என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • 4.5 லட்சம் கோடி கடன் வாங்கியும் எந்த புதிய திட்டமும் அறிவிக்கப்படவில்லை.
    • இவர்கள் தொடுத்தால் சரியான வழக்கு, மற்றவர்கள் தொடுத்தால் பொய்யா?

    சட்டசபையில் அ.தி.மு.க. கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்த நிலையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * 4.5 லட்சம் கோடி கடன் வாங்கியும் எந்த புதிய திட்டமும் அறிவிக்கப்படவில்லை.

    * தங்கள் ஆட்சியின் மீதுள்ள குறைகளை மறைக்க அ.தி.மு.க.வில் உட்கட்சி பூசல் என பேசுகிறார் முதலமைச்சர்.

    * டாஸ்மாக்கில் 40 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

    * டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் உங்கள் மீது தவறில்லை என்றால் அமலாக்கத்துறை வழக்கை எதிர்க்கொள்ளுங்கள்.

    * இவர்கள் தொடுத்தால் சரியான வழக்கு, மற்றவர்கள் தொடுத்தால் பொய்யா?

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கோபி சந்த் நடிப்பில் ரணம் என்ற பெயரில் முதல் படம் தெலுங்கில் இயக்கி, மெகா ஹிட் கொடுத்தவர்.
    • 17 வயது மகன் ராகின் ராஜை ஆக்ஷன் ஹீரோவாக்கி, தலா என்ற தெலுங்கு படத்தை சென்ற மாதம் வெளியிட்டார்.

    மதுரையை சார்ந்த அம்மா ராஜசேகர், நடன இயக்குனராக தமிழில் பல படங்களுக்கு பணிபுரிந்து, தெலுங்கு திரையுலகில் 300 படங்களுக்கு நடன இயக்குனராக பணிபுரிந்துள்ளார்.

    கோபி சந்த் நடிப்பில் ரணம் என்ற பெயரில் முதல் படம் தெலுங்கில் இயக்கி, மெகா ஹிட் கொடுத்தவர். தொடர்ந்து தனது இயக்கத்தில் 12வது படமாக தனது 17 வயது மகன் ராகின் ராஜை ஆக்ஷன் ஹீரோவாக்கி, தலா என்ற தெலுங்கு படத்தை சென்ற மாதம் வெளியிட்டார். அந்த படம் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு, 'வெட்டு' என்ற பெயரில் இம்மாதம் 28ம் தேதி தமிழகமெங்கும் வெளியாக உள்ளது.

     

    ஒரு 17 வயது பையன் செய்யும் மாபெரும் சம்பவம் தான் இப்படம். அம்மா சென்டிமென்ட், காதல், வீரம், விவேகம் என மண் சார்ந்த உண்மை சம்பவமாக 'வெட்டு' வெளியாகிறது!

    ராகின் ராஜ் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக அங்கிதா நடிக்கிறார். இவர்களுடன் சேலம் வேங்கை அய்யனார், பிரேம்நாத், ரோகித் எஸ்தர், அவினாஷ், விஜி சந்திரசேகர், சுந்தரா டிராவல்ஸ் ராதா, இந்திரஜா ஆகியோர் நடிக்கிறார்கள்.

    கதை, திரைக்கதை, இயக்கம் அம்மா ராஜசேகர்.

    இசை எஸ்.எஸ்.தமன், பாடல் டி.ராஜேந்தர், ஒளிப்பதிவு ஷியாம் கே நாயுடு, நடனம் அம்மா ராஜசேகர், ஸ்டண்ட் சில்வா, கெவின், பிஆர்ஓ கோவிந்தராஜ். இணைத் தயாரிப்பு பிரேம்நாத், தயாரிப்பு சேலம் வேங்கை அய்யனார்.

    • அ.தி.மு.க. ஆட்சியில் எதிர்க்கட்சி தலைவர் பேச அதிக நேரம் வாய்ப்பு தரப்பட்டது.
    • தங்கள் ஆட்சியின் மீதுள்ள குறைகளை மறைக்க அ.தி.மு.க.வில் உட்கட்சி பூசல் என பேசுகிறார் முதலமைச்சர்.

    சட்டசபையில் அ.தி.மு.க. கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்த நிலையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * மக்கள் பிரச்சனைகளை பேச வேண்டி இருந்ததால் சட்டசபையில் அதிக நேரம் எடுத்துக்கொண்டோம்.

    * தமிழகத்தில் அதிக பிரச்சனைகள் உள்ளதால் அதிக நேரம் பேச வேண்டி இருந்தது.

    * அ.தி.மு.க. ஆட்சியில் எதிர்க்கட்சி தலைவர் பேச அதிக நேரம் வாய்ப்பு தரப்பட்டது.

    * நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில் நான் பேசியது ஒளிபரப்பப்படவில்லை.

    * சட்டப்பேரவை தலைவர் இரண்டு தரப்பிற்கும் சமமாக நடப்பதுதான் அவருக்கு அழகு.

    * மீண்டும் சட்டசபை உறுப்பினர்களின் கேள்விகளுக்கு சபாநாயகரே பதில் அளிக்கிறார்.

    * 2.52 மணி நேரம் எதிர்க்கட்சியினர் பேசியதாக கூறுகிறார்கள். வீடியோவை பார்த்தபோது பாதி கூட பேசவில்லை என்பது தெரிகிறது.

    * கே.பி.முனுசாமி பேசியபோது அமைச்சருக்கு பதில் சபாநாயகர் குறுக்கிட்டு பதில் கூறுகிறார். இதைத்தான் நாங்கள் கண்டிக்கிறோம்.

    * ஆளுங்கட்சி இருக்கையில் அமர்ந்து அப்பாவு கருத்து கூறலாம். சபாநாயகர் இருக்கையில் அமர்ந்தால் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • டொமினிக் அண்ட் தி லேடி பர்ஸ் திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
    • மம்மூட்டி-க்கு புற்று நோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது என்ற தகவல் இணையத்தில் பரவி வந்தது

    மலையாள திரையுலகில் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் நடிகர் மம்மூட்டி. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான டொமினிக் அண்ட் தி லேடி பர்ஸ் திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக பஸூகா திரைப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக நடிகர் மம்மூட்டி-க்கு புற்று நோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது என்ற தகவல் இணையத்தில் பரவி வந்தது அதற்காக மம்மூட்டி படப்பிடிப்பில் இருந்து ஓய்வு எடுத்து வருகிறார் எனவும் கூறப்பட்டு வந்தது.

    இந்நிலையில் இந்த செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மமூட்டி தரப்பினர் பதிலளித்துள்ளனர் அதில் " இது முற்றிலும் தவறான செய்தி. அவர் நலமாக இருக்கிறார். ரமலான் மாதம் என்பதால் அவர் அதற்காக நோன்பு இருந்து வருகிறார். அதனால் படப்பிடிப்பில் இருந்து தற்காலிக ஓய்வு எடுத்து வருகிறார். மேலும் இந்த ஓய்வு முடிந்த பிறகு அவர் மகேஷ் நாராயணன் படப்பிற்கு செல்வார்" என கூறியுள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • மாநிலம் முழுக்க ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
    • தி.மு.க. அரசு மாபெரும் தவறு செய்திருக்கிறது.

    தமிழ்நாடு அரசின் டாஸ்மாக் நிறுவனம் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சமீபத்தில் சோதனை நடத்தியது. இந்த சோதனையை தொடர்ந்து, டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடிக்கு மேல் ஊழல் செய்திருப்பதாக அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டது.

    இந்த விவகாரம் தமிழ்நாடு அரசியல் புயலை கிளப்பியுள்ளது. எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை கண்டித்து வருகின்றன. இந்த நிலையில், தமிழ்நாடு பா.ஜ.க. சார்பில் டாஸ்மாக் ஊழலை கண்டித்து இன்று மாநிலம் முழுக்க ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

    சென்னையில், ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற பா.ஜ.க. தலைவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். அதன்படி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள புறப்பட்ட பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையையும் காவல் துறையினர் கைது செய்தனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்த பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை இந்த விவகாரத்தில் பா.ஜ.க. தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தும் என்று தெரிவித்தார்.

    இது குறித்து பேசிய அண்ணாமலை, "ஒருவருடைய மடியில் கனமிருந்தால் மட்டும்தான் வழியில் பயம் இருக்கும். இன்றைக்கு தி.மு.க. அரசு மாபெரும் தவறு செய்திருக்கிறது. அதனால் பயத்தில் இருக்கிறார்கள்.

    ஜனநாயக முறையில் ஆர்ப்பாட்டம், போராட்டம் செய்யும் போது குரல் வளையை நசுக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். காவல் துறைக்கு இதுதான் வேலையா? தமிழ்நாடு முழுவதும் 7 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டு ஒவ்வொரு இடத்திலும் தடுத்து நிறுத்துகிறார்கள்.

    இன்றைக்கு தடுக்கட்டும். அடுத்த ஆர்ப்பாட்டம் தேதி சொல்லாமல் நடக்கும். அது 22-ந்தேதி நடக்கலாம். அல்லது எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். எதை வேண்டுமானாலும் முற்றுகையிடுவோம். அது முதலமைச்சரின் வீடாக கூட இருக்கலாம்.

    எங்களை பொருத்தவரை அடுத்த ஆர்ப்பாட்டம் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும். ஆனால் தேதி சொல்ல மாட்டேன். இந்த முறை காவல் துறைக்கு மரியாதை கொடுத்து தேதியை சொல்லி இருந்தோம். அவர்கள் இதுபோல் செய்வதால், ஒரு அரசியல் கட்சியாக நாங்களும் வேறு ஸ்டைலில் செய்ய ஆரம்பிப்போம்.

    நான் பேசினால் பல விஷயங்கள் வெளிவரும் என்பதால் என்னை பேச விடாமல் தடுப்பதற்காக ஆர்ப்பாட்டத்துக்கு போக விடாமல் செய்கிறார்கள். காவல் துறை என்ன வேண்டுமானாலும் முயற்சி எடுக்கட்டும்.

    எங்களை பொறுத்தவரை டாஸ்மாக் ஊழலில் யார் குற்றவாளிகள் என்று நாங்கள் கருதுகிறோமோ எல்லோரையும் ஜனநாயக முறையில் முற்றுகையிட எங்களுக்கு உரிமை இருக்கிறது. டாஸ்மாக்கில் 1000 கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடந்துள்ளது. அமலாக்கத்துறை சோதனை நடத்தி இதை தெரிவித்து உள்ளது.

    தமிழ்நாட்டு அரசியலை உலுக்குவதற்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டில் நல்ல அரசியலை கொண்டு வருவதற்கு பா.ஜ.க. முன்னெடுத்து இருக்கக்கூடிய இந்த ஆர்ப்பாட்டம் அச்சாணியாக அமையும் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

    டாஸ்மாக்கில் 40 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்திருக்கிறது என்பது எனது அனுமானம். நான் பொறுப்பான பதவியில் இருப்பதால் அமலாக்கத்துறை சொல்லி இருப்பது போல ரூ.1000 கோடிக்கு மேல் ஊழல் நடந்திருக்கும் என்று கூறுகிறேன். பா.ஜ.க. மீதுள்ள பயத்தால் போராட்டம் தடுக்கப்படுகிறது," என்று அவர் கூறினார்.

    • தெலுங்கு திரைப்படமான Arjun S/O Vyjayanthi படத்தின் டீசரை படக்குழு தற்பொழுது வெளியிட்டுள்ளது.
    • விஜயசாந்தி மற்றும் கல்யாண் ராம் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    தெலுங்கு திரைப்படமான Arjun S/O Vyjayanthi படத்தின் டீசரை படக்குழு தற்பொழுது வெளியிட்டுள்ளது. இப்படத்தில் விஜயசாந்தி மற்றும் கல்யாண் ராம் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். விஜயசாந்தி ஒரு நேர்மையான காவல் அதிகாரி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

    அவரது மகனாக கல்யாண் ராம் தன்  வழியிலேயே ஒரு நல்ல காவல் அதிகாரியாக வருவார் என எதிர்பார்க்கும் விஜயசாந்தி ஆனால் அதற்கு நேர் மாறாக மகனான கல்யாண் ராம் ஒரு கேங்ஸ்டராக உருவெடுக்கிறார். ஆனால் தன் தாயின் மீது அன்பாக இருக்கிறார். இந்த நேர் எதிர் சிந்தனையுடைய இருவரும் மோதும் காட்சிகள் டீசரில் இடம் பெற்றுள்ளது.

    இப்படத்தை பிரதீப் இயக்கியுள்ளார். ஐபிஎஸ் கதாப்பாத்திரத்திற்கே பேர் போனவர் விஜய்சாந்தி மீண்டும் அதே ஐஏஎஸ் கதாப்பாத்திரத்தில் நீண்ட இடைவேளைக்கு பிறகு நடிக்கும் திரைப்படமாக இப்படம் அமைந்துள்ளது.

    திரைப்படத்தை அசோகா கிரியேஷன்ஸ் மற்றும் NTR Arts நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. இசையை அஜனீஷ் லோக்னாத் மேற்கொள்ள ஒளிப்பதிவை ராம் பிரசாத் செய்கிறார். திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. டீசர் காட்சிகள் படத்தின் எதிர்ப்பார்ப்பை அதிகரித்துள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • மத்திய அரசின் மொழி கொள்கையில் தமிழ்நாட்டிலும் கூட தமிழ் மொழிக்கு இடமில்லை
    • மும்மொழி கொள்கையை வலியுறுத்தும் மத்திய அரசு, தனது சொந்த பள்ளிகளில் கூட மாநில மொழியான தமிழை சேர்க்க மறுக்கிறது.

    கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழை உடனடியாக அறிமுகப்படுத்த வேண்டும் என்று திமுக எம்.பி. அருண் நேரு வலியுறுத்தியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "ஒன்றிய அரசின் மொழி கொள்கையில் தமிழ்நாட்டிலும் கூட தமிழ் மொழிக்கு இடமில்லை என்பது PM Shri கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் (முன்னர் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள்) மூலம் மீண்டும் தெளிவாகிறது.

    திருச்சிராப்பள்ளியில் உள்ள PM Shri கேந்திரிய வித்யாலயா எண் 2, 2025-26 கல்வியாண்டிற்கான ஒப்பந்த ஆசிரியர் பணியிடங்களுக்காக நேர்காணல் அறிவிப்பை 16-03-2025 அன்று வெளியிட்டுள்ளது.

    இதில்: PGT (பட்டதாரி ஆசிரியர்): பொருளாதாரம், ஆங்கிலம்

    TGT (பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்): இந்தி, சமஸ்கிருதம், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல்

    PRT (முதன்மை ஆசிரியர்): பொது மற்றும் இசைபோன்ற பாடங்களுக்கு ஆசிரியர்கள் தேவைப்படுகின்றனர்.

    ஆனால், தமிழ் மொழிக்கு எந்த பணியிடமும் குறிப்பிடப்படவில்லை. இது தமிழ்நாட்டின் மொழியை கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் கற்பிக்க விருப்பமில்லை என்பதை உறுதிப்படுத்துகிறது.

    தமிழ்நாடு முழுவதும் உள்ள 49 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், RTI தகவல்களின்படி, தமிழ் ஆசிரியர்கள் இல்லை, ஆனால் இந்தி மற்றும் சமஸ்கிருத ஆசிரியர்கள் பெருமளவில் உள்ளனர். இந்த பள்ளிகள் தற்போது PM Shri என்ற பெயரில் மறுபெயரிடப்பட்டு, தேசிய கல்வி கொள்கை 2020 (NEP 2020) மற்றும் அதன் மும்மொழி கொள்கையை பின்பற்ற வேண்டும் என்று கூறப்படுகிறது. ஆனால் உண்மையில், இந்த பள்ளிகள் இன்னும் இருமொழி கொள்கையை (இந்தி மற்றும் ஆங்கிலம்) மட்டுமே பின்பற்றுகின்றன, தமிழ்நாட்டின் மொழியான தமிழை கூட அவர்கள் கற்பிக்க விரும்பவில்லை. ஆனால் இப்பள்ளிகளில் சமஸ்கிருதம் கற்பிக்கப்படுகிறது.

    சமீபத்திய நிகழ்வுகளில் மாண்புமிகு ஒன்றிய கல்வி அமைச்சர் அவர்கள் NEP 2020 வலியுறுத்தும் மும்மொழி கொள்கையை பின்பற்றி செயல்படும் PM Shri பள்ளிகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழ்நாடு அரசு கையெழுத்திடவில்லை என்ற காரணத்தால், சமக்ர சிக்ஷா திட்டத்தின் (SSA) மூலம் தமிழ்நாட்டிற்கு சேர வேண்டிய 2000 கோடி அளவிலான நிதியை நிறுத்தி வைத்து, சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்தார். இது தமிழ்நாட்டின் மொழியியல் அடையாளத்தையும், தமிழ் மக்களின் உரிமைகளையும் புறக்கணிப்பதாகும். தமிழ்நாடு இரு மொழி கொள்கையை (தமிழ் மற்றும் ஆங்கிலம்) பின்பற்றுகிறது, மற்றும் இந்தியை திணிக்கும் முயற்சியாக NEP 2020-ஐ எதிர்க்கிறது. ஆனால் மும்மொழி கொள்கையை வலியுறுத்தும் ஒன்றிய அரசு, தனது சொந்த பள்ளிகளில் கூட மாநில மொழியான தமிழை சேர்க்க மறுக்கிறது.

    ஒன்றிய அரசு தமிழ்நாட்டின் பண்பாட்டையும் மொழியையும் மதிக்க வேண்டும். PM Shri கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழை உடனடியாக அறிமுகப்படுத்த வேண்டும், மேலும் SSA நிதிகளை தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார். 

    • ஐ.பி.எல். 2025 முதல் போட்டி ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது.
    • ஐ.பி.எல். கோப்பையை வெல்ல பத்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    ஐ.பி.எல். 2025 கிரிக்கெட் தொடர் வருகிற 22-ம் தேதி தொடங்குகிறது. இந்த முறை நடக்கும் முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. ஐ.பி.எல். தொடர் தொடங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், ஒவ்வொரு அணி வீரர்களும் பயிற்சியில் மும்முரம் காட்டி வருகின்றனர்.

    பத்து அணிகள் பலப்பரீட்சை நடத்தும் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் மே மாதம் 25-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.

    இன்னும் சில நாட்களில் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் தொடங்கவுள்ள நிலையில், ஒவ்வொரு அணி கேப்டன்கள் பெறும் சம்பளம் எவ்வளவு என்பதை தொடர்ந்து பார்ப்போம்..

    ரிஷப் பண்ட் (லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்) ரூ. 27 கோடி

    ஸ்ரேயஸ் அய்யர் (பஞ்சாப் கிங்ஸ்) ரூ. 26.75 கோடி

    பேட் கம்மின்ஸ் (சன்ரைசர்ஸ் ஐதராபாத்) ரூ. 18 கோடி

    ருதுராஜ் கெய்க்வாட் (சென்னை சூப்பர் கிங்ஸ்) ரூ. 18 கோடி

    சஞ்சு சாம்சன் (ராஜஸ்தான் ராயல்ஸ்) ரூ. 18 கோடி

    அக்சர் பட்டேல் (டெல்லி கேபிட்டல்ஸ்) ரூ. 16.5 கோடி

    சுப்மன் கில் (குஜராத் டைட்டன்ஸ்) ரூ. 16.5 கோடி

    ஹர்திக் பாண்டியா (மும்பை இந்தியன்ஸ்) ரூ. 16.35 கோடி

    ரஜத் பட்டிதர் (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு) ரூ. 11 கோடி

    அஜிங்கியா ரஹானே (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்) ரூ. 1.5 கோடி

    • விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக நிறுவப்பட்டு சந்திரயான்-3 திட்டம் முழுமை பெற்றது.
    • இந்தியாவின் சொந்த விண்வெளி நிலையத்தை நிறுவுவதற்கான திட்டங்கள் நடைபெற்று வருகின்றன

    சந்திரனை ஆய்வு செய்வதற்கான சந்திரயான்-5 திட்டப்பணிக்கு மத்திய அரசு சமீபத்தில் ஒப்புதல் அளித்துள்ளதாக இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் தெரிவித்துள்ளார்.

    இஸ்ரோ தலைவராக சமீபத்தில் பொறுப்பேற்றதற்காக நேற்று நடைபெற்ற வாழ்த்து நிகழ்ச்சியில் பேசிய நாராயணன், 25 கிலோ எடையுள்ள 'பிரயாக்யான்' ரோவரைச் சுமந்து சென்ற சந்திரயான்-3 மிஷன் போலல்லாமல், சந்திரயான்-5 மிஷன் சந்திரனின் மேற்பரப்பை ஆய்வு செய்ய 250 கிலோ எடையுள்ள ரோவரை எடுத்துச் செல்லும்.

    சந்திரயான் என்பது சந்திர மேற்பரப்பை ஆய்வு செய்யும் திட்டம். 2008 ஆம் ஆண்டு வெற்றிகரமாக ஏவப்பட்ட சந்திரயான்-1, சந்திரனின் வேதியியல், கனிமவியல் மற்றும் புகைப்பட-புவியியல் வரைபடத்தை எடுத்தது.

    2019 இல் ஏவப்பட்ட சந்திரயான்-2, 98 சதவீத வெற்றியைப் பெற்றது. ஆனால் இறுதி கட்டங்களில் இரண்டு சதவீத பணியை மட்டும் முடிக்க முடியவில்லை. இன்னும் சந்திரயான்-2 இல் உள்ள உயர் தெளிவுத்திறன் கொண்ட கேமரா நூற்றுக்கணக்கான படங்களை அனுப்பி வருகிறது.

    சந்திரயான்-3 மிஷன் என்பது சந்திரயான்-2 இன் தொடர்ச்சியான பயணமாகும். ஆகஸ்ட் 23, 2023 அன்று நிலவின் தென் துருவத்தில் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக நிறுவப்பட்டு சந்திரயான்-3 திட்டம் முழுமை பெற்றது. 2027-ல் தொடங்கப்படும் சந்திரயான்-4 திட்டம் நிலவில் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகளைக் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

    இதற்கிடையே மூன்று நாட்களுக்கு முன்புதான் சந்திரயான்-5 திட்டத்திற்கான ஒப்புதல் எங்களுக்குக் கிடைத்தது. ஜப்பானுடன் இணைந்து நாங்கள் அதைச் செய்வோம் என்று நாராயணன் கூறினார்.

     

    மேலும் இஸ்ரோவின் எதிர்காலத் திட்டங்கள் குறித்து பேசிய நாராயணன், இந்தியாவின் சொந்த விண்வெளி நிலையமான பாரதிய விண்வெளி நிலையத்தை நிறுவுவதற்கான திட்டங்கள் நடைபெற்று வருகின்றன என்று தெரிவித்தார்.

    • அரசு ஒரே நாளில் 2 அல்லது 3 மானியக்கோரிக்கை நடத்துவதாக குற்றச்சாட்டுகள் வைத்தீர்கள்.
    • எதிர்க்கட்சியினரை ஏன் இவ்வளவு நேரம் பேச அனுமதித்தீர்கள் என முதல்வர் இதுவரை என்னிடம் கேட்டதில்லை.

    சட்டசபையில் சபாநாயகர் அப்பாவு மீது அ.தி.மு.க. கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தது.

    பேரவையில் நடந்த குரல் வாக்கெடுப்பிலும் டிவிஷன் முறையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பிலும் அ.தி.மு.க. கொண்டுவந்த தீர்மானம் தோல்வி அடைந்தது.

    நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு 63 பேர் ஆதரவாக வாக்களித்தனர். அ.தி.மு.க. கொண்டுவந்த தீர்மானத்திற்கு எதிராக 154 பேர் வாக்களித்த நிலையில் தீர்மானம் தோல்வி அடைந்தது.

    நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்த நிலையில் மீண்டும் சபாநாயகர் இருக்கையில் அப்பாவு அமர்ந்தார்.

    சபாநாயகர் இருக்கையில் மீண்டும் அப்பாவு அமர்ந்தபோது சட்டசபை உறுப்பினர்கள் கைதட்டி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    இதையடுத்து சபாநாயகர் அப்பாவு உரையாற்றினார். உரையில் அவர் கூறியதாவது:

    * எதிர்க்கட்சி தலைவர் உட்பட தோழமை கட்சி தலைவர்கள் பேசிய அனைத்தையும் நான் கேட்டுக்கொண்டுதான் இருந்தேன்.

    * ஒரு சில தவறு நடந்திருந்தால் நானே திருத்தி இருப்பேன். அல்லது முதல்வரால் திருத்தப்பட்டிருப்பேன்.

    * அரசு ஒரே நாளில் 2 அல்லது 3 மானியக்கோரிக்கை நடத்துவதாக குற்றச்சாட்டுகள் வைத்தீர்கள்.

    * அ.தி.மு.க. ஆட்சியில் 30-க்கும் மேற்பட்ட துறைகளின் மானிய கோரிக்கைகளை ஒரே நாளில் நடத்தியதும் நினைவு கூர்கிறேன்.

    * எதிர்க்கட்சி தலைவர் பேச அனுமதிக்கவில்லை என கூறினார். அவர் 259 நிமிடம் பேசி உள்ளார்.

    * எதிர்க்கட்சியினரை ஏன் இவ்வளவு நேரம் பேச அனுமதித்தீர்கள் என முதல்வர் இதுவரை என்னிடம் கேட்டதில்லை.

    * ஆளுநர் உரை மீதான விவாதத்தில் பேசுவதற்கு ஆளுங்கட்சியினருக்கு 25, எதிர்க்கட்சியினருக்கு 49 சதவீதம் வாய்ப்பு அளிக்கப்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ரன்யா ராவ் பரப்பனஅக்ரஹார ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.
    • ரன்யாவின் தந்தை டிஜிபி ராமச்சந்திர ராவ் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளார்.

    பிரபல நடிகை ரன்யா ராவ் கடந்த 3-ந்தேதி துபாயில் இருந்து ரூ.12.56 கோடி மதிப்பிலான தங்கத்தை கடத்திக் கொண்டு பெங்களூருவுக்கு எமிரேட்ஸ் விமானத்தில் வந்தபோது அவரை டெல்லி வருவாய் புலனாய்வு பிரிவு (டி.ஆர்.ஐ) அதிகாரிகள் கைது செய்தனர்.

    தற்போது ரன்யா ராவ் பரப்பனஅக்ரஹார ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து, ரன்யாவின் தந்தை டிஜிபி ராமச்சந்திர ராவ் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளார்.

    இந்நிலையில், ரன்யா ராவ் குறித்து பாஜக எம்.எல்.ஏ. பசங்கவுடா பாட்டீல் கொச்சையாக தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    ரன்யா ராவ் குறித்து பேசிய பசங்கவுடா பாட்டீல், "தங்க கடத்தலில் சுங்க அதிகாரிகளின் மீது தவறு இருந்தால் அவர்கள் மீது தேவையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ரன்யா ராவ் உடல் முழுவதும் தங்கத்தை வைத்திருந்தாள். அவள் உடலில் துளைகள் இருந்த இடங்களில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தினாள். வரவிருக்கும் சட்டமன்றக் கூட்டத்தொடரின் போது, இந்த வழக்கில் தொடர்புடைய அனைத்து அமைச்சர்களின் பெயரையும் வெளியிடுவேன்

    தங்கம் கடத்தலில் ரன்யா ராவுக்கு யார் எல்லாம் உதவி செய்தார்கள் என்பது பற்றிய முழுமையான தகவல்களை நான் சேகரித்துள்ளேன்அவள் தங்கத்தை எந்த துளையில் மறைத்து கொண்டு வந்தாள் என்பது உட்பட அனைத்தையும் நான் அம்பலப்படுத்துவேன்" என்று தெரிவித்தார்.

    • Court: State vs. A Nobody, என்ற தெலுங்கு திரைப்படத்தை ராம் ஜெகதீஷ் இயக்கியுள்ளார்.
    • நானியின் வால் போஸ்டர் சினிமா மற்றும் பிரஷாந்தி திபிர்னேனி இணைந்து தயாரித்துள்ளனர்.

    Court: State vs. A Nobody, என்ற தெலுங்கு திரைப்படத்தை ராம் ஜெகதீஷ் இயக்கியுள்ளார். இப்படத்தை நடிகர் நானியின் வால் போஸ்டர் சினிமா மற்றும் பிரஷாந்தி திபிர்னேனி இணைந்து தயாரித்துள்ளனர்.

    இப்படத்தில் ஹர்ஷ் ரோஷன் மற்றும் ஸ்ரீதேவி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர் இவர்களுடன் சிவாஜி, சாய் குமார், ரோகினி மற்றும் ஹர்ஷவர்தன் நடித்துள்ளனர். ஹர்ஷ் ரோஷன் இதற்கு முன் நானியின் சரிபோதா சனிவாரம் திரைப்படத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது.

    திரைப்படம் சில நாட்களுக்கு முன் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. திரைப்படம் இதுவரை 20 கோடி ரூபாய்-க்கு மேல் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 3 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம் வெளியாகி வெறும் 3 நாட்களில் 20 கோடி ரூபாய் வசூலித்தது படத்தின் பெரிய வெற்றியாகும்.

    இப்படம் போக்சோ சட்டத்தின் கீழ் செய்யாத குற்றத்தில் காதலனை போக்சோ சட்டம் மற்றும் பல்வேறு சட்டங்களின் கீழ் வழக்கு பதிவு செய்கின்றனர். இந்த வழக்கை பிரியதர்ஷி எடுத்து வாதாடுகிறார். இதை மையமாக வைத்து திரைப்படத்தின் கதைக்களம் அமைந்துள்ளது.

    சமீபத்தில் நடைபெற்ற படத்தின் விழாவில் நானி பேசியதாவது " படத்தின் வெற்றியை கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். மக்கள் கூறுகிறார்கள் நான் கோர்ட் திரைப்படத்தை வெற்றி பெற வைத்தேன் என்று ஆனால் உண்மையில் கோர்ட் திரைப்படம் தான் என்னை வெற்றியடைய வைத்துள்ளது. மேலும் படத்தின் இயக்குனர், ஒளிப்பதிவாளர் என அனைவரையும் விழாவில் பாராட்டினார்"

    திரைப்படம் வரும் நாட்களில் இன்னும் பெரிய வசூல் செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×