என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • ஆர்சிபி வெற்றி கொண்டாட்டத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர்.
    • கூட்ட நெரிசல் சம்பவத்தையடுத்து ஆர்சிபி அணியை விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டது.

    சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரின் 18-வது சீசனில் ஆர்சிபி அணி கோப்பையை முதல் முறையாக வென்று சாதனை படைத்தது.

    இதனை பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் சிறப்பாக கொண்டாட அணி நிர்வாகம் முடிவெடுத்தது. அதன்படி சின்னசாமி மைதானத்திற்கு வருகை தந்தனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். 50 பேருக்கு மேற்பட்டோர் காயமடைந்தனர்.

    இதன் காரணமாக அணி நிர்வாகம் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது. இந்த சம்பவத்திற்குப் பிறகு, சின்னசாமி மைதானம் பெரிய நிகழ்ச்சிகளுக்கு பாதுகாப்பற்றது என அறிவிக்கப்பட்டது.

    இதனையடுத்து சின்னசாமி மைதானம் மூடப்பட்டது. அதனை தொடர்ந்து பிரிட்டனின் Diageo குழுமத்திற்கு சொந்தமான ஆர்சிபி அணியை விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அணியின் மதிப்பு சுமார் $2பில்லியனாக |(ரூ.17,762 கோடி) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகினது. கூட்ட நெரிசல் சம்பவத்தையடுத்து அந்த குழுமம் அணியை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.

    இந்நிலையில் ஆர்சிபி அணியை வாங்க உள்நாட்டில் 4 நிறுவனங்களும் வெளிநாடுகளில் 2 நிறுவங்களும் ஆர்வம் காட்டுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    அந்த வகையில் கோவிஷீல்டு தடுப்பூசி தயாரித்த சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா நிறுவனமானமும் ஆர்சிபி அணியை வாங்க ஆர்வமாக உள்ளது. அதேபோல அதானி குழுமமும் ஆர்வமாக உள்ளது.

    மேலும் பார்த் ஜிண்டால் (ஜே.எஸ்.டபிள்யூ குழுமம்), டெல்லியைச் சேர்ந்த பல துறை நலன்களைக் கொண்ட கோடீஸ்வரர்,

    அமெரிக்காவை தளமாகக் கொண்ட இரண்டு தனியார் பங்கு நிறுவனங்கள் ஆர்சிபி அணியை வாங்க ஆர்வமாக உள்ளது.

    ஆர்சிபி அணியின் முதல் தலைவராக மல்லையா இருந்தார். அதனை தொடர்ந்து Diageo குழுமம் இந்த அணியை வாங்கியது குறிப்பிடத்தக்கது. 

    • விராட் கோலி வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் கிரேட்டஸ்ட் பிளேயர்.
    • ரோகித் தொடக்கத்தில் வெளிப்படுத்தக்கூடிய ஆட்டத்தின் மீது எனக்கு பெரிய மரியாதை இருக்கிறது.

    ஆஸ்திரேலியாவில் இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் டி20 தொடரில் விளையாட உள்ளது. வருகிற 19-ம் தேதி ஒருநாள் தொடர் தொடங்குகிறது. சுப்மன் கில் தலைமையில் புதிய இந்திய அணி களமிறங்க உள்ளது.

    ஒருநாள் தொடரில் விராட் கோலி, ரோகித் சர்மா ஆட்டத்தைப் பார்ப்பதற்காக இருநாட்டு ரசிகர்களிடமும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    இருவரும் 2027 உலகக் கோப்பையில் விளையாடி ஓய்வு பெற வேண்டும் என்பதே அவர்களுடைய கனவாகவும் விருப்பமாகவும் இருக்கிறது. ஆனால் அதற்கு முன் அவர்களை கழற்றி விட இந்திய அணி நிர்வாகம் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    இந்நிலையில் 2027 உலகக் கோப்பையில் விராட் கோலி, ரோகித் சர்மா விளையாடுவார்களா என டிராவிஸ் ஹெட்டிடம் செய்தியார்கள் கேள்வி எழுப்பினார்.

    அதற்கு டிராவிஸ் ஹெட் அளித்த பதில்:-

    அவர்கள் இந்தியாவுக்கான அற்புதமான வீரர்கள். அவர்கள் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் மிகவும் தரமான 2 வீரர்கள். விராட் கோலி வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் கிரேட்டஸ்ட் பிளேயர். ரோகித் சர்மா அந்தளவுக்கு கிடையாது.

    இருப்பினும் ரோகித் சர்மா தொடக்கத்தில் வெளிப்படுத்தக்கூடிய ஆட்டத்தின் மீது எனக்கு பெரிய மரியாதை இருக்கிறது. ஏதோ ஒரு கட்டத்தில் அவர்கள் மிஸ் செய்யப்படுவார்கள் என்று உறுதியாகச் சொல்வேன். ஆனால் அவர்கள் 2027 வரை விளையாடுவார்கள் என்று நினைக்கிறேன். அவர்கள் உலகக் கோப்பையில் விளையாடுவதற்கு முயற்சி செய்வார்கள். அதுவரை அவர்கள் விளையாடினால் அது கிரிக்கெட்டுக்கு சிறப்பானது.

    என்று ஹெட் கூறினார்.


    • ஆஸ்திரேலிய கேப்டன் அலிசா ஹீலி இந்த ஆட்டத்தில் 73 பந்துகளில் சதத்தை எட்டினார்.
    • உலக கோப்பை போட்டிகளில் அலிசா ஹீலியின் 4-வது சதமாக இது பதிவானது.

    விசாகப்பட்டினம்:

    13-வது மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் விசாகப்பட்டினத்தில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா, வங்கதேசம் அணிகள் மோதின.

    முதலில் ஆடிய வங்கதேசம் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 198 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா அணி 24.5 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 202 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி முதல் அணியாக அரையிறுதிக்கு தகுதிபெற்றது.

    இந்நிலையில் ஆஸ்திரேலிய கேப்டன் அலிசா ஹீலி இந்த ஆட்டத்தில் 73 பந்துகளில் சதத்தை எட்டினார். பெண்கள் உலக கோப்பை வரலாற்றில் ஒரு வீராங்கனையின் 2-வது அதிவேக சதம் இதுவாகும். வெஸ்ட்இண்டீசின் டியான்ட்ரா டோட்டின் 2017-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 71 பந்தில் சதம் அடித்ததே சாதனையாக தொடருகிறது.

    உலக கோப்பை போட்டிகளில் அலிசா ஹீலியின் 4-வது சதமாக இது பதிவானது. உலக கோப்பையில் அதிக சதம் விளாசிய வீராங்கனைகளின் பட்டியலில் 2-வது இடத்தை பகிர்ந்துள்ளார். முதலிடத்தில் இங்கிலாந்தின் நாட் சிவெர் (5 சதம்) உள்ளார்.

    • இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி வரும் 19-ம் தேதி நடக்கவுள்ளது.
    • கேமரூன் கிரீன் காயம் காரணமாக விலகி உள்ளார்.

    இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி வரும் 19-ம் தேதி நடக்கவுள்ளது.

    இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் போட்டிக்காக அறிவிக்கப்பட்ட ஆஸ்திரேலிய அணியின் கேமரூன் கிரீன் காயம் காரணமாக விலகி உள்ளார். அவருக்கு மாற்று வீரர்களாக மார்னஸ் லெபுசென் இடம் பெற்றுள்ளார்.

    ஏற்கனவே ஆஸ்திரேலிய அணியில் இருந்து ஜாம்பா, ஜோஷ் இங்லீஷ் இருவரும் விலகிய நிலையில் அவர்களுக்கு பதிலாக ஜோஷ் பிலிப்ஸ், மேத்யூ குனேமான் ஆகியோர் மாற்று வீரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஆசிய பசிபிக் தகுதி சுற்று போட்டியில் சூப்பர்-6 ஆட்டங்கள் ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடந்தது.
    • ஜப்பான் அணியை வீழ்த்தி ஐக்கிய அரபு அமீரக அணி வெற்றி பெற்றது.

    மஸ்கட்:

    20 அணிகள் பங்கேற்கும் 10-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு பிப்ரவரி- மார்ச் மாதங்களில் இந்தியா மற்றும் இலங்கையில் நடக்கிறது.

    இதில் ஆசிய பசிபிக் தகுதி சுற்று போட்டியில் சூப்பர்-6 ஆட்டங்கள் ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகம் அணி, ஜப்பானை சந்தித்தது. இதில் முதலில் பேட் செய்த ஜப்பான் 9 விக்கெட்டுக்கு 116 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய ஐக்கிய அரபு அமீரக அணி 12.1 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 118 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் 3-வது வெற்றியை பெற்று புள்ளி பட்டியலில் டாப்-3 இடத்தை உறுதி செய்ததுடன், உலகக் கோப்பை போட்டிக்கு 20-வது மற்றும் கடைசி அணியாக தகுதி பெற்றது.

    இந்தியா, இலங்கை, ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, வங்காளதேசம், இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், கனடா, இத்தாலி, நெதர்லாந்து, நமிபியா, ஜிம்பாப்வே, நேபாளம், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 20 அணிகள் இந்த உலகக் கோப்பையில் விளையாட உள்ளன.

    • டெஸ்ட் போட்டிகளைப் போலவே, ஒவ்வொரு அணியும் இரண்டு முறை (தலா 20 ஓவர்கள்) பேட்டிங் செய்யும்.
    • ஒரு போட்டி மொத்தம் 80 ஓவர்களைக் கொண்டது.

    புதிய கிரிக்கெட் வடிவமான "டெஸ்ட் ட்வென்டி" (Test Twenty) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது கிரிக்கெட்டின் 4-வது வடிவமாக பார்க்கப்படுகிறது. டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கு அடுத்ததாக இந்த வடிவம் உருவாக்கப்பட்டுள்ளது.

    இந்த வடிவம் 13-19 வயதுடைய இளைஞர்களை கவர்வதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் பாரம்பரியமாக பிரபலமில்லாத நாடுகளில் விளையாட்டை பரப்புவது இதன் முதன்மை நோக்கங்கள். இது டெஸ்ட் கிரிக்கெட்டின் மரபுகளை பாதுகாக்கவும், இளம் தலைமுறையை ஈர்க்கவும் உதவும்.

    இதன் விதிமுறைகளி படி, ஒரு போட்டி மொத்தம் 80 ஓவர்களைக் கொண்டது. டெஸ்ட் போட்டிகளைப் போலவே, ஒவ்வொரு அணியும் இரண்டு முறை (தலா 20 ஓவர்கள்) பேட்டிங் செய்யும். இதன் முடிவுகள் வெற்றி, தோல்வி, சமன் அல்லது டிரா என அமையலாம். இது டெஸ்ட் கிரிக்கெட்டின் உத்திகளையும், டி20யின் வேகத்தையும் இணைக்கிறது.

    இந்த தொடரின் முதல் சீசன் ஜனவரி 2026-ல் தொடங்கவுள்ளது. முதல் இரண்டு பதிப்புகளும் இந்தியாவில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. படிப்படியாக இது சர்வதேச சுற்றுப் போட்டியாக மாற உள்ளது.

    முதலில் ஆறு உலகளாவிய அணிகள் இதில் பங்கேற்கும். அதன்படி இந்தியாவில் மூன்று, துபாய், லண்டன் மற்றும் அமெரிக்காவில் தலா ஒன்று. ஒவ்வொரு அணியிலும் 16 வீரர்கள் இடம்பெறுவார்கள். அதில் 8 இந்தியர்கள், 8 சர்வதேச வீரர்கள் அடங்கும்.

    இந்த புதுவடிவ கிரிக்கெட்டை உருவாக்கியவர் கவுரவ் பஹிர்வானி. இதன் ஆலோசனை குழுவில் முன்னாள் சர்வதேச கிரிக்கெட் வீரர்களான சர் கிளைவ் லாய்ட், மேத்யூ ஹெய்டன், ஹர்பஜன் சிங், ஏபி டிவில்லியர்ஸ் போன்றோர் இடம்பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

    • பயிற்சியின்போது ரோகித் சர்மாவிடம் பயிற்சியாளர் காம்பீர் தனியாக நீண்ட நேரம் பேசி கொண்டிருந்தார்.
    • அணியில் ரோகித் சர்மாவின் பங்கு என்ன என்பது குறித்து கம்பீர் விவரித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

    பெர்த்:

    இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் 3 ஒருநாள் போட்டி மற்றும் ஐந்து 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. இரு அணிகளும் மோதும் முதல் ஒரு நாள் போட்டி பெர்த்தில் நாளை மறுநாள் நடக்கிறது.

    டெஸ்ட் மற்றும் 20 ஓவர் போட்டியில் ஓய்வு பெற்ற ரோகித் சர்மா ஒரு நாள் போட்டியில் மட்டும் விளையாடுவேன் என்று தெரிவித்திருந்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் அவரது கேப்டன் பதவி சுப்மன் கில்லுக்கு வழங்கப்பட்டது.

    இதையடுத்து அணியில் ஒரு வீரராக ரோகித்சர்மா களம் இறங்குகிறார்.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடருக்கு ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். இதற்கிடையே பயிற்சியின்போது ரோகித் சர்மாவிடம் பயிற்சியாளர் காம்பீர் தனியாக நீண்ட நேரம் பேசி கொண்டிருந்தார். அப்போது இருவரும் பல விஷயங்கள் குறித்து விவாதித்தனர். இதில் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டது ஏன்? சுப்மன் கில் எதற்காக கேப்டனாக அறிவிக்கப்பட்டார் என்பது குறித்து ரோகித் சர்மாவிடம் காம்பீர் விளக்கம் அளித்ததாக கூறப்படுகிறது. மேலும் அணியில் ரோகித் சர்மாவின் பங்கு என்ன என்பது குறித்து கம்பீர் விவரித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

    அனுபவம் வாய்ந்த ரோகித் சர்மா, கோலியின் பங்களிப்பு இளம் வீரர்கள் அடங்கிய இந்த அணிக்கு மிகவும் முக்கியம் என்றும் இதனால் எந்த ஒரு சுமையும் இன்றி சுதந்திரமாக விளையாடும்படியும் ரோகித் சர்மாவிடம் காம்பீர் தெரிவித்துள்ளார். புதிய கேப்டனான சுப்மன் கில்லுக்கு கிரிக்கெட் நுணுக்கங்கள் மற்றும் கேப்டன்ஷிப் எப்படி செய்ய வேண்டும் என்று களத்தில் வழிநடத்த வேண்டும் என்றும் கம்பீர் கேட்டுக்கொண்டதாக தெரிகிறது.

    • மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா, இலங்கையில் நடந்து வருகிறது.
    • ஆஸ்திரேலிய அணி 4 வெற்றியுடன் 9 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

    விசாகப்பட்டினம்:

    13-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

    இந்நிலையில், விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா, வங்கதேசம் அணிகள் மோதின. முதலில் ஆடிய வங்கதேசம் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 198 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா அணி 24.5 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 202 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

    இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 5 போட்டிகளில் 4ல் வெற்றி பெற்று 9 புள்ளிகளுடன் முதல் இடத்தில் நீடிக்கிறது.

    இந்நிலையில், ஆஸ்திரேலிய அணி முதல் அணியாக அரையிறுதிக்கு தகுதிபெற்றது.

    • மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா, இலங்கையில் நடந்து வருகிறது.
    • இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது.

    விசாகப்பட்டினம்:

    13-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

    இந்நிலையில், விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா, வங்கதேசம் அணிகள் மோதின. டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய வங்கதேசம் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 198 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் சோபன மாஸ்ட்ரே அரை சதம் கடந்து 66 ரன்னும், ரூபியா ஹெய்டர் 44 ரன்னும் எடுத்தனர்.

    ஆஸ்திரேலியா சார்பில் ஆஷ்லே கார்ட்னர், அனபெல் சதர்லேண்ட், ஆலனா கிங், ஜார்ஜியா ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடியது. கேப்டன் அலீசா ஹீலி, லிட்ச்பீல்டு ஆகியோர் வங்கதேச பந்துவீச்சை அடித்து நொறுக்கினர். அலீசா ஹீலி சதம் கடந்தார். லிட்ச்பீல்டு அரை சதம் கடந்தார்.

    இறுதியில், ஆஸ்திரேலியா அணி 24.5 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 202 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ஆஸ்திரேலிய அணி 5 போட்டிகளில் 4ல் வெற்றி பெற்று 9 புள்ளிகளுடன் முதல் இடத்தில் நீடிக்கிறது.

    • பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா ஆசிய கோப்பையை வென்றது.
    • இறுதிப்போட்டியில் சிறப்பாக செயல்பட்ட திலக் வர்மா ஆட்டநாயகன் விருதை வென்றார்.

    ஆசிய கோப்பை தொடர் சில நாட்களுக்கு முன்னர் நடந்து முடிந்தது. இதன் இறுதிப்போட்டியில் இந்தியா -பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த பரபரப்பான ஆட்டத்தில் இந்திய அணி கடைசி ஓவரில் வெற்றி பெற்று ஆசிய கோப்பையை கைப்பற்றியது.

    இந்த போட்டியில் இந்திய தடுமாறிய நிலையில் ஒற்றை ஆளாக அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

    இந்நிலையில் ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்ற திலக் வர்மாவை நடிகர் சிரஞ்சீவி நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.

    'மன சங்கர வர பிரசாத் காரு' என்ற படப்பிடிப்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நடிகை நயன்தாரா, இயக்குநர் அநில் ரவிபுடி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • ரோகித் உலக கோப்பையை வெல்லும் ஆர்வத்தில் இருப்பதால் அதற்காக உடற்தகுதியை பராமரித்து வருகிறார்.
    • அவர் சாதனைகளுக்காக விளையாடவில்லை.

    ஆஸ்திரேலியா- இந்தியா அணிகள் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. முதலில் தொடங்கும் ஒருநாள் தொடர் வருகிற 19-ந் தேதி நடக்கிறது. ஒருநாள் தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். ரோகித் சர்மா சாதாரண வீரராகவே களமிறங்குகிறார்.

    இவர் ஒருநாள் உலக கோப்பை 2027-ல் இடம் பெறுவாரா என்பது இன்னும் முடிவாகவில்லை. மேலும் ஆஸ்திரேலியா தொடருடன் ரோகித் ஓய்வு பெறுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    இந்நிலையில் 2027-ம் ஆண்டு உலக கோப்பையை வெல்லும் ஆர்வத்தில் ரோகித் இருப்பதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    ரோகித் அந்த உலக கோப்பையை வெல்லும் ஆர்வத்தில் இருக்கிறார். அதற்காக உடற்தகுதியை பராமரித்து வருகிறார். 2023 உலக கோப்பை இறுதிப்போட்டியில் தோல்வியடைந்ததிலிருந்து, உலக கோப்பையை வெல்லும் அணியின் கேப்டனாக இருக்க வேண்டும் என்ற கனவு அவருக்கு இருந்தது. அதை 2024 டி20 உலக கோப்பையில் அடைந்தார். ஆனால் அந்த நெருப்பு இன்னும் எரிந்து கொண்டிருக்கிறது. அவர் 50 ஓவர்கள் உலக கோப்பையை வெல்ல விரும்புகிறார்.

    அவர் சாதனைகளுக்காக விளையாடவில்லை. உலகக் கோப்பை இறுதியில் கூட, அவர் தொடக்கத்தில் விளையாடிய விதம், இந்திய கிரிக்கெட்டுக்கு அவர் கொண்டு வருவதை காட்டியது.

    என்று கார்த்திக் கூறினார்.

    • டி20 உலகக் கோப்பை தொடரில் 20 அணிகள் பங்கேற்கின்றனர்.
    • நேபாளம்- ஓமன் 18-வது மற்றும் 19-வது அணிகளாக தகுதி பெற்றுள்ளன.

    ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் 2026 பிப்ரவரி முதல் மார்ச் வரை நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான தகுதிச் சுற்று போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

    இந்த தகுதிச் சுற்றில் நேபாளம் மற்றும் ஓமன் ஆகிய இரு அணிகளும் 2026 ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளன. அவர்களது இறுதி சூப்பர் சிக்ஸ் போட்டிக்கு முன்பே 18-வது மற்றும் 19-வது அணிகளாக தகுதி பெற்றுள்ளன. மேலும் தகுதிச் சுற்றில் இன்னும் ஒரு இடம் மட்டுமே உள்ளது.

    தற்போது ஓமனில் நடைபெறும் சூப்பர் சிக்ஸ் சுற்றில் யுஏஇ, ஜப்பான், கத்தார், சமோவா போன்ற அணிகள் போட்டியிடுகின்றன. இந்த போட்டிகளின் முடிவுகளின் அடிப்படையில் கடைசி அணி தீர்மானிக்கப்படும். மீதமுள்ள ஒரு இடத்தை UAE அணி பிடிக்க அதிக வாய்ப்பு உள்ளது.

    இந்தியா, இலங்கை, ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, வங்கதேசம், இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, அமெரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள், அயர்லாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், நெதர்லாந்து, இத்தாலி, கனடா, ஜிம்பாப்வே, நமீபியா, நேபாளம், ஓமன் ஆகிய அணிகள் இந்த தொடரில் இடம் பெற்றுள்ளனர்.

    ×