என் மலர்
தலைப்புச்செய்திகள்
- தி.மு.க.வுக்கு எதிரான விமர்சனங்களையும் முன்னெடுக்கும் வகையில் தேர்தல் பணியை தொடங்கியுள்ளன.
- மதுரையில் இருந்து தொடங்கி வருகிற 17-ந்தேதி நெல்லையில் முடிக்க திட்டமிட்டுள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்களது கொள்கைகள், தேர்தல் வாக்குறுதிகள் தொடர்பாக மக்களை சந்தித்து பிரசாரம் செய்ய தற்போது தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க., காங்கிரஸ், த.வெ.க., நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் தமிழகம் முழுவதும் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடம் நேரில் சென்று ஆதரவு திரட்டும் பணியில் தீவிரம் காட்டி வருகிறது.
தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு க ஸ்டாலின் பல்வேறு மாவட்டங்களில் தீவிர சுற்றுப்பயணம் செய்து அரசின் நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதுடன் தி.மு.க.வுக்கும் ஆதரவு திரட்டி வருகிறார். அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்ற தொகுதி வாரியாக தமிழகத்தை மீட்போம் மக்களை காப்போம் என்கிற பிரசாத பயணத்தை நடத்தி வருகிறார். த.வெ.க. தலைவர் விஜய் ஒவ்வொரு சனிக்கிழமை தோறும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தி வந்த நிலையில் கரூர் சம்பவத்தையடுத்து அவரது சுற்றுப்பயணம் சில வாரங்கள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள பா.ஜ.க.வும் தமிழகத்தில் மக்களை சந்தித்து மத்திய அரசின் திட்டங்களையும் மாநில அரசின்குறைபாடு களையும் தி.மு.க.வுக்கு எதிரான விமர்சனங்களையும் முன்னெடுக்கும் வகையில் தேர்தல் பணியை தொடங்கியுள்ளன.
மதுரையில் நாளை மாலை பா.ஜ.க.வின் தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் என்ற பெயரில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இந்த பிரசார சுற்றுப்பயணத்தை மதுரையில் இருந்து தொடங்கி வருகிற 17-ந்தேதி நெல்லையில் முடிக்க திட்டமிட்டுள்ளார்.
இதற்காக மதுரை அண்ணாநகர் அம்பிகா தியேட்டர் சந்திப்பில் இந்த நிகழ்ச்சி நடத்த போலீசார் அனுமதி வழங்கி உள்ளனர். அங்கு தொடக்க விழா நிகழ்ச்சி நடக்கிறது.
முதல் கட்ட பிரசார சுற்றுப் பயணத் தொடக்க நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்கிறார். பா.ஜ.க.வின் கூட்டணி கட்சியான அ.தி.மு.க.வின் பிரசார சுற்றுப்பயணத்தின் தொடக்க விழாவில் பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்ததுடன் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.
அந்த வகையில் பா.ஜ.க. பிரசார பயணத்தின் தொடக்க நிகழ்ச்சியில் அ.தி.மு.க.வினர் பங்கேற்க இருக்கிறார்கள். இது தொடர்பாக அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி மதுரை மாநகர், மதுரை புறநகர், மதுரை புறநகர் மேற்கு கழகத்தில் மதுரை புறநகர் மேற்கு மற்றும் அண்டை மாவட்ட அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் முக்கிய நிர்வாகிகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு உத்தரவிட்டுள்ளார்
பா.ஜ.க. பிரசார பயணத்தில் அ.தி.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சியினரும் பங்கேற்பதால் பா.ஜ.க.வினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.
- ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.
- பிரான்சின் ஆர்தர் ரிண்டர்நெக் அரையிறுதிச் சுற்றில் வெற்றி பெற்றார்.
பீஜிங்:
ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டம் ஒன்றில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், பிரான்ஸ் வீரர் ஆர்தர் ரிண்டர்நெக் உடன் மோதினார்.
இதில் மெத்வதேவ் 6-4, 2-6, 4-6 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
மற்றொரு அரையிறுதியில் செர்பியாவின் ஜோகோவிச் 3-6, 4-6 என்ற செட் கணக்கில் மொனாக்கோவின் வேலண்டினிடம் தோல்வி அடைந்தார்.
நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் பிரான்ஸ் வீரர் ஆர்தர் ரிண்டர்நெக், மொனாக்கோவின் வேலண்டின் உடன் மோதுகிறார்.
அஜய் அர்ஜுன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் டாக்டர் அர்ஜுன் தயாரிப்பில் அஜயன் பாலா இயக்கத்தில் ஸ்ரீராம் கார்த்திக் நடிப்பில் தயாராகி இருக்கும் படம் 'மைலாஞ்சி'.
திரைப்படத்தின் இசை மற்றும் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா பாடல்களை எழுதி இசையமைக்க இயக்குநர் வெற்றிமாறன் வழங்குகிறார்.
இந்நிகழ்வில் அகிலா பாலுமகேந்திரா மற்றும் இசைக்கலைஞர் கங்கை அமரன் ஆகியோர் இசை மற்றும் டீசரை வெளியிட, சிறப்பு விருந்தினர்களாக படக்குழுவினருடன் கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குநர்கள் ஆர். வி. உதயகுமார், பேரரசு, ஏ. எல். விஜய், மீரா கதிரவன், காவல்துறை உயரதிகாரி தினகரன் (ஏடிஜிபி) ஆகியோர் பெற்றுக் கொண்டனர். டிரென்ட் மியூசிக் நிறுவனம் 'மைலாஞ்சி' பாடல்களை வெளியிட்டுள்ளது.
ஸ்ரீராம் கார்த்திக் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை க்ருஷா குரூப் நடித்திருக்கிறார். இவர்களுடன் முனீஷ்காந்த், சிங்கம் புலி, தங்கதுரை உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஒளிப்பதிவு மேதை செழியன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
இந்நிகழ்ச்சியில் இயக்குநர் மிஷ்கின் பேசியதாவது:-
நான் சினிமாவில் வந்ததற்கு அஜயன் பாலாவும் ஒரு காரணம். அன்பான மனிதர், பண்பான மனிதர். அதனால் அவருக்கு சினிமா வாய்ப்பு எளிதாக கிடைக்கவில்லை. உண்மையை சொல்ல வேண்டுமென்றால் எனக்கு முன்னால், வெற்றிமாறனுக்கு முன்னால், அஜயன் பாலா இயக்குநராகி இருக்க வேண்டும்.
இந்த படத்தில் எனக்கு மிகவும் பிடித்த விஷயம் இசைஞானி இளையராஜாவை இணைத்துக் கொண்டது தான். இந்தப் படத்தின் பாடல்களை கேட்டேன், பார்த்தேன். சில இடங்களில் அவருடைய தனித்துவம் தெரிந்தது.
கடந்த 30 வருடமாக இந்த சினிமாவில் நான் புரிந்து கொண்ட விஷயத்தை பகிர்ந்து கொள்கிறேன். உங்கள் அனைவருக்கும் முக்கோணம் என்ற ஒரு வடிவத்தை பற்றி தெரிந்திருக்கும். அதில் ஐந்து வகையான முக்கோணங்கள் இருக்கிறது என்பார்கள், மூன்று பக்கமும் ஒரே அளவுள்ள முக்கோணம் தான் தனித்துவமானது. அதேபோன்றுதான் இந்த சினிமா. தயாரிப்பாளர் - கதாசிரியர் & இயக்குநர் - தொழில்நுட்பக் கலைஞர்கள்- என இந்த மூவரும் சமமாக இருந்தால் படைப்பு நன்றாக இருக்கும்.
எங்கள் காலத்தில் சினிமா என்பது ஒரு கனவாகவே இருந்தது. ஆனால் இப்போது அப்படி அல்ல. 365 திரைப்படங்கள் உருவான இந்த தமிழ் சினிமாவில் தற்போது 35 திரைப்படங்கள் தான் உருவாகின்றன. ஐந்து படங்கள் தான் வெற்றி பெறுகின்றன. அடுத்த தலைமுறை சினிமாவிற்கு வரும் தயாரிப்பாளர்கள் ஒரு மூன்று படங்களை உருவாக்குவதற்கான திட்டமிடலுடன் வர வேண்டும். முதல் படம் அனுபவம். இரண்டாவது படம் எப்படி தோல்வி அடையாமல் படம் தயாரிப்பது, எப்படி வெற்றி பெறுவது என்று அனுபவத்தை தரும். மூன்றாவது படத்தில் பொருத்தமான நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோரை தேர்வு செய்து வெற்றி படத்தை எப்படி அளிக்க வேண்டும் என்ற அனுபவத்தை பெறுவார்கள். இது என்னுடைய கணிப்பு.
இவ்வாறு கூறினார்.
- நான் ரகோபூரில் போட்டியிட்டால், தேஜஸ்வி இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவார்.
- அப்படி போட்டியிட்டால் அமேதி தொகுதியில் ராகுல் காந்திக்கு நடந்தது தேஜஸ்விக்கு நடக்கும்.
பீகார் தேர்தலில், தேர்தல் வியூகம் வகுப்பாளரான பிரஷாந்த் கிஷோர் தொடங்கியுள்ள ஜன் சுராஜ் கட்சியில் களம் இறங்குகிறது.
இங்குள்ள ரகோபூர் சட்டமன்ற தொகுதி, லாலு பிரசாத் குடும்பத்தின் பாரம்பரிய தொகுதியாகும். இந்த தொகுதியில் லாலு பிரசாத் யாதவ் இரண்டு முறை வெற்றி பெற்றுள்ளார். அவரது மனைவி ராப்ரி தேவி மூன்று முறை வெற்றி பெற்றுள்ளார். இருவரும் முதல்வராக இருந்துள்ளனர். இவர்களது மகன் தேஜஸ்வி யாதவ் 2015 மற்றும் 2020-ல் வெற்றி பெற்றுள்ளார். துணை முதல்வராக இருந்துள்ளார். தற்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்து வருகிறார்.
இந்த தொகுதியில் போட்டியிட இருப்பதாக பிரஷாந்த் கிஷோர் சூசகமாக தெரிவித்துள்ளார். இங்கு நான் போட்டியிட்டால், தேஜஸ்வி யாதவ் இரண்டு தொகுதியில் போட்டியிடுவார். ராகுல் காந்தி அமேதி தொகுதியில் எதிர்கொண்டதை, தேஜஸ்வி யாதவ் எதிர்கொள்வார்" என்றார்.
ராகுல் காந்தி 2010 மக்களவை தேர்தலில் அமேதி மற்றும் வயநாடு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். அமேதி தொகுதியில் ஸ்மிரிதி இரானியிடம் தோல்வியடைந்தார். இதைத்தான் அவ்வாறு தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் செய்தியாளராக வேலை பார்த்து வருகிறார் ரம்யா பாண்டியன். ஒருநாள் இவருக்கு மர்ம நபரிடம் இருந்து இமெயில் ஒன்று வருகிறது. அதில் இன்னும் சில நாட்களில் வார் ஒன்று நடக்க போகிறது என்று இருக்கிறது. இதை பார்த்த ரம்யா பாண்டியன், உடனே அதை செய்தியாக்கி வெளியிடுகிறார்.
இதற்கு பல எதிர்ப்புகள் வருகிறது. யார் என்று தெரியாத ஒருவரிடம் இருந்து வந்த இமெயிலை வைத்து செய்தியை வெளியிட்டது தவறு என்று பிரச்சனை வருகிறது. மீண்டும் மர்ம நபரிடம் இருந்து இமெயில் வருகிறது. இதை போலீசுக்கு தெரியப்படுத்துகிறார் ரம்யா பாண்டியன். இதை விசாரிக்க அதிகாரியான ஸ்சுவேதா களம் இறங்குகிறார். இவருடைய விசாரணையில் மர்ம நபர் பெயர் காரி என்று தெரியவருகிறது.
இறுதியில் காரி என்பவர் யார்? எதற்காக மிரட்டுகிறார்? காரியை ஸ்சுவேதா கண்டுபிடித்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
படத்தில் ஆரம்பம் முதல் இறுதி வரை விறுவிறுப்பாக ஓடிக்கொண்டே இருக்கிறார் ஸ்சுவேதா நாயர். இவரது உடை, உடல் மொழி ஆகியவை கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறது. நிதானமாக இவர் யோசிக்கும் போதும், கேள்விகள் கேட்கும் போதும் நடிப்பில் கவனிக்க வைத்து இருக்கிறார். படம் ஆரம்பித்தது முதல் பத்து நிமிடம் மட்டுமே வந்து சென்றிருக்கிறார் ரம்யா பாண்டியன்.
சிறிது நேரம் மட்டுமே வந்தாலும் மனதில் பதிந்து இருக்கிறார் பிரஜன். தாய், தந்தை இழந்த காட்சியில் நெகிழ வைத்து இருக்கிறார். மற்ற கதாபாத்திரங்கள் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார்கள்.
இயக்கம்
திரில்லர் கதையை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் அருள் அஜித். ஆரம்பம் முதல் இறுதி வரை திரைக்கதையை விறுவிறுப்பாக நகர்த்தி இருக்கிறார். ஏ ஐ டெக்னாலஜியை அனைவருக்கும் புரியும் படி சொல்லியிருக்கிறார். நிறைய காட்சிகள் வசனத்திலேயே கடந்து போயிருக்கிறார். இதை தவிர்த்து இருக்கலாம். நிறைய கதாபாத்திரங்களை வீணடித்து இருக்கிறார்.
ஒளிப்பதிவு
அமீன் ஒளிப்பதிவில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம். காட்சிகள் தெளிவாக அமையவில்லை.
இசை
கார்த்திக் ஹர்ஷா இசையில் பாடல்கள் கவரவில்லை. ஹரியின் பின்னணி இசை பெரியதாக எடுபடவில்லை.
- முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா 134 ரன்கள் மட்டுமே சேர்த்தது.
- நமீபியா கடைசி பந்தில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது.
தென்ஆப்பிரிக்கா- நமீபியா அணிகளுக்கு இடையிலான ஒரேயொரு டி20 போட்டி இன்று வின்ட்கோயக்கில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா அணியால் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது.
டி காக் (1), ஹென்றிக்ஸ் (7), ஜேசன் ஸ்மித் (31), போன்ற நட்சத்திர பேட்ஸ்மேன்கள் இருந்தும் 150 ரன்களை கடக்க முடியவில்லை. நமீபியா அணியில் ரூபன் ட்ரம்பெல்மான் 3 விக்கெட்டும், மேக் ஹெய்ங்கோ 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர் 135 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் நமீபியா களம் இறங்கியது. முதல் மூன்று வீர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். கேப்டன் எராமஸ் 21 ந்தில் 21 ரன்களும், ஸ்மித் 14 பந்தில் 13 ரன்களும், மாலன் குருகர் 21 பந்தில் 18 ரன்களும் சேர்த்தனர்.
இதனால் அணி வெற்றி நோக்கி சென்று கொண்டிருந்தது. விக்கெட் கீப்பர் ஜனே க்ரீன் சிறப்பாக விளையாடினார். கடைசி ஓவரில் 11 ரன்கள் தேவைப்பட்டது. முதல் பந்தை க்ரீன் சிக்சருக்கு தூக்கினார். அதன்பின் 4 பந்தில் 4 ரன்கள் எடுத்தனர். கடைசி பந்தில் 1 ரன் தேவைப்பட்டது. க்ரீன் கடைசி பந்தை பவுண்டரிக்கு விரட்ட நமீபியா கடைசி பந்தில் இலக்கை எட்டி 4 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
- அவிநாசி பாலத்திற்கு ஜி.டி. நாயுடு எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
- நாயுடு என்பதை ஜாதி பெயர்தானே என விமர்சனம் செய்யப்பட்டது.
ஊர், தெருக்களுக்கு வைக்கப்பட்டுள்ள பெயரில் ஜாதி பெயர் இடம் பெற்றிருந்தால் அதை நீக்க வேண்டும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டியிருந்தது. அரசாணை வெளியிட்ட அடுத்த நாள், கோவை அவினாசியில் 10 கி.மீ. நீள மேம்பாலம் திறக்கப்பட்டது. அந்த சாலைக்கு ஜி.டி. நாயுடு எனப் பெயர் வைக்கப்பட்டது.
நேற்று அரசாணை வெளியிட்டு இன்று சாதி பெயருடன் கூடிய மேம்பாலத்தை முதல்வர் திறந்து வைத்துள்ளார் என விமர்சிக்கப்பட்டது.
இந்த நிலையில் அமைச்சர் தங்கம் தென்னரசு இது தொடர்பாக விளக்கம் அளித்து கூறியதாவது:-
தமிழ்நாட்டில் 10 கி.மீட்டருக்கு அதிகமான நீளம் கொண்ட கோவை அவினாசி மேம்பாலத்திற்கு புகழ்பெற்ற ஜி.டி. நாயுடு பெயரை வைத்திருப்பதை குறையாக சொல்கிறார்கள். ஜி.டி. நாயுடு யார்? அவர் மிகப்பெரிய விஞ்ஞானி. அநத் பகுதிலேயே குடியிருந்தவர்.
கோவை மட்டுமல்ல எல்லாப் பகுதி மக்களாலும் போற்றப்பட்டவர் என்பதால் அவரது பெயரை வைத்தால் பொருத்தமாக இருக்கும் என்பதால் முதலமைச்சர் ஜி.டி. நாயுடு பெயரை சூட்டியுள்ளார். பலதரப்பட்ட மக்கள் வரவேற்றுள்ளனர்.
ஜி.டி. நாயுடு பெயரில் ஜாதி பெயர் என்றால் ஜி.டி. பாலம் என்றா வைக்க முடியும்?. ஜி.டி. நாயுடு என்று வைக்கப்படுவதனால்தான் இன்னார் என்று அறியப்படுகிறார்.
இந்த விவகாரத்தில் அரசியல் லாபம் பார்க்க முயல்வது கண்டிக்கத்தக்கது.
இவ்வாறு தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
க்யூப்ஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் சார்பில் ஷெரீப் முகமது தயாரிக்கும் மாபெரும் ஆக்ஷன் திரில்லர் படமான "காட்டாளன்" படத்தின், அதிரடி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
புதிய இயக்குநர் பால் ஜார்ஜ் இயக்கத்தில் உருவாகும் "காட்டாளன்", மலையாளத் திரையுலகில் இதுவரை இல்லாத அளவுக்கு பிரமாண்ட பூஜையுடன் தொடங்கப்பட்டது.
பான்-இந்தியா பிரம்மாண்டம் என்ற கான்செப்டில் உருவாகும் இந்தப் படம் மிகப்பெரிய அளவில் தயாராகிறது.
படத்திற்கான இசையை "காந்தாரா", "மகாராஜா" போன்ற ஹிட் படங்களுக்கு இசையமைத்த B. அஜனீஷ் லோக்நாத் வழங்கியுள்ளார்.
இப்படத்தில், முன்னணி நடிகர் ஆண்டனி வர்கீஸுன் மிரட்டல் தோற்றம் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது. எரியும் கண்கள், சிதறிய சிவப்பு முடி, வாயில் புகைபிடிக்கும் சிகார்— இப்படியாக ஆண்டனியின் அதிரடி லுக், ஒரு கடும் ஆற்றல் கொண்ட மாஸ் அவதாரமாக காட்சி தருகிறது.
ரத்தம் பூசப்பட்ட முகம், கைகள் ஆகியவை படத்தின் அதிரடி ஆக்ஷன் களத்தை வெளிப்படுத்தி, இதுவரை கண்டிராத மிரட்டலான நிறைந்த தோற்றத்தை ரசிகர்களுக்கு வழங்கி விருந்தளிக்கிறது.
இதில், தெலுங்கு நடிகர் சுனில், கபீர் துகான் சிங், ராப்பர் பேபி ஜீன், தெலுங்கு நடிகர் ராஜ் திரண்டாசு, பாலிவுட் நடிகர் பார்த்த் திவாரி ஆகியோர் நடிக்கின்றனர். மலையாளத் திரையுலகிலிருந்து ஜகதீஷ், சித்திக், மற்றும் ஹனான் ஷா இணைந்துள்ளனர்.
- ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை.
- உலக கோப்பை என்பது இன்னும் முடிக்கப்படாத வேலையாக உள்ளது.
இந்திய அணியின் இடது கை சுழற்பந்து வீச்சாளரான ரவீ்ந்திர ஜடேஜா, 2027ஆம் ஆண்டு ஆப்பிரிக்காவில் நடைபெறும் 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட விரும்புகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் சீனியர் சுழற்பந்து வீச்சாளரான ஜடேஜா, டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். தற்போது டெஸ்ட் மற்றும் 50 ஓவர் கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார்.
தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் ஜடேஜாவுக்கு, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இடம் கிடைக்கவில்லை. இதனால் அவரின் ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது.
இந்த நிலையில், 2027 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட விரும்புகிறேன் என ஜடேஜா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஜடேஜா கூறியதாவது:-
இது என் கையில் இல்லை. என்றாலும் 2027 உலக கோப்பையில் விளையாட நான் விரும்புகிறேன். ஆஸ்திரேலியா தொடருக்கு என்னை தேர்வு செய்யாததற்கு அணி நிர்வாகம் மற்றும் தேர்வாளர்கள் சில விசயங்களை கொண்டுள்ளனர்.
அது தொடர்பாக என்னிடம் பேசினார். இது என்னை அணி அறிவிக்கப்பட்டு என்னுடைய பெயர் அதில் இடம் பெறவில் என்று ஆச்சர்யப்படவைக்க விரும்பவில்லை. கேப்டன் மற்றும் தேர்வுக்குழு தலைவர் என்னிடம் பேசியது சிறந்த விசயம். அதனால் நான் மகிழ்ச்சி அடைகிறேன். ஆனால், வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சி செய்வேன்.
உலகக் கோப்பையில் விளையாட எனக்கு வாய்ப்பு கிடைத்தால், அது போட்டிக்கு முந்தைய போட்டிகளைப் பொறுத்தது. மேலும் நான் அவற்றில் சிறப்பாகச் செயல்பட்டால், அது நன்றாக இருக்கும். கடந்த முறை நாங்கள் இறுதி போட்டியில் வந்து தோல்வியடைந்தோம். எனவே உலக கோப்பை என்பது முடிக்கப்படாத வேலையாக இருக்கிறது.
இவ்வாறு ஜடேஜா தெரிவித்தார்.
அஸ்திரேலியா தொடரில் இரண்டு இடது கை சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டருடன் செல்லி விரும்பவில்லை என அஜித் அகர்கர் தெரிவித்திருந்தார். அக்சர் படேல் அணியில் உள்ளதால், ஜடேஜாவுக்கு வாய்ப்பு இல்லை எனக் குறிப்பிட்டிருந்தார்.
1987 ஆம் ஆண்டு எஸ்.பி. முத்துராமன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான மனிதன் திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது.
இப்படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக ரூபிணி நடித்துள்ளார். இப்படத்தில் சோ, வினு சக்கரவர்த்தி, ரகுவரன், செந்தில், ஸ்ரீவித்யா, டெல்லி கணேஷ் உட்பட பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருந்தனர்.
மனிதன் படத்தின் பாடல்களும் பட்டி தொட்டி எங்கும் ஹிட்டாகின. குறிப்பாக, மனிதன்.. மனிதன்.., வானத்த பார்த்தேன்.., காளை காளை., ஏதோ நடக்கிறது.., முத்து முத்து பெண்ணே.., உள்ளிட்ட பாடல்கள் இன்றும் மக்கள் ரசித்து வருகின்றனர்.
இந்நிலையில், ரஜினிகாந்த் திரைத்துறையில் அறிமுகமாகி 50 ஆண்டுகள் நிறைவு அடைந்ததை கொண்டாடும் வகையில் மனிதன் படத்தை டிஜிட்டல் முறையில் மாற்றி ரீ ரிலீஸ் செய்ய முடிவு செய்தனர்.
அதன்படி, மனிதன் படம் வரும் அக்டோபர் மாதம் 10ம் தேதி (நேற்று) ரிலீஸ் ஆனது. இதனால், ரஜினிகாந்தின் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
- இஸ்ரேல்- காசா இடையில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
- ஒரு பகுதியில் போரை நிறுத்த முடியும் என்றால், மற்ற இடங்களிலும் நிறுத்த முடியும்- ஜெலன்ஸ்கி.
இஸ்ரேல்- காசா (ஹமாஸ்) இடையில், அமெரிக்க அதிபர் டிரம்பின் முயற்சியால் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. நேற்றுமுதல் போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்ததாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. விரைவில் பணயக்கைதிகள் விடுவிக்கப்பட இருக்கிறார்கள். இதன்மூலம் போர் முடிவுக்கு வரும் என நம்பப்படுகிறது.
இந்த நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்-ஐ தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
இது தொடர்பாக ஜெலன்ஸ்கி எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில் "நான் டிரம்ப் உடன் டெலிபோன் மூலம் பேசினேன். அப்போது, இஸ்ரேல்- காசா இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தை வெற்றிகரமாக முடித்ததற்காக வாழ்த்து தெரிவித்தேன். ஒரு பிராந்தியத்தில் போரை நிறுத்த முடியும் என்றால், உக்ரைன்- ரஷியா போர் உள்ளிட்ட மற்று போர்களை உறுதியாக நிறுத்த முடியும்" எனக் கூறியதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், டிரம்பிடம் உக்ரைனின் எரிசக்தி சிஸ்டம் மீது ரஷியா தாக்குதல் நடத்துவதாக குற்றம்சாட்டினார். அத்துடன், எங்களுக்கு ஆதரவு அளிக்க விருப்பம் தெரிவித்துள்ளது பாராட்டத்தக்கது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ரஷியா உக்ரைன் மீது கடந்த மூன்றரை ஆண்டுகளுக்கு முன் படையெடுத்தது. இன்னும் இரு நாடுகளுக்கு இடையிலான சண்டை முடிவுக்கு வரவில்லை.
தமிழ் சினிமாவில் கிராமத்து சார்ந்த நகைச்சுவை திரைப்படம் இயக்குவதில் திறமை மிக்க இயக்குனர் பொன்ராம். 2013 ஆம் ஆண்டு இவர் இயக்கிய வருத்தப்படாத வாலிபர் சங்கம் மிகப்பெரிய வெற்றித் திரைப்படமாக அமைந்தது.
அதைத்தொடர்ந்து, ரஜினி முருகன், சீமராஜா, எம்.ஜி.ஆர் மகன் மற்றும் டி.எஸ்.பி போன்ற வெற்றித் திரைப்படங்களை இயக்கினார்.
இந்நிலையில் அடுத்ததாக பொன்ராம், மறைந்த விஜயகாந்தின் இளைய மகனான சண்முக பாண்டியன் நடிப்பில் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் சரத்குமார், காளி வெங்கட் மற்றும் கல்கி ராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். பால சுப்ரமணியன் ஒளிப்பதிவு மேற்கொள்கிறார். பட தொகுப்பை தினேஷ் பொன்ராஜ் செய்கிறார். இப்படத்திற்கு கொம்புசீவி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இப்படம் 1996 வாக்கில் உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, வைகை அணை பகுதியில் நடந்த கதைகளை மையப்படுத்தி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. படம் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், கொம்புசீவி படத்தின் டீசர் இன்று மாலை வௌியானது.






