என் மலர்tooltip icon

    உலகம்

    • ஐநாவின் UNWRA சேர்ந்த ஊழியர் ஒருவர் என மொத்தம் 15 பேர் கொல்லப்பட்டனர்.
    • டி இஸ்ரேல் வேண்டும் என்றே உதவிக்குழுவினர் 15 பேரை படுகொலை செய்தது அம்பலமாகியுள்ளது.

    காசா மக்களுக்கு மனிதாபிமான உதவிகளைச் செய்து வந்த ஊழியர்கள் இஸ்ரேல் ராணுவத்தினரால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கடந்த மார்ச் 23 ஆம் தேதி காசாவில் உள்ள ராஃபா நகரத்தில் ஆம்புலன்களில் சென்றுகொண்டிருந்த உதவுக்குழுவினர் மீது இஸ்ரேல் ராணுவ வீரர்கள் தாக்குதல் நடத்தினர்.

    இதில் ரெட் கிரசண்ட் ஊழியர்கள் 8 பேர், பாதுகாப்பு அவசரப்பிரிவை சேர்ந்த 6 உறுப்பினர்கள் மற்றும் ஐநாவின் UNWRA சேர்ந்த ஊழியர் ஒருவர் என மொத்தம் 15 பேர் கொல்லப்பட்டனர்.

    அவர்கள் உதவிக்குழுவைச் சேர்த்தவர்கள் என்று தெரிந்தே இஸ்ரேல் வேண்டுமென்றே அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் சந்தேகத்திற்கிடமான முறையில் தங்கள் வீரர்களை நெருங்கி வந்த வாகனங்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்தது.

    இந்நிலையில் அன்றைய தினம் நடந்த தாக்குதல் தொடர்பான, உயிரிழந்த உதவிக்குழுவில் இருந்த பாலஸ்தீனிய ஊழியர் ஒருவரின் செல்போனில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. 

    நியூயார்க் டைம்ஸ் தற்போது வெளியிட்டுள்ள அந்த வீடியோவில், ஊழியர்கள் பயணம் செய்த ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்களில் அவசரநிலையை உணர்த்தும் விளக்குகள் எரிந்த நிலையில் இருப்பதும், இஸ்ரேலிய ராணுவத்தினர் வாகனங்களை நோக்கியும் உதவிக்குழுவினரை நோக்கியும் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியது பதிவாகி உள்ளது.

    இதன்படி இஸ்ரேல் வேண்டும் என்றே உதவிக்குழுவினர் 15 பேரை படுகொலை செய்தது அம்பலமாகியுள்ளது. இதனால் சர்வதேச அளவில் கண்டங்கள் எழுந்து வருகின்றன. இந்த காணொளி குறித்து இஸ்ரேல் இன்னும் எனது விளக்கமும் அளிக்கவில்லை. 

    • அவர்கள் கொல்லப்படுவதும் பின்னர் அப்பகுதி முழுவது புகை பரவியதும் பதிவாகியுள்ளது.
    • "ஐய்யோ, இனி இந்த ஹவுதிகளினால் நமது கப்பல்கள் மீது எந்தவொரு தாக்குதலும் இருக்காது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

    ஏமனில் இயங்கி வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீதான  அமெரிக்க தாக்குதலில் வீடியோவை அமெரிக்க அதிபர் டொனல்டு டிரம்ப் பகிர்ந்துள்ளார். எக்ஸ் வலைத்தளத்தில் அவர் பகிர்ந்துள்ள வீடியோவில், சுற்றி நிற்கும் ஒரு மக்கள் குழுவின் மீது டிரோன் மூலம் குண்டு வீசப்பட்டு அவர்கள் கொல்லப்படுவதும் பின்னர் அப்பகுதி முழுவது புகை பரவியதும் பதிவாகியுள்ளது.

    இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் அனைவரும் ஹவுதி படையினர் எனக் குறிப்பிட்டடிரம்ப், அவர்கள் அமெரிக்கா மீது தாக்குதல் நடத்தும் கட்டளைகளுக்காக அங்கு கூடியிருந்ததாகத் தெரிவித்துள்ளார். மேலும், "ஐய்யோ, இனி இந்த ஹவுதிகளினால் நமது கப்பல்கள் மீது எந்தவொரு தாக்குதலும் இருக்காது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

    காசா மீதான இஸ்ரேல் தாக்குதலை எதிர்த்து இஸ்ரேல் மற்றும் அமெரிக்க வணிக மற்றும் ராணுவ கப்பல்கள் மீது ஹவுதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. மேலும், கடந்த வாரம் அமெரிக்கா நடத்திய தாக்குதல்களில் ஏராளமான ஏமன் மக்கள் கொல்லப்பட்டதாக ஹவுதி கிளர்ச்சிப் படை குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

    • இலங்கை நாட்டின் உயரிய விருதை பிரதமர் மோடிக்கு வழங்கி கவுரவிப்பு.
    • பிரதமருடன் அரவிந்த டி சில்வா, ஜெய சூர்யா, தர்மசேனா உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் இருந்தனர்.

    தாய்லாந்து பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி விமானம் மூலம் நேற்று இரவு இலங்கைக்கு சென்றார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மோடியை பண்டாரநாயக சர்வதேச விமான நிலையத்தில் இலங்கை வெளிவிவகாரத்துறை மந்திரி விஜித ஹேரத் தலைமையிலான உயர் நிலைக்குழு வரவேற்றது.

    பின்னர் தலைநகர் கொழும்புவில் உள்ள தாஜ்சமுத்ரா நட்சத்திர விடுதியில் தங்கினார். அப்போது அங்கு அவரை இந்திய வம்சாவளியினர் உற்சாகத்துடன் வரவேற்றனர்.

    பின்னர், வரவேற்பு முடிந்ததும் மோடிக்கு இலங்கை பிரதமர், மந்திரிகள் மற்றும் உயர் அதிகாரிகளை இலங்கை அதிபர் அனுரா குமார திசநாயகே அறிமுகம் செய்து வைத்தார்.

    அதன்பின் இந்தியா உதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்களை பிரதமர் மோடி, இலங்கை அதிபர் அனுரா குமார திசநாயகே ஆகியோர் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தனர்.

    இதையடுத்து இலங்கை நாட்டின் உயரிய விருதை பிரதமர் மோடிக்கு வழங்கி அந்நாட்டின் அதிபர் அனுர குமார திசநாயக கவுரவித்தார்.

    இந்நிலையில், பிரதமர் மோடி தான் மேற்கொண்டு வரும் பயணம், சந்திப்புகள் குறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் தொடர்ந்து பகிர்ந்து வருகிறார்.

    அந்த வகையில், பிரதமர் மோடி இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்களை சந்தித்து உரையாடியுள்ளார். அப்போது, அரவிந்த டி சில்வா, ஜெய சூர்யா, தர்மசேனா உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் இருந்தனர்.

    இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் அவர், " 1996 உலகக் கோப்பையை வெற்றிகொண்ட அன்றைய இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்களுடன் கலந்துரையாடியதை எண்ணி பெருமகிழ்வடைகின்றேன். இந்த அணியினர் எண்ணற்ற விளையாட்டு ரசிகர்களது மனதைக் கவர்ந்திருந்தனர்!" என்றார்.

    • பிரதமர் மோடிக்கு இலங்கை நாட்டின் உயரிய விருதை வழங்கி அந்நாட்டின் அதிபர் அனுர குமார திசநாயக கவுரவித்தார்.
    • கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள், அவர்களின் படகுகளை உடனடியாக விடுவிக்க வேண்டும்.

    இலங்கையில் இந்தியா உதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்களை பிரதமர் மோடி, அதிபர் அனுரா குமார திசநாயகே ஆகியோர் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தனர்.

    திரிகோணமலையின் சம்பூரில் இந்தியா உதவியுடன் செயல்படுத்தப்படும் சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையத் திட்டம், தம்புள்ள என்ற இடத்தில் 5 ஆயிரம் மெட்ரிக் டன் வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தைக் கட்டுப் படுத்தக்கூடிய குளிர்பதன வசதித் திட்டம், இலங்கை முழுவதும் உள்ள சுமார் 5 ஆயிரம் மத வழிபாட்டுத் தலங்களின் மேற்கூரைகளில் சூரிய மின் தகடுகளை நிறுவும் திட்டம் ஆகியவற்றை நாட்டுக்கு அர்ப்பணித்தனர்.

    பிரதமர் மோடிக்கு இலங்கை நாட்டின் உயரிய விருதை வழங்கி அந்நாட்டின் அதிபர் அனுர குமார திசநாயக கவுரவித்தார்.

    பிரதமர் மோடிக்கு இலங்கை நாட்டின் உயரிய விருதான மித்ரா விபூஷணா விருது வழங்கப்பட்டது. அந்த விருதை மோடிக்கு அதிபர் அனுர குமார திச நாயகே அணிவித்தார்.

    தமிழக மீனவர்கள் பிரச்சனை தொடர்பாக இலங்கை அதிபருடன் பிரதமர் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    இதைத்தொடர்ந்து பிரதமர் மோடி கூறியதாவது:

    * மீனவர்கள் பிரச்சனையை இலங்கை அரசு மனிதாபிமானத்துடன் அணுக வேண்டும்.

    * கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள், அவர்களின் படகுகளை உடனடியாக விடுவிக்க வேண்டும்.

    * கைது செய்து சிறையில் வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கடினமான காலங்களில் இந்தியா - இலங்கை இணைந்து செயல்பட்டது.
    • இலங்கை வாழ் தமிழர்களுக்கு 10,000 வீடுகள் கட்டி தரப்படும்.

    தாய்லாந்து பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி விமானம் மூலம் நேற்று இரவு இலங்கைக்கு சென்றார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மோடியை பண்டாரநாயக சர்வதேச விமான நிலையத்தில் இலங்கை வெளிவிவகாரத்துறை மந்திரி விஜித ஹேரத் தலைமையிலான உயர் நிலைக்குழு வரவேற்றது.

    இன்று காலை தலைநகர் கொழும்புவில் உள்ள சுதந்திர சதுக்கத்தில் பிரதமர் மோடிக்கு முப்படைகளின் சம்பிரதாய முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்புடன் ராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. இதை பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டார். பீரங்கி குண்டுகள் முழங்கவும் வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இலங்கைக்கு வருகை தரும் ஒரு தலைவருக்கு முப்படை வரவேற்பு அளிப்பது இது முதல் முறையாகும்.

    வரவேற்பு முடிந்ததும் பிரதமர் மோடிக்கு இலங்கை பிரதமர், மந்திரிகள் மற்றும் உயர் அதிகாரிகளை இலங்கை அதிபர் அனுரா குமார திசநாயகே அறிமுகம் செய்து வைத்தார்.

    அதன்பின் இந்தியா உதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்களை பிரதமர் மோடி, இலங்கை அதிபர் அனுரா குமார திசநாயகே ஆகியோர் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தனர்.

    திரிகோணமலையின் சம்பூரில் இந்தியா உதவியுடன் செயல்படுத்தப்படும் சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையத் திட்டம், தம்புள்ள என்ற இடத்தில் 5 ஆயிரம் மெட்ரிக் டன் வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தைக் கட்டுப் படுத்தக்கூடிய குளிர்பதன வசதித் திட்டம், இலங்கை முழுவதும் உள்ள சுமார் 5 ஆயிரம் மத வழிபாட்டுத் தலங்களின் மேற்கூரைகளில் சூரிய மின் தகடுகளை நிறுவும் திட்டம் ஆகியவற்றை நாட்டுக்கு அர்ப்பணித்தனர்.

    இதையடுத்து இலங்கை நாட்டின் உயரிய விருதை பிரதமர் மோடிக்கு வழங்கி அந்நாட்டின் அதிபர் அனுர குமார திசநாயக கவுரவித்தார்.

    பிரதமர் மோடிக்கு இலங்கை நாட்டின் உயரிய விருதான மித்ரா விபூஷணா விருது வழங்கப்பட்டது. அந்த விருதை மோடிக்கு அதிபர் அனுர குமார திச நாயகே அணிவித்தார்.

    இதைத்தொடர்ந்து பிரதமர் மோடி கூறியதாவது:

    * இது எனது 4-வது இலங்கை வருகை. எனது கடைசி வருகை ஒரு முக்கியமான காலகட்டத்தில் நிகழ்ந்தது. அந்த நேரத்தில், இலங்கை எழுச்சி பெற்று வலுவாக உயரும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது.

    * இலங்கை மீண்டும் முன்னேற்றப் பாதையில் செல்வதைக் கண்டு நான் இன்று மகிழ்ச்சியடைகிறேன். உண்மையான அண்டை நாடாக இலங்கையுடன் நின்றது எனக்கு பெருமை அளிக்கிறது.

    * 2019 பயங்கரவாதத் தாக்குதலாக இருந்தாலும் சரி, கோவிட் தொற்றுநோயாக இருந்தாலும் சரி, சமீபத்திய நிதி நெருக்கடியாக இருந்தாலும் சரி, நாங்கள் எப்போதும் இலங்கை மக்களுடன் உறுதுணையாக இருந்து வருகிறோம்.

    * கடினமான காலங்களில் இந்தியா - இலங்கை இணைந்து செயல்பட்டது.

    * இலங்கைவாழ் மக்களின் தைரியத்தை நான் பாராட்டுகிறேன்.

    * இலங்கை தனது வீழ்ச்சியில் இருந்து வலுவாக எழுந்து வரும்.

    * இலங்கை வாழ் தமிழர்களுக்கு 10,000 வீடுகள் கட்டி தரப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அமெரிக்காவில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் 50 ஆவது ஆண்டுவிழா கொண்டாடப்பட்டது.
    • பாலஸ்தீனிய ஆதரவு கொண்ட மைக்ரோசாப்ட் ஊழியர்கள் கூச்சலிட்டு போராட்டம் நடத்தினர்.

    இஸ்ரேலிய இராணுவத்திற்கு செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை மைக்ரோசாப்ட் நிறுவனம் வழங்கி வருவதற்கு அந்நிறுவனத்தின் ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    அமெரிக்காவில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் 50 ஆவது ஆண்டுவிழா கொண்டாடப்பட்டது. அப்போது பாலஸ்தீனிய ஆதரவு கொண்ட ஊழியர்கள் கூச்சலிட்டு போராட்டம் நடத்தினர்.

    மைக்ரோசாப்ட் AI இன் தலைமை நிர்வாக அதிகாரி முஸ்தபா சுலேமான் பேசிக்கொண்டிருக்கும் ஒரு ஊழியர் "முஸ்தபா, உங்களுக்கு வெட்கமாக இல்லையா" என்று கூச்சலிட்டார்.

    அப்போது மற்றொரு ஊழியர் மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லா அவர்களே, "உங்களுக்கு வெட்கமாக இல்லையா.. நீங்கள் அனைவரும் நயவஞ்சகர்கள்" என்று கூச்சலிட்டார்.

    காசா மற்றும் லெபனான் மீது இஸ்ரேல் குண்டுவீசி தாக்குதல் நடத்தியபோது இலக்குகளை குறிவைத்து தாக்க மைக்ரோசாப்ட் மற்றும் ஓபன்ஏஐ ஆகியவற்றின் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை இஸ்ரேல் பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது. 

    • இந்தியா உதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்களை பிரதமர் மோடி, இலங்கை அதிபர் அனுரா குமார திசநாயகே ஆகியோர் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தனர்.
    • இரு நாட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினர்.

    பிரதமர் மோடி, தாய்லாந்து மற்றும் இலங்கைக்கு சுற்றுப்பயணத்தை கடந்த 3-ந்தேதி தொடங்கினார்.

    முதலில் தாய்லாந்துக்கு சென்றடைந்த அவர், பிம்ஸ்டெக் அமைப்பு உச்சி மாநாட்டில் பங்கேற்றார். மேலும் உறுப்பு நாட்டு தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    தாய்லாந்து பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி விமானம் மூலம் நேற்று இரவு இலங்கைக்கு சென்றார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மோடியை பண்டாரநாயக சர்வதேச விமான நிலையத்தில் இலங்கை வெளிவிவகாரத்துறை மந்திரி விஜித ஹேரத் தலைமையிலான உயர் நிலைக்குழு வரவேற்றது.

    பின்னர் தலைநகர் கொழும்புவில் உள்ள தாஜ்சமுத்ரா நட்சத்திர விடுதியில் தங்கினார். அப்போது அங்கு அவரை இந்திய வம்சாவளியினர் உற்சாகத்துடன் வரவேற்றனர்.

    இதுதொடர்பாக மோடி தனது எக்ஸ் வலை தள பக்கத்தில் கூறும்போது, கொழும்பில் உள்ள இந்திய சமூகத்தினர் எனக்கு வழங்கிய ரம்மியமான வரவேற்புக்கு மழை கூட தடையாக இருக்கவில்லை. அவர்களது அன்பான அரவணைப்பு மற்றும் உற்சாகத்தினால் நான் மிகுந்த நெகிழ்ச்சி அடைந்தேன். அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்.

    மோடியை வரவேற்கும் வகையில் சாலைகளில் பிரமாண்ட விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.


    இலங்கை அதிபர் அனுரா குமார திசநாயகே கடந்த ஆண்டு இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது முக்கிய ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்பட்டன. இதையடுத்து ஒப்பந்தங்களில் கையெழுத்திடவும், இந்தியா உதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்களை தொடங்கி வைக்கவும் பிரதமர் மோடி இலங்கை பயணத்தை மேற்கொண்டார்.

    இன்று காலை 9 மணியளவில் தலைநகர் கொழும்புவில் உள்ள சுதந்திர சதுக்கத்தில் பிரதமர் மோடிக்கு முப்படைகளின் சம்பிரதாய முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

    அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்புடன் ராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. இதை பிரதமர் மோடி ஏற்றுக் கொண்டார். பீரங்கி குண்டுகள் முழங்கவும் வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இலங்கைக்கு வருகை தரும் ஒரு தலைவருக்கு முப்படை வரவேற்பு அளிப்பது இது முதல் முறையாகும். இதுதொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறும்போது, பிரதமர் மோடியை கொழும்பில் உள்ள சுதந்திர சதுக்கத்தில் இலங்கை அதிபர் ஒரு சம்பிரதாய வரவேற்புடன் வரவேற்றார்.

    நமது மக்களின் பகிரப்பட்ட எதிர்காலம் மற்றும் பரஸ்பர செழிப்புக்கான கூட்டாண்மையை வளர்ப்பதற்கான இருதரப்பு விவாதங்கள் நடக்கிறது என்று தெரிவித்தார். மேலும் சுதந்திர சதுக்கத்தில் ஒரு வெளிநாட்டுத் தலைவருக்கு இதுபோன்ற வரவேற்பு அளிக்கப்படுவது இதுவே முதல் முறை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


    இந்த நிகழ்ச்சியில் இலங்கை அதிபர் அனுரா குமார திசநாயகே உடன் இருந்தார். வரவேற்பு முடிந்ததும் மோடிக்கு இலங்கை பிரதமர், மந்திரிகள் மற்றும் உயர் அதிகாரிகளை இலங்கை அதிபர் அனுரா குமார திசநாயகே அறிமுகம் செய்து வைத்தார்.

    அதன்பின் இந்தியா உதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்களை பிரதமர் மோடி, இலங்கை அதிபர் அனுரா குமார திசநாயகே ஆகியோர் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தனர்.

    திரிகோணமலையின் சம்பூரில் இந்தியா உதவியுடன் செயல்படுத்தப்படும் சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையத் திட்டம், தம்புள்ள என்ற இடத்தில் 5 ஆயிரம் மெட்ரிக் டன் வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தைக் கட்டுப் படுத்தக்கூடிய குளிர்பதன வசதித் திட்டம், இலங்கை முழுவதும் உள்ள சுமார் 5 ஆயிரம் மத வழிபாட்டுத் தலங்களின் மேற்கூரைகளில் சூரிய மின் தகடுகளை நிறுவும் திட்டம் ஆகியவற்றை நாட்டுக்கு அர்ப்பணித்தனர்.


    பின்னர் இலங்கை அதிபரின் செயலகத்தில் பிரதமர் மோடி-இலங்கை அதிபர் அனுர குமாரதிச நாயகே இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் இரு நாட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினர். தொடர்ந்து இரு தலைவர்கள் முன்னிலையில் இரு நாட்டு மந்திரிகள், அதிகாரிகள் கொண்ட உயர் நிலைக் குழு பிரதிநிதிகளின் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

    இதன்முடிவில் ராணுவம் உள்பட முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இதில் பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒரு முக்கிய சிறப்பம்சமாக கருதப்படுகிறது. இது இந்தியா-இலங்கை ராணுவ உறவுகளில் ஒரு புதிய அத்தியாயத்தைக் குறிப்பதாக உள்ளது. இரு நாடுகள் இடையே முதல் முறையாக ராணுவ ஒப்பந்தம் கையெழுத்தானது.



    இதன் பின்னர் தாஜ் சமுத்ரா நட்சத்திர தங்கும் விடுதியில் பிரதமர் மோடியை இலங்கைப் பிரதமர், வெளியுறவு மந்திரி மற்றும் அரசியல் தலைவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசுகிறார்கள். இன்று மாலை அமைதி காப்புப் படையின் நினைவிடத்துக்கு செல்லும் பிரதமர் மோடி, உயிர்த் தியாகம் செய்த இந்திய வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறார். இதையடுத்து, அதிபர் மாளிகையில் பிரதமர் மோடிக்கு இரவு விருந்து அளிக்கப்படுகிறது.

    நாளையும் பிரதமர் மோடி பல்வேறு நிகழ்ச்சி களில் பங்கேற்கிறார். நாளை காலை கொழும்பில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் அனுராதபுரத்தில் உள்ள விமானப்படை தளத்துக்கு பிரதமர் மோடியும் அதிபர் அனுரா குமார திசாநாயகேவும் செல்கிறார்கள்.

    அங்கிருந்து சாலை மார்க்கமாக ஜெயஸ்ரீ மகாபோதி ஆலயத்துக்குச் சென்று வழிபடுகின்றனர். பின்னர், காலை 10 மணியளவில் அனுராதபுரம் ரெயில் நிலையத்தில் புதிதாக மேம்படுத்தப்பட்டுள்ள மஹவ-ஓமந்தை ரெயில் பாதை திறப்பு மற்றும் மஹவ-அனுராதபுரம் ரெயில் சமிக்கை வசதியை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இந்த இரண்டும் இந்திய நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்களாகும்.

    இலங்கையில் கடந்த ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற அனுரா குமார திசநாயகே தனது முதல் அரசு முறை வெளிநாட்டு பயணமாக இந்தியாவுக்கு வந்தார். தற்போது அவரது தலைமையில் அரசு அமைந்த பிறகு முதல் வெளிநாட்டு தலைவராக பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டு உள்ளார்.

    இலங்கையில் சீனா ஆதிக்கம் செலுத்த முயற்சித்து வருகிறது. குறிப்பாக இந்திய பெருங்கடல் பகுதியில் தன்னை நிலைநிறுத்த சீனா விரும்பும் நிலையில் பிரதமர் மோடியின் இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    பிரதமர் மோடி கடந்த 2015-ம் ஆண்டில் இருந்து இலங்கைக்கு செல்வது இது 4-வது முறையாகும். கடைசியாக 2019-ம் ஆண்டு இலங்கைக்கு சென்றிருந்தார்.

    • அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த 2-ந்தேதி இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் மீது கூடுதல் வரிகளை விதித்தார்.
    • இந்தியா மீது 26 சதவீத வரி விதிக்கப்படுவதாக அறிவித்தார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த 2-ந்தேதி இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் மீது கூடுதல் வரிகளை விதித்தார்.

    அமெரிக்கா மீது மற்ற நாடுகள் அதிக வரிகளை விதிப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இந்தியா மீது 26 சதவீத வரி விதிக்கப்படுவதாக அறிவித்தார்.

    இதற்கிடையே வரி விதிப்பு நடவடிக்கையில் சலுகை அளித்தால் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக டிரம்ப் தெரிவித்தார்.

    இந்த நிலையில் டிரம்ப் அறிவித்துள்ள வரி விதிப்பு வருகிற 9-ந்தேதி அமலுக்கு வர உள்ள நிலையில் இந்தியா-அமெரிக்க அதிகாரிகள் வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதால் இவ்விவகாரத்தில் தீர்வு ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்திய அதிகாரிகள் டிரம்ப் நிர்வாகத்துடன் தொடர்பில் உள்ளனர் என்றும் அவர்களின் பேச்சுவார்த்தைகள் வர்த்தகம், முதலீடுகள் மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றங்களை அதிகரிப்பதில் கவனம் செலுத்துகின்றன என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

    மேலும் அதிபர் டிரம்பின் மூத்த ஆலோசகர் ஒருவர் கூறும்போது, இந்தியா, வியட்நாம், இஸ்ரேலுடன் வர்த்தக ஒப்பந்தங்கள் தொடர்பாக டிரம்ப் தீவிரமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் என்று தெரிவித்தார்.

    இந்த நிலையில் டிரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறும்போது, வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டோலாமுடன் மிகவும் பயனுள்ள ஒரு தொலைபேசி உரையாடலை நடத்தினேன்.

    அமெரிக்காவுடன் ஒரு ஒப்பந்தம் செய்ய முடிந்தால், வியட்நாம் தங்கள் வரிகளை பூஜ்ஜியமாகக் குறைக்க விரும்புகிறது என்று அவர் என்னிடம் கூறினார் என்று தெரிவித்துள்ளார். வியட்நாம் மீது 46 சதவீத வரியை அமெரிக்கா விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    இதற்கிடையே அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சீனா ஏப்ரல் 10-ந்தேதி முதல் அமெரிக்க இறக்குமதிகளுக்கு 34 சதவீத வரியை விதித்துள்ளது.

    இதுதொடர்பாக டிரம்ப் கூறும்போது, சீனா தவறாக விளையாடியது. அவர்கள் பீதியடைந்தார்கள் என்றார்.

    • சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
    • பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும்.

    கனடாவின் ஒட்டாவா அருகே உள்ள ராக்லேண்ட் பகுதியில் இந்தியர் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் குறித்த மேல் விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.

    மேலும், கத்தியால் குத்தப்பட்டு இந்தியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தது எங்களுக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும். உயிரிழந்த இந்தியரின் குடும்பத்தினரோடு நாங்கள் தொடர்பில் இருக்கிறோம் என கனடாவில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

    • உக்ரைனை குறிவைத்து ரஷியா நேற்று சரமாரி டிரோன் தாக்குதல் நடத்தியது.
    • இந்த தாக்குதலில் 6 குழந்தைகள் உள்பட 16 பேர் பலியாகினர்.

    கீவ்:

    ரஷியா-உக்ரைன் இடையிலான போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தீவிரம் காட்டி வருகிறார். அந்த வகையில் அமெரிக்கா முன்மொழிந்த 30 நாள் போர் நிறுத்தத்துக்கு ரஷியா, உக்ரைன் ஆகிய இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்தன.

    இதுதொடர்பாக ரஷியா-உக்ரைன் இடையே விரைவில் பேச்சுவார்த்தை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், உக்ரைன் தலைநகர் கீவை குறிவைத்து ரஷியா நேற்று சரமாரி டிரோன் தாக்குதல் நடத்தியது. இதில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்கள் உள்பட பல கட்டிடங்கள் சேதமடைந்தன. இந்த தாக்குதலில் 6 குழந்தைகள் உள்பட 16 பேர் பலியாகினர். மேலும் 34 பேர் படுகாயம் அடைந்தனர்.

    ரஷியாவின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, தாக்குதலில் பலியானோர் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்தார்.

    • பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ளது பப்புவா நியூ கினியா.
    • இன்று 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    கான்பெர்ரா:

    அடிக்கடி நிலநடுக்கங்களை சந்தித்து வரும் நாடு பப்புவா நியூ கினியா.

    இந்நிலையில், பப்புவா நியூ கினியா நாட்டில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

    இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.9 அலகுகளாக பதிவானதாக அமெரிக்க புவிசார் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்த தகவல் வெளியாகவில்லை.

    இதற்கிடையே, சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பப்புவா நியூ கினியாவில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. சிறிது நேரத்துக்கு பிறகு சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது.

    • சீனாவைச் சேர்ந்த பைட்டான்ஸ் என்ற நிறுவனம் டிக்டாக் செயலியை நிர்வகித்து வருகிறது
    • அமெரிக்காவில் 17 கோடிக்கும் அதிகமானோர் டிக்டாக் செயலியை பயன்படுத்தினர்.

    வாஷிங்டன்:

    டிக் டாக் எனப்படும் மொபைல் போன் செயலி உலகளவில் பிரபலமாக உள்ளது. இன்ஸ்டா ரீல்ஸ்க்கு முன்னோடியாக டிக் டாக்கையே சொல்லலாம். வயது வித்தியாசம் இன்றி பல்வேறு தரப்பினரும் இதை பயன்படுத்துகின்றனர்.

    சீனாவைச் சேர்ந்த பைட்டான்ஸ் என்ற நிறுவனம் இச்செயலியை நிர்வகித்து வருகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக, இந்த செயலிக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    அமெரிக்காவில் 17 கோடிக்கும் அதிகமானோர் இந்தச் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இந்தச் செயலிக்கு ஜோ பைடன் அரசு தடை விதித்தது. இதையடுத்து, பாதுகாப்பு காரணங்களைச் சுட்டிக்காட்டி சீன செயலியான டிக்டாக்கிற்கு எதிராக அமெரிக்க பாராளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

    இதை எதிர்த்து அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் டிக் டாக் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை தள்ளுபடி செய்த கோர்ட், இது குறித்து கொண்டு வரப்பட்ட சட்டமானது பேச்சுரிமைக்கான அரசின் கட்டுப்பாடுகள் தொடர்பான அரசியலமைப்பை மீறவில்லை என கூறியது.

    அமெரிக்காவில் டிக்டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடை ஜனவரி 19 முதல் அமலில் உள்ளது. இதனால் தற்காலிகமாக டிக்டாக் செயலியின் சேவையை நிறுத்துவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

    இந்நிலையில், டிக்டாக் செயலிக்கு வழங்கப்பட்ட கெடுவை மேலும் 75 நாட்களுக்கு நீட்டிப்பு செய்து அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

    ×