிவருகிறது.
லோயர் மன்ஹாட்டனில் நடந்த இந்த மணமகன் திருமண ஊர்வலத்தில் பங்கேற்ற சுமார் 400-க்கும் மேற்பட்டோர் வால் ஸ்ட்ரீட் உள்ளிட்ட தெருக்களில் ஊர்வலமாகச் சென்று நடனமாடினர்.
பாரம்பரிய இந்திய உடை அணிந்திருந்த இவர்கள், டிஜே பாடல் போட உற்சாகமாக நடனமாடிக் கொண்டே சென்றனர். டிஜே ஒரு வண்டியில் அமர்ந்து கொண்டு பாடல்களைப் போட, ஊர்வலத்தில் இருந்த அனைவரும் ஆட்டம் போட்டனர். இந்த ஊர்வலம் வால் ஸ்ட்ரீட்டை இந்தியத் திருமணம் நடக்கும் இடத்தை போலவே மாற்றிவிட்டது.
மணமகன், மணமகளையும் தூக்கி வைத்துக் கொண்டு ஆட்டம் போட்டனர். இதை அங்கிருந்த அமெரிக்கர்கள் வியப்போடு பார்த்தனர். சுமார் 400 பேர் பங்கேற்ற இந்த ஊர்வலத்திற்காக வால் ஸ்ட்ரீட்டே கொஞ்ச நேரம் முடங்கியது என்றால் மிகையல்ல.
- அரசு நிர்வாக செலவுகளை குறைப்பதற்காக டாட்ஜ் என்னும் புதிய துறை உருவாக்கப்பட்டது.
- அதன் செயல் தலைவராக டெஸ்லா நிறுவன அதிபரான எலான் மஸ்க் பொறுப்பு வகித்து வந்தார்.
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்றதை தொடர்ந்து அரசு நிர்வாக செலவுகளை குறைப்பதற்காக 'டாட்ஜ்' என்னும் புதிய துறை உருவாக்கப்பட்டது.
அதன் செயல் தலைவராக உலக பணக்காரர்களில் ஒருவரும், டெஸ்லா நிறுவன அதிபருமான எலான் மஸ்க் பொறுப்பு வகித்து வந்தார். தொடர்ந்து நிர்வாகத்தில் மாற்றங்கள் கொண்டு வரும் விதமாக பல அதிரடி முடிவுகளை மேற்கொண்டார்.
அரசு ஊழியர்கள் பணியை விட்டு நீக்குதல், அரசு செலவுகளைக் குறைத்தல் உள்ளிட்டவற்றில் மஸ்க் தலைமையிலான 'டாட்ஜ்' துறை தீவிரமாக ஈடுபட்டது. இதனால் அரசுக்கு ஒருநாள் செலவில் இருந்து ரூ.34 ஆயிரம் கோடி வரை குறைக்கப்பட்டது.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நிர்வாகத்தில் இருந்து விலகுவதாக தொழிலதிபர் எலான் மஸ்க் அதிரடியாக அறிவித்துள்ளார். ட்ரம்ப் அளித்த பதவியில் பணியாற்ற 130 நாட்கள் மஸ்க் ஒப்புக்கொண்டிருந்த நிலையில் திடீரென அந்த பொறுப்பில் இருந்து அவர் விலகியுக்ள்ளார்.
இது தொடர்பாக எலான் மஸ்க் தனது எக்ஸ் பதிவில், "சிறப்பு அரசாங்க ஊழியர் என்ற எனது பணிக்காலம் முடிவுக்கு வந்துள்ளது; தேவையற்ற செலவினங்களை குறைக்கும் பணியில் ஈடுபட வாய்ப்பளித்த ட்ரம்பிற்கு நன்றி" என்று பதிவிட்டுள்ளார்.
டிரம்பின் புதிய வரி மசோதாவுக்கு எலான் மஸ்க் எதிர்ப்பு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- அதிபர் டிரம்ப் கல்வி, வேலைவாய்ப்பில் அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை அளித்து வருகிறார்.
- அமெரிக்க பல்கலைக்கழகங்களில் ஒவ்வொரு ஆண்டும் 3 லட்சத்துக்கு மேற்பட்ட இந்தியர்கள் சேர்கின்றனர்.
வாஷிங்டன்:
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை அளித்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக, வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் பணியாளர்களுக்கான விசா கட்டுப்பாடுகளை கடுமையாக்கி உள்ளார்.
அமெரிக்க பல்கலைக்கழகங்களில் ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டு மாணவர்கள் சேர்கின்றனர். இதில் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்திய மாணவர்கள்.
இந்நிலையில், வெளிநாட்டு மாணவர்களுக்கான புதிய விசா நேர்காணல்களை நிறுத்திவைக்கும்படி அந்நாட்டு வெளியுறவு மந்திரி மார்கோ ரூபியோ உத்தரவிட்டுள்ளார்.
விசா கோரியுள்ள மாணவர்களின் பேஸ்புக், எக்ஸ், லிங்க்ட்இன், டிக்டாக் சமூக வலைதளங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட உள்ளன. அதில் பயங்கரவாத ஆதரவு மற்றும் யூத எதிர்ப்பு பதிவுகள் காணப்பட்டால், அவர்களின் விசா மறுக்கப்பட வாய்ப்புள்ளது.
- 30 நிமிடங்களுக்குள் ராக்கெட்டுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.
- எரிபொருள் கசிவு காரணமாக ராக்கெட் ஏவுதல் தோல்வியடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்கப் பணக்காரர் எலான் மஸ்க்கிற்குச் சொந்தமான ஸ்பேஸ்எக்ஸின் ஸ்டார்ஷிப் ராக்கெட்டின் ஒன்பதாவது ஏவுதல் தோல்வியடைந்தது.
டெக்சாஸிலிருந்து ஏவப்பட்ட 30 நிமிடங்களுக்குள் ராக்கெட்டுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. அந்த ராக்கெட் இறுதியில் இந்தியப் பெருங்கடலில் விழுந்ததாகக் கூறப்படுகிறது.
எரிபொருள் கசிவு காரணமாக ராக்கெட் ஏவுதல் தோல்வியடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் டான் ஹவுட் இதை உறுதிப்படுத்தியுள்ளார்.
ஸ்டார்ஷிப் என்பது விண்வெளிப் பயணம் முதல் செயற்கைக்கோள் ஏவுதல் வரை பல்வேறு பணிகளை மேற்கொள்ளும் நோக்கத்துடன் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு வரும் ஒரு ராக்கெட் ஆகும்.
முன்னதாக கடந்த ஜனவரியில் நடைபெற்ற முந்தைய ஏழாவது ஸ்டார்ஷிப் ஏவுதல் சோதனையும், மார்ச் 6 அன்று நடைபெற்ற எட்டாவது சோதனையும் தோல்வியடைந்தன.
மார்ச் 6 அன்று எட்டாவது சோதனையின் போது ஸ்டார்ஷிப் தீப்பிடித்து எரிந்ததை அடுத்து அருகிலுள்ள நான்கு விமான நிலையங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. 240 விமானங்கள் பாதிக்கப்பட்டன.
- நான் மட்டும் இல்லையென்றால் ரஷியாவிற்கு நிறையமோசமான விஷயங்கள் நடந்திருக்கும்
- புதின் பைத்தியமாகி விட்டார் என்று டிரம்ப் தெரிவித்தார்
ரஷிய அதிபர் புதின் நெருப்போடு விளையாடுகிறார் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காட்டமாக தெரிவித்துள்ளார்.
தனது சமூக ஊடக பதவியில் டிரம்ப் கூறியதாவது, "நான் மட்டும் இல்லையென்றால் ரஷியாவிற்கு நிறையமோசமான விஷயங்கள் நடந்திருக்கும் என்பதை விளாடிமிர் புடின் உணரவில்லை. நான் சொல்வது மிகவும் மோசமானது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் நெருப்போடு விளையாடுகிறார்" என்று தெரிவித்துள்ளார்.
அண்மையில், பல உக்ரேனிய நகரங்களில் ரஷிய விமானப்படை நடத்திய கடுமையான தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டதை தொடர்ந்து புதின் பைத்தியமாகி விட்டார் என்று டிரம்ப் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பல்வேறு வெளிநாட்டினர் அமெரிக்காவில் தங்கி படித்து வருகின்றனர்.
- நடவடிக்கைக்கு உள்ளாகும் மாணவர்களுக்கு எதிர்காலத்தில் எப்போதும் விசா வழங்கப்படாது.
அமெரிக்காவில் சட்டப்பூர்வமாக சுமார் 4.78 கோடிக்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் பணியாற்றி வருகின்றனர். மேலும் பல்வேறு வெளிநாட்டினர் அமெரிக்காவில் தங்கி படித்து வருகின்றனர்.
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்ற பிறகு அவர்களின் பல்வேறு உரிமைகள், சலுகைகள் பறிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், அமெரிக்காவில் படிக்கும் இந்திய மாணவர்கள் உட்பட வெளிநாட்டு மாணவர்கள் அனைவரும் உரிய தகவல் கொடுக்காமல் இடைநின்றால், மாணவர் விசா ரத்து செய்யப்படும் என்று அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அமெரிக்காவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்கள் படிப்பை பாதியில் நிறுத்தினால், வகுப்புகளை புறக்கணித்தால், அல்லது உங்கள் கல்லூரிக்கு தெரிவிக்காமல் நீங்கள் இடைநின்றால், உங்கள் மாணவர் விசா ரத்து செய்யப்படும். மேலும், நடவடிக்கைக்கு உள்ளாகும் மாணவர்களுக்கு எதிர்காலத்தில் எப்போதும் விசா வழங்கப்படாது. ஆகவே எந்தவொரு பிரச்சினையையும் தவிர்க்க எப்போதும் உங்கள் விசாவின் விதிமுறைகளைப் பின்பற்றி உங்கள் படிப்பை தொடருங்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- அவ்வாறு செய்வது எனது பாக்கியம்.
- ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்காவிற்கு 500 பில்லியன் யூரோ மதிப்புள்ள பொருட்களை ஏற்றுமதி செய்கிறது.
உலக நாடுகள் மீது வரிவிதிப்பை அமல்படுத்தி வரும் அமெரிக்க அதிபர் டிரம்ப் உடைய கவனம் சமீபத்தில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மீது விழுந்தது. ஐரோப்பிய ஒன்றிய பொருட்கள் இறக்குமதிக்கு ஜூன் 1 முதல் 50 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்படும் என்று அறிவித்தார்.
அமெரிக்காவிற்கான ஏற்றுமதியை அதிகரிக்கும் ஒரே குறிக்கோளுடன் உருவாக்கப்பட்ட ஐரோப்பிய ஒன்றியத்துடனான பேச்சுவார்த்தைகள் எந்தப் பலனையும் அளிக்கவில்லை என்றும் டிரம்ப் சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில் இந்த வரிவித்தபை டிரம்ப் தற்காலிகமாக நிறுத்தி உள்ளார். இதுதொடர்பாக அவர் தனக்கு சொந்தமாக ட்ரூத் சோசியல் சமூக ஊடக பதிவில், "ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயனிடமிருந்து இன்று எனக்கு அழைப்பு வந்தது.
வர்த்தகம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் தொடர்பான 50% வரி மீதான ஜூன் 1 ஆம் தேதி காலக்கெடுவை நீட்டிக்கக் கோரினார். ஜூலை 9, 2025 அன்று நீட்டிப்புக்கு நான் ஒப்புக்கொண்டேன். அவ்வாறு செய்வது எனது பாக்கியம்.
பேச்சுவார்த்தைகள் விரைவாக தொடங்கும் என்று ஆணையத் தலைவர் கூறினார். இந்த விஷயத்தில் உங்கள் கவனத்திற்கு நன்றி!" என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்காவிற்கு 500 பில்லியன் யூரோ மதிப்புள்ள பொருட்களை ஏற்றுமதி செய்கிறது. ஜெர்மனி, அயர்லாந்து மற்றும் இத்தாலி ஆகியவை முக்கிய ஏற்றுமதி நாடுகள் ஆகும்.
- எனக்கு புதினை நீண்ட காலமாகத் தெரியும்.
- புதினுக்கு உக்ரைன் முழுவதும் வேண்டும். ஒரு துண்டு வாங்கினால் மட்டும் போதாது.
ரஷிய அதிபர் புதினை டொனால்ட் டிரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார். ரஷியா உக்ரைன் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தி வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிருப்தி அடைந்துள்ளார்.
தனது சமூக ஊடக பதவியில் டிரம்ப் கூறியதாவது, "ரஷியாவின் விளாடிமிர் புதினுடன் எனக்கு எப்போதும் நல்ல உறவு உண்டு, ஆனால் அவருக்கு ஏதோ நடந்துவிட்டது. அவர் முற்றிலும் பைத்தியமாகிவிட்டார்!. அவர் தேவையில்லாமல் நிறைய பேரைக் கொல்கிறார்.
நான் வீரர்களைப் பற்றி மட்டும் பேசவில்லை. எந்த காரணமும் இல்லாமல் ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் உக்ரைனில் உள்ள நகரங்களில் சுடப்படுகின்றன.
அவர் உக்ரைனின் ஒரு பகுதியை மட்டும் விரும்பவில்லை, முழு உக்ரைனையும் விரும்புகிறார் என்று நான் எப்போதும் கூறி வருகிறேன், ஒருவேளை அது சரியாக இருக்கலாம். அது ரஷியாவின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும்! புதின் செய்வது எனக்குப் கொஞ்சம் கூட பிடிக்கவில்லை " என்று தெரிவித்தார்.
மேலும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை பற்றி விமர்சித்த டிரம்ப், "ஜெலென்ஸ்கி பேசும் விதத்தால் தனது நாட்டிற்கு எந்த நன்மையும் செய்யவில்லை. அவரது வாயிலிருந்து வரும் அனைத்தும் பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றன, எனக்கு அது பிடிக்கவில்லை, அதை நிறுத்துவது நல்லது" என்று தெரிவித்தார்.
நேற்று பல உக்ரேனிய நகரங்களில் ரஷிய விமானப்படை நடத்திய கடுமையான தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர்.
உக்ரைன் விமானப்படை செய்தித் தொடர்பாளர் யூரி இஹ்னாட் கூறுகையில், மூன்று ஆண்டுகளுக்கும் மேலான போரில் இது மிகப்பெரிய ஒரு நாள் தாக்குதல் என்று கூறினார்.
ரஷியா 298 ட்ரோன்களைப் பயன்படுத்தியது, அதில் 69 ஏவுகணைகள் மற்றும் ஈரானில் தயாரிக்கப்பட்ட ஷாஹித் ட்ரோன்கள் அடங்கும் என்றும் அவர் கூறினார்.
- பாகிஸ்தான் தனது இருப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இந்தியாவை கருதுவதாக அறிக்கை கூறுகிறது.
- வெளிநாடுகளில் இருந்து அதிக அளவிலான பேரழிவு ஆயுதங்கள் (WMD) தொடர்பான பொருட்களை வாங்குகிறது.
இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு, பாகிஸ்தானின் பாதுகாப்பு செயல்பாடுகள் அதிகரித்துள்ளன. அமெரிக்க புலனாய்வு அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் இது தெரியவந்துள்ளது.
அமெரிக்க பாதுகாப்பு புலனாய்வு அமைப்பு (DIA), மே 25, 2025 அன்று வெளியிடப்பட்ட '2025 உலகளாவிய அச்சுறுத்தல் மதிப்பீடு' என்ற வருடாந்திர அறிக்கையில் பாகிஸ்தானைப் பற்றிய பல முக்கியமான விஷயங்களை வெளிப்படுத்தியுள்ளது.
இந்த அறிக்கை அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் ஆயுத சேவைகள் தொடர்பான துணைக்குழுவிற்காக தயாரிக்கப்பட்டது.
இது பாகிஸ்தானின் இராணுவ நடவடிக்கைகள், பயங்கரவாதம் மற்றும் அணு ஆயுதங்கள் குறித்து விரிவாக விவாதிக்கிறது.
அறிக்கையின்படி, 2025 ஆம் ஆண்டில் பாகிஸ்தான் ராணுவத்தின் முதன்மையான முன்னுரிமைகள் அண்டை நாடுகளுடனான எல்லை மோதல்கள், தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (TTP) மற்றும் பலூச் தேசியவாத போராளிகளின் அதிகரித்து வரும் தாக்குதல்கள், பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டம் மற்றும் அணு ஆயுதங்களை நவீனமயமாக்குதல் ஆகியவை ஆகும்.
கடந்த ஒரு வருடமாக, பாகிஸ்தான் பலூச் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக தினமும் நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால் நிலைமை மேம்படுவதற்குப் பதிலாக மோசமாகிக் கொண்டே வருகிறது.
பாகிஸ்தான் தனது இருப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இந்தியாவை கருதுவதாக அறிக்கை கூறுகிறது. இந்தியாவின் இராணுவ சக்தியை எதிர்கொள்ள, பாகிஸ்தான் தனது இராணுவத்தை நவீனமயமாக்கி வருகிறது, மேலும் போர்க்களத்தில் பயன்படுத்த அணு ஆயுதங்களை உருவாக்குவதும் இதில் அடங்கும்.

பாகிஸ்தான் தனது அணு ஆயுதங்களை தொடர்ந்து வலுப்படுத்தி வருவதுடன், அதன் அணுசக்தி பொருட்களின் பாதுகாப்பு மற்றும் கட்டளை அமைப்பையும் மேம்படுத்தி வருகிறது.
இதற்காக, வெளிநாட்டு சப்ளையர்கள் மற்றும் இடைத்தரகர்களிடமிருந்து அதிக அளவிலான பேரழிவு ஆயுதங்கள் (WMD) தொடர்பான பொருட்களை வாங்குகிறது.
இந்தப் பொருள் பெரும்பாலும் சீனாவிலிருந்து வந்து ஹாங்காங், சிங்கப்பூர், துருக்கி மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வழியாக பாகிஸ்தானை அடைகிறது.
பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் இடையிலான இராணுவ மற்றும் பொருளாதார ஒத்துழைப்பும் அதிகரித்து வருவதாக அறிக்கை கூறியுள்ளது.

இரு நாடுகளும் ஒவ்வொரு ஆண்டும் பல கூட்டு இராணுவப் பயிற்சிகளை நடத்துகின்றன. இரு நாடுகளும் நவம்பர் 2024 இல் ஒரு புதிய விமானப் பயிற்சியையும் நடத்தின.
பிராந்திய மட்டத்தில் தனது நிலையை வலுப்படுத்த பாகிஸ்தான் தொடர்ந்து அணுசக்தியை அதிகரிக்க முயற்சிப்பதாக அறிக்கை கூறியுள்ளது.
ஆனால் பயங்கரவாதம் மற்றும் எல்லைப் பதட்டங்கள் காரணமாக, அதன் உள் மற்றும் வெளிப்புற பாதுகாப்பு இரண்டும் ஆபத்தில் உள்ளன. இந்த நிலைமை பாகிஸ்தானுக்கு மட்டுமல்ல, முழு பிராந்தியத்தின் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கும் பெரும் அச்சுறுத்தலாக மாறி வருகிறது.
- அனைத்து நாடுகளுக்கும் எதிராக வரி விதிப்பை அறிவிப்பை வெளியிட்டார்.
- அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும் ஐபோன்கள் அமெரிக்காவிலேயே, தயாரிக்கப்பட வேண்டும்.
அமெரிக்க அதிபராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப், அமெரிக்க பொருட்களுக்கு வரி விதிக்கும் நாடுகளுக்கு எதிராக பரஸ்பர வரி விதிக்கப்படும் எனத் தெரிவித்தார்.
அதன்படி அனைத்து நாடுகளுக்கும் எதிராக வரி விதிப்பை அறிவிப்பை வெளியிட்டார். சீனா மட்டும் பதிலடி கொடுக்கும் வகையில் பதில் வரி விதிப்பை வெளியிட்டது. மற்ற நாடுகள் ஆலோசனை நடத்தி வந்தன.
அதனைத்தொடர்ந்து 90 நாட்களுக்கு வரி விதிப்பை டொனால்டு டிரம்ப் நிறுத்தி வைத்தார். ஒவ்வொரு நாடுகளடன் வரி விதிப்பு குறித்து அமெரிக்கா பேச்சுவார்தை நடத்தி வருகிறது.
இதற்கிடையே, இந்தியாவில் ஐபோன்களை தயாரிக்காதீர், அப்படி தயாரித்தால் 25% வரி விதிக்க நேரிடும் என ஆப்பிள் நிறுவனத்துக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த சில நாட்களுக்கு முன்பு மிரட்டல் விடுத்திருந்தார்.
இதுகுறித்து மேலும் கூறிய அவர்," இந்தியாவில் ஐபோன்களை தயாரிக்காதீர், அப்படி தயாரித்தால் 25% வரி விதிக்க நேரிடும். இந்தியாவில் ஐபோன் உற்பத்தியை குறைத்து, அமெரிக்காவில் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். இந்தியாவிலோ அல்லது வேறு எந்த நாட்டிலோ ஐபோன்கள் தயாரிக்கப்பட்டு அமெரிக்காவுக்கு அனுப்புவதை விரும்பவில்லை.
அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும் ஐபோன்கள் அமெரிக்காவிலேயே, தயாரிக்கப்பட வேண்டும்" என்று தெரிவித்தார்.
இந்நிலையில், ஐபோன் நிறுவனத்தை தொடர்ந்து அதன் முக்கிய தொழில் போட்டியாளரான சாம்சங் நிறுவனத்திற்கும் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து டிரம்ப், வெள்ளை மாளிகையில் நிருபர்களிடம் பேசுகையில், "வரி விதிப்பு ஆப்பிள் நிறுவனத்திற்கு மட்டுமல்ல, சாம்சங் மற்றும் இதுபோன்ற பொருட்களை உற்பத்தி செய்யும் எந்த நிறுவனத்திற்கும் பொருந்தும். இல்லையெனில், அது நியாயமாக இருக்காது. அவர்கள் இங்கு தொழிற்சாலை அமைத்தால், வரி இருக்காது. இந்த நடவடிக்கை அமெரிக்காவில் உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்கம் கொண்டது" என்று கூறினார்.
சாம்சங் நிறுவனம் தனது ஸ்மார்ட்போன்களை முக்கியமாக வியட்நாம், இந்தியா, தென் கொரியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் உற்பத்தி செய்கிறது. இந்த வரி விதிப்பு, குறிப்பாக வியட்நாமில் உற்பத்தி செய்யப்படும் சாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கு 46% வரி விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
- வெளிநாட்டு மாணவர்களை பல்கலைக்கழகத்தில் சேர்ப்பதற்கு டிரம்ப் நிர்வாகம் தடை விதித்தது.
- ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டில் இருந்து பலர் படித்து வருகின்றனர்.
அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகம் அதிபர் டிரம்புக்கு எதிராக செயல்படுவதால் தொடர்ந்து இன்னல்களுக்கு உள்ளாகி வருகிறது. 389 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த பல்கலைக்கழகம் உலக அளவில் பிரபலமான ஒன்றாக உள்ளது.
வளாகத்தில் நடக்கும் மாணவர் போராட்டங்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று டிரம்ப் பல்கலைக்கழகங்களைக் கோரியிருந்தார். ஆனால் ஹார்வர்டு பல்கலைக்கழகம் அதை ஏற்க மறுத்தது. எனவே அதற்கு சேர வேண்டிய 2.2 பில்லியன் டாலர் மானியங்களையும் 60 மில்லியன் டாலர் ஒப்பந்தங்களையும் டிரம்ப் தடாலடியாக நிறுத்தினார்.
இந்த சூழலில், வெளிநாட்டு மாணவர்களை பல்கலைக்கழகத்தில் சேர்ப்பதற்கு டிரம்ப் நிர்வாகம் தடை விதித்தது. ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டில் இருந்து ஆண்டுக்கு சுமார் 800 பேர் சேர்ந்து பயின்று வரும் நிலையில், டிரம்ப் அரசின் இந்த நடவடிக்கை பல்கலைக்கழகத்திற்கு நெருக்கடியாக அமைந்தது.
இந்த உத்தரவை எதிர்த்து ஹார்வர்டு பல்கலைக்கழகம் நீதிமன்றத்தை நாடியது. இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதிமன்றம் டிரம்பின் உத்தரவை தாற்காலிகமாக நிறுத்தி வைத்தது. இந்த உத்தரவு ஹார்வர்டில் படிக்கும் ஆயிரக்கணக்கான வெளிநாட்டு மாணவர்களுக்குத் தற்காலிக ஆறுதலை அளித்துள்ளது.
இந்நிலையில், பெல்ஜியம் நாட்டின் இளவரசியும், வருங்கால ராணியுமான எலிசபெத் (வயது 23) ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். அவர் முதலாம் ஆண்டு படிப்பை முடித்துள்ளார். தற்போது டிரம்ப் நிர்வாகத்தின் உத்தரவால் இளவரசி எலிசபெத் தனது படிப்பை தொடருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பெல்ஜிய அரச அரண்மனையின் செய்தித் தொடர்பாளர் லோர் வாண்டூர்ன் கூறும்போது, "இளவரசி எலிசபெத் தனது முதலாம் ஆண்டு படிப்பை முடித்துள்ளார். டிரம்ப் நிர்வாகத்தின் முடிவின் தாக்கம் வரும் நாட்களில் தெளிவாகும். தற்போது நிலைமையை ஆராய்ந்து வருகிறோம்" என்று தெரிவித்தார்.
- ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்காவிற்கு 500 பில்லியன் யூரோ மதிப்புள்ள பொருட்களை ஏற்றுமதி செய்கிறது.
- ஜெர்மனி, அயர்லாந்து மற்றும் இத்தாலி ஆகியவை முக்கிய ஏற்றுமதி நாடுகள் ஆகும்.
வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறிய கதையாய் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வரிப் போரை மீண்டும் தீவிரப்படுத்தி உள்ளனர்.
கடந்த ஏப்ரல் தொடக்கத்தில் இந்தியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு வரி உயர்வை டிரம்ப் அறிவித்தார். இதை எதிர்த்த சீனாவுக்கு வரி 145 சதவீதம் வரை உயர்த்தப்பட்டது. மற்ற நாடுகளுக்கான வரி உயர்வு தாற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதற்கிடையே சீனா - அமெரிக்கா பேச்சுவார்த்தை நிலைமையை சற்று சுமூகமாகியது.
இந்நிலையில் ஜூன் 1 முதல் ஐரோப்பிய ஒன்றிய இறக்குமதிகள் மீது 50 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் அறிவித்தார்.
தனது சமூக ஊடக பதவில், அமெரிக்காவிற்கான ஏற்றுமதியை அதிகரிக்கும் ஒரே குறிக்கோளுடன் உருவாக்கப்பட்ட ஐரோப்பிய ஒன்றியத்துடனான பேச்சுவார்த்தைகள் எந்தப் பலனையும் அளிக்கவில்லை என்றும் டிரம்ப் சுட்டிக்காட்டினார்.
டிரம்பின் 50 சதவீத வரி அச்சுறுத்தலுக்கு ஐரோப்பிய ஒன்றியம் பதிலளிக்கவில்லை. ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்காவிற்கு 500 பில்லியன் யூரோ மதிப்புள்ள பொருட்களை ஏற்றுமதி செய்கிறது. ஜெர்மனி, அயர்லாந்து மற்றும் இத்தாலி ஆகியவை முக்கிய ஏற்றுமதி நாடுகள் ஆகும்.
முன்னதாக "இந்தியாவில் ஐபோன்களை தயாரிக்காதீர், அப்படி தயாரித்தால் 25% வரி விதிக்க நேரிடும். இந்தியாவில் ஐபோன் உற்பத்தியை குறைத்து, அமெரிக்காவில் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்" என ஆப்பிள் நிறுவனத்தை டிரம்ப் மிரட்டியது குறிப்பிடத்தக்கது.






