என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • தீர்மானத்தை முன்மொழிந்து அனைத்துக் கட்சி கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
    • மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பை அனைத்துக் கட்சி கூட்டம் ஒருமனதாக எதிர்க்கிறது என்றார்.

    சென்னை தலைமைச் செயலகத்தில் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் தி.மு.க. சார்பில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, மாநிலங் களவை உறுப்பினர் வழக்கறிஞர் வில்சன் எம்.பி., அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், வழக்கறிஞர் பிரிவு செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ. வழக்கறிஞர் இன்பதுரை கலந்து கொண்டனர்.

    இதேபோல் காங்கிரஸ் சார்பில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை, சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் ராஜேஷ் குமார் பங்கேற்றனர். தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அதன் தலைவர் திருமாவளவன், பொதுச் செயலாளர் ரவிக்குமார் கலந்து கொண்டனர்.

    தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான வரைவு தீர்மானத்தை முன்மொழிந்து அனைத்துக் கட்சி கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

    அப்போது அவர், மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பை அனைத்துக் கட்சி கூட்டம் ஒருமனதாக எதிர்க்கிறது என்றார்.

    இதைதொடர்ந்து, முதலமைச்சரின் தீர்மானத்திற்கு அனைத்துக்கட்சி கூட்டத்தில் பேசிய பிற கட்சிகள் கூட்டுக்குழுவிற்கு ஆதரவு தெரிவித்தன.

    இந்நிலையில், அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன் கூறியதாவது:-

    தொகுதி மறுவரையறை செய்தால் அனைத்து மாநிலங்களுக்கும் சமவாய்ப்பு தரப்பட வேண்டும். மக்கள் தொகை அடிப்படையில் அல்லாமல் வாக்காளர்கள் எண்ணிக்கை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யலாம்.

    மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்தால் தென்மாநிலங்கள் பாதிக்கப்படும்.

    பட்டியலின மக்களின் வாக்குகளை சிதறடிக்கும் வகையில் தொகுதிகளில் எல்லை வரையறை செய்யப்படுகிறது.

    வரும் காலங்களில் முறையாக தொகுதிகளின் எல்லை வரையறை செய்யப்பட வேண்டும்.

    ஆதாயம் கருதி அரசியல் செய்வதால் தான் அனைத்து கட்சி கூட்டத்தில் பாஜக பங்கேற்கவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சோப்பனூர் கிராமத்தில் அரசுப்பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது.
    • பள்ளியில் குவிந்த மாணவர்களின் பெற்றோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் சோப்பனூர் கிராமத்தில் அரசுப்பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது.

    இந்த விழாவில் 'மறுமலர்ச்சி' படத்தில் வரும் சாதியை குறிப்பிடும் பாடலுக்கு மாணவர்கள் பா.ம.க. துண்டுடன் நடனமாடினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    மேலும் மறைந்த காடுவெட்டி குரு, வீரப்பன் படம் பொறித்த டி சர்ட் பயன்படுத்தப்பட்டதால் சர்ச்சை எழுந்துள்ளது.

    பா.ம.க. துண்டுடன் சாதி பாடலுக்கு நடனமாட செய்ததால் மாணவர்களின் பெற்றோர் ஆத்திரமடைந்துள்ளனர்.

    இந்த சம்பவத்தையடுத்து பள்ளியில் குவிந்த மாணவர்களின் பெற்றோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப மறுப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    • தொகுதி மறுசீரமைப்பு என்னும் கத்தி தென்னிந்தியாவின் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டு இருக்கிறது.
    • தமிழ்நாட்டில் 39 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன. இதை குறைக்கின்ற அபாயம் நெருங்கிக் கொண்டிருக்கிறது.

    சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் உள்ள 10-வது மாடி கூட்டரங்கில் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான அனைத்துக் கட்சி கூட்டம் இன்று காலை 10 மணிக்கு நடைபெற்றது.

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் தி.மு.க. சார்பில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, மாநிலங் களவை உறுப்பினர் வழக்கறிஞர் வில்சன் எம்.பி., அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், வழக்கறிஞர் பிரிவு செயலாளர் முன் னாள் எம்.எல்.ஏ. வழக்கறி ஞர் இன்பதுரை கலந்து கொண்டனர்.

    இதேபோல் காங்கிரஸ் சார்பில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை, சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் ராஜேஷ் குமார் பங்கேற்றனர். தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அதன் தலைவர் திருமாவளவன், பொதுச் செயலாளர் ரவிக்குமார் கலந்து கொண்டனர்.

    மேலும், இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மாநில செயலாளர் முத்தரசன், முன்னாள் எம்.எல்.ஏ. பெரியசாமி, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு சார்பில் மாநில செயலாளர் சண்முகம், ம.தி.மு.க. சார்பில் பொதுச் செய லாளர் வைகோ, துரை வைகோ எம்.பி., பா.ம.க. சார்பில் அதன் தலைவர் அன்புமணி ராமதாஸ், தே.மு.தி.க. சார்பில் துணை பொதுச் செயலாளர் பார்த்தசாரதி, அவைத் தலைவர் இளங்கோவன், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    கூட்டம் தொடங்கியதும் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வரவேற்று பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    இங்கு வந்திருக்கும் அனைத்துக் கட்சி தலைவர்களுக்கும், பிரதிநிதிகளுக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த வணக்கத்தை நான் தெரி வித்துக் கொள்ள விரும்புகிறேன்.

    தமிழ்நாடு அரசின் சார்பில் உங்கள் எல்லோரையம் வருக... வருக... என்று நான் வரவேற்கிறேன்.

    தமிழ்நாடு மிகப்பெரிய உரிமை போராட்டத்தை நடத்த வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டு இருப்பதை உணர்த்துவதற்காகத் தான் இந்த அனைத்துக் கட்சி கூட்டத்தை ஏற்பாடு செய்திருக்கிறோம். தொகுதி மறுசீரமைப்பு என்னும் கத்தி தென்னிந்தியாவின் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டு இருக்கிறது. இதனால் தமிழ்நாடு கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறது.

    இன்றைக்கு தமிழ்நாட்டில் 39 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன. இதை குறைக்கின்ற அபாயம் நெருங்கிக் கொண்டிருக்கிறது.

    ஒன்றிய அரசு 2026-ம் ஆண்டில் பாராளுமன்ற தொகுதிகளின் எண்ணிக் கையை மறுசீரமைப்பு செய்ய இருக்கிறது. பொதுவாக இதை மக்கள் தொகையை கணக்கிட்டுதான் செய்வார்கள். மக்கள் தொகையை கட்டுப்படுத்த வேண்டும் என்பது இந்திய நாட்டின் மிக முக்கியமான இலக்கு.

    அந்த இலக்கில் நமது தமிழ்நாடு வெற்றி பெற்று இருக்கிறது. பல பத்தாண்டு களாக வெற்றிகரமான குடும்ப கட்டுப்பாடு திட்டங்கள், பெண்கள் கல்வி மற்றும் சுகாதார முன் முயற்சிகள் மூலமாக நாம் இதை சாதித்து இருக்கிறோம்.

    இப்போது இருக்கின்ற 543 பாராளுமன்ற தொகுதிகள் தொடர்ந்தால் மக்கள் தொகை குறைவாக இருப்பதால் நமது தொகுதிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட வாய்ப்பு இருக்கிறது.

    தமிழ்நாடு மொத்தமாக 8 பாராளுமன்ற தொகுதிகளை இழக்கும் என்று சொல்கிறார்கள். அதாவது இனி 39 எம்.பி.க்கள் கிடைக்க மாட்டார்கள். 31 எம்.பி.க்கள்தான் இருப்பார்கள்.

    பாராளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை 848 ஆக உயர்த்தப்பட்டு தற்போதைய விதிதாச்சாரத்தின் அடிப்படையில் மறுசீரமைப்பு செய்யப்பட்டால் நமக்கு கூடுதலாக 22 தொகுதிகள் கிடைக்க வேண்டும்.

    ஆனால் தற்போதைய மக்கள் தொகையின்படி மறுசீரமைப்பு செய்தால் 10 தொகுதிகள் தான் கூடுதலாக கிடைக்கும். இதனால் 12 கூடுதல் தொகுதிகளை இழக்க நேரிடும்.

    இந்த 2 முறைகளிலுமே நமக்கான பிரதிநிதித்துவம் குறைந்து அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலங்களுக்கு அதிக பிரதிநிதித்துவம் கிடைக்கும். இதனால் தமிழ்நாட்டின் குரல் நசுக்கப்படும்.

    இது வெறும் உறுப்பினர்களின் எண்ணிக்கையை பற்றிய கவலை இல்லை. நமது தமிழ் நாட்டின் உரிமை சார்ந்த கவலை. தமிழ்நாட்டின் இந்த முக்கியமான பிரச்சினையில் எல்லா அரசியல் கட்சிகள் மற்றும் தலைவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்ற வேண்டுகோளை உங்கள் எல்லோர் முன்பும் நான் வைக்கிறேன்.

    எல்லா கட்சிகளும் கட்சிகளை கடந்து குரல் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். மக்கள் தொகை அடிப்படையில் மறுசீரமைப்பு செய்தால் அது தமிழ்நாட்டு மக்களின் பிரதிநிதித்துவத்தை, எண்ணிக்கையை குறைத்துவிடும். எனவே இந்த சதியை நாம் அனைவரும் சேர்ந்து முறியடிக்க வேண்டும்.

    மக்கள் தொகை அடிப்ப டையில் மக்களவை, மாநிலங்களவை மற்றும் சட்டமன்ற பேரவையின் இடங்கள் குறையும் என்று சொல்வது மக்கள் தொகை கட்டுப்பாடு என்னும் கொள்கையை முனைப்பாக செயல்படுத்தி நாட்டு வளர்ச்சியில் பெரும் பங்காற்றியுள்ள தென் மாநிலங்களுக்கு தரப்படுகிற தண்டனையாகத்தான் அமையும்.

    இதை முன்கூட்டியே உணர்ந்து தான் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ந்தேதி தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினோம்.

    தமிழ்நாட்டின் உரிமை, கூட்டாட்சி கருத்தியலோடு கோட்பாடு, தமிழ்நாட்டு மக்களின் பிரதிநிதித்துவம் உள்ளிட்ட எதுவும் பாதிக் கப்படக்கூடாது என்பதை தீர்க்கமாக, திடமாக அப்போதே நாம் வலியுறுத்தி இருக்கிறோம்.

    இந்த தொகுதி மறுசீரமைப்பு என்பது தமிழ் நாட்டுக்கு மட்டுமல்ல ஒட்டு மொத்த தென்னிந்தியா வுக்கே அபாயகரமான செயல். இதில் நமக்குள் கருத்து மாறுபாடு நிச்சயமாக இருக்காது என்று நான் நினைக்கிறேன். இருக்கக்கூடாது என்று விரும்புகிறேன்.

    இந்திய நாட்டின் கூட்டாட்சி அமைப்புக்கும், தென் மாநிலங்களின் அரசி யல் உரிமைக்கும் இது அச்சு றுத்தலை ஏற்படுத்துகிறது. இது இந்திய ஜனநாயகத்தில் தமிழ்நாட்டுக்கு கிடைக்கின்ற அரசியல் பிரதிநிதித்துவ உரிமை மீதான நேரடி தாக்குதல்.

    இப்படி ஒரு சமநீதியற்ற அமைதியான தொகுதி மறுசீரமைப்பு செயல்படுத்தப்பட்டால் இந்திய அரசியலில் தமிழ் நாட்டின் குரல்வளை நெரிக்கப்படும்.

    தமிழ்நாட்டின் நலன் மற்றும் தமிழ்நாட்டு மக்களின் நலன் ஆகிய வற்றை பாதுகாப்பதில் நம் மாநிலத்துக்கு இறுக்கக்கூடிய பலம் குறைக்கப்படும.

    39 எம்.பி.க்கள் இருக்கும் போது நாம் எழுப்புகிற குரலையே ஒன்றிய அரசு மறுக்கின்ற நிலையில் இந்த எம்.பி.க்கள் எண்ணிக்கை இன்னும் குறைந்தாலோ, குறைக்கப்பட்டாலோ அது தமிழ்நாட்டுக்கு கிடைக் கப்பட்ட அழிக்க முடியாத அநீதியாக மாறும் என்பதை எல்லோரும் நினைத்துப் பார்க்க வேண்டும்.

    எனவே நமது நிலைப்பாட்டை அழுத்தம் திருத்தமாக ஒரே சிந்தனையோடு எடுத்தாக வேண்டும்.

    எதிர்காலத்தில் நடைபெற இருக்கிற மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் மேற்கொள்ள இருக்கும் தொகுதி மறுசீரமைப்பை நாம் கடுமையாக ஆணித்தரமாக எதிர்க்க வேண்டிய கால கட்டத்தில் இருக்கிறோம்.

    எனவே உறுதியான ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்று சொல்லி நான் அந்த தீர்மானத்தை முன்மொழிகிறேன்.

    இந்தியநாட்டின் கூட்டாட்சி அமைப்புக்கும் தமிழ்நாடு மற்றும் தென்னிந்திய மாநிலங்களின் அரசியல் பிரதிநிதித்துவ உரிமைக்கும் மிகப்பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடிய மக்கள் தொகை அடிப்படையிலான நாடாளுமன்ற தொகுதி மறுசீர மைப்பை இந்த அனைத்துக் கட்சி கூட்டம் ஒருமனதாக கடுமையாக எதிர்க்கிறது.

    நாட்டின் நலனுக்காக மக்கள் தொகை கட்டுப்பாட்டை முனைப்பாக செயல்படுத்திய ஒரே காரணத்திற்காக தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் நாடாளுமன்ற பிரதி நிதித்துவம் குறைக்கப்படு வது முற்றிலும் நியாயமற்றது.

    எந்த வகையில் மக்கள் தொகை கட்டுப்பாட்டை அனைத்து மாநிலங்களும் முன்னெடுப்பதை ஊக்கு விக்கும் வகையில் 1971-ம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்ற தொகுதிகள் தொடர்ந்து வரையறுக்கப்படும் என்று கடந்த 2000-ம் ஆண்டில் அன்றைய பிரதமர் உறுதி அளித்தவாறு தற்போதும் இந்த வரையறை 2026-ல் இருந்து மேலும் 30 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப் படும் என்று பிரதமர், நாடாளுமன்றத்தில் உறுதி அளிக்க வேண்டும்.

    மேலும் நாடாளுமன்றத்தில் தற்போதைய உறுப்பினர்களின் எண்ணிக்கை உயர்த்தப்படும் பட்சத்தில் 1971-ம் ஆண்டு மக்கள் தொகை அப்படையில் தற்போது நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மாநிலங்களுக்கிடையே எந்த விகிதத்தில் தொகுதிகளின் எண்ணிக்கை உள்ளனவோ அதே விகிதத்தில் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்துவதற்கு தேவையான அரசியல் சட்டத் திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும் என ஒன்றிய அரசை இந்த அனைத்துக் கட்சி கூட்டம் வலியுறுத்துகிறது.

    தொகுதி மறு சீரமைப்புக்கு தமிழ்நாடு எதிரானதாக இல்லை என்றும், அதே சமயம் கடந்த 50 ஆண்டுகளாக சமூக பொருளாதார நலத்திட்டங்களை சிறப்புற செயல்படுத்தியதற்கு தண்டனையாக தொகுதி மறுசீரமைப்பு அமைந்துவிடக்கூடாது எனவும், அனைத்துக்கட்சி கூட்டம் வலியுறுத்துகிறது.

    இக்கோரிக்கைகளை தமிழ்நாட்டின் குறைந்தபட்ச கோரிக்கையாக அனைத்து கட்சி கூட்டம் முன்வைக்கிறது. இக்கோரிக்கைகளையும் அவை சார்ந்த போராட்டத்தை முன்னெடுத்து செல்லவும் மக்கள் மத்தியில் இப் பிரச்சினை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திடவும் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்ட கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய கூட்டு நடவடிக்கை குழு ஒன்றை அமைத்திடவும், அதற்கான முறையான அழைப்பை மேற்படி கட்சிகளுக்கு அனுப்பி வைக்கவும் இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

    இந்த தீர்மானத்தின் மீதான உங்களின் கருத்தை அனைத்து கட்சி தலைவர்களும் பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். மீண்டும் உங்கள் எல்லோருக்கும் எனது மனமார்ந்த நன்றிைய தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதைத் தொடர்ந்து ஒவ்வொரு கட்சி சார்பிலும் வந்திருந்த பிரதிநிதிகள் இதில் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். இந்த கருத்துக்களின் அடிப்படையில் அரசின் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

    அதன் பிறகு அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகள் சார்பில் டெல்லி சென்று ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து மனு கொடுக்கிறார்கள்.

    தொகுதி மறுசீரமைப்பால் தமிழ கத்துக்கு ஏற்படும் பாதிப்பு களை விளக்கவும், அரசின் சார்பில் திட்டமிடப் பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

    • நேற்றைய போட்டியில் அவர் பல சாதனைகளை படைத்தார்.
    • க்ரிஸ் கெய்லுக்கு அடுத்த படியாக 2-வது இடத்தில் உள்ளார்.

    துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற விராட் கோலி முக்கிய பங்கு வகித்தார்.

    36 வயதான விராட் கோலி 3-வது வீரராக களமிறங்கி 84 ரன்கள் (5 பவுண் டரி) எடுத்தார். விராட் கோலியின் பொறுப்பான ஆட்டம் அணிக்கு முக்கியத்துவத்தை ஏற்படுத்தியது. நேற்றைய போட்டியில் அவர் பல சாதனைகளை படைத்தார்.

    சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் அதிக ரன் எடுத்து இருந்த இந்திய வீரர்களில் ஷிகர் தவான் சாதனையை முறியடித்தார். தவான் 10 போட்டிகளில் 701 ரன்களை எடுத்துள்ளார். விராட் கோலி 16 இன்னிங்சில் விளையாடி 746 ரன்களை எடுத்துள்ளார். சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அதிக ரன்களை எடுத்த சர்வதேச வீரர்களில் க்ரிஸ் கெய்லுக்கு (791 ரன்) அடுத்தபடியாக 2-வது இடத்தில் உள்ளார்.

    மேலும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அதிக முறை 50 ரன்களுக்கு மேல் எடுத்தவர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். அவர் 7-வது முறையாக அரை சதம் அடித்துள்ளார். முன்னதாக சவுரவ் கங்குலி, ராகுல் டிராவிட், ஷிகர் தவான் ஆகியோர் தலா 6 முறை 50 ரன்களுக்கு மேல் அடித்துள்ளனர்.

    நாக்-அவுட் போட்டியில் 5-வது முறையாக 50 ரன்களுக்கு மேல் எடுத்து சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்த இடத்தில் உள்ளார். டெண்டுல்கர் 6 முறை 50 ரன்னுக்கு மேல் எடுத்துள்ளார். மேலும் சேசிங்கில் அதாவது 2-வது பேட்டிங்கில் 8 ஆயிரம் ரன்களை கடந்து விராட் கோலி அசத்தியுள்ளார் இந்த மைல்கல்லை அவர் தனது 301-வது போட்டியில் 159 இன்னிங்சில் கடுந்துள்ளார்.

    டெண்டுல்கருக்கு அடுத்த படியாக அவர் உள்ளார். டெண்டுல்கர் சேசிங்கில் 8720 ரன் (232 இன்னிங்ஸ்) எடுத்து முதல் இடத்தில் உள்ளார். ஐ.சி.சி. ஒருநாள் போட்டிகளில் விராட் கோலி 24-வது முறையாக 50 ரன்களுக்கு மேல் எடுத்து டெண்டுல்கரை முந்தியுள்ளார். சச்சின் டெண்டுல்கர் 23-வது முறையாக 50 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார்.

    நேற்றைய போட்டியில் விராட் கோலி 2 கேட்ச் பிடித்தார். ஒருநாள் போட்டியில் இதன் மூலம் அதிக கேட்ச் பிடித்த வீரர்களில் அவர் 2-வது இடத்தில் உள்ள ரிக்கி பாண்டிங்கை (ஆஸ்திரேலியா) முந்தினார். கோலி 161 கேட்ச்களையும், ரிக்கி பாண்டிங் 160 கேட்ச்களையும் பிடித்துள்ளனர். ஜெயவர்தனே (இலங்கை) 218 கேட்ச்களை பிடித்து முதலிடத்தில் உள்ளார்.

    • தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான வரைவு தீர்மானத்தை முன்மொழிந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
    • அனைத்து கட்சி கூட்டத்திற்கு 63 கட்சி, இயக்கங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் 58 கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

    தொகுதி மறுசீரமைப்பு குறித்து முக்கிய முடிவு எடுப்பதற்காக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், சென்னை தலைமைச்செயலகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான வரைவு தீர்மானத்தை முன்மொழிந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

    அனைத்து கட்சி கூட்டத்திற்கு 63 கட்சி, இயக்கங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் 58 கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் 5 கட்சிகள் மட்டும் பங்கேற்கவில்லை.

    பா.ஜ.க., நாம் தமிழர் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ், புதிய தமிழகம் கட்சி, புதிய நீதிக்கட்சி உள்ளிட்ட 5 கட்சிகள் புறக்கணித்துள்ளன.

    • 15 மண்டலங்களிலும் தீவிரமாக கட்டட மற்றும் இடிபாட்டுக் கழிவுகள் அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • சட்ட விரோதமாக கட்டிட கழிவுகளை கொட்டிய 260 நபர்கள் மீது கண்காணிப்பு படையினரால் ரூ. 13 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது:-

    பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க. நகர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் மற்றும் அடையாறு ஆகிய 7 மண்டலங்கள் முழுவதும் சாலைகள் மற்றும் தெருக்களில் உள்ள கட்டட மற்றும் இடிபாட்டுக் கழிவுகளை அகற்றும் வகையில் கட்டிடக் கழிவுகளை அகற்றும் தீவிரத் தூய்மைப் பணியை 7.1.2025-ல் மேயர் பிரியா முதற்கட்டமாக தொடங்கி வைத்தார்.

    அதனடிப்படையில், 7.1.2025 முதல் 16.1.2025 வரை 7 மண்டலங்களிலும், இரண்டாம் கட்டமாக 17.1.2025 முதல் திருவொற்றியூர், மணலி, மாதவரம், அம்பத்தூர், வளசரவாக்கம், ஆலந்தூர், பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் ஆகிய 8 மண்டலங்கள் உட்பட அனைத்து 15 மண்டலங்களிலும் தீவிரமாக கட்டட மற்றும் இடிபாட்டுக் கழிவுகள் அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    பெருநகர சென்னை மாநகராட்சியின் மண்டலங்கள் 1 முதல் 15 வரையில் கட்டடக் கழிவுகளை அகற்றும் வகையில் தீவிரத் தூய்மைப் பணிக்காக ஏற்கனவே உள்ள 102 வாகனங்களுடன் கூடுதலாக டிப்பர் லாரிகள், மினி லாரிகள், ஜே.சி.பி. வாகனங்கள், பாப்காட் வாகனங்கள் உள்ளிட்ட 57 புதிய வாகனங்களை இன்று மேயர் பிரியா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    கடந்த 1.1.2025 முதல் 28.2.2025 வரையிலான இரண்டு மாத காலத்தில் சட்ட விரோதமாக கட்டிட கழிவுகளை கொட்டிய 260 நபர்கள் மீது கண்காணிப்பு படையினரால் ரூ. 13 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

    நிகழ்ச்சியில், துணை மேயர் மு.மகேஷ்குமார், மாநகராட்சி கமிஷனர் ஜெ.குமரகுருபரன், துணை கமிஷனர் (பணிகள்) வி.சிவகிருஷ்ணமூர்த்தி, மத்திய வட்டார துணை கமிஷனர் கே.ஜெ.பிரவீன் குமார், நிலைக்குழுத் தலைவர் (பொதுசுகாதாரம்) டாக்டர் கோ. சாந்தகுமாரி, தலைமைப் பொறியாளர் (பொது) கே.விஜயகுமார், பிரிமியர் பிரிசிசன் சர்பேஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர்சீனிவாசன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    • பொருளாதாரத்தை மீட்டெடுக்க முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
    • வரி விதிப்பு என்பது அமெரிக்காவை மீண்டும் பணக்கார மற்றும் சிறந்த நாடாக மாற்றும்.

    அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்டு டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் 20-ந்தேதி பதவி யேற்றார். அவர் பதவி யேற்றபின் முதல் முறையாக பாராளுமன்ற கூட்டு அமர்வில் உரையாற்றினார்.

    அப்போது அவர் பேசிய தாவது:-

    அமெரிக்காவின் பொற் காலம் தொடங்கிவிட்டது. அமெரிக்கர்களின் கனவை நனவாக்க உழைத்து வருகிறோம். 6 வாரங்களில் 100 நிர்வாக உத்தரவுகளில் கையெழுத்திட்டேன். 400-க்கும் மேற்பட்ட நிர்வாக நடவடிக்கைகளை எடுத்து உள்ளேன்.

    நான் பதவியேற்ற சில மணி நேரங்களில் நாட்டின் தெற்கு எல்லையில் தேசிய அவசரநிலையை அறிவித்தேன். சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்க ராணுவம் மற்றும் எல்லை ரோந்துப் படையினரை அங்கு நிறுத்தினேன்.

    இதன் காரணமாக கடந்த மாதம் சட்டவிரோதமாக நாட்டுக்குள் வருபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. அமெரிக்க வரலாற்றில் மிக மோசமான அதிபரான ஜோ பைடன் நிர்வாகத்தின் கீழ், ஒரு மாதத்தில் லட்சக்கணக்கானோர் சட்ட விரோதமாக நாட்டுக்குள் நுழைந்தனர்.

    அமெரிக்கா மீது நியாயமற்ற வரிகள் விதிக்கப்படுகிறது. அமெரிக்காவுக்கு மற்ற நாடுகள் பல தசாப்தங்களாக அதிக வரிகளைப் விதித்து வருகின்றன. தற்போது அந்த நாடுகளுக்கு எதிராக கூடுதல் வரி விதிக்கும் நேரம் இது.

    ஐரோப்பிய ஒன்றியம், இந்தியா, சீனா, பிரேசில் மற்றும் பிற நாடுகள் நாம் வசூலிப்பதை விட மிக அதிக கட்டணங்களை நம்மி டம் வசூலிக்கின்றன. இது மிகவும் நியாயமற்றது.

    அமெரிக்காவிடம் இந்தியா வாகன வரி 100 சதவீதம் வசூலிக்கிறது. இது அமெரிக்காவிற்கு நியாயமில்லை.

    இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு எதிராக ஏப்ரல் 2-ந்தேதி முதல் பரஸ்பர வரி விதிப்பு தொடங்குகிறது. மற்ற நாடுகள் நமக்கு என்ன வரி விதித்தாலும், அதே வரியை அவர்களுக்கு விதிப்போம்.

    பொருளாதாரத்தை மீட்டெடுக்க முன்னுரிமை அளிக்கப்படுகிறது. வரி விதிப்பு என்பது அமெரிக்காவை மீண்டும் பணக்கார மற்றும் சிறந்த நாடாக மாற்றும்.

    அமெரிக்க கனவு தடுக்க முடியாதது. நமது நாடு மீண்டு வருவதற்கான விளிம்பில் உள்ளது. எலான் மஸ்க் தலைமையிலான அரசாங்க திறன் துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

    ரஷியா- உக்ரைன் இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வர அயராது பணியாற்றி வருகிறோம். உக்ரைனில் அமைதியை கொண்டு வரும் நோக்கத்துடன் உள்ளோம். அமைதி பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் தயாராக இருக்கிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    டிரம்ப் உரையாற்றியபோது எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். டிரம்ப் ஒவ்வொரு விவகாரம் பற்றி பேசும்போதும், "பொய்" என்று எழுதப்பட்ட பதாகையை காண்பித்தனர்.

    • எண்ணிக்கையை உயர்த்தும் நீண்டகாலத் திட்டத்தில் இருந்ததாக தெரிகிறது.
    • அலங்கார பொம்மைகளாக இருப்பதில் என்ன பலன்?

    இந்தியாவில் அதிகரித்துள்ள மக்கள் தொகைக்கு ஏற்ப அடுத்த ஆண்டு (2026) பாராளுமன்ற தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட இருக்கின்றன. இது மக்கள்தொகை உயர்வை கட்டுப்பாட்டில் வைத்துள்ள தமிழ் நாட்டிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிகிறது. இது குறித்து முக்கிய முடிவு எடுப்பதற்காக, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (புதன்கிழமை) அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.

    இந்த நிலையில், தொகுதி மறுசீரமைப்புக்கு த.வெ.க. தலைவர் விஜய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக வெற்றிக் கழகத்தின் நிலைப்பாடு!

    புதிதாக திறக்கப்பட்டு நாளாளுமன்றக் கட்டடத்தின் மக்களவையில் 888 இருக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதைப் பார்த்தால், ஒன்றிய அரசு நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்தும் நீண்டகாலத் திட்டத்தில் இருந்ததாகவே தெரிகிறது.

    அப்படி நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரித்து, ஒருவேளை தென் மாநிலங்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில், ஒவ்வொரு மாநிலத்திற்கும் தற்போதுள்ள விகிதாச்சார அடிப்படையிலேயே தொகுதிகளைப் பிரித்துக் கொடுத்தாலும் அதுவும் ஓர் உகந்த முன்னெடுப்பாக அமையாது ஏனென்றால்,

    1. தற்போது 543 நாடாளுமன்ற உறுப்பினார்கள் இருக்கும்பொழுதே அனைத்து உறுப்பினர்களுக்கும் கேள்வி நேரங்களில் கேள்வி கேட்க அனுமதி கிடைப்பதில்லை: Ballot முறையிலேயே கேள்வி கேட்கத் தேர்ந்தெடுக்கப்பட்டு வாய்ப்பு வழங்கப்படுகிறது. அப்படியே வாய்ப்பு வழங்கப்பட்டாலும் பெரும்பாலும் சில நிமிடங்களுக்கு மேல் பேச அனுமதி மறுக்கப்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில் மேலும் உறுப்பினர்களைச் சேர்த்துக்கொண்டு அவர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் வெறும் அலங்கார பொம்மைகளாக இருப்பதில் என்ன பலன்?

    2. மக்களின் இன்றைய அடிப்படைப் பிரச்சனைகள், விலைவாசி உயர்வு, வேலையின்மை, தரமான கல்வி மற்றும் சுகாதார வசதியின்மை, சாலை மற்றும் குடிநீர் வசதியின்மை போன்றவை தான்.

    "நாடாளுமன்ற / சட்டமன்ற உறுப்பினர்களின் பற்றாக்குறை என்பது ஒரு மக்கள் பிரச்சனையே இல்லை. Shortage of MPs is not at all a problem being faced by an ordinary citizen. It is a democratic issue in Principle and not a Principal democratic issue. மிக முக்கியமான ஜனநாயகம் சார்ந்த பல பிரச்சனைகள் நாட்டில் இருப்பதை நான் கீழே விவரித்து இருக்கிறேன். அவற்றைக் களைவதுதான் நம் முதன்மைப் பணியாக இருக்க வேண்டும்.

    3. நாடாளுமன்றத்தின் முதன்மை நோக்கங்கள். போதிய விவாதங்களுக்குப் பிறகு சட்டங்கள் இயற்றுவது மற்றும் ஆளும் அரசைக் கேள்வி கேட்டு, அது நேர்மையாக மற்றும் அரசியல் சாசனத்திற்கு உட்பட்டு ஆட்சி செய்கிறதா என்பதைக் கண்காணித்துக் கட்டுப்படுத்துவது ஆகும். ஆனால் தற்பொழுது இந்த முக்கிய ஜனநாயகப் பணியை நாடாளுமன்றம் செய்யத் தவறி வருகிறது என்பதுதான் நிதர்சனமான உண்மை. நமது நாடாளுமன்ற முறை பிரிட்டிஷ் முறையைப் பின்பற்றி அமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அங்கு உள்ளது போன்று 'பிரதம மந்திரி கேள்வி நேரம்" (Prime Minister question time) போன்ற எந்த ஒரு சாதனத்தையும் நம் நாடாளுமன்றம் வகுக்கவில்லை. நாடாளுமன்றத்தின் செயல்பாடுகளில் சீர்திருத்தம் கொண்டு வராமல் நாடாளுமன்ற உறுப்பினர்களை அதிகரிப்பதன் மூலம் மட்டும் எந்த ஒரு பலனும் இல்லை.

    இன்னும் சொல்லப் போனால் ஊழல் மலிந்த இன்றைய அரசியல் சூழலில், அரசியல்வாதிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் மேல் மக்களுக்கு இருக்கும் நம்பிக்கை குறைவானதாகவே உள்ளது என்பதுதான் இன்றைய யதார்த்த நிலை. மேலும் ஏற்கெனவே பல லட்சம் கோடி கடன் இருக்கும் நிலையில், கூடுதலாக வரும் ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குச் சம்பளம், குடியிருப்பு மற்றும் இதர வசதிகளுக்குச் செலவிடப்படும் மக்கள் வரிப்பணம் அவசியம் தானா? இன்றைய Digital மற்றும் AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதி மக்களிடம் இன்னும் திறம்படத் தொடர்பில் இருப்பதே சாலச் சிறந்த அணுகுமுறையாக அமையும். ஜனநாயகத்தைக் காக்க எந்த ஒரு செலவும் பெரிய செலவு அல்ல என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இருப்பினும் அந்தச் செலவுகள் அவசியமானதாக இருக்க வேண்டும்.

    எனவே மேற்கூறியவற்றைக் கருத்தில் கொண்டு நம் அரசியல் சாசனத்தின் பிரிவுகளைத் தக்கவாறு திருத்தி அமைத்து, ஒவ்வொரு மாநிலத்திற்கும் 1971 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் தற்பொழுது ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகளின் எண்ணிக்கையில் மாற்றம் இன்றி அது காலவரையின்றி நீட்டிப்பு செய்யப்பட வேண்டும். அமெரிக்காவில் மக்களவைப் பிரதிநிதிகளின் எண்ணிக்கை 435 என நிரந்தரமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 'Equal population representation from each MP' என்ற கோட்பாடு அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு 50 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இனியும் நீடித்தால் எந்த ஒரு பெரிய தீமையும் நிகழ்ந்துவிடப் போவதில்லை; இதுதான் இந்தியாவின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் முக்கியக் காரணம் என்பதும் இல்லை," என்று குறிப்பிடப்பட்டுள்ளார்.

    • 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கான செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
    • அந்த நிர்வாகியை செங்கோட்டையன் ஆதரவாளர்கள் தாக்கி விரட்டியதாக கூறப்படுகிறது.

    ஈரோடு மாவட்டம் கோபியில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலையில் அ.தி.மு.க.வினர் அடிதடியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கோபியில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கான செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    அப்போது, அந்தியூர் நிர்வாகிகளுக்கு எந்த கூட்டத்திற்கும் அழைப்பு விடுக்கப்படுவது இல்லை என்று கட்சி நிர்வாகி ஒருவர் புகார் கூறியதாக தெரிகிறது. அப்போது இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் முற்றியநிலையில், அது கைகலப்பாக மாறியது. இந்நிலையில் அந்த நிர்வாகியை செங்கோட்டையன் ஆதரவாளர்கள் தாக்கி விரட்டியதாக கூறப்படுகிறது.

    இதனிடையே, புகார் கூறியவரை செங்கோட்டையன் மேடைக்கு அழைத்துப் பேசியதாக கூறப்படும் நிலையில், திட்டமிட்டு மோதல் உருவாக்கப்பட்டது என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் குற்றம்சாட்டியுள்ளார். 

    • சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கை ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக இருந்தார்.
    • சாம்பியன் டிராபியில் இருந்து ஆஸ்திரேலிய அணி அரையிறுதியில் வெளியேறியது.

    சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

    சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கை ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக இருந்தார். சாம்பியன் டிராபியில் இருந்து ஆஸ்திரேலிய அணி அரையிறுதியில் வெளியேறியது.

    இந்நிலையில் ஸ்டீவ் ஸ்மித் தனது ஓய்வை அறிவித்துள்ளார்.

    ஆஸ்திரேலிய அணியின் டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் ஸ்மித் தொடர்ந்து விளையாடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    35 வயதான ஸ்டீவ் சுமித் 170 போட்டிகளில் விளையாடி 5,800 ரன் எடுத்துள்ளார். சராசரி 43.28 ஆகும். 12 சதமும், 35 அரை சதமும் அடித்துள்ளார். அதிகபட்சம் 164 ரன் குவித்துள்ளார். தனது கடைசி ஒருநாள் போட்டியில் அவர் 73 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தயாளு அம்மாள் உடல்நிலையை மருத்துவர் குழுவினர் கண்காணித்து வருகின்றனர்.
    • தற்போது தயாளு அம்மாளுக்கு சளி தொல்லை குறைந்து உள்ளதாக தெரிகிறது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள் உடல் நலக் குறைவு காரணமாக அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    அவரது உடல்நிலையை மருத்துவர் குழுவினர் கண்காணித்து வருகின்றனர். தற்போது தயாளு அம்மாளுக்கு சளி தொல்லை குறைந்து உள்ளதாக தெரிகிறது.

    அடுத்த சில நாட்களுக்கு மருத்துவ சிகிச்சை வழங்கி அதன் பிறகு தயாளு அம்மாளை வீட்டுக்கு அனுப்புவது குறித்து முடிவு செய்யப்படும் என்று ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்தன.

    • அடையாளம் தெரியாதவர்களுக்கு அடையாளம் தருவதற்கு தயாராக இல்லை.
    • தேச நலனில் அக்கறை இல்லாதவர்கள் என்று அர்த்தம்.

    சென்னையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    கல்வி மூலம் கலவரத்தை தூண்டுவதாக பா.ஜ.க. மூத்த தலைவர் எச்.ராஜா குற்றம்சாட்டி இருப்பது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறியதாவது:

    * அடையாளம் தெரியாதவர்களுக்கு அடையாளம் தருவதற்கு தயாராக இல்லை. அவர் ஒரு புறம் பிதற்றிக்கொண்டே இருக்கட்டும்.

    * எங்கள் பணி கல்வியில் சிறந்த மாநிலம் தமிழ்நாடு என்பதை ஒன்றியத்திலே முதலமைச்சர் அரும்பணியால் நிரூபிப்பார்.

    * ஒருகாலத்தில் மாநகராட்சி பள்ளிகளை வெறுத்து ஒதுக்கிய நிலை மாறி இன்றைக்கு மாநகராட்சி பள்ளிகள் வெகுமதி பள்ளிகளாக தமிழகத்தில் நிலவுவதை கல்வியாளர்கள், மாணவர்களுடைய பெற்றோர்களும், மாணவ செல்வங்களும் உணர்ந்து இருக்கிறார்கள்.

    * இதுபோன்ற பிதற்றலுக்கு பதில் கூற தயாராக இல்லை. அதற்கு உண்டான நேரமும் இல்லை.

    மீண்டும் பா.ஜ.க.வுடன் கூட்டணி என்று எடப்பாடி பழனிசாமி சூசகமாக கூறியிருப்பது...

    * பக்கத்து வீட்டில் என்ன நடக்கிறது என்று எட்டிப்பார்க்கிற வேலை எங்களுக்கு இல்லை.

    * எங்களது பயணம் சீராக முதலமைச்சர் தலைமையில் உறுதிமிக்க கூட்டணியாக, மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணி பொலிவோடு திகழ்ந்து கொண்டு இருக்கிறது.

    * அதற்கு தலைமை தாங்குகின்ற முதல்வர் ஏதோ நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் அல்ல. உறுதியோடு 60 ஆண்டு காலம் அரசியல் பயணத்தை மேற்கொண்டவர்.

    ராஜ்ய சபா சீட் விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி நம்பகத்தன்மை குறித்து...

    * எடப்பாடி சார் இங்கே இருந்து 8 கி.மீ. தூரத்தில் தான் இருக்கிறார். அவரிடமே பதில் வாங்கிக் கொள்ளுங்கள்.

    அனைத்துக்கட்சியில் பங்கேற்காத கட்சிகள் குறித்து...

    * தேச நலனில் அக்கறை இல்லாதவர்கள் என்று அர்த்தம்.

    * தமிழை பற்றி, தமிழ்நாட்டை பற்றி, தமிழக மக்களை பற்றி கவலை இல்லாதவர்கள் புறக்கணிப்பதை பெரிதாக எடுத்துக்கொள்ள கூடாது என்று கூறினார்.

    ×