என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • இது பெரும்பாலும் தெரிந்தோ தெரியாமலோ தவறுகளுக்கு வழிவகுக்கிறது.
    • வீட்டிற்கு வரும் பெண்கள் முழு உணவை சாப்பிடவில்லை என்றால் அவர்களை கட்டாயப்படுத்தாதீர்கள்.

    அம்பாளுக்கு மிகவும் பிடித்தமான நவராத்திரிக்கு சிறப்பு முக்கியத்துவம் உண்டு. நவராத்திரியின் போது பெண் குழந்தைகளை வழிபடுவது அவசியம் என்று நம்பப்படுகிறது. பெண் குழந்தைகளை வழிபடாமல் நவராத்திரி முழுமையடையாது என்றும் கூறப்படுகிறது. பெண் குழந்தைகளை வழிபடுவது என்பது துர்கா தேவியின் ஆசிகளை நேரடியாகப் பெறுவதாகும்.

    ஒவ்வொரு நவராத்திரியின் அஷ்டமி மற்றும் நவமி பூஜைகள் சிறப்பு வாய்ந்தவை. சிலர் அஷ்டமி அன்று கன்னியா பூஜை செய்கிறார்கள், மற்றவர்கள் அதை நவமி அன்று செய்கிறார்கள். இந்த வருடம், அஷ்டமி இன்றும், நவமி நாளை என வருகின்றன.

    கன்னியா பூஜையின் போது பல நேரங்களில், மக்கள் தெரிந்தோ தெரியாமலோ தவறுகளைச் செய்கிறார்கள். இதனால் ஒன்பது நாள் விரதம் தோல்வியடைகிறது. இதனால் நாம் செய்யும் தவறுகளைப் பற்றி அறிந்து கொள்வோம்...

    கன்னியா பூஜையின் போது என்ன தவறுகளைத் தவிர்க்க வேண்டும் என்பதைப் பற்றி பார்ப்போம்...

    1. கன்னியா பூஜை யின் போது வீட்டிற்கு வரும் பெண்களுக்கு நீங்கள் என்ன பரிசு கொடுத்தாலும், கருப்பு நிறத்தைத் தவிர்க்க வேண்டும். கருப்பு நிறப் பொருட்களைப் பரிசளிப்பது அபசகுணமாகக் கருதப்படுகிறது. பரிசுகளை வழங்கும்போது நாம் பெரும்பாலும் இதை கவனிக்காமல் விடுகிறோம். இது பெரும்பாலும் தெரிந்தோ தெரியாமலோ தவறுகளுக்கு வழிவகுக்கிறது.

    2. கன்னியா பூஜைக்குப் பிறகு மக்கள் பெரும்பாலும் எஃகு கிண்ணங்கள் அல்லது தட்டுகளை பரிசளிப்பார்கள். மத நம்பிக்கைகளின்படி இதுவும் பொருத்தமானதல்ல. நீங்கள் பரிசளிக்க வேண்டியிருந்தால், எஃகுக்குப் பதிலாக மற்ற உலோகங்களால் செய்யப்பட்ட பாத்திரங்களை வழங்க வேண்டும்.

    3. இரும்புப் பொருட்களைப் பரிசாகக் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். கன்னியா பூஜையின் போது அவ்வாறு செய்வது சனி தோஷத்தைத் தரும். பரிசுகளை வாங்கும்போது இதை எப்போதும் மனதில் கொள்ளுங்கள்.

    4. கன்னியா பூஜைக்குப் பிறகு பரிசுகளை வழங்கும்போது, தவறுதலாக கூட, தோல் கொண்ட எந்தப் பொருளையும் கொடுக்கக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

    5. வீட்டிற்கு வரும் பெண்கள் முழு உணவை சாப்பிடவில்லை என்றால் அவர்களை கட்டாயப்படுத்தாதீர்கள். 

    • தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டி இருக்கிறது.
    • வெள்ளி விலையும் அதிரடியாக உயர்ந்து புதிய உச்சத்தில் விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னை:

    தங்கம் விலை இம்மாத தொடக்கத்தில் இருந்தே உயர்ந்து வருகிறது. இம்மாத ஆரம்பத்தில் ஒரு சவரன் ரூ.77 ஆயிரம் என்ற நிலையில் விற்பனையானது. அதன்பிறகு விலை 'கிடுகிடு'வென உயரத் தொடங்கியது. கடந்த 6-ந் தேதி ஒரு கிராம் ரூ.10 ஆயிரம் என்றும், ஒரு சவரன் ரூ.80 ஆயிரம் என்றும் அதிகரித்து, அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்தது.

    அதுவும் நின்றபாடில்லை. மேலும் விலை அதிகரித்துக்கொண்டேதான் இருந்தது. அதன்படி கடந்த 9-ந் தேதி ரூ.81 ஆயிரத்தையும், 16-ந் தேதி ரூ.82 ஆயிரத்தையும், 22-ந் தேதி ரூ.83 ஆயிரத்தையும், அதற்கு மறுநாளே ரூ.84 ஆயிரம் மற்றும் ரூ.85 ஆயிரத்தையும் கடந்து, ஒவ்வொரு நாளும் புதிய உச்சம் என்ற வகையிலேயே பயணித்தது. அதன்பின்னர், அவ்வப்போது லேசான சரிவு இருந்தாலும், ரூ.84 ஆயிரம் மற்றும் ரூ.85 ஆயிரம் என்ற இடைப்பட்ட அளவிலேயே ஆட்டம் காட்டியது.

    இந்தநிலையில் நேற்று ஒரே நாளில் விறுவிறுவென விலை ஏற்றம் கண்டது. காலையில் கிராமுக்கு ரூ.70-ம், சவரனுக்கு ரூ.560-ம் அதிகரித்தது. பின்னர் மாலையில் கிராமுக்கு ரூ.60-ம், சவரனுக்கு ரூ.480-ம் உயர்ந்தது. அப்படியாக நேற்று மட்டும் கிராமுக்கு ரூ.130-ம், சவரனுக்கு ரூ.1,040-ம் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.10 ஆயிரத்து 770-க்கும், ஒரு சவரன் ரூ.86 ஆயிரத்து 160-க்கும் விற்பனை செய்யப்பட்டது.



    இதன்மூலம் தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டி இருக்கிறது. பொருளாதார மந்த நிலையில், தங்கத்தின் தேவை அதிகரிப்பு, டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவு போன்றவற்றால் விலை உயருகிறது. இந்த மாதத்தில் மட்டும், அதாவது கடந்த 1-ந் தேதியில் இருந்து நேற்று வரை கிராமுக்கு ரூ.1,065-ம், சவரனுக்கு ரூ.8,520-ம் உயர்ந்துள்ளது.

    இதனை தொடர்ந்து, மாத இறுதி நாளான இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 90 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.10,860-க்கும் சவரனுக்கு 720 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.86,880-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    வெள்ளி விலையும் அதிரடியாக உயர்ந்து புதிய உச்சத்தில் விற்பனை செய்யப்படுகிறது. இன்று கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 161 ரூபாய்க்கும் கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து 61 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    29-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.86,160

    28-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.85,120

    27-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.85,120

    26-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.84,400

    25-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.84,080

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    29-09-2025- ஒரு கிராம் ரூ.160

    28-09-2025- ஒரு கிராம் ரூ.159

    27-09-2025- ஒரு கிராம் ரூ.159

    26-09-2025- ஒரு கிராம் ரூ.153

    25-09-2025- ஒரு கிராம் ரூ.150

    • தமிழக அரசியல், பொது நிகழ்வுகள்...
    • சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.

    தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...

    • மதுரை மீனாட்சி அம்மன் கொலு மண்டபத்தில் சிவபூஜை செய்தருளல்.
    • திருமாலிருஞ்சோலை கள்ளழகர் புறப்பாடு.

    இந்த வார விசேஷங்கள்

    30-ந் தேதி (செவ்வாய்)

    * துர்க்காஷ்டமி.

    * கரூர் தான்தோன்றி கல்யாண வேங்கடேசர் திருக்கல்யாணம், இரவு புஷ்பக விமானத்தில் பவனி.

    * குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கமல வாகனத்தில் கஜலட்சுமி கோலத்துடன் காட்சி.

    * மதுரை மீனாட்சி அம்மன் கொலு மண்டபத்தில் மகிஷாசுரமர்த்தினி அலங்கார காட்சி.

    * கீழ்நோக்கு நாள்.

    1-ந் தேதி (புதன்)

    * சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை.

    * திருப்பதி பெருமாள் ரத உற்சவம்.

    * குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் அன்ன வாகனத்தில் கலைமகள் கோலத்துடன் காட்சி.

    * மதுரை மீனாட்சி அம்மன் கொலு மண்டபத்தில் சிவபூஜை செய்தருளல்.

    * மேல்நோக்கு நாள்.

    2-ந் தேதி (வியாழன்)

    * விஜயதசமி.

    * குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் தசரா திருவிழா.

    * மதுரை கள்ளழகர் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளி அம்பு விடும் காட்சி.

    * திருப்பதி ஏழுமலையான் பல்லக்கில் உற்சவம்.

    * மேல்நோக்கு நாள்.

    3-ந் தேதி (வெள்ளி)

    * சர்வ ஏகாதசி.

    * மதுரை தல்லாகுளம் பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் சப்தாவர்ணம்.

    * திருமாலிருஞ்சோலை கள்ளழகர் புறப்பாடு.

    * திருவரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி அலங்கார திருமஞ்சனம்.

    * மேல்நோக்கு நாள்.

    4-ந் தேதி (சனி)

    * சனிப் பிரதோஷம்.

    * மதுரை பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் தெப்ப உற்சவம்.

    * திருப்பதி ஏழுமலையான் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல்.

    * குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் சிறப்பு அபிஷேகம்

    * மேல்நோக்கு நாள்

    5-ந் தேதி (ஞாயிறு)

    * திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் சபாபதி அபிஷேகம்.

    * கரூர் தான்தோன்றி கல்யாண வேங்கடேசப் பெருமாள் காலை பல்லக்கிலும், இரவு வெள்ளி கருடன் வாகனத்திலும் திருவீதி உலா.

    * கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதி எதிரில் அனுமானுக்கு அலங்கார திருமஞ்சனம்.

    * மேல்நோக்கு நாள்.

    6-ந் தேதி (திங்கள்)

    * பவுர்ணமி.

    * சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.

    * திருவைகுண்டம் கள்ளபிரானுக்கு பால் அபிஷேகம்.

    * திருப்பதி ஏழுமலையான் மைசூர் மண்டபம் எழுந்தருளல்.

    * மேல்நோக்கு நாள்.

    • செப்டம்பர் வரையில் பெய்யக்கூடிய மழை அளவைத்தான் தென்மேற்கு பருவமழை காலத்தில் பதிவு செய்யப்படுகிறது.
    • கடந்த ஆண்டும் நெல்லையில் 249 சதவீதம் இயல்பைவிட அதிக மழை பதிவாகியிருந்தது.

    சென்னை:

    தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் 1-ந்தேதி தொடங்கி செப்டம்பர் மாதம் 30-ந்தேதி வரை கணக்கில் கொள்ளப்படுகிறது. இந்த பருவமழை முற்றிலும் நீங்க, அக்டோபர் மாதம் 2-வது வாரம் வரை காலம் எடுத்துக் கொண்டாலும், செப்டம்பர் வரையில் பெய்யக்கூடிய மழை அளவைத்தான் தென்மேற்கு பருவமழை காலத்தில் பதிவு செய்யப்படுகிறது.

    அந்த வகையில் தென்மேற்கு பருவமழை காலங்களில் தமிழ்நாடு, புதுச்சேரி பெறக்கூடிய மொத்த மழை என்பது 32.8 செ.மீ. ஆகும். இது இயல்பான மழை அளவு. அதன்படி, கடந்த ஜூன் 1-ந்தேதியில் இருந்து நேற்று வரையிலான (செப்டம்பர் 29-ந்தேதி) நிலவரப்படி, 32.5 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. அதாவது இயல்பைவிட ஒரு சதவீதம் அதிகமாக மழை கிடைத்திருக்கிறது.

    இதில் அதிகபட்சமாக நெல்லை மாவட்டத்தில் இயல்பைவிட 250 சதவீதம் அதிகம் மழை பெய்திருந்தது. இந்த காலக்கட்டத்தில் அங்கு 8.9 செ.மீ. மழை பதிவாகும். ஆனால் 31.3 செ.மீ. மழை பெய்திருந்தது. கடந்த ஆண்டும் நெல்லையில் 249 சதவீதம் இயல்பைவிட அதிக மழை பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    அதற்கடுத்தபடியாக, தென்காசி மாவட்டத்தில் 55 சதவீதமும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 79 சதவீதமும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 46 சதவீதமும், கோவை மாவட்டத்தில் 39 சதவீதமும் மழை பதிவாகி உள்ளது. இதுதவிர, அரியலூர் (+6 சதவீதம்), சென்னை (+30 சதவீதம்), கடலூர் (+14 சதவீதம்), நீலகிரி (+13 சதவீதம்), சிவகங்கை (+4 சதவீதம்), தஞ்சாவூர் (+7 சதவீதம்), தேனி (+10 சதவீதம்),

    திருப்பத்தூர் (+21 சதவீதம்), திருவள்ளூர் (+33 சதவீதம்), திருவண்ணாமலை (+9 சதவீதம்), திருவாரூர் (+9 சதவீதம்), வேலூர் (+36 சதவீதம்), விழுப்புரம் (+18 சதவீதம்) மாவட்டங்களில் இயல்பைவிட அதிகமாகவும் மழை பெய்துள்ளது.

    மேலும், செங்கல்பட்டு (-7 சதவீதம்), தர்மபுரி (-21 சதவீதம்), திண்டுக்கல் (-41 சதவீதம்), ஈரோடு (-26 சதவீதம்), கள்ளக்குறிச்சி (-31 சதவீதம்), காஞ்சீபுரம் (-3 சதவீதம்), கன்னியாகுமரி (-1 சதவீதம்), கரூர் (-35 சதவீதம்), கிருஷ்ணகிரி (-17 சதவீதம்), மதுரை (-24 சதவீதம்), நாகப்பட்டினம் (-22 சதவீதம்), நாமக்கல் (-31 சதவீதம்), பெரம்பலூர் (-2 சதவீதம்), புதுக்கோட்டை (-6 சதவீதம்), ராமநாதபுரம் (-48 சதவீதம்), சேலம் (-15 சதவீதம்),

    திருப்பூர் (-59 சதவீதம்), தூத்துக்குடி (-62 சதவீதம்), திருச்சி (-26 சதவீதம்), விருதுநகர் (-46 சதவீதம்) ஆகிய 20 மாவட்டங்களில் குறைவான மழை பதிவாகியிருக்கிறது. தமிழ்நாட்டைத் தவிர, புதுச்சேரியில் 51 சதவீதமும், காரைக்காலில் 32 சதவீதமும் அதிகமாக இந்த பருவமழையில் மழை பெய்துள்ளது.

    பொதுவாக தென்மேற்கு பருவமழையை காட்டிலும், வடகிழக்கு பருவமழை காலத்தில்தான் தமிழகம் அதிக மழையை பெறும். அடுத்த மாதம் (அக்டோபர்) 3-வது வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது.

    • விஜய் பிரசாரத்தின் போது காவல்துறை எச்சரித்தும் விதிகளை பின்பற்றவில்லை என த.வெ.க. நிர்வாகிகள் மீது குற்றம்சாட்டப்பட்டது.
    • த.வெ.க. கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன் நேற்று கைது செய்யப்பட்டார்.

    கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27-ந் தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 41 பேர் பலியானார்கள்.

    இந்த சம்பவம் தொடர்பாக கரூர் டவுன் போலீஸ் நிலையத்தில் த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், மாநில இணை செயலாளர் நிர்மல்குமார், கரூர் மேற்கு மாவட்ட த.வெ.க. செயலாளர் மதியழகன் மற்றும் சிலர் மீது முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்.) பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    அவர்கள் மீது 5 பிரிவுகளில் பதிவு செய்யப்பட்ட இந்த முதல் தகவல் அறிக்கை கரூர் ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு எண்-1 கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

    அதில், விஜய் பிரசாரத்தின் போது காவல்துறை எச்சரித்தும் விதிகளை பின்பற்றவில்லை என த.வெ.க. நிர்வாகிகள் மீது குற்றம்சாட்டப்பட்டது.

    இந்த நிலையில், த.வெ.க. கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன் நேற்று கைதான நிலையில், மேலும் ஒரு நிர்வாகி தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

    கரூர் சம்பவம் தொடர்பாக த.வெ.க. கரூர் தெற்கு நகரப் பொருளாளர் பவுன்ராஜை, நகர காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தநிலையில், தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். 

    • சிறப்பு மந்திரங்களை உச்சரிப்பதன் மூலம் நவராத்திரி விரதத்தை நிறைவு செய்யலாம்.
    • நவதுர்க்கை எனப்படும் ஒன்பது வடிவங்களில் துர்க்கை தேவி தன்னை வெளிப்படுத்துகிறாள்.

    நவராத்திரியின் ஒவ்வொரு நாளுக்கும் உரிய 9 துர்கை தெய்வங்களின் மந்திரங்கள், ஸ்லோகங்கள் மற்றும் போற்றிகள் அந்தந்த தெய்வங்களின் அருளைப் பெற உதவும்.

    ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட துர்கை ரூபத்தை வழிபட்டு, அவர்களின் சிறப்பு மந்திரங்களை உச்சரிப்பதன் மூலம் நவராத்திரி விரதத்தை நிறைவு செய்யலாம்.

    நவதுர்க்கை எனப்படும் ஒன்பது வடிவங்களில் துர்க்கை தேவி தன்னை வெளிப்படுத்துகிறாள். நவராத்திரியில் மா துர்க்கையின் இந்த ஒன்பது வடிவங்களில் ஒன்று ஒவ்வொரு நாளும் வழிபாடு செய்யப்படுகிறது.

    அதன்படி, நவராத்திரியின் ஒன்பதாம் நாளான இன்று சித்திதாத்ரி தேவி வணங்கப்படுகிறாள். துர்கா தேவியின் 9வது அம்சமான சித்திதாத்ரி தேவியை தியானிக்கவும், அவளுடைய நற்கருணையைப் பெறவும் உதவுகிறது.

    மந்திரங்கள்:

    ஓம் தேவி ஸித்திதாத்ர்யை நமஃ.

    ஓம் ஹ்ரீம் ஶ்ரீம் ஸித்திதாத்ர்யை நமஃ.

    இந்த நாள் பக்தர்களுக்கு வெற்றிகளையும், செல்வத்தையும், செழிப்பையும் தரக்கூடியதாகக் கருதப்படுகிறது. 

    • சித்திதாத்ரி தேவி நவராத்திரியில் வழிபடப்படும் துர்கையின் ஓர் சக்தி வடிவமாகும்.
    • சித்திதாத்ரி என்பது பக்தர்களுக்கு அனைத்து சித்திகளையும் தருபவர் என்று பொருள்படும்.

    நவராத்திரி என்பது 9 நாட்கள் கொண்ட பண்டிகையாகும். நவராத்திரி பார்வதி/சக்தியின் ஒன்பது வடிவங்களை வழிபடும் புண்ணிய காலம். நவ - ஒன்பது, ராத்திரி - இரவு. ஒன்பது இரவுகள் - பத்து நாட்கள் நடைபெறும் திருவிழா.

    இந்தக்காலத்தில் துர்கை, லட்சுமி, சரஸ்வதி ஆகிய தேவிகளின் வித்தியாசமான வடிவங்கள் வழிபடப்படுகின்றன. துர்கை அம்மன் அசுரர்களை வதம் செய்து உலகை காப்பாற்றிய வெற்றி நினைவாகக் கொண்டாடப்படுகிறது.

    அனைத்து வடிவங்களிலும் பெண் சக்தியின் அடையாளமாகவும் இருக்கிறார். நவராத்திரியில் தெய்வத்தின் ஒவ்வொரு அவதாரத்தையும் தனித்தனி நாளில் கொண்டாடுகிறோம். நவராத்திரியின் ஒவ்வொரு நாளும் ஒரு தேவிக்கு அர்ப்பணிக்கப்படுகிறது.

    நவராத்திரியின் 9-வது நாளான இன்று வழிபட வேண்டிய தெய்வம் 'சித்திதாத்ரி தேவி'. சித்திதாத்ரி தேவி நவராத்திரியில் வழிபடப்படும் துர்கையின் ஓர் சக்தி வடிவமாகும். சித்திதாத்ரி என்பவர் பார்வதி தேவியின் ஒன்பதாவது மற்றும் இறுதி வடிவமான நவதுர்க்கைகளில் ஒருவர்.

    "சித்தி" என்றால் சக்தி அல்லது படைப்பு, இருப்பின் இறுதி மூலத்தை உணரும் திறன், "தாத்ரி" என்றால் கொடுப்பவர் அல்லது தருபவர் எனப் பொருள்படும்.

    எனவே, சித்திதாத்ரி என்பது பக்தர்களுக்கு அனைத்து சித்திகளையும் தருபவர் என்று பொருள்படும். இவர் நவராத்திரியின் இறுதி நாளான நவமி அன்று வணங்கப்படுகிறார்.

    சித்திதாத்ரி தேவி பக்தர்களுக்கு அனைத்து தெய்வீக விருப்பங்களையும் பூர்த்தி செய்து, வாழ்வின் வெற்றியை அருள்பவள்.

    சித்திதாத்ரி தேவி கதை:

    பிரபஞ்சம் படைக்கப்படுவதற்கு முன்னர் எதுவுமே இல்லாமல் இருந்தது. இந்த நேரத்தில்தான் சித்திதாத்ரி, இந்து மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவன் ஆகியோரை உருவாக்கி, அவர்களுக்கு முறையே படைப்பு, காத்தல் மற்றும் அழித்தல் பணியை வழங்கினார்.

    அந்த தெய்வங்களுக்கு தத்தம் கடமைகள் கொடுக்கப்பட்டபோதும், பிரபஞ்ச படைப்பு நடைபெற வேண்டுமெனில் அஷ்டசித்திகள் (அனிமா, மகிமா, கரிமா, லகிமா, பிராக்யம், பிராகாம்யம், ஈஷித்துவம், வசித்துவம்) தேவைப்பட்டது. அந்த சித்திகளை தெய்வங்களுக்கு அருளியதே சித்திதாத்ரி தேவி.

    புராணக் கதையின்படி, சித்திதாத்ரி தேவியே சிவபெருமானுக்கே அஷ்டசித்திகளை அருளினாள்.

    மூன்று பிரபுக்களும், மகாதேவியின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி, தங்கள் சக்திகளை அடைய ஆழ்ந்த தவம் செய்ய கடலை நோக்கிச் சென்றனர். அவர்களின் அர்ப்பணிப்பால் திருப்தியடைந்த சித்திதாத்ரி, அவர்கள் அனைவருக்கும் வெவ்வேறு சித்திகளை வழங்கினார். இப்படித்தான் பிரபஞ்சம் மும்மூர்த்தியால் வடிவமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டது.

    சிவபெருமான் மிகுந்த தவம் செய்து தேவியைத் தரிசித்தார். அப்போது சித்திதாத்ரி தேவியே அவருக்கு அஷ்டசித்திகளை அருளினாள். அந்த அருளால்தான் சிவன் அர்த்தநாரீசுவரன் (அரை ஆண் – அரை பெண்) வடிவில் வெளிப்பட்டார். இதனால் பிரபஞ்சத்தில் ஆண் – பெண் சமநிலை உருவானது. இந்த வடிவத்தில், சிவபெருமானின் உடலின் ஒரு பாதியும், சித்திதாத்ரியின் மறுபாதியும் ஒன்றிணைந்து, பிரபஞ்சத்தில் மிகவும் சக்திவாய்ந்த வடிவத்தை உருவாக்குகின்றன. அதனால் தான், சித்திதாத்ரி தேவியை சகல சித்திகளின் தாயான தேவி என்கிறார்கள்.

    சித்திதாத்ரி தேவி நான்கு கரங்கள் உடையவள். சங்கு, சக்கரம், கதை, தாமரை ஆகியவற்றை தாங்கியவள். இவரது முகத்தில் எப்போதும் சாந்தமும் ஆனந்தமும் நிறைந்திருக்கும்.

    ஸ்லோகம்:

    "ஓம் தேவி சித்திதாத்ரியாயை நமஹ" என்று ஜபிக்க வேண்டும்.

    • வாழ்வில் முழுமை நிலையை பெறுவதுடன், போதும் என்ற நிறைவான நிம்மதியான மனதையும் இந்த அம்பிகை வழங்குகிறாள்.
    • தாமரை மலர் கொண்டும், மரிக்கொழுந்து இலை கொண்டும் அர்ச்சனை செய்யலாம்.

    நவராத்திரி விழாவில் தேவியை ஒன்பதாவது நாளில் நாம் சித்திதாத்ரி என்ற பெயரில் வழிபடுகிறோம். சித்தி என்றால் வெற்றி என்று பொருள் என்பது அனைவருக்கும் தெரியும். தாத்ரி என்றால் தருபவள் என்று பொருள். சித்திதாத்ரி என்றால் அனைத்திலும் வெற்றியை தருபவள் என பொருள்.

    நவராத்திரியின் 9 ஆம் நாளில் அம்பிகையை மகேஸ்வரி என்ற ரூபத்திலும், நவதுர்க்கை வழிபாட்டில் சித்திதாத்ரி என்ற பெயரிலும் வழிபடுகிறோம். இன்று தாமரை வகை கோலமிட்டு அம்பிகையை வழிபடலாம். தாமரை மலர் கொண்டும், மரிக்கொழுந்து இலை கொண்டும் அர்ச்சனை செய்யலாம்.

    சித்திதாத்ரி தேவியை வழிபடுவதால் வாழ்வில் முழுமை நிலையை பெறுவதுடன், போதும் என்ற நிறைவான நிம்மதியான மனதையும் இந்த அம்பிகை வழங்குகிறாள். வாழ்க்கையில் எல்லாம் கிடைத்து விட்டது என்றால், அதற்கு பிறகு ஒவ்வொரு மனிதனும் வேண்டுவது மன நிம்மதியை தான். அந்த நிறைவான நிம்மதியை இந்த அம்பிகை நமக்கு அருள்வாள்.

    இத்தகைய சிறப்பு வாய்ந்த நவராத்திரியின் ஒன்பதாம் நாளில் பக்தர்கள் இளஞ்சிவப்பு நிறத்திலான ஆடை அணிய வேண்டும். இளஞ்சிவப்பு நிறம் அன்றைய நாளில் நம்பிக்கை, எழுச்சி மற்றும் அன்பு மற்றும் நல்லிணக்கத்தை வரையறுக்கிறது. நவராத்திரி கொண்டாட்டத்தின் போது இளஞ்சிவப்பு நிறத்தை அணிவது உங்களை வசீகரமாகவும் அணுகக்கூடியதாகவும் ஆக்குகிறது. அதே நேரத்தில் உலகளாவிய அன்பின் அருளையும் உங்களுக்கு வழங்குகிறது.

    • முதலில் பிள்ளையாருக்கு 16 போற்றிகளை சொல்லவும்.
    • ஒவ்வொரு நாளும் இப்படி தொடங்கி 9 நாட்களும் போற்றி பாடுவது நல்லது.

    நவம் என்றால் ஒன்பது. ராத்திரி என்றால் இரவு நேரம். முன்னிரவில் சக்தியை முறையோடு ஆராதித்து மகிழ்விப்பதே நவராத்திரி. பொதுவாக இப்பண்டிகையை புரட்டாசி மாதம் அமாவாசைக்கு மறுநாள் தொடங்கி ஒன்பது நாட்களும் 10-வது நாள் விஜயதசமி என்றும் கொண்டாட வேண்டும். இது பொதுவான விதியாக இருக்கிறது.

    முதலில் நமது விருப்பப்படி வீட்டில் உள்ள கொலு பொம்மைகளை வரிசைப்படுத்தி கொலு வைத்துவிட வேண்டும்.

    பின்னர், அம்மனை எழுந்தருளச் செய்து விட்டு, விக்னங்கள் இன்றி இந்தப் பூஜை நிறைவு பெற ஒன்பது நாட்களும் எந்த விதமான இடையூறும் வராமல் இருக்க விநாயக வணக்கம் சொல்ல வேண்டும்.

    விநாயகரை நினைத்து நமஸ்காரம் செய்யவும். அம்மன் எழுந்தருளல் முடிந்த உடன் நவராத்திரிக்கு உரிய பூஜையைத் தொடங்க வேண்டும்.

    முதலில் பிள்ளையாருக்கு 16 போற்றிகளை சொல்லவும். ஒவ்வொரு நாளும் இப்படி தொடங்கி 9 நாட்களும் போற்றி பாடுவது நல்லது. 9 நாட்களுக்குரிய போற்றி பாடல்களில் ஒன்பதாவது நாளான இன்றைய போற்றி பாடலை பார்ப்போம்..

    ஒன்பதாம் நாள் போற்றி

    ஓம் ஓங்காரத்துப் பொருளே போற்றி

    ஓம் ஊனாகி நின்ற உத்தமியே போற்றி

    ஓம் படைத்தோன் பாகம் பிரியாய் போற்றி

    ஓம் அடியவர்க்கு மங்களம் அருள்வாய் போற்றி

    ஓம் முக்கோணத்துள் உள்ள மூர்த்தமே போற்றி

    ஓம் ரீங்காரம் தன்னில் இருப்பவளே போற்றி

    ஓம் நாற்பத்து முக்கோண நாயகியே போற்றி

    ஓம் சொற்பொருள் சுவைதனைத் தந்தாய் போற்றி

    ஓம் ஆறாது தத்துவம் அருளினாய் போற்றி

    ஓம் பளிங்கு ஒளியாய் நின்ற பரமே போற்றி

    ஓம் ஓசை விந்துநாத உட்பொருளாய் போற்றி

    ஓம் அகண்ட பூரணி அம்மா போற்றி

    ஓம் உண்ணும் சிவயோக உத்தமியே போற்றி

    ஓம் பண் மறைவேதப் பாசறையே போற்றி

    ஓம் மாகேஸ்வரியே மங்கள உருவே போற்றி

    ஓம் சாம்பவி சங்கரித் தேவியே போற்றி! போற்றி..!!

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    தெய்வீக சிந்தனை மேலோங்கும் நாள். சொத்துப் பிரச்சனை சுமூகமாக முடியும். நினைத்த காரியம் நினைத்தபடியே நிறைவேறும். நல்லவர்களின் தொடர்பு நீடிக்கும்.

    ரிஷபம்

    ஆலய வழிபாட்டில் அமைதி காண வேண்டிய நாள். வருமானப்பற்றாக்குறை ஏற்படும். தொழில் பங்குதாரர்கள் தொல்லை தருவர். பயணங்களை மாற்றியமைப்பீர்கள்.

    மிதுனம்

    உடன்பிறப்புகளின் ஒத்துழைப்பு கிடைத்து மகிழும் நாள். தொழில் முன்னேற்றப் பாதையை நோக்கி செல்லும். உத்தியோகத்தில் திடீரென எந்த அவசர முடிவும் எடுக்க வேண்டாம்.

    கடகம்

    எதிரிகள் உதிரியாகும் நாள். எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரிய பேச்சுகள் கைகூடும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள்.

    சிம்மம்

    ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய நாள். நிம்மதிக்காக ஆலயத்தை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும்.

    கன்னி

    குறைகள் அகல கோவில் வழிபாட்டை மேற்கொள்ள வேண்டிய நாள். உத்தியோகத்தில் பதவி உயர்வின் காரணமாக குடும்பத்தை விட்டுப் பிரிந்து பணிபுரிய நேரிடலாம்.

    துலாம்

    சந்தித்தவர்களால் சந்தோஷம் கிடைக்கும் நாள். குடும்பச்சுமை கூடும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர்.

    விருச்சிகம்

    தொழில் வளர்ச்சிக்கு துர்க்கையை வழிபட வேண்டிய நாள். எண்ணங்கள் எளிதில் நிறைவேறும். வருமானம் உயரும். புண்ணிய காரியங்களுக்கு கொடுத்து உதவுவீர்கள்.

    தனுசு

    யோசித்து செயல்பட வேண்டிய நாள். பயணங்களை மாற்றியமைக்க நேரிடும். உத்தியோகத்தில் உங்கள் முன்னேற்றத்தைப் பற்றி மற்றவர்களிடம் விமர்சிக்க வேண்டாம்.

    மகரம்

    தடைகள் அகலும் நாள். காணாமல் போன பொருள் ஒன்று கைக்கு கிடைக்கலாம். செலவுகளைக் குறைத்து சேமிப்பை உயர்த்துவதில் அக்கறை காட்டுவீர்கள்.

    கும்பம்

    நல்ல காரியம் இல்லத்தில் நடைபெறும் நாள். தொழிலில் இருந்த குறுக்கீடுகள் அகலும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் மனதில் இடம் பெறுவீர்கள். வரன்கள் வாயில் தேடிவரும்.

    மீனம்

    முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் நாள். வீட்டுத் தேவைகளை பூர்த்தி செய்ய கூடுதல் செலவு செய்வீர்கள். உத்தியோகத்தில் நல்ல நிறுவனங்களில் பணிபுரிய அழைப்புகள் வரலாம்.

    • சென்னையில் இருந்து ஜித்தாவுக்கு நேரடியாக ஹஜ் பயணம் செல்லலாம் என்று சவுதி அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.
    • மதினாவில் இருந்து சென்னைக்கு நேரடியாக ஜூன் 5-ந்தேதியில் இருந்து 8-ந் தேதி வரை பயணம் மேற்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    இந்தியாவில் இருந்து ஹஜ் பயணத்துக்கு இந்தமுறை பலர் பதிவு செய்து உள்ளனர். அதில் தமிழ்நாட்டில் இருந்து மட்டும் 5,870 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இவர்கள் அனைவரும் அடுத்த ஆண்டு (2026) மே மாதம் 17-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை சவுதி அரேபியா ஏர்லைன்ஸ் மூலம் சென்னையில் இருந்து ஜித்தாவுக்கு நேரடியாக ஹஜ் பயணம் செல்லலாம் என்று சவுதி அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.

    அதேபோன்று மறுமார்க்கமாக மதினாவில் இருந்து சென்னைக்கு நேரடியாக ஜூன் 5-ந்தேதியில் இருந்து 8-ந் தேதி வரை பயணம் மேற்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த தகவலை இந்திய ஹஜ் அசோசியேசன் தலைவர் பிரசிடெண்ட் அபூபக்கர் தெரிவித்துள்ளார்.

    ×