என் மலர்tooltip icon

    உலகம்

    • உக்ரைன்-ரஷியா இடையே இரண்டு ஆண்டுகளாக சண்டை நடைபெற்று வருகிறது.
    • உக்ரைன் எல்லைப் பகுதியில் பெரும்பகுதியை ரஷியா கைப்பற்றியுள்ளது.

    ரஷியா கடந்த 2022-ம் ஆண்டு உக்ரைன் மீது திடீரென படையெடுத்தது. இரண்டு ஆண்டுகளாகியும் இன்னும் சண்டை முடிவுக்கு வரவில்லை. உக்ரைன் நாட்டின் கிழக்கு மற்றும் தெற்கு பகுதியில் கால்வாசி பகுதிகளை ரஷியா பிடித்துள்ளதாக கூறப்படுகிறது.

    உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உக்ரைனில் அமைதி திரும்பவும், உக்ரைன்-ரஷியா இடையே போர் நிறுத்தம் ஏற்படவும் உலகத் தலைவர்களின் உதவிகளை நாடி வருகிறார்.

    அவ்வப்போது ரஷிய அதிபர் போர் நிறுத்தத்திற்கான ஒரு பரிந்துரையை முன்மொழிவார். அதை உக்ரைன் ஏற்றுக்கொள்ளாது. உக்ரைன் மண்ணில் இருந்து ரஷியப் படைகள் வெளியேறும்வரை புதின் உடன் நேரடி பேச்சு கிடையாது என்பதில் ஜெலன்ஸ்கி திட்டவட்டமாக உள்ளார்.

    அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளில் வழங்கு ஆயுத உதவிகளை வைத்து ரஷியாவை உக்ரைன் எதிர்கொண்டு வருகிறது. இந்த நிலையில்தான் உக்ரைனில் அமைதி நிலவ ஒரு முடிவு எடுக்கப்பட வேண்டும் என உலக நாடுகள் முடிவு செய்துள்ளன. இதற்காக நாளை சுவிட்சர்லாந்தில் ஒன்றுகூடுகின்றனர்.

    இதில் ஈகுவேடார், ஐவரி கோஸ்ட், கென்யா, சோமாலியா அதிபர்கள் கலநது கொள்ள இருக்கிறார்கள். அதேபோன்று ஐப்பிரோப்பியாவின் பெரும்பாலான நாட்டின் அதிபர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்கக்ப்படுகிறது.

    அமெரிக்கா சார்பில் துணை அதிபர் கமலா ஹாரிஸ் கலந்து கொள்ள இருக்கிறார். துருக்கி, சவுதி அரேபியா வெளியுறவுத்துறை மந்திரிகளை அனுப்புகிறது. இந்தியா, தென்ஆப்பிரிக்கா பொன்ற நாடுகள் அதிகாரிகளை பிரதிநிதியாக அனுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த கூட்டத்தில் ரஷியா கலந்து கொள்ளவில்லை. அமைதி பேச்சுவார்த்தையில் ரஷியா மற்றும் உக்ரைன் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டியது அவசியம் என சீனா தெரிவித்துள்ளது.

    என்னவாக இருந்தாலும் உக்ரைன் நாட்டில் அமைதி நிலவ மற்றும் போர் நிறுத்தம் ஏற்பட இந்த கூட்டத்தில் முதல்அடி எடுத்து வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ரஷிய அதிபர் புதின் நேற்று, "உக்ரைன் நேட்டோவில் இணையும் திட்டத்தை கைவிட்டால், 2022-ல் தங்களுடைய பகுதியாக அறிவிக்கப்பட்ட இடத்தில் இருந்து உக்ரைன் துருப்புகளை திரும்பப் பெற்றால் உடனடியாக போர் நிறுத்தம் செய்ய தாயர்" எனத் தெரிவித்துள்ளார்.

    அதேவேளையில் புதினின் போர் நிறுத்த ஒப்பந்தத்தை நம்ப முடியாது என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

    • அட்மாஸ்ஃபியர் எனப்படும் ரைட் திடீரென செயல்படாமல் போனதால் அதிர்ச்சி.
    • மறு அறிவிப்பு வரும் வரை ரைடு செயல்படாது என அறிவிப்பு.

    அமெரிக்காவில் உள்ள ஓரிகானின் மாகாணத்தில் அமைந்துள்ள போர்ட்லேண்ட் நகரத்தில் நூற்றாண்டு பழமையான பொழுதுபோக்கு பூங்கா உள்ளது.

    கோடை விடுமுறைக்காக பூங்கா நேற்று முதல் திறக்கப்பட்டது. இங்கு, ஏராளமான மக்கள் வந்து இங்குள்ள ரைடுகளில் தங்களின் நேரத்தை போக்கி வந்தனர்.

    இந்நிலையில், AtmosFEAR எனப்படும் ரைடர் ஒன்றில் ஏறிய மக்கள் சுமார் அரை மணி நேரம் தலைகீழாக தொங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    அட்மாஸ்ஃபியர் எனப்படும் ரைட் திடீரென செயல்படாமல் போனதால், அதில் இருந்த மக்கள் கீழே இறங்க முடியாமல் தவித்தனர்.

    பிறகு, இதுகுறித்து தகவல் தெரியவந்த நிலையில் அவசரகால பணியாளர்கள் ரைடரை சரிசெய்து அதில் இருந்து 28 பேரையும் பத்திரமாக மீட்டனர்.

    இதுகுறித்து கேளிக்கை பூங்காவில் உள்ள அதிகாரிகளின் அறிக்கையின்படி, "அவசரகால குழுவினர் அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட 25 நிமிடங்களுக்குப் பிறகு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த சம்பவத்தில் காயங்கள் எதுவும் ஏற்பட்டதாக தகவல் இல்லை. இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 28 பேருக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது" என்றது.

    இந்த ரைடு கடந்த 2021ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. மேலும், இதுபோன்ற சம்பவம் இதுவரை இங்கு நடந்ததில்லை என்று பூங்கா தரப்பில் தெரிவித்துள்ளது. மேலும், மறு அறிவிப்பு வரும் வரை ரைடு செயல்படாது என்றும் தெரிவித்தது.

    இருப்பினும், ரைடில் தலைகீழாக தொங்கும் மக்களின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • இந்த அறிவிப்பு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
    • பணவீக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் மக்களுக்கு பயனளிக்கும்.

    பணவீக்கத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தானில் மக்களுக்கு பெரும் நிவாரணம் அளிக்கும் வகையில், பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பெட்ரோல் மற்றும் அதிவேக டீசல் (எச்எஸ்டி) விலையை லிட்டருக்கு ரூ.10.20 மற்றும் ரூ.2.33 என குறைத்து அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

    இந்த அறிவிப்பு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன் மூலம், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.258.16 ஆகவும், எச்எஸ்டி விலை லிட்டருக்கு ரூ.267.89 ஆகவும் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    வழக்கமாக ஒவ்வொரு 15 நாட்களுக்கும் எரிபொருள் விலையை மதிப்பாய்வு செய்யும் அந்நாட்டு நிதிப் பிரிவு, சமீபத்திய விலைக் குறைப்புகளுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு, அடுத்த பதினைந்து நாட்களுக்கும் இந்த புதிய விலைகள் பொருந்தும் என்று கூறியது.

    சர்வதேச சந்தையில் ஏற்படும் விலை மாறுபாட்டின் அடிப்படையில், எண்ணெய் மற்றும் எரிவாயு ஒழுங்குமுறை ஆணையம் (ஓக்ரா) நுகர்வோர் விலைகளை நிர்ணயித்துள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பெட்ரோலியத்தின் விலையை குறைக்கும் நடவடிக்கை இரட்டை இலக்க பணவீக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் மக்களுக்கு பயனளிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதால், கடந்த ஒன்றரை மாதத்தில் தொடர்ந்து 3 முறை எரிபொருள் விலை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இத்தாலி பிரதமர் மெலோனியுடன், பிரதமர் மோடி எடுத்துக்கொண்ட, 'செல்பி' பெரும் வரவேற்பை பெற்றது.
    • மெலோடி என்ற வார்த்தையும் ட்ரெண்டானது.

    50-வது ஜி7 உச்சிமாநாடு இத்தாலியின் அபுலியாவில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்

    இந்த மாநாட்டின் போது பிரதமர் நரேந்திர மோடியுடன் இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியது.

    இந்நிலையில், மோடியுடன் எடுத்த செல்ஃபி வீடியோவை இத்தாலி பிரதமர் மெலோனி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    அதில், 'மெலோடி டீமிடம் இருந்து ஹலோ' ( Hello from the Melodi team ) என்று கூற பின்னால் பிரதமர் மோடி சிரித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார்.

    இதற்கு முன்னதாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இத்தாலி பிரதமர் மெலோனியுடன், பிரதமர் மோடி எடுத்துக்கொண்ட, 'செல்ஃபி' பெரும் வரவேற்பை பெற்றது. அப்போது இருவரின் பெயரையும் குறிக்கும் வகையில், 'மெலோடி' என்ற வார்த்தையை மெலோனி பயன்படுத்தினார். அப்போது மெலோடி என்ற வார்த்தையும் ட்ரெண்டானது.

    • ஆன்லைனில் இந்த கருவி எளிதில் கிடைப்பதால் இதனை பயன்படுத்தி ஏமாற்றி வந்துள்ளனர்.
    • பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள் வங்கியின் சொத்துகள் மற்றும் முதலீடு நிர்வாகப் பிரிவில் வேலை செய்துள்ளனர்.

    தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நிறுவனத்தை ஏமாற்றிய ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது ஒரு வங்கி நிறுவனம். அதுகுறித்து பார்ப்போம்...

    அமெரிக்காவின் மூன்றாவது பெரிய வங்கி Wells Fargo. இந்த வங்கியின் நிறுவனத்தில் பணிபுரியும் சில ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து பணிபுரியும் வசதியை அளித்திருந்தது. இந்த நிலையில், இந்த வங்கி அண்மையில் பத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்தது.


    Mouse Jiggling கருவி மூலம் கணினியின் திரையில் Mouse போல் செயல்படுவதால், பணியாளர் கணினியை பயன்படுத்தாவிட்டாலும் கணினியின் திரை off ஆகாது. ஆன்லைனில் இந்த கருவி எளிதில் கிடைப்பதால் இதனை பயன்படுத்தி ஏமாற்றி வந்துள்ளனர். இதனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலைபார்த்தார்களா அல்லது அலுவலகத்தில் பணியாற்றினார்களா என்ற விவரம் தெரியவில்லை. மேலும் பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள் வங்கியின் சொத்துகள் மற்றும் முதலீடு நிர்வாகப் பிரிவில் வேலை செய்துள்ளனர்.

    ஊழியர்கள் பணிநீக்கம் குறித்து வங்கியின் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது, Wells Fargo வங்கி ஊழியர்கள் பணித்தரத்தில் உயர்ந்த கட்டுப்பாடுகளை கடைப்பிடிப்பதாகவும் எந்தவொரு ஒழுங்கீனத்தையும் ஏற்க முடியாது என்றும் கூறியுள்ளார்.

    • உக்ரைனின் சில பகுதிகளை ரஷிய படைகள் கைப்பற்றின.
    • உக்ரைன் தனது படைகளை திரும்ப பெற வேண்டும்.

    கிவ்:

    உக்ரைன் மீது ரஷியா கடந்த 2022-ம் ஆண்டு போரை தொடங்கியது. நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைய முயற்சித்ததால் அந்நாடு மீது ரஷியா போர் தொடுத்தது. இப்போர் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நீடித்துக் கொண்டிருக்கிறது.

    இதில் உக்ரைனின் சில பகுதிகளை ரஷிய படைகள் கைப்பற்றின. இதற்கிடையே உக்ரைனுடன் போரை நிறுத்திவிட்டு பேச்சு வார்த்தை நடத்த ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் இரண்டு நிபந்தனைகளை விதித்துள்ளார்.

    ஆக்கிரமிக்கப்பட்ட 4 பிராந்தியங்களில் இருந்து உக்ரைன் தனது படைகளை திரும்ப பெற வேண்டும். நேட்டோவில் சேருவதற்கான திட்டத்தை கைவிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

    இந்த நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டால் உடனடியாக போரை நிறுத்துவதுடன், அமைதி பேச்சு வார்த்தையில் ஈடுபட ரஷியா தயாராக இருக்கிறது என்று புதின் தெரிவித்தார்.


    இந்த நிலையில் புதினின் போர்நிறுத்த ஒப்பந்தத்தை நம்ப முடியாது என்று உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்தார்.

    இதுகுறித்து அவர் கூறும் போது, புதின் தெரிவித்துள்ள போர்நிறுத்த கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டாலும் அவர் தனது ராணுவ தாக்குதலை நிறுத்த மாட்டார். அவரது போர்நிறுத்த ஒப்பந்தம் ஒரு இறுதி எச்சரிக்கை ஆகும். இந்த ஒப்பந்தத்தை நம்ப முடியாது. ஹிட்லர் செய்த அதே விஷயத்தை புதின் செய்கிறார். இதனால் அவர் கூறும் யோசனையை நாம் நம்பக்கூடாது என்றார்.

    இதற்கிடையே அமெரிக்க பாதுகாப்புத்துறை மந்திரி லாயிட் ஆஸ்டின் கூறும் போது, உக்ரைன் மீதான ரஷியாவின் அநியாயமான படையெடுப்பால் அவர்களது நூறாயிரக்கணக்கான துருப்புக்கள் கொல்லப்பட்டனர்.

    போரை முடிவுக்கு கொண்டுவர புதின் விரும்பினால் உக்ரேனிய இறையாண்மையை விட்டு வெளியேறுமாறு நாங்கள் அவருக்கு அழைப்பு விடுக்கிறோம். அமைதியைக் கொண்டுவர உக்ரைன் என்ன செய்ய வேண்டும் என்று உத்தரவிட அவர் எந்த நிலையிலும் இல்லை என்றார்.

    • தனக்கு பிடித்த வேலை செய்வதற்காக ரூ.83 லட்சம் சம்பளம் கிடைத்த வேலையை உதறிவிட்டு பிரான்சுக்கு சென்றார்.
    • ஒரு கிராமத்தில் இயங்கி வரும் உணவகத்தில் பேஸ்ட்ரி உதவியாளராக பணியாற்ற தொடங்கினார்.

    அமெரிக்காவை சேர்ந்த பெண் வலேரி வால்கோர்ட். இவர் கூகுள், அமேசான் போன்ற உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றியவர். அப்போது இவர் ரூ.83 லட்சம் சம்பளம் வாங்கி உள்ளார். ஆனாலும் தான் பார்த்த வேலையில் அவருக்கு போதிய திருப்தி கிடைக்கவில்லை.

    இதனால் அவர் தனக்கு பிடித்த வேலை செய்வதற்காக ரூ.83 லட்சம் சம்பளம் கிடைத்த வேலையை உதறிவிட்டு பிரான்சுக்கு சென்றார். அங்குள்ள ஒரு கிராமத்தில் இயங்கி வரும் உணவகத்தில் பேஸ்ட்ரி உதவியாளராக பணியாற்ற தொடங்கினார். அதில் அவருக்கு ரூ.25 லட்சம் வரை மட்டுமே சம்பளமும், வருடத்திற்கு ஊதியத்துடன் கூடிய 5 வார விடுமுறையும் வழங்கப்படுகிறது.

    இதுகுறித்து வலேரி கூறுகையில், முன்பை விட தற்போது குறைவான சம்பளம் என்பது எப்போதும் எனக்கு வருத்தத்தை தந்ததில்லை. அமெரிக்காவில் இருந்ததை விட நான் இங்கு மகிழ்ச்சியாக இருக்கிறேன். இந்த நாட்டின் கலாச்சாரம், எனது ஓய்வு நேரம் என நான் இங்கு மகிழ்ச்சியாக உள்ளேன் என்றார்.

    • வீடியோவை பார்த்த பயனர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
    • ஒரு பயனர், துபாயில் இப்படி சுற்றித்திரிந்து எவ்வாறு பிரச்சனையில் சிக்காமல் இருக்க முடிகிறது? என கேள்வி எழுப்பி உள்ளார்.

    சமூக ஊடகங்களில் பிரபலம் ஆக வேண்டும் என்பதற்காகவே சிலர் வித்தியாசமான செயல்களை செய்து அதனை வீடியோவாக வெளியிடுகிறார்கள். அந்த வகையில், நாடியா கர் என்ற பெண் உலக அளவில் சமூக வலைதளங்களில் பிரபலமானவராக திகழ்கிறார். இவர் அடிக்கடி சொகுசு கார்களில் வலம் வருவது போன்ற வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானவர் ஆவார்.

    இவர் தற்போது வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில், அவர் துபாயில் உள்ள ஒரு மிருக காட்சி சாலையில் உள்ள பூங்காவிற்குள் புலியுடன் நடந்து செல்வது போன்றும், அப்போது புலியின் கழுத்தில் சங்கிலி கட்டி இழுத்து செல்வது போன்றும் காட்சி உள்ளது. வீடியோவுடன் அவரது பதிவில், துபாயில் எனது செல்ல புலியை அழைத்து செல்வது வித்தியாசமானது என்று கூறியிருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் 60 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளையும், 1 லட்சத்திற்கும் மேற்பட்ட விருப்பங்களையும் பெற்றுள்ளது.

    வீடியோவை பார்த்த பயனர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அதில் ஒரு பயனர், துபாயில் இப்படி சுற்றித்திரிந்து எவ்வாறு பிரச்சனையில் சிக்காமல் இருக்க முடிகிறது? என கேள்வி எழுப்பி உள்ளார். இதே போன்று பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மனித சங்கிலி உதவியால் அந்த வாலிபர் நாயை கால்வாயில் இருந்து மீட்டு செல்லும் காட்சிகள் உள்ளது.
    • வீடியோ வைரலான நிலையில் பயனர்கள் பலரும் நாயை காப்பாற்றிய குழுவின் முயற்சிக்கு பாராட்டுக்கள் தெரிவித்தனர்.

    வெள்ளம் ஆர்ப்பரித்து செல்லும் ஒரு கால்வாயில் சிக்கிய நாயை மீட்பதற்காக பொதுமக்கள் மனித சங்கிலி அமைத்து போராடி மீட்ட காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இன்ஸ்டாகிராமில் பபிடி என்ற பயனரால் வெளியிடப்பட்ட அந்த வீடியோவில் வெள்ளம் ஆர்ப்பரித்து செல்லும் ஒரு கால்வாயின் நடுவே நாய் ஒன்று சிக்கி கொண்ட காட்சி உள்ளது.

    அந்த நாயை மீட்பதற்காக ஒரு வாலிபர் கால்வாய்க்குள் இறங்கி வெள்ள நீரில் நடந்து சென்று நாயை மீட்கிறார். ஆனாலும் அந்த கால்வாயில் இருந்து மேல் பகுதிக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. இதைப்பார்த்து அங்கிருந்த பொதுமக்கள் ஒரு குழுவாக செயல்பட்டு கால்வாயின் மேல் பகுதியில் இருந்து செங்குத்தான வகையில் மனித சங்கிலி அமைத்து ஒருவருக்கொருவர் கைகோர்த்து தொங்கியவாறு கால்வாய்க்குள் நின்ற வாலிபரை பிடிக்கிறார்கள்.

    பின்னர் மனித சங்கிலி உதவியால் அந்த வாலிபர் நாயை கால்வாயில் இருந்து மீட்டு செல்லும் காட்சிகள் உள்ளது. இந்த வீடியோ வைரலான நிலையில் பயனர்கள் பலரும் நாயை காப்பாற்றிய குழுவின் முயற்சிக்கு பாராட்டுக்கள் தெரிவித்தனர். இந்த உலகத்தில் இன்னும் சில நல்ல மனிதர்கள் உள்ளார்கள் என ஒரு பயனரும், நம்மை விட பெரிய விஷயத்திற்காக நாம் ஒன்றிணைந்து செயல்படும் போது மனிதர்களால் எதையும் செய்ய முடியும் என மற்றொரு பயனரும் பதிவிட்டனர்.

    • இந்தியாவில் நடந்த தேர்தலை நாங்கள் கொண்டாடுகிறோம்.
    • இப்போது சொன்னதை தவிர, இந்திய தேர்தல் குறித்து எந்த கருத்தும் தெரிவிக்க மாட்டேன்.

    வாஷிங்டன்:

    அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் மாத்யு மில்லர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது, இந்திய பாராளுமன்ற தேர்தல் குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது:-

    இந்தியாவில் நடந்த தேர்தலை நாங்கள் கொண்டாடுகிறோம். வரலாற்றில் எந்த நாட்டிலும், எந்த நேரத்திலும் நடந்ததை விட இதுதான் மிகப்பெரிய தேர்தல்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆளும் பா.ஜனதா சார்பில் ஒரு முஸ்லிம் எம்.பி. கூட இடம்பெறவில்லையே? என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு மாத்யு மில்லர் பதில் அளிக்க மறுத்து விட்டார்.

    ''இப்போது சொன்னதை தவிர, இந்திய தேர்தல் குறித்து எந்த கருத்தும் தெரிவிக்க மாட்டேன். அது வாக்காளர் பிரச்சனை. அதுபற்றி இந்திய மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்'' என்று அவர் கூறினார்.

    • கைக்கெடிகாரம் நாக்கில் இருந்தபடியே சிங்கம் கர்ஜித்தது.
    • வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகியது. இதற்கு ஆயிரக்கணக்கானோர் விருப்பங்களை தெரிவித்து உள்ளனர்.

    ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த விலங்குகள் ஆர்வலரும், கால்நடை மருத்துவருமான குளோ என்பவர் சிங்கத்தின் நாக்கில் ஸ்மார்ட் கைக்கெடிகாரம் ஒன்றை பொருத்தினார். அப்போது சிங்கத்தின் இதயத்துடிப்பை அந்த கைக்கெடிகாரம் காட்டியது.

    மேலும் கைக்கெடிகாரம் நாக்கில் இருந்தபடியே சிங்கம் கர்ஜித்தது. இந்த நிகழ்வை அவர் வீடியோவாக எடுத்து `இதனைவிட சுவாரசியமானது என்னவென்று எனக்கு தெரியவில்லை' என்ற பின்குறிப்புடன் சமூகவலைதளத்தில் பதிவிட்டார்.

    இவரது இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகியது. இதற்கு ஆயிரக்கணக்கானோர் விருப்பங்களை தெரிவித்து உள்ளனர்.


    • ஜி7 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இத்தாலி சென்றுள்ளார்.
    • அங்கு பிரதமர் மோடி உலகத் தலைவர்களை சந்தித்தார்.

    ரோம்:

    ஜி7 கூட்டமைப்பின் உச்சி மாநாடு இத்தாலியில் இரு தினங்கள் நடைபெறுகிறது. மாநாட்டில் பங்கேற்க இத்தாலி வந்துள்ள அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான், கனடா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களை அந்நாட்டு பிரதமர் ஜார்ஜியா மெலோனி வரவேற்றார்.

    இதில் பங்கேற்க இந்திய பிரதமர் மோடிக்குக்கும் இத்தாலி பிரதமர் அழைப்பு விடுத்திருந்தார். அதையேற்று இத்தாலி சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    ஜி7 உச்சி மாநாட்டின் இடையே பிரதமர் நரேந்திர மோடி பிரான்ஸ் அதிபர், பிரிட்டன் பிரதமர் மற்றும் உக்ரைன் அதிபர் உள்ளிட்ட உலக தலைவர்களைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

    இந்நிலையில், மாநாட்டின் இடையே வாடிகன் தலைவரான போப் பிரான்சிசை சந்தித்த பிரதமர் மோடி, அவரை கட்டி அணைத்து உரையாடினார்.

    இந்த மாநாட்டில் ஆர்டிபிசியல் இன்டலிஜென்ஸ் குறித்து போப் பிரான்சிஸ் உரையாற்ற உள்ளார்.

    ×