என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    அதியன் ஆதிரை அடுத்ததாக தண்டகாரண்யம் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

    2019-ம் ஆண்டு அட்டக்கத்தி தினேஷ் நடிப்பில் அதியன் ஆதிரை இயக்கத்தில் வெளியானது இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு என்ற திரைப்படம். இப்படம் வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது.

    இதைத்தொடர்ந்து அதியன் ஆதிரை அடுத்ததாக தண்டகாரண்யம் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் அட்டக்கத்தி தினேஷ் மற்றும் கலையரசன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    தண்டகாரண்யம் என்றால் ராமாயண இதிகாசத்தில் உள்ள காட்டின் பெயராகும். இப்படம் பயங்கரவாதத்தையும், காவல் அதிகாரிகள் மற்றும் காட்டை சம்மந்தப்பட்ட கதைக்களமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இப்படத்தை இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் லர்ன் அண்ட் டீச் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. மேலும் ரித்விகா, வின்சு சாம், ஷபீர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    இந்நிலையில் படத்தை பார்த்து இயக்குநர் சேரன் பாராட்டியுள்ளார் அதில் அவர் "'தண்டகாரண்யம்' பார்த்தேன். அதிகாரம் எங்கெல்லாம் எப்படியெல்லாம் எளியவர்கள் வாழ்வில் ஊடுருவி நம்மை முன்னேறவிடாமல் அடிமைகளாக்குகிறது என்பதை சொல்லும் ஆகச்சிறந்த படைப்பு. தோழர் அதியன் ஆதிரையின் திரைக்கதையும் உருவாக்கமும் அவரை தமிழின் மிகச்சிறந்த இயக்குனராக ஆக்குகிறது." என பாராட்டியுள்ளார்

    இப்படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழை வழங்கியுள்ளது. திரைப்படம் வரும் செப்டம்பர் 19 ஆம் தேதி வெளியாகிறது.

    • கூட்டத்தில், 'நான் பேசுறது கேட்கிறதா?' என விஜய் சைகையில் கேள்வி எழுப்பினார்.
    • விஜயின் பரப்புரையை கேட்க வந்தவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

    திருச்சி மார்க்கெட் பகுதியில் எம்ஜிஆர் சிலை முன்பு பிரச்சார வாகனத்தில் நின்று தவெக தலைவர் விஜய் உரையாற்றினார்.

    அப்போது மைக் சரியாக வேலை செய்யாததால் விஜய் என்ன பேசினார் என்றே தெரியவில்லை என அங்கு கூடியிருந்தவர்கள் தெரிவித்தனர்.

    கூட்டத்தில், 'நான் பேசுறது கேட்கிறதா?' என விஜய் சைகையில் கேட்க, 'இல்லை இல்லை' என கட்சித் தொண்டர்கள் முழக்கமிட்டனர். இதனால் விஜயின் பரப்புரையை கேட்க வந்தவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

    மேலும், விஜய் பேச்சை கேட்க தொலைக்காட்சி முன்பு அமர்ந்திருந்த மக்களும் விஜய் கேட்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.

    திருச்சியில் தனது முதல் பரப்புரையிலேயே மைக் சொதப்பியதால் த.வெ.க. நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர். 

    • 2 மணி நேரம் கூட வேலைக்கு ஓய்வு கொடுக்க முடியாதா?
    • Work-Life balance கேள்விக்குள்ளாகியுள்ளது என்று நெட்டிசன்கள் கேள்வி

    பிரேமலு நடிகர் நஸ்லேன் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் லோகா.

    இவர்களுடன் சாண்டி, சந்து சலிம் குமார், அருண் குரியன் மற்றும் சாந்தி பாலசந்திரன் ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படத்தை டொமினிக் அருண் இயக்கியுள்ளார்.

    இத்திரைப்படம் உலகளவில் 200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இந்நிலையில், பெங்களூருவில் லோகா' படத்தின் போது திரையரங்கிற்குள் அமர்ந்து மடிக்கணினியில்

    வேலை செய்து கொண்டிருந்த பெண்ணின் புகைப்படம் இணையத்தில் வைரலானது.

    2 மணி நேரம் கூட வேலைக்கு ஓய்வு கொடுக்க முடியாதா? Work-Life balance கேள்விக்குள்ளாகியுள்ளது என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பினர்.

    • ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கையில், மணிப்பூரின் வீர மகன்கள் முக்கிய பங்கு வகித்தனர்.
    • மணிப்பூரை அமைதி, வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல வேண்டும்.

    பிரதமர் மோடி மணிப்பூர் மாநிலத்திற்கு சென்றுள்ளார். மணிப்பூர் தலைநகர் இம்பாலில் நடைபெற்ற பேரணியில் பிரதமர் மோடி பேசியதாவது:-

    * 21 ஆம் நூற்றாண்டு வடகிழக்குக்கு சொந்தமானது.

    * வாய்ப்புகளின் நகரம் இம்பால். இந்தியாவின் வளர்ச்சியின் வேகத்தை துரிதப்படுத்தும் இடங்களில் ஒன்றாக இதைப் பார்க்கிறேன்

    * மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியில் மணிப்பூர் பெண்கள் முன்னணியில் உள்ளனர்

    * மணிப்பூரில் எந்த வகையான வன்முறையும் துரதிர்ஷ்டவசமானது

    * மணிப்பூரை அமைதி, வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல வேண்டும்

    * ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கையில், மணிப்பூரின் வீர மகன்கள் முக்கிய பங்கு வகித்தனர்

    * நேபாளத்தின் முதல் பெண் பிரதமராக பதவியேற்றதற்கு சுஷிலா கார்கிக்கு வாழ்த்துகள். இது பெண்கள் அதிகாரமளிப்பதற்கான ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

    * மணிப்பூரில் வெள்ளப் பிரச்சினையைத் தீர்க்க மத்திய அசு பல திட்டங்களில் செயல்படுகிறது.

    இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

    தேஜா சஜ்ஜாவின் அடுத்த படமாக மிராய் திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    2011 ஆம் ஆண்டு சாம்பி ரெட்டி படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகினார் தேஜா சஜ்ஜா . தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவர் இவர்.

    தேஜா சஜ்ஜாவின் அடுத்த படமாக மிராய் திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    இப்படத்தை ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனரான கார்த்திக் கட்டாமானேனி இயக்கியுள்ளார். பீபில் மீடியா ஃபேக்டரி நிறுவனம் மிராய் படத்தை தயாரித்துள்ளனர். படத்தின் முதல் நாள் வசூல் விவரத்தை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அதன்படி திரைப்படம் 27.20 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.

    இப்படத்தில் மனோஜ் மஞ்சு வில்லனாகவும், ரித்திகா நாயக், தேஜா சஜ்ஜாவுக்கு ஜோடியாகவும் நடித்துள்ளனர்.

    • இலவச பேருந்து பயணம் செல்லும் பெண்களை ஓசி பயணம் என அசிங்கப்படுத்துகிறார்கள்.
    • பெண்கள் ஓசியில் பயணம் செகிறார்கள் என்று பொன்முடி பேசியது சர்ச்சையானது

    திருச்சி மார்க்கெட் பகுதியில் எம்ஜிஆர் சிலை முன்பு பிரச்சார வாகனத்தில் நின்று தவெக தலைவர் விஜய் உரையாற்றினார்.

    அப்போது பேசிய விஜய், "இலவச பேருந்து பயணம் செல்லும் பெண்களை ஓசியில்தானே போகிறீர்கள், ஓசி பயணம் என அசிங்கப்படுத்துகிறார்கள். மகளிருக்கு ரூ.1,000 கொடுத்து விட்டு பணம் கொடுத்ததாக கூறி பெண்களை அசிங்கப்படுத்துகிறார்கள்" என்று திமுகவை கடுமையாக விமர்சித்தார்.

    திமுகவில் அமைச்சராக இருந்த பொன்முடி, "பெண்கள் ஓசியில் பயணம் செகிறார்கள்" என்று பேசியது சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.

    • நம்ம கேள்வி கேட்டுகிட்டே இருக்க வேண்டியதுதான்.
    • திமுகவினரிடம் இருந்து எந்த பதிலும் வரப்போவதில்லை.

    திருச்சி மார்க்கெட் பகுதியில் எம்ஜிஆர் சிலை முன்பு பிரச்சார வாகனத்தில் நின்று தவெக தலைவர் விஜய் உரையாற்றினார்.

    அப்போது, திமுக அளித்த வாக்குறுதிகளில் நிறைவேற்றாததை ஒவ்வொன்றாக குறிப்பிட்டு செய்தீர்களா என தவெக தலைவர் விஜய் கேள்வி எழுப்பினார்.

    அவர் மேலும் கூறியதாவது:-

    டீசல் விலை ரூ.3 குறைப்பு, மாணவர்கள் கல்விக்கடன் ரத்து, அரசு வேலையில் பெண்களுக்கு 40% இட ஒதுக்கீடு, அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம், அரசுப் பணியில் 2 லட்சம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் போன்ற வாக்குறுதிகள் என்ன ஆனது? நம்ம கேள்வி கேட்டுகிட்டே இருக்க வேண்டியதுதான்; திமுகவினரிடம் இருந்து எந்த பதிலும் வரப்போவதில்லை.

    நடைமுறைக்கு எது சாத்தியமோ அதையே நாங்கள் சொல்வோம். கல்வி, மின்சாரம், மருத்துவம் போன்ற அடிப்படை தேவைகளை தவெக செய்து கொடுக்கும். பெண்கள் பாதுகாப்பில் எந்த சமரசமும் கிடையாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஜனநாயக போருக்கு முன்பாக மக்களை பார்க்க வந்துள்ளேன்- திருச்சி கூட்டத்தில் விஜய்.
    • மடதச்சார்பின்மைக்கு பெயர்பெற்ற திருச்சி கொள்கைக்கான மண்.

    திருச்சி மார்க்கெட் பகுதியில் எம்ஜிஆர் சிலை முன்பு பிரச்சார வாகனத்தில் நின்று தவெக தலைவர் விஜய் உரையாற்றினார்.

    அப்போது, திமுக அளித்த வாக்குறுதிகளில் நிறைவேற்றாததை ஒவ்வொன்றாக குறிப்பிட்டு செய்தீர்களா என தவெக தலைவர் விஜய் கேள்வி எழுப்பியுள்ளார்.

    அவர் மேலும் கூறியதாவது:-

    2 அமைச்சர்கள் இருந்தும் திருச்சியில் எந்த முன்னேற்றமும் அடையவில்லை.

    இலவச பேருந்து பயணம் செல்லும் பெண்களை ஓசியில்தானே போகிறீர்கள், ஓசி பயணம் என அசிங்கப்படுத்துகிறார்கள்.

    மகளிருக்கு ரூ.1000 கொடுத்துவிட்டு பணம் கொடுத்ததாக கூறி பெண்களை அசிங்கப்படுகிறார்கள்.

    மாணவர்களின் கல்விக்கடன் ரத்து என்ற திமுக அரசு கொடுத்த வாக்குறுதி என்னவானது. நாம் கேள்வி கேட்டுக் கொண்டே இருக்க வேண்டியது தான். திமுகவினரிடம் இருந்து எந்த பதிலும் வராது.

    கிட்னி திருட்டை முறைகேடு என்று கூறுகிறார்கள். மோசமான கிட்னி திருட்டு விவகாரத்தை முறைகேடு என்கிறார்.

    தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படவில்லை.

    காவரி நீர் பாயும் திருச்சி சுற்று வட்டார பகுதிகளில் கூட குடிநீர் பிரச்சனை நிலவுகிறது. குடிநீர் பிரச்சனையை தீர்க்க வழி கண்டறியாமல் மணல் கொள்ளையில் ஈடுபடுகின்றனர்.

    அரசு வேலையில் பெண்களுக்கு 40 சதவீதம் இட ஒதுக்கீடு என்ற வாக்குறுதி என்னவானது.

    டீசல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்படும் என்ற திமுகவின் தேர்தல் வாக்குறுதி என்னவானது?

    இவ்வாறு அவர் கூறினார்.

    • விமான நிலையத்தில் இருந்து சுமார் 4 மணி நேரம் பயணித்து மரக்கடை பகுதிக்கு வந்தடைந்தார்.
    • வழிநெடுகிலும் தொண்டர்கள் பார்த்த கையசைத்தபடி வாகனத்தில் விஜய் வந்தார்.

    திருச்சியில் பரப்புரை நடைபெறும் மரக்கடை பகுதிக்கு தவெக தலைவர் விஜய் வந்தடைந்தார். விமான நிலையத்தில் இருந்து சுமார் 4 மணி நேரம் பயணித்து மரக்கடை பகுதிக்கு வந்தடைந்தார்.

    வழிநெடுகிலும் தொண்டர்கள் பார்த்த கையசைத்தபடி வாகனத்தில் விஜய் வந்தார்.

    இந்நிலையில், திருச்சி மார்க்கெட் பகுதியில் எம்ஜிஆர் சிலை முன்பு பிரச்சார வாகனத்தின் மீது நின்று தவெக தலைவர் விஜய் உரையாற்றினார்.

    த.வெ.க. விஜய் பரப்புரை வாகனத்தில் ஏறி நின்றி தொண்டர்களுக்கு கையசைத்து வணக்கம் தெரிவித்து உரையை தொடங்கினார்.

    விஜய் பேச தொடங்கிய சில நிமிடங்களில் ஆம்புலன்ஸ் ஒன்று கூட்டத்தின் நடுவில் நுழைந்தது. இபிஎஸ் பரப்புரை கூட்டத்தின்போது ஆம்புலன்ஸ் நுழைந்ததை போல், தவெக தலைவர் விஜயின் கூட்டத்திலும் ஆம்புலன்ஸ் நுழைந்தது பேசும்பொருளாகியுள்ளது.

    இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் உருவாகும் புதிய மிஸ்டரி த்ரில்லர் Mirage

    இயக்குநர் ஜீத்து ஜோசப்  இயக்கத்தில் உருவாகும் புதிய மிஸ்டரி த்ரில்லர் Mirage, செப்டம்பர் 19 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

    மிராஜ் படத்தில் ஆசிஃப் அலி, அபர்ணா பாலமுரளி, ஹக்கிம் ஷாஜகான் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    படத்தின் கதையை ஜீத்து மற்றும் ஸ்ரீனிவாஸ் எழுதியுள்ளனர். இப்படம் அபர்ணா ஆர் தரகாட் எழுதிய கதையின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளது.

    தொழிநுட்ப படக்குழு

    ஒளிப்பதிவு: சதீஷ் குருப்

    எடிட்டிங்: விநாயக் வி.எஸ்.

    இசை: விஷ்ணு ஷ்யாம்

    படத்தை E4 எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் முகேஷ் ஆர். மேத்தா, ஜதின் எம். சேதி, மற்றும் சி.வி. சரதி இணைந்து தயாரித்துள்ளனர். டிரெய்லர் மக்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பை அதிகரித்துள்ளது.

    • எங்களது பேட்டிங்கில் இன்னும் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
    • நாங்கள் எங்களுடைய திட்டங்களை வெளிப்படுத்த முடியும் என்றால் வெற்றி நிச்சயம்.

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் முதல் போட்டியில் ஓமன் அணியை 93 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இது பாகிஸ்தானுக்கு நம்பிக்கையை கொடுத்துள்ளது.

    பாகிஸ்தான் நாளை இந்தியாவை எதிர்கொள்கிறது. இந்தியாவை எதிர்கொள்வது தொடர்பாக பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகா கூறியதாவது:-

    நாங்கள் கடந்த இரண்டு மூன்று மாதங்களாக நல்ல கிரிக்கெட் விளையாடியுள்ளோம். நாங்கள் நல்ல கிரிக்கெட் விளையாட வேண்டும். நாங்கள் எங்களுடைய திட்டங்களை நீண்ட காலத்திற்கு வெளிப்படுத்த முடியும் என்றால், எந்தவொரு அணியையும் வீழ்த்த முடியும் திறமை எங்களிடம் உள்ளது.

    எங்களது பேட்டிங்கில் இன்னும் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. பந்து வீச்சு சிறப்பாக உள்ளது. குறிப்பாக சுழற்பந்து வீச்சாளர்கள் ஓமனுக்கு எதிராக சிறப்பாக பந்து வீசினார்கள்.

    நாங்கள் மூன்று சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். மூன்று பேரும் மாறுபட்ட ஸ்பின்னர்கள். நாங்கள் சைம் என்பவரையும் கொணடுள்ளோம். இவர் புதிய மற்றும் பழைய பந்தில் சிறப்பாக பந்து வீசிக் கொண்டிருக்கிறார். ஐக்கிய அரபு அமீரகம் என வரும்போது, ஏராளமான ஸ்பின்னர்கள் தேவை.

    இவ்வாறு சல்மான் ஆகா தெரிவித்தார்.

    • ஜனநாயக போருக்கு முன்பாக மக்களை பார்க்க வந்துள்ளேன்- திருச்சி கூட்டத்தில் விஜய்.
    • மடதச்சார்பின்மைக்கு பெயர்பெற்ற திருச்சி கொள்கைக்கான மண்.

    திருச்சி மார்க்கெட் பகுதியில் எம்ஜிஆர் சிலை முன்பு பிரச்சார வாகனத்தில் நின்று தவெக தலைவர் விஜய் உரையாற்றுகிறார்.

    தவெக விஜய் பரப்புரை வாகனத்தில் ஏறி நின்றி தொண்டர்களுக்கு கையசைத்து வணக்கம் தெரிவித்து உரையை தொடங்கினார்.

    அதன் பிறகு அவர் பேசியதாவது:-

    போருக்கு செல்வதற்கு முன் பெற்றி பெறுவதற்காக குலதெய்வம் கோவிலுக்கு சென்று சாமி கும்பிடுவர்.

    அடுத்தாண்டு நடைபெற உள்ள ஜனநாயக போருக்கு முன்பாக மக்களை பார்த்துவிட்டு போகலாம் என்று வந்துள்ளேன்.

    திருச்சியில் இருந்து தொடங்கிய எல்லாம் திருப்புமுனையாக அமையும் என்று சொல்வார்கள்.

    மடதச்சார்பின்மைக்கு பெயர்பெற்ற திருச்சி கொள்கைக்கான மண்.

    1956-ல் அறிஞர் அண்ணா, 1974-ல் புரட்சி தலைவர் எம்ஜிஆர் மாநாடு என பல வரலாறுகளை கொண்டது திருச்சி.

    உங்களை பார்த்தவுடன் ஒரு எமோஷனல் கணெக்ட், மனதில் ஒரு பரவசம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×