என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • அதிரடியாக விளையாடிய கருண் நாயர் 40 பந்தில் 89 ரன்கள் குவித்து அவுட்டானார்.
    • இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் கருண் நாயர் 303 ரன்கள் குவித்தார்.

    ஐ.பி.எல். தொடரின் 29-வது லீக் ஆட்டம் டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்றது. இதில் டெல்லி கேப்பிடல்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் குவித்தது.

    இதையடுத்து, 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி 193 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 12 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி திரில் வெற்றி பெற்றது. நடப்பு தொடரில் டெல்லி அணி பெற்ற முதல் தோல்வி இதுவாகும்.

    இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய கருண் நாயர் 40 பந்தில் 5 சிக்சர், 12 பவுண்டரி உள்பட 89 ரன்கள் குவித்து அவுட்டானார்.

    இதன்மூலம் ஐபிஎல் தொடரில் 7 ஆண்டுகளுக்குப் பிறகு அரை சதம் அடித்து கருண் நாயர் அசத்தியுள்ளார்.

    கடைசியாக 2018ல் புனே அணியில் இருந்தபோது சென்னை அணிக்கு எதிரான போட்டியில் கருண் நாயர் 54 ரன்கள் அடித்திருந்தார்.

    இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 303 ரன்கள் குவித்த கருண் நாயருக்கு அதற்கு பிறகு அளவில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

    அதன்பின்பு உள்ளூர் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கருண் நாயர் மீண்டும் ஐபிஎல் தொடரில் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.

    • ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் கமிட்டி தலைவராக சவுரவ் கங்குலி மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
    • இந்தக் கிரிக்கெட் கமிட்டியில் வி.வி.எஸ்.லட்சுமண் உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டார்.

    துபாய்:

    ஐ.சி.சி. ஆண்கள் கிரிக்கெட் கமிட்டியின் தலைவராக இந்திய முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி நேற்று மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

    கங்குலி தலைமையிலான கிரிக்கெட் கமிட்டியில் வி.வி.எஸ்.லட்சுமண் (இந்தியா), ஹமித் ஹசன் (ஆப்கானிஸ்தான்), தேஷ்மண்ட் ஹெய்ன்ஸ் (வெஸ்ட் இண்டீஸ்), பவுமா (தென் ஆப்பிரிக்கா) ஜோனதன் டிராட் (இங்கிலாந்து) ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டு இருக்கின்றனர்.

    இந்த கமிட்டி சர்வதேச கிரிக்கெட் போட்டி விதிமுறை மாற்றம், ஆட்டத்தின் நீண்ட கால முன்னேற்றத்துக்காக எடுக்க வேண்டிய நடவடிக்கை உள்ளிட்ட விஷயங்கள் குறித்து ஐ.சி.சி.க்கு தனது பரிந்துரையை செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 205 ரன்கள் என்பது எட்டக்கூடிய இலக்குதான். ஏனென்றால் இது பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளம்.
    • எங்கள் அணியின் சுழற் பந்துவீச்சாளர்களை நினைத்து எனக்கு நம்பிக்கை இருக்கிறது என்றார்.

    புதுடெல்லி:

    ஐபிஎல் தொடரில் மும்பைக்கு எதிரான போட்டியில் அடைந்த தோல்விக்கு பிறகு டெல்லி கேப்டன் அக்சர் படேல் கூறியதாவது:

    மும்பைக்கு சாதகமாக தான் இந்தப் போட்டி சென்றது. இந்த ஆட்டத்தில் நாங்கள் முழு கட்டுப்பாட்டில் இருந்தோம். நடு ஓவர்களில் நாங்கள் தொடர்ந்து ஆட்டம் இழந்தும், சில தவறான ஷாட்டுகளை ஆடி விக்கெட்டுகளை இழந்து ஒரு ஓவர் எஞ்சியிருக்கும் நிலையில் 12 ரன்கள் வித்தியாசத்தில் நாங்கள் தோற்று இருக்கிறோம்.

    இந்தப் போட்டியில் நாங்கள் சரியாக விளையாடி இருந்தால் வெற்றி பெற்று இருக்கலாம். அனைத்துப் போட்டிகளிலும் உங்களுடைய கீழ் வரிசை பேட்ஸ்மேன்கள் வந்து உங்களை காப்பாற்றுவார்கள் என்று நினைக்கக் கூடாது.

    205 ரன்கள் என்பது எட்டக்கூடிய இலக்குதான். ஏனென்றால் இது பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளம். பனிப்பொழிவும் இருக்கும். ஒருவேளை நாங்கள் சிறப்பாக விளையாடி இருந்தால் இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்று இருக்கலாம்.

    எங்கள் அணியின் சுழற் பந்துவீச்சாளர்களை நினைத்து எனக்கு நம்பிக்கை இருக்கிறது. குல்தீப் இந்த சீசனில் சிறப்பாக பந்து வீசி வருகிறார். எனக்கு எப்போதெல்லாம் விக்கெட்டுகள் தேவைப்படுகிறதோ அப்போதெல்லாம் குல்தீப்பிடம் பந்தை கொடுத்தால் போதும்.

    இந்தப் போட்டியில் நாங்கள் தோல்வியை தழுவினாலும் எங்களுக்கு நிறைய நல்ல விஷயங்கள் நடந்திருக்கிறது. இந்த போட்டி குறித்து மறந்துவிட்டு அடுத்த போட்டி நோக்கிச் செல்ல வேண்டும் என தெரிவித்தார்.

    • நடப்பு ஐபிஎல் தொடரின் 30வது லீக் ஆட்டம் லக்னோவில் நடைபெறுகிறது.
    • சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 போட்டிகளில் ஒரு வெற்றி மட்டுமே பெற்றுள்ளது.

    லக்னோ:

    நடப்பு ஐபிஎல் தொடரின் 30வது லீக் ஆட்டம் லக்னோவில் நடைபெறுகிறது. இதில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் பிளெமிங் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    தோனி கேப்டனாக இருப்பது நிச்சயம் எங்களுக்கு சாதகமான விஷயம் தான். ஆனால் அவரிடம் மந்திரக் கோல் எதுவும் இல்லை. அவர் ஏதோ கையை வைத்தவுடன் அணி அப்படியே மாறிவிடும் என நினைக்கக் கூடாது. அப்படி இருந்திருந்தால் அவர் அதை முன்பே செய்திருப்பார்.

    நாங்கள் தற்போது தோனியுடன் இணைந்து சரியான திசையில் செல்வதற்கான முயற்சிகளை எடுத்து வருகின்றோம். அணியின் செயல்பாட்டை முன்னேற்ற முயற்சி செய்வோம்.

    கடந்த போட்டியில் எங்களுடைய செயல்பாடு மிகவும் ஏமாற்றத்தை அளித்தது. கொஞ்சம் கூட எதிரணிக்கு சவால் அளிக்காமல் நாங்கள் தோற்ற விதம் எனக்கு காயத்தை ஏற்படுத்தி இருக்கிறது. எனவே எங்களுக்குள்ளேயே நாங்கள் சுயபரிசோதனை செய்து எப்படி முன்னேறலாம் என்பது குறித்து கடும் முயற்சிகளை எடுத்து வருகின்றோம்.

    எங்கள் அணி தோல்வியின் மூலம் பல காயங்களை ஏற்படுத்திவிட்டது. அந்தக் காயத்தை எல்லாம் நாங்கள் உத்வேகமாக மாற்றி வெற்றியை நோக்கிச் செல்ல முயற்சி செய்வோம்.

    வீரர்கள் தங்களது பார்மை கண்டுபிடிக்க வேண்டியது மிகவும் முக்கியமாகும். நாம் அனைவரும் சிக்சர்களைப் பற்றியே பேசிக் கொள்கிறோம். ஆனால் அதுவே அனைத்தும் கிடையாது. சிக்சர் அடிப்பதற்கும், பெரிய ஷாட் ஆடி ரன்களை சேர்ப்பதற்கும் ரசிகர்கள் இடையே நிறைய ஆர்வம் இருப்பது எனக்கு தெரியும். இதை சில அணிகள் சிறப்பாக செய்கின்றது.

    எனினும் நாம் ஒன்றும் பேஸ் பால் போட்டியில் இல்லை சிக்சர், பவுண்டரி பற்றி பேச. பந்திற்கும், பேட்டிற்கும் இடையே ஒரு நல்ல பேலன்ஸ் இருப்பதுதான் கிரிக்கெட்டின் அழகே.

    லக்னோ அணியில் நிக்கோலஸ் பூரன் நிச்சயம் எங்களுக்கு அபாயத்தை கொடுப்பார். தற்போது டி20 கிரிக்கெட்டில் அவர்தான் சிறந்த பேட்ஸ்மேனாக இருக்கின்றார். அவரை விரைவில் ஆட்டம் இழக்கவைத்தால் நிச்சயம் வெற்றி பெறலாம் என தெரிவித்தார்.

    • ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலி அரைசதம் அடித்தார்.
    • விராட் கோலி அரைசதம் டி20 கிரிக்கெட்டில் அவரது 100-வது அரைசதமாகப் பதிவானது.

    ஜெய்ப்பூர்:

    நடப்பு ஐ.பி.எல். தொடரில் ஜெய்ப்பூரில் நடந்த முதல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் 20 ஓவரில் 173 ரன்கள் அடித்தது.

    பெங்களூரு சார்பில் ஹேசில்வுட், குருணால் பாண்ட்யா, யாஷ் தயாள் மற்றும் புவனேஸ்வர் குமார் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

    அடுத்து களமிறங்கிய பெங்களூரு அணி 17.3 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 175 ரன்கள் அடித்து, 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பில் சால்ட் 65 ரன்னும், விராட் கோலி 62 ரன்னும், படிக்கல் 40 ரன்னும் அடித்தனர்.

    இந்நிலையில், இந்தப் போட்டியில் விராட் கோலி அடித்த அரைசதம் டி20 கிரிக்கெட்டில் அவரது 100-வது அரைசதமாகப் பதிவானது.

    இதன்மூலம் இந்த மைல்கல்லை எட்டிய இரண்டாவது வீரர் என்ற வரலாற்று சாதனையை விராட் கோலி படைத்தார். இந்தப் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் 108 அரைசதங்களுடன் முதலிடம் பிடித்துள்ளார்.

    • டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 205 ரன்கள் குவித்தது.

    புதுடெல்லி:

    ஐ.பி.எல். தொடரின் 29-வது லீக் ஆட்டம் டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்றது. இதில் டெல்லி கேப்பிடல்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் குவித்தது.

    திலக் வர்மா பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்து 59 ரன்னில் வெளியேறினார். ரியான் ரிக்கல்டன் 41 ரன்னும், சூர்யகுமார் யாதவ் 40 ரன்னும் எடுத்து அவுட்டாகினர். ரோகித் சர்மா 18 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    கடைசி கட்டத்தில் இறங்கிய நமன் தீர் 17 பந்தில் 38 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இதையடுத்து, 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி கேப்பிடல்ஸ் அணி களமிறங்கியது. முதல் பந்திலேயே ஜாக் பிரேசர் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.

    அடுத்து, அபிஷேக் பொரேலுடன் கருண் நாயர் ஜோடி சேர்ந்தார். கருண் நாயர் அதிரடியாக ஆடி அரை சதம் கடந்தார். 2வது விக்கெட்டுக்கு 119 ரன்கள் சேர்த்த நிலையில் பொரேல் 33 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    அதிரடியைத் தொடர்ந்த கருண் நாயர் 40 பந்தில் 5 சிக்சர், 12 பவுண்டரி உள்பட 89 ரன்கள் குவித்து அவுட்டானார். கே எல் ராகுல் 15 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.

    இறுதியில், டெல்லி கேப்பிடல்ஸ் அணி 193 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 12 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி திரில் வெற்றி பெற்றது. நடப்பு தொடரில் டெல்லி அணி பெற்ற முதல் தோல்வி இதுவாகும்.

    • லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும்.
    • லக்னோவில் உள்ள வாஜ்பாய் ஸ்டேடியத்தில் இந்த ஆட்டம் நடக்கிறது. இந்த தொடரின் 30-வது ஆட்டமாகும்.

    10 அணிகள் பங்கேற்றுள்ள ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த 22-ந் தேதி தொடங்கியது. நேற்றுடன் 27 லீக் ஆட்டங்கள் முடிந்தன.

    ஒவ்வொரு அணியும் 14 போட்டிகளில் ஆட வேண்டும். லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும்.

    சென்னை சூப்பர் கிங்ஸ்

    5 முறை ஐ.பி.எல். கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் (சி.எஸ்.கே.) நிலை மிகவும் பரிதாபமாக இருக்கிறது. இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றது. 5-ல் தோற்றது. 2 புள்ளி களுடன் கடைசி இடத்தில் உள்ளது

    சேப்பாக்கம் மைதா னத்தில் கடந்த 23-ந் தேதி நடந்த முதல் ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்சை தோற் கடித்தது. அதன் பிறகு ஆர்.சி.பி.யிடம் (சேப்பாக்கம்) 50 ரன்னிலும், ராஜஸ்தானிடம் (கவுகாத்தி) 6 ரன்னிலும், டெல்லி கேப்பிட்டல்சிடம் ( சேப்பாக்கம்) 25 ரன்னிலும், பஞ்சாப்பிடம் (நியூ சண்டி கர்) 18 ரன்னிலும், கொல் கத்தாவிடம் (சேப்பாக்கம்) 8 விக்கெட் வித்தியாசத்திலும் தொடர்ச்சியாக தோற்றது.

    லக்னோவுடன் நாளை மோதல்

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7-வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்சை நாளை (திங்கட்கிழமை) இரவு 7.30 மணிக்கு சந்திக்கிறது. லக்னோவில் உள்ள வாஜ்பாய் ஸ்டேடியத்தில் இந்த ஆட்டம் நடக்கிறது. இந்த தொடரின் 30-வது ஆட்டமாகும்.

    தொடர்ந்து 5 தோல்வியை சந்தித்துள்ள சி.எஸ்கே. அதில் இருந்து மீண்டு வருவது மிகவும் கடினமானது. 2-வது வெற்றிக்காக நீண்ட நாட் களாக காத்திருக்கிறது.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிலைமை நாளுக்கு நாள் மோசமாக இருக்கிறது. டோனி கேப்டன் பொறுப்பை ஏற்ற பிறகு சேப்பாக்கத்தில் கொல்கத்தாவுக்கு எதிராக 103 ரன்னில் சுருண்டு மிகவும் பரிதாபமாக தோற்றது.

    எஞ்சி இருக்கும் 8 போட்டியில் 7-ல் வெற்றி பெற வேண்டும். அப்படி நிகழ்ந்தால் மட்டுமே பிளே ஆப் வாய்ப்பில் இருக்க இயலும். இதற்கான வாய்ப்பு மிகவும் குறைவே ஏனென் றால் சி.எஸ்.கே. வீரர்கள் ஆட்டம் படுகேவலமாக இருக்கிறது.

    ரிஷப்பண்ட் தலைமை யிலான லக்னோ 4 வெற்றி, 2 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தில் உள்ளது. அந்த அணி 5-வது வெற்றி ஆர்வத்தில் இருக் கிறது.

    நிக்கோலஸ் பூரன், மிச்சேல் மார்ஷ், மர்சிராம், திக்வேஷ், ரவி பிஷ்னோய் லக்னோ அணியில் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.

    • 12 பந்துகளை மட்டுமே சந்தித்து 2 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸர் என 18 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றத்தை அளித்துள்ளார்.
    • எனவே 206 என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்குகிறது.

    ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதுகிறது.

    ஆட்டத்தின் தொடக்கத்தில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    மும்பை அணி சார்பில் துவக்க வீரராக களமிறங்கிய ரோகித் சர்மா 12 பந்துகளை மட்டுமே சந்தித்து 2 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸர் என 18 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றத்தை அளித்துள்ளார்.

    தொடர்ந்து அணி வீரர்கள் அடுத்தடுத்து பேட்டிங் செய்து 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 205 வரை ஸ்கோர் செய்தனர். எனவே 206 என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்குகிறது.

    • டெல்லி அருண் ஜேட்லி மைதானத்​தில் நடைபெறுர்கிறது.
    • 5 முறை சாம்​பிய​னான ஹர்​திக் பாண்​டியா தலை​மையி​லான மும்பை இந்​தி​யன்ஸ் தடு​மாறி வரு​கிறது.

    ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதுகிறது.

    இந்நிலையில் ஆட்டத்தின் தொடக்கத்தில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

    அக்சர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் 4 ஆட்டங்களில் விளையாடி அனைத்திலும் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

    5 முறை சாம்பியனான ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் தடுமாறி வருகிறது. 5 ஆட்டங்களில் விளையாடி ஒரு வெற்றி, 4 தோல்விகளுடன் 2 புள்ளிகள் பெற்று பட்டியலில் 8-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • 28-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொண்டனர்.
    • ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங் செய்ய முதலில் களமிறங்கியது.

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. இதில் மாலை 3.30 மணிக்கு ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் அரங்கேறும் 28-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொண்டது.

    இரு அணிகளுக்கு இடையே போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில், டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங் செய்ய முதலில் களமிறங்கி விளையாடியது.

    இதில், அதிகபட்சமாக யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 75 ரன்கள், துருவ் ஜூரல் 35, ரியான் பராங் 30 ரன்கள், சஞ்சு சாம்சன் 15 ரன்கள் எடுத்தனர்.

    இந்த ஆட்டத்தில் 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 173 ரன்கள் எடுத்தது.

    தொடர்ந்து, 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்குடன் ஆர்சிபி களமிறங்கியது.

    இதன் ஆட்டத்தின் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி பெற்றுள்ளது.

    174 ரன்கள் இலக்கை 17.3 ஓவர்களில் எட்டி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.

    அதிகபட்சமாக பிலிஃப் சால்ட்- 65, விராட் கோலி- 62, தேவ்தட் படிக்கல்- 40 ரன்கள் எடுத்தனர். 

    • 28-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொண்டுள்ளனர்.
    • ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங் செய்ய முதலில் களமிறங்கியது.

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. இதில் மாலை 3.30 மணிக்கு ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் அரங்கேறும் 28-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொண்டுள்ளது.

    இரு அணிகளுக்கு இடையே போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில், டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங் செய்ய முதலில் களமிறங்கி விளையாடியது.

    இதில், அதிகபட்சமாக யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 75 ரன்கள், துருவ் ஜூரல் 35, ரியான் பராங் 30 ரன்கள்,, சஞ்சு சாம்சன் 15 ரன்கள் எடுத்தனர்.

    இந்நிலையில், இந்த ஆட்டத்தில் 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 173 ரன்கள் எடுத்துள்ளது. இதன்மூலம், 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்குடன் ஆர்சிபி களமிறங்க உள்ளது.  

    • 28-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது.
    • ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங் செய்ய முதலில் களமிறங்குகிறது.

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. இதில் மாலை 3.30 மணிக்கு ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் அரங்கேறும் 28-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது.

    இதில், தனது முதல் இரு ஆட்டங்களில் ஐதராபாத், கொல்கத்தாவிடம் தோல்வி கண்ட முன்னாள் சாம்பியனான ராஜஸ்தான் அணி அடுத்த இரண்டு ஆட்டங்களில் சென்னை, பஞ்சாப்பை பதம் பார்த்தது.

    முந்தைய ஆட்டத்தில் குஜராத்திடம் பணிந்தது. அந்த ஆட்டத்தில் 218 ரன் இலக்கை நோக்கி ஆடிய ராஜஸ்தான் 159 ரன்னில் அடங்கி 58 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

    உள்ளூரில் முதல் ஆட்டத்தில் கால்பதிக்கும் ராஜஸ்தான் வெற்றியை சொந்தமாக்க அதிக ஆர்வம் காட்டும்.

    பெங்களூரு அணி முதல் இரு ஆட்டங்களில் கொல்கத்தா, சென்னையை அடுத்தடுத்து தோற்கடித்தது. அடுத்த ஆட்டத்தில் குஜராத்திடம் பணிந்தது. அதற்கு அடுத்தபடியாக மும்பையை வீழ்த்தியது.

    கடந்த ஆட்டத்தில் சொந்த மண்ணில் 6 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லியிடம் வீழ்ந்தது.

    இரு அணிகளும் மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்ப தீவிரம் காட்டும் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.

    இந்நிலையில், இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில், டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

    இதனால், இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங் செய்ய முதலில் களமிறங்குகிறது.

    ×