என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • பஞ்சாப் மற்றும் மும்பை இந்தியன்ஸ்க்கு எதிராக விளையாடி தலா 1 விக்கெட் வீழ்த்தினார்.
    • ஆர்சிபிக்கு எதிராக நேற்று விளையாடவில்லை.

    ஐபிஎல் 2025 கிரிக்கெட்டில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வந்த தென்ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் ரபாடா சொந்த நாடு திரும்பியுள்ளார். முக்கியமான தனிப்பட்ட காரணமாக ரபாடா சொந்த நாடு திரும்பியதாக அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனால் எப்போது இந்தியா திரும்பி மீண்டும் அணியில் இணைவார் என்பதை தெரிவிக்கவில்லை.

    ரபாடா குஜராத் அணிக்காக முதல் இரண்டு போட்டிகளில் விளையாடினார். பஞ்சாப் அணிக்கெதிராக 41 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார். மும்பைக்கு எதிராக 42 ரன்கள் கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார். ஆர்சிபி-க்கு எதிராக சின்னசாமி மைதானத்தில் நேற்று நடைபெற்ற 3ஆவது போட்டியில் பங்கேற்கவில்லை.

    ரபாடாவுக்குப் பதிலாக அர்ஷத் கான் களம் இறங்கினார். இவர் விராட் கோலியை வீழ்த்தினார்.

    குஜராத் அணியில் கோயட்சே, கிளென் பிளிப்ஸ் ஆகியோர் இன்னும் வாய்ப்பு கிடைக்காமல் வெளியில் உள்ளனர். கோயட்சே இன்னும் முழுத்தகுதி பெறவில்லை எனக் கூறப்படுகிறது.

    • கொல்கத்தா நைட் ரைடர்ஸ் புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
    • சன்ரைசர்ஸ் ஐதராபாத் 8ஆவது இடத்தில் உள்ளது.

    ஐபிஎல் 2025 சீசனின் 15ஆவது போட்டில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கிறது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கேப்டன் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

    கொல்கத்தா அணி:-

    டி காக், வெங்கடேஷ் அய்யர், ரகானே, ரிங்கு சிங், ரகுவன்ஷி, மொயீன் அலி, சுனில் நரைன், ரசல், ராமன்தீப் சிங், ஹர்ஷித் ராணா, வருண் சக்ரவர்த்தி.

    சன்ரைசர்ஸ் ஐதராபாத்:-

    அபிஷேக் சர்மா, இஷான் கிஷன், நிதிஷ் ராணா, கிளாசன், அனிகெட் வர்மா, கமிந்து மெண்டிஸ், பேட் கம்மின்ஸ், சிம்ரஜீத் சிங், ஹர்ஷல் பட்டேல், முகமது சமி, ஜீஷன் அன்சாரி.

    • என்னை தேர்வு செய்யாத உங்களுக்குத் எனது திறமையைக் காண்பிக்கிறேன் என்ற வகையில் அவர் செயல்படுகிறார்.
    • இதே வேகத்தில் அவர் சிறப்பாக விளையாடி இந்திய அணிக்குள் கம்பேக் கொடுப்பார் என்று நம்புகிறேன்.

    ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் சின்னசாமி மைதானத்தில் ஆர்சிபி அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் அணி வீழ்த்தியது. இந்த போட்டியில் முன்னாள் ஆர்சிபி வீரரும் தற்போது குஜராத் அணியின் வீரரான முகமது சிராஜ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

    இந்நிலையில் சிராஜ் உண்மையில் பெங்களூரு அணிக்கு பதிலடி கொடுக்கவில்லை இந்திய அணிக்கு கொடுத்துள்ளதாக முன்னாள் ஜாம்பவான் வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் இடம் கிடைக்காததால் ஏதோ ஒரு வகையில் அவர் மனதளவில் காயத்தைச் சந்தித்துள்ளார். அதனால் அவருக்குள் நெருப்பு உருவாகியுள்ளது. அந்த நெருப்பை நான் பார்த்தேன். ஒரு இளம் வேகப்பந்து வீச்சாளரிடமிருந்து நாங்கள் எதிர்பார்ப்பது இதுதான்.

    என்னை தேர்வு செய்யாத உங்களுக்குத் தற்போது எனது திறமையைக் காண்பிக்கிறேன் என்ற வகையில் அவர் செயல்படுகிறார். இதே வேகத்தில் அவர் சிறப்பாக விளையாடி இந்திய அணிக்குள் கம்பேக் கொடுப்பார் என்று நம்புகிறேன்.

    சின்னசாமி மைதானத்தில் புதிய பந்தில் அவர் தனது சாதனையைத் தக்க வைத்துக் கொண்டார். தனது முதல் 3 ஓவர்களில் அவர் 12 - 13 ரன்கள் மட்டுமே கொடுத்தார். அதே சமயத்தில் 4-வது ஓவரை வீசியிருந்தால் அவர் 4-வது விக்கெட்டை எடுத்திருப்பார். பிட்ச்சில் கிடைத்த உதவியைப் பயன்படுத்தி அவர் புதிய பந்தை ஸ்விங் செய்து அசத்தினார்.

    என சேவாக் கூறினார்.

    • குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது விராட் கோலிக்கு காயம் ஏற்பட்டது.
    • 12-வது ஓவரில் கோலி பவுண்டரியை தடுக்க முயன்றபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது.

    ஐபிஎல் தொடரில் நேற்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    முதலில் விளையாடிய பெங்களூரு அணி 20 ஓவர்களில் 169 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 17.5 ஓவர்களில் 170 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அதிரடியாக விளையாடிய ஜோஸ் பட்லர் 39 பந்தில் 5 பவுண்டரி, 6 சிக்சர்களுடன் 73 ரன்கள் எடுத்தார்.

    இந்நிலையில் இந்த போட்டியின்போது ஆர்சிபி வீரர் விராட் கோலி பீல்டிங் செய்யும் போது கையில் காயம் ஏற்பட்டது. குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தின்போது 12-வது ஓவரில் விராட் கோலி பவுண்டரியை தடுக்க முயன்றபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது. பந்து தாக்கியதில் விராட் கோலி விரலில் காயம் அடைந்து வலியால் துடித்தார்.

    இதனையடுத்து ஆர்சிபி அணியின் பிசியோ உடனடியாக வந்து வலி நிவாரண சிகிச்சை செய்தனர். விராட் கோலியின் காயம் பெரிதாக உள்ளதாவும், அவர் அடுத்த சில ஆட்டங்களில் விளையாட வாய்ப்பில்லை எனவும் தகவல் பரவின.

    இந்நிலையில், கோலியின் காயம் குறித்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு தலைமை பயிற்சியாளர் ஆண்டி ஃப்ளவர் முக்கிய அப்டேட் ஒன்று கொடுத்துள்ளார்.

    அதில் 'விராட் கோலி நலனுடன் இருக்கிறார். எல்லாம் சரியாகி விட்டது என்று ஆண்டி ஃப்ளவர் தெரிவித்துள்ளார். இதனால் ஆர்சிபி ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

    • இந்த மூன்று ஆண்டுகளில் நான் நிறைய கற்றுக்கொண்டேன்.
    • குஜராத் அணியுடன் வலை பயிற்சியில் நிறைய வேகப்பந்து வீச்சை எதிர்கொண்டேன்.

    ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் பெங்களூரு- குஜராத் அணிகள் மோதின. இதில் குஜராத் அணி வெற்றி பெற்றது. இந்த தொடரில் சாய் சுதர்சன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

    இந்த தொடரின் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் சுதர்சன் 186 ரன்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். அவர் 62 சராசரி 158 ஸ்ட்ரைக்-ரேட்டும் அந்த ரன்களை எடுத்துள்ளார்.

    இந்நிலையில் கடினமான சூழ்நிலைகள் தான் எனது டி20 பேட்டிங் வளர்ச்சிக்கு முக்கிய காரணம் என குஜராத் அணியின் தொடக்க வீரரும் தமிழக வீரருமான சாய் சுதர்சன் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    ஐபிஎல் தொடரில் இது எனது 4-ம் ஆண்டு. எனவே இது எனக்கு நிறைய அனுபவத்தை அளித்ததாக உணர்கிறேன். சில கடினமான சூழ்நிலைகளை நான் எதிர்கொண்டேன். குஜராத் அணியுடன் வலை பயிற்சியில் நிறைய வேகப்பந்து வீச்சை எதிர்கொண்டேன்.

    எனது வளர்ச்சிக்கு அல்லது எனது டி20 பேட்டிங்கை மேம்படுத்திய விதத்திற்கு மிக முக்கியமான காரணமாக குஜராத் அணியின் பந்து வீச்சாளர்கள், சர்வதேச பந்து வீச்சாளர்களுடன் நான் இங்கு பெறும் விளையாட்டு நேரமும் பயிற்சி நேரமும் தான் என்று நான் நினைக்கிறேன். எனவே, வலை பயிற்சியில் இருந்து கூட அது எனக்கு உதவியது என்று நான் கூறுவேன்.

    இந்த மூன்று ஆண்டுகளில் நான் நிறைய கற்றுக்கொண்டேன். இது ஆட்டத்தை நன்றாகப் புரிந்துகொள்ளவும், ஆட்டத்தின் அடிப்படைகளையும் புரிந்துகொள்ளவும் எனக்கு உதவியது என்று நான் நினைக்கிறேன்.

    பட்லர் நிறைய அனுபவத்தையும் நிறைய அறிவையும் கொண்டு வருகிறார் என்று நான் நினைக்கிறேன். இது மிடில் ஓவர்களை சரிசெய்யவும், கடைசி ஐந்து ஓவர்களை மிகச் சிறப்பாக விளையாடவும் எங்களுக்கு உதவுகிறது.

    என்று சுதர்சன் கூறினார்.

    • குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி தோல்வியடைந்தது.
    • இந்த சீசனில் ஆர்சிபி அணி தனது முதல் தோல்வியை தழுவியது.

    ஐபிஎல் தொடரின் 14-வது லீக் போட்டி நேற்று பெங்களூருவில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் பெங்களூரு- குஜராத் அணிகள் மோதின. இதில் முதலில் களமிறங்கிய பெங்களூரு 20 ஓவரில் 169 ரன்கள் எடுத்தனர். குஜராத்துக்கு அதிகபட்சமாக முகமது சிராஜ் 3, சாய் கிசோர் 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.

    அடுத்த விளையாடிய குஜராத் அணி 17.5 ஓவரில் 170 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக தங்களது இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது.

    இதன் மூலம் விக்கெட்டுகள் அடிப்படையில் குஜராத் தங்களது இரண்டாவது பெரிய வெற்றியை பதிவு செய்து அசத்தியது. இதற்கு முன் 2023-ல் ராஜஸ்தானுக்கு எதிராக ஜெய்ப்பூரில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது அந்த அணியின் முதல் பெரிய வெற்றியாகும்.

    மறுபுறம் பேட்டிங்கில் சொதப்பிய பெங்களூரு இந்த வருடத்தில் முதல் தோல்வியை பதிவு செய்தது. இந்த தோல்வியையும் சேர்த்து தங்களது சொந்த மைதானமானத்தில் 44-வது தோல்வியை பெங்களூரு அணி பதிவு செய்துள்ளது. ஐபிஎல் வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட மைதானத்தில் அதிக தோல்விகளைப் பதிவு செய்த அணி என்ற மோசமான சாதனையை பெங்களூரு சமன் செய்துள்ளது.

    இதற்கு முன் டெல்லி அணியும் தங்களது சொந்த ஊரில் உள்ள டெல்லி மைதானத்தில் 44 தோல்விகளை பதிவு செய்துள்ளது.

    • சென்னை அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக பேட்டிங் ஆர்டர் பார்க்கப்படுகிறது.
    • ருதுராஜ் இந்த சீசனில் 3-வது வீரராக களமிறங்கி விளையாடி வருகிறது.

    ஐபிஎல் தொடர் இந்தியாவின் பல நகரங்களில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் சென்னை அணி தான் விளையாடிய 3 போட்டிகளில் 1 வெற்றி 2 தோல்வியுடன் புள்ளிப் பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது.

    தோல்விக்கு முக்கிய காரணமாக சென்னை அணி பேட்டிங் ஆர்டர் பார்க்கப்படுகிறது. சிஎஸ்கே அணியின் தொடக்க வீரராக களமிறங்கி விளையாடி வந்த கேப்டன் ருதுராஜ் இந்த சீசனில் 3-வது வீரராக களமிறங்கி விளையாடி வருகிறது.

    இதனால் தொடக்க வீரராக ராகுல் திரிபாதி களமிறங்கி உள்ளார். அவர் 3 போட்டிகளில் பெரிய அளவில் ரன்களை குவிக்கவில்லை. மொத்தமாக 30 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். தீபக் ஹூடா, விஜய் சங்கர் ஆகியோரும் சிறப்பாக ஆடவில்லை. இதனை தொடர்ந்து சிஎஸ்கே அணி மும்பை வீரருக்கு அழைப்பு விடுத்துள்ளது.

    ரஞ்சி கோப்பையில் மும்பைக்காக விளையாடும் தொடக்க ஆட்டக்காரர் ஆயுஷ் மாத்ரேவை Mid-Season Trials-காக சிஎஸ்கே அணி நிர்வாகம் அழைத்துள்ளது.

    எங்களை அவர் மிகவும் கவர்ந்துள்ளார். இது ஒரு சோதனை மட்டுமே. தேவைப்பட்டால், அவரைப் பயன்படுத்துவோம் என சிஎஸ்கே CEO காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

    • 4 ஓவர்களில் 19 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 3 முக்கிய விக்கெட்டுகளை சிராஜ் வீழ்த்தினார்.
    • நேற்றைய போட்டியின் ஆட்டநாயகனாக சிராஜ் தேர்வு செய்யப்பட்டார்.

    பெங்களூர்:

    ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் ஆர்சிபி- குஜராத் அணிகள் மோதின. இந்த போட்டியில் குஜராத் அணி வெற்றி பெற்றது. இந்த சீசனில் குஜராத் அணிக்காக முதல் முறையாக விளையாடிய சிராஜ் குஜராத் வெற்றி பெற முக்கிய பங்காற்றினார். நான்கு ஓவர்களில் வெறும் 19 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் சிராஜுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

    முன்னதாக ஆர்சிபி அணி பேட்டிங் செய்த போது முதல் ஓவரை முகமது சிராஜ் வீசினார். முதல் பந்தை எதிர்கொண்ட சால்ட் ஒரு ரன் எடுத்தார். இதனையடுத்து விராட் கோலி ஸ்ட்ரைக்கு வந்தார். அவருக்கு எதிராக பந்து வீச ஓடி வந்த சிராஜ், பாதி வழியில் பந்து வீச முடியாமல் திரும்பினார். அப்போது சிராஜ் கையை அசைத்து மன்னித்து விடுங்கள் என்பது போல சைகை காட்ட பதிலுக்கு விராட் பரவாயில்லை என்பது போல சைகை காட்டினார். இருவரது முகத்திலும் ஒருவிதமான அன்பு வெளிப்பட்டது.

    இந்த உணர்ச்சிவசமான சம்பவத்தை ஆர்சிபி ரசிகர்கள் வீடியோவாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

    நான் ஆர்சிபிக்கு எதிராக விளையாடும் போது மிகவும் உணர்ச்சி வசப்பட்டேன். ஏனென்றால் நான் ஆர்சிபிக்காக 7 ஆண்டுகள் விளையாடிருக்கின்றேன். இதன் காரணமாக இன்று ஆட்டத்தில் நான் கொஞ்சம் பதற்றமாகவும் உணர்ச்சி வசப்பட்டேன் என போட்டிக்கு பிறகு சிராஜ் கூறியது குறிப்பிடத்தக்கது.

    7 ஆண்டுகளாக ஆசிபி அணிக்காக விளையாடி சிராஜ்-ஐ ஆர்சிபி அணி தக்க வைக்காமல் அணியை விட்டு நீக்கியது. இதனால் கடுப்பான சிராஜ் தற்போது ஆர்சிபிக்கு எதிராக விளையாடிய போது தனது கோபத்தை பந்து வீச்சில் வெளிப்படுத்தினார் என சிலர் குறிப்பிட்டு வருகின்றனர்.

    தனது அணியை வெற்றி பாதைக்கு அழைத்து செல்ல தன்னால் முடிந்ததை அவர் செய்தார் என்றும் பலர் கூறினர். கிரிக்கெட்டை கிரிக்கெட்டாக பார்க்கலாம் எனவும் அவரது அணி வெற்றி பெற அவர் உழைத்தார் எனவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    • நியூசிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட தொடரை நியூசிலாந்து 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
    • நியூசிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் ரிஸ்வான் 27 பந்துகளில் 5 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    பாகிஸ்தான் அணி டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடுவதற்காக நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் முதலில் நடந்த டி20 தொடரை நியூசிலாந்து அணி 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    அதனை தொடர்ந்து ஒருநாள் தொடரில் இரு அணிகளும் விளையாடி வருகிறது. முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 73 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் இந்த போட்டியிலும் நியூசிலாந்து அனி எளிதாக வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது.

    முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 292 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி நியூசிலாந்தின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து. இறுதியில் பாகிஸ்தான் அணி 208 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

    இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் ரிஸ்வான் 27 பந்துகள் சந்தித்து 5 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.

    இந்நிலையில் அவரது ஆட்டம் குறித்து இந்திய ரசிகர்களின் பிரபல நடுவர் ரிச்சர்ட் கெட்டில்பரோ வீடியோ வெளியிட்டு கலாய்த்துள்ளார்.

    அந்த வீடியோவிற்கு பாகிஸ்தானின் கேப்டன் முகமது ரிஸ்வானின் நடனமாடும் வீடியோ என தலைப்பிட்டுள்ளார்.அவர் கூறுவது போல ரிஸ்வான் பேட்டிங் செய்தவதற்கு பதிலாக டான்ஸ் தான் ஆடுவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    நடுவர் ரிச்சர்ட் கெட்டில்பரோவை இந்திய ரசிகர்களால் மறக்க முடியாது என்றே சொல்லலாம். 2019-ம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை தொடரின் அரையிறுதியில் நியூசிலாந்துக்கு எதிராக தோனி ரன் அவுட் ஆகும் போது இவர் கொடுத்த ரியாக்ஷன் இணையத்தில் வைரலாகியது.

    அதனையடுத்து அவர் களநடுவராக வந்தாலே இந்தியா தோல்வியை சந்திக்கும் என்ற அளவில் பேசப்பட்டது. அதன்பிறகு நடுவர் ரிச்சர்ட் வந்தும் இந்தியா வெற்றி பெற ஆரம்பித்து விட்டதால் அவர் குறித்து செய்திகள் வருவது குறைந்தது குறிப்பிடத்தக்கது.

    • குஜராத் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் புவனேஸ்வர்குமார் 1 விக்கெட் வீழ்த்தினார்.
    • இதன் மூலம் ப்ராவோ மற்றும் அஸ்வின் சாதனையை புவனேஸ்வர்குமார் சமன் செய்தார்.

    18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 14-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின.

    இதில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங்கை தொடங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி 17.5 ஓவர்களில் 170 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணி பெற்ற முதல் தோல்வி இதுவாகும்.

    இந்த போட்டியில் ஆர்சிபி அணி வீரர் புவனேஸ்வர் குமார் 1 விக்கெட்டை வீழ்த்தினார். இதன் மூலம் ஐபிஎல் தொடர்

    வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய ப்ராவோ, அஸ்வின் சாதனையை புவனேஸ்வர் குமார் சமன் செய்தார்.

    ப்ராவோ 161 போட்டிகளில் 183 விக்கெட்டுகளும் புவனேஸ்வர்குமார் 178 போட்டிகளில் 183 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளனர். இந்த பட்டியலில் சாஹல் (206) முதல் இடத்தில் உள்ளார்.

    ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியல்:-

    யுஸ்வேந்திர சாஹல்- 206 விக்கெட்டுகள்

    பியூஸ் சாவ்லா - 192 விக்கெட்டுகள்

    அஸ்வின் - 183 விக்கெட்டுகள்

    புவனேஸ்வர் குமார் - 183 விக்கெட்டுகள்

    ப்ராவோ - 183 விக்கெட்டுகள்

    • பந்து வீச்சாளர்கள் தொடக்கத்தில் விக்கெட்டுகளை கைப்பற்றியது பாராட்டத்தக்கது.
    • இந்த ஆடுகளத்தில் 169 ரன்னுக்குள் கட்டுப்படுத்தியது சிறந்த முயற்சியாகும்.

    பெங்களூரு:

    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தி குஜராத் 2-வது வெற்றியை பெற்றது. பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 169 ரன் எடுத்தது.

    லிவிங்ஸ்டன் 40 பந்தில் 54 ரன்னும் (1 பவுண்டரி, 5 சிக்சர்), ஜிதேஷ் சர்மா 21 பந்தில் 33 ரன்னும் (5 பவுண் டரி, 1 சிக்சர்), டிம் டேவிட் 18 பந்தில் 32 ரன்னும் (3 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். முகமது சிராஜ் 3 விக்கெட்டும், சாய்கிஷோர் 2 விக்கெட்டும், அர்ஷத்கான், பிரசித் கிருஷ்ணா, இஷாந்த் சர்மா தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    பின்னர் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் 170 ரன் இலக்கை 13 பந்துகள் எஞ்சியிருந்த நிலையில் எடுத்தது. அந்த அணி 17.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 170 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    ஜோஸ் பட்லர் 39 பந்தில் 73 ரன்னும் (5 பவுண்டரி, 6 சிக்சர்), தமிழகத்தை சேர்ந்த சாய் சுதர்ஷன் 36 பந்தில் 49 ரன்னும் (7 பவுண்டரி, 1 சிக்சர்), ரூதர் போர்டு 18 பந்தில் 30 ரன்னும் (1 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தனர். புவனேஷ்வர் குமார், ஹாசல்ஹவுட்டுக்கு தலா 1 விக்கெட் கிடைத்தது.

    குஜராத் டைட்டன்ஸ் அணி பெற்ற 2-வது வெற்றியாகும். இந்த வெற்றி குறித்து அந்த அணியின் கேப்டன் சுப்மன்கில் கூறியதாவது:-

    எங்கள் அணி வீரர்களின் சிறப்பான ஆட்டத்தை பாராட்டுகிறேன். குறிப்பாக பந்து வீச்சாளர்கள் தொடக்கத்தில் விக்கெட்டுகளை கைப்பற்றியது பாராட்டத்தக்கது. இந்த ஆடுகளத்தில் 169 ரன்னுக்குள் கட்டுப்படுத்தியது சிறந்த முயற்சியாகும்.

    இந்த ஆடுகளத்தில் 250 ரன்கள் வரை எடுக்கலாம்.அதே நேரத்தில் தொடக்கத்தில் விக்கெட்டுகளையும் கைப்பற்றலாம். 7 முதல் 8 ஓவர்களில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு பிட்ச் கைக் கொடுத்தது. தொடக்கத்தில் விக்கெட்டுகளை வீழ்த்தியதால் வெற்றி பெற முடிந்தது. எங்களது பேட்டிங்கும் நன்றாக அமைந்தது. சூழ்நிலைக்கு ஏற்ப பேட்டிங் வரிசையை மாற்றி அமைத்தோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பெங்களூரு அணி முதல் தோல்வியை தழுவியது. இந்த தோல்வி குறித்து அந்த அணியின் கேப்டன் ரஜத் படிதார் கூறும்போது, '20 ரன்கள் வரை குறைவாக எடுத்து விட்டோம். தொடக்கத்திலேயே விக்கெட்டுகள் சரிந்தது எங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது' என்றார்.

    குஜராத் அணி 4 போட்டி யில் ஐதராபாத்தை 6-ந்தேதி எதிர்கொள்கிறது. பெங்களூரு அணி அடுத்த ஆட்டத்தில் மும்பையை 7-ந்தேதி சந்திக்கிறது.

    • 2011-ம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையில் இந்தியா- இலங்கை அணிகள் மோதின.
    • 2011-ம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா- இலங்கை அணிகள் மோதின.

    10-வது ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி 2011-ம் ஆண்டில் இந்தியா, இலங்கை, வங்காளதேசம் ஆகிய நாடுகளில் நடந்தது. இதில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடந்த பரபரப்பான இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை தோற்கடித்து 2-வது முறையாக மகுடம் சூடியது.

    கவுதம் கம்பீர் (97 ரன்), கேப்டன் டோனி (91 ரன்) ஆகியோரின் அற்புதமான பேட்டிங் வெற்றிக்கு வித்திட்டது. நேற்றுடன் (ஏப்ரல் 2) இந்தியா உலகக் கோப்பையை ருசித்து 14 ஆண்டுகள் நிறைவடைந்ததை அந்த உலகக் கோப்பையில் ஆடிய இந்திய வீரர்கள் நினைவு கூர்ந்துள்ளனர்.

    இந்நிலையில் இந்த போட்டியில் மேலும் ஒரு சுவாரஸ்ய நிகழ்வு நடந்தது. அது என்னவென்றால், இறுதிப்போட்டியில் இரண்டு முறை டாஸ் போடப்பட்டது. எம்.எஸ். தோனி மற்றும் குமார் சங்கக்காரா இருவரும் முதல் முயற்சியிலேயே டாஸை வென்றதாக நினைத்தனர்.

    சங்கக்காராவின் அழைப்பை கேட்கவில்லை என்று நடுவர் ஜெஃப் குரோவ் கூறினார். இதனால் டாஸ் மீண்டும் போடப்பட்டது. ஐசிசி இறுதிப்போட்டியில் இப்படி ஒரு சம்பவம் நடந்தது இந்த போட்டியில் மட்டும் தான் என்பது கூடுதல் தகவல் ஆகும்.

    ×