என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • 46-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ்- பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
    • சமபலம் வாய்ந்த அணிகள் மோதும் இந்த ஆட்டத்தில் யார் கை ஓங்கும் என்பதை கணிப்பது கடினமாகும்.

    டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடக்கும் 46-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ்- பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    டெல்லி அணி 8 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 2 தோல்வியுடன் (மும்பை, குஜராத் அணிகளிடம்) வலுவான நிலையில் உள்ளது.

    பெங்களூரு அணி 9 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 3 தோல்வி (குஜராத், டெல்லி, பஞ்சாப் அணிகளிடம்) அடைந்துள்ளது. பெங்களூரு அணியில் பேட்டிங்கில் விராட்கோலி சூப்பர் பார்மில் இருக்கிறார்.

    சொந்த மண்ணில் நடந்த டெல்லிக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணி தோற்றது. அதற்கு பதிலடி கொடுத்து புள்ளி பட்டியலில் ஏற்றம் காண பெங்களூரு அணி வரிந்து கட்டும். சமபலம் வாய்ந்த அணிகள் மோதும் இந்த ஆட்டத்தில் யார் கை ஓங்கும் என்பதை கணிப்பது கடினமாகும்.

    இவ்விரு அணிகளும் இதுவரை 32 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் பெங்களூரு 19 ஆட்டத்திலும், டெல்லி 12 ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் முடிவு இல்லாமல் போனது.

    இந்நிலையில், இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில், டாஸ் வெ்னற ஆர்சிபி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனால், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்குகிறது.

    • டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • லக்னோ அணி 216 ரன்கள் என்ற இலக்கை நோக்கி பேட்டிங் செய்ய உள்ளது

    மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் 45-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியுடன் இன்று மதியம் மோதி வருகிறது.

    போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.

    முதலில் பேட்டிங் செய்த மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரியான் ரிக்கல்டன் - ரோகித் சர்மா களமிறங்கினர். ரோகித் சர்மா(12 ரன்கள்) 3-வது ஓவரில் அவுட் ஆகி வெளியேற, அடுத்து வந்த வில் ஜாக்ஸ் உடன் ரியான் ரிக்கல்டன் ஜோடி சேர்ந்தார்.

    ரியான் ரிக்கல்டன் அதிரடியாக ஆடி அரைசதம் கடந்தார். 32 பந்துகளில் 58 ரன்கள் குவித்த அவர், 9-வது ஓவரில் திக்விஜேஷ் ரத்தி வீசிய பந்தில் கேட்ச் ஆகி வெளியேறினார். நிதானமாக ஆடிய வில் ஜாக்ஸ், 29 ரன்கள் எடுத்த நிலையில், பிரின்ஸ் யாதவ் பந்துவீச்சில் போல்ட் ஆனார்.

    அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்த சூர்யகுமார் யாதவ் 28 பந்துகளில் 54 ரன்கள் குவித்தார். திலக் வர்மா 6 ரன்களிலும், ஹர்திக் பாண்ட்யா 5 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். இறுதி ஓவர்களில் நமன் திர்(25 ரன்கள்) மற்றும் கார்பின் போஷ்(20 ரன்கள்) அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

    இந்நிலையில் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு மும்பை இந்தியன்ஸ் அணி 215 ரன்கள் குவித்தது. லக்னோ அணி 216 ரன்கள் என்ற இலக்கை நோக்கி பேட்டிங் செய்ய உள்ளது.

    • மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் 45-வது லீக் ஆட்டம் தொடங்கியது.
    • லக்னோ அணி 6-1 என்ற கணக்கில் ஆதிக்கம் செலுத்துகிறது.

    இன்று மதியம் 3.30 மணிக்கு மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் 45-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

    இந்நிலையில் போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதன்படி மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங்கில் களமிறங்குகிறது.

    5 முறை சாம்பியனான மும்பை அணி 9 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 4 தோல்வி கண்டுள்ளது. லக்னோ அணி 9 ஆட்டங்களில் விளையாடி 5 வெற்றி, 4 தோல்வியை அடைந்துள்ளது.

    இவ்விரு அணிகளும் இதுவரை 7 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் லக்னோ அணி 6-1 என்ற கணக்கில் ஆதிக்கம் செலுத்துகிறது.

    • சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது
    • சேப்பாக்கத்தில் நடைபெறும் போட்டியை நேரில் பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆர்வம் காட்டவில்லை

    நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதும் லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் வரும் 30-ம் தேதி இரவு 7.30 மணிக்கு நடக்கிறது.

    சேப்பாக்கத்தில் நடக்கும் 6-வது ஆட்டம் இதுவாகும். இந்தப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைன் மூலம் இன்று காலை தொடங்கியது. சென்னை அணியின் தொடர் தோல்வியால் டிக்கெட் விற்பனை மந்தமாகியுள்ளது.

    எப்போது டிக்கெட் விற்பனை தொடங்கிய சில நிமிடங்களிலேயே அனைத்து டிக்கெட்டுகளை விற்று தேர்ந்து விடும். பின்னர் டிக்கெட்டுகளை வாங்கியவர்கள் கள்ள சந்தையில் டிக்கெட்டுகள் அதிக விலைக்கு விற்பனை செய்து வந்தனர்.

    இந்நிலையில், சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியாமல் கிட்டத்தட்ட வெளியேறியுள்ளதால் சேப்பாக்கத்தில் நடைபெறும் போட்டியை நேரில் பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆர்வம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது. கடந்த ஆட்டத்துக்கான டிக்கெட் விற்பனையை காட்டிலும் இந்த முறை குறைவான அளவிலேயே விற்பனை தற்போது வரை நடைபெற்றுள்ளது.

    நடப்பு ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பங்கேற்ற 9 போட்டிகளில் 2 வெற்றி, 7 தோல்வி பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • பிரேவிஸ் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக சிறப்பாக விளையாடினார்.
    • சேப்பாக்கம் மைதானத்தில் சிறப்பாக ஆடுவது அவ்வளவு எளிது கிடையாது.

    ஐதராபாத்துக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இளம் வீரர் டிவால்ட் பிரேவிஸ் அதிரடியாக ஆடினார். 25 பந்துகளில் 42 ரன்களை எடுத்தார்.

    இந்த நிலையில் பிரேவிஸ் சென்னை அணியில் நீண்ட காலம் இருப்பார் என்று முன்னாள் சுழற்பந்து வீரர் அனில் கும்ப்ளே தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    பிரேவிஸ் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக சிறப்பாக விளையாடினார். சேப்பாக்கம் மைதானத்தில் சிறப்பாக ஆடுவது அவ்வளவு எளிது கிடையாது. தென் ஆப்பிரிக்க அணிக்காகவும், முதல்தர போட்டியிலும் அவர் சிறப்பாக செயல்பட்டுள்ளார். அதன் காரணமாகவே அவர் ஐ.பி.எல். தொடரில் இணைந்து உள்ளார்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கூட அவர் கிடையாது. மாற்று வீரராக இணைந்தார். பிரேவிசிடம் அனைத்து ஷாட்டுகளும் ஆடும் திறன் இருக்கிறது. அவருக்கு சி.எஸ்.கே.வுடன் நீண்ட காலம் பயணிக்கும் திறன் இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கடந்த சீசனில் ஐதராபாத் அந்த அணி 250 ரன்களுக்கும் அதிகமாக 3 முறை குவித்தது.
    • இந்த சீசனில் ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி 286 ரன்கள் குவித்தது.

    கடந்த ஐ.பி.எல். போட்டி யில் 200 ரன்களுக்கும் அதிகமாக ரன் குவிப்பதை அடிக்கடி பார்க்க முடிந்தது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் கடந்த சீசனில் மிகவும் எளிதாக 250 ரன்களுக்கும் அதிகமாக பலமுறை குவித்தது.

    ஐ.பி.எல். தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 300 ரன்களை முதலில் குவிக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.

    இந்நிலையில் ஐ.பி.எல். தொடரில் எந்த ஒரு அணியாலும் 300 ரன்கள் குவிக்க முடியும் என்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர் ரிங்கு சிங் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் ஜியோ ஹாட்ஸ்டாரில் கூறியதாவது:-

    எங்களால் 300 ரன்கள் குவிக்க முடியும். 300 ரன்களை தொடுவது முக்கியம் எனும் நிலையை இந்த தொடர் எட்டியுள்ளது. கடந்த ஆண்டு பஞ்சாப் கிங்ஸ் 262 ரன்கள் என்ற இலக்கை வெற்றிகரமாக சேஸ் செய்தது. தற்போது இந்த தொடரில் அனைத்து அணிகளும் வலுவாக உள்ளன. எந்த ஒரு அணியாலும் 300 ரன்கள் குவிக்க முடியும்.

    இவ்வாறு ரிங்கு சிங் கூறினார்.

    கடந்த சீசனில் ஐதராபாத் அந்த அணி 250 ரன்களுக்கும் அதிகமாக 3 முறை குவித்தது. இந்த சீசனில் அந்த அணி ராஜஸ்தான் ராயல்சுக்கு எதிரான முதல் போட்டியிலேயே 286 ரன்கள் குவித்தது.

    ரன் குவிப்புக்கு இம்பேக்ட் பிளேயர் விதியும் (தாக்கத்தை ஏற்படுத்துதல்) முக்கியக் காரணம் என்று கூறப்படுகிறது.

    • 5 முறை சாம்பியனான மும்பை அணி 9 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 4 தோல்வி கண்டுள்ளது.
    • சொந்த மண்ணில் நடந்த டெல்லிக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணி தோற்றது.

    18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. 5 அணிகளுடன் தலா 2 முறை, மீதமுள்ள 4 அணிகளுடன் ஒரு முறை என ஒவ்வொரு அணியும் மொத்தம் 14 லீக்கில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும்.

    இந்த போட்டி தொடரில் இன்று இரண்டு ஆட்டங்கள் அரங்கேறுகின்றன. இதில் மாலை 3.30 மணிக்கு மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெறும் 45-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

    5 முறை சாம்பியனான மும்பை அணி 9 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 4 தோல்வி கண்டுள்ளது. அந்த அணி தனது கடைசி 4 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வாகை சூடி சரியான சமயத்தில் சிறந்த நிலைக்கு திரும்பி இருக்கிறது.

    மும்பை அணியில் பேட்டிங்கில் சூர்யகுமார் யாதவ் (373 ரன்), திலக் வர்மா (233), ரோகித் சர்மா (228), ரையான் ரிக்கெல்டனும் (215), பந்து வீச்சில் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, டிரென்ட் பவுல்ட், தீபக் சாஹர், ஜஸ்பிரித் பும்ராவும் நன்றாக செயல்பட்டு வருகிறார்கள்.

    லக்னோ அணியும் 9 ஆட்டங்களில் விளையாடி 5 வெற்றி, 4 தோல்வியை அடைந்துள்ளது. அந்த அணி பேட்டிங்கில் வெளிநாட்டு நட்சத்திரங்களான நிகோலஸ் பூரன் (377 ரன்), மிட்செல் மார்ஷ் (344), மார்க்ரம் (326) ஆகியோரை அதிகம் நம்பி இருக்கிறது. ஆயுஷ் பதோனியும் ஓரளவு பங்களிப்பை அளிக்கிறார். 106 ரன்கள் மட்டுமே எடுத்துள்ள கேப்டன் ரிஷப் பண்ட் தொடர்ந்து ஏமாற்றம் அளித்து வருகிறார். பந்து வீச்சில் ஷர்துல் தாக்குர், திக்வேஷ் ரதி, ஆவேஷ் கான், ரவி பிஷ்னோய் நம்பிக்கை அளிக்கின்றனர்.

    லக்னோவுக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் 12 ரன் வித்தியாசத்தில் தோல்வி கண்ட மும்பை அணி அதற்கு பதிலடி கொடுப்பதுடன், தங்களது உத்வேகத்தை தொடர தீவிரம் காட்டும். அதேநேரத்தில் தங்களது ஆதிக்கத்தை நீட்டிக்க லக்னோ முயற்சிக்கும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்பு குறைவு இருக்காது.

    இவ்விரு அணிகளும் இதுவரை 7 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் லக்னோ அணி 6-1 என்ற கணக்கில் ஆதிக்கம் செலுத்துகிறது.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    மும்பை: ரையான் ரிக்கெல்டன், ரோகித் சர்மா, வில் ஜாக்ஸ், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா (கேப்டன்), நமன் திர், மிட்செல் சான்ட்னெர், தீபக் சாஹர், டிரென்ட் பவுல்ட், ஜஸ்பிரித் பும்ரா, விக்னேஷ் புத்தூர்.

    லக்னோ: மார்க்ரம், மிட்செல் மார்ஷ், நிகோலஸ் பூரன், ரிஷப் பண்ட் (கேப்டன்), ஆயுஷ் பதோனி, டேவிட் மில்லர், அப்துல் சமத், ஷர்துல் தாக்குர், ரவி பிஷ்னோய், திக்வேஷ் ரதி ஆவேஷ் கான், பிரின்ஸ் யாதவ்.

    டெல்லி-பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை

     


    இதைத்தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடக்கும் 46-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ்-பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    டெல்லி அணி 8 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 2 தோல்வியுடன் (மும்பை, குஜராத் அணிகளிடம்) வலுவான நிலையில் உள்ளது. அந்த அணியின் பேட்டிங்கில் லோகேஷ் ராகுல் (323 ரன்), அபிஷேக் போரெல் (225) ஜொலிக்கின்றனர். டிரிஸ்டான் ஸ்டப்ஸ், கேப்டன் அக்ஷர் பட்டேல், அஷூதோஷ் ஷர்மா ஆகியோரும் சுமாரான பங்களிப்பை அளிக்கின்றனர். பந்து வீச்சில் குல்தீப் யாதவ், மிட்செல் ஸ்டார்க், முகேஷ் குமார், விப்ராஜ் நிகம் பலம் சேர்க்கின்றனர்.

    பெங்களூரு அணி 9 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 3 தோல்வி (குஜராத், டெல்லி, பஞ்சாப் அணிகளிடம்) அடைந்துள்ளது. பெங்களூரு அணியில் பேட்டிங்கில் விராட்கோலி சூப்பர் பார்மில் இருக்கிறார். அவர் 5 அரைசதங்களுடன் 392 ரன்கள் எடுத்துள்ளார். பில் சால்ட், தேவ்தத் படிக்கல், கேப்டன் ரஜத் படிதாரும் சோபிக்கின்றனர். பந்து வீச்சில் ஹேசில்வுட், குருணல் பாண்ட்யா, புவனேஷ்வர் குமார், யாஷ் தயாள் மிரட்டக்கூடியவர்கள்.

    சொந்த மண்ணில் நடந்த டெல்லிக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணி தோற்றது. அதற்கு பதிலடி கொடுத்து புள்ளி பட்டியலில் ஏற்றம் காண பெங்களூரு அணி வரிந்து கட்டும். சமபலம் வாய்ந்த அணிகள் மோதும் இந்த ஆட்டத்தில் யார் கை ஓங்கும் என்பதை கணிப்பது கடினமாகும்.

    இவ்விரு அணிகளும் இதுவரை 32 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் பெங்களூரு 19 ஆட்டத்திலும், டெல்லி 12 ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் முடிவு இல்லாமல் போனது.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    டெல்லி: அபிஷேக் போரெல், பாப் டு பிளிஸ்சிஸ், கருண் நாயர், லோகேஷ் ராகுல், அக்ஷர் பட்டேல் (கேப்டன்), டிரிஸ்டான் ஸ்டப்ஸ், அஷூதோஷ் ஷர்மா, விப்ராஜ் நிகம், மிட்செல் ஸ்டார்க், குல்தீப் யாதவ், முகேஷ் குமார், துஷ்மந்தா சமீரா,

    பெங்களூரு: விராட் கோலி, பில் சால்ட், தேவ்தத் படிக்கல், ரஜத் படிதார் (கேப்டன்), ஜிதேஷ் ஷர்மா, ரொமாரியோ ஷெப்பர்டு, டிம் டேவிட், குருணல் பாண்ட்யா, புவனேஷ்வர் குமார், ஹேசில்வுட், யாஷ் தயாள், சுயாஷ் ஷர்மா.

    இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    • சிஎஸ்கே-பஞ்சாப் கிங்ஸ் போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைன் மூலம் இன்று தொடங்குகிறது.
    • ஒரு நபருக்கு 2 டிக்கெட் மட்டுமே வழங்கப்படும் என சி.எஸ்.கே. நிர்வாகம் அறிவித்துள்ளது.

    சென்னை:

    நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதும் லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் வரும் 30-ம் தேதி இரவு 7.30 மணிக்கு நடக்கிறது.

    சேப்பாக்கத்தில் நடக்கும் 6-வது ஆட்டம் இதுவாகும். இந்தப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைன் மூலம் இன்று தொடங்குகிறது.

    இன்று காலை 10.15 மணியில் இருந்து www.chennaisuperkings.com என்ற இணைய தளத்தின் வாயிலாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம். ரூ.1,700, ரூ.2,500, ரூ.3,500, ரூ.4,000, ரூ.7,500 ஆகிய விலைகளில் டிக்கெட் விற்கப்படுகிறது.

    ஒரு நபருக்கு 2 டிக்கெட் மட்டுமே வழங்கப்படும் என சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    நடப்பு ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பங்கேற்ற 9 போட்டிகளில் 2 வெற்றி, 7 தோல்வி பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

    • டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 201 ரன்கள் குவித்தது.

    கொல்கத்தா:

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 44வது லீக் ஆட்டம் கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட்ரைடர்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 201 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் அரை சதம் கடந்து அசத்தினர்.

    பிரியன்ஷு ஆர்யா 69 ரன்னும், பிரப்சிம்ரன் சிங் 83 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    இதையடுத்து 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது. முதல் ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 7 ரன் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதிக்கப்பட்டது.

    தொடர்ந்து மழை பெய்ததால் ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.

    • பிரியான்ஷ் ஆர்யா 36 பந்தில் 69 ரன்கள் விளாசினார்.
    • பிரப்சிம்ரன் சிங் 49 பந்தில் 83 ரன்கள் விளாசினார்.

    ஐபிஎல் தொடரின் 44ஆவது போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் பேட்டிங் தேர்வு செய்தார்.

    அதன்படி அந்த அணியின் பிரியான்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரில் இருந்து இருவரும் வாணவேடிக்கை நிகழ்த்தினர். பந்தை பவுண்டரிக்கும், சிக்சருக்கும் பறக்கவிட்டனர்.

    முதல் ஓவரில் 10 ரன்களும், 3ஆவது ஓவரில் 12 ரன்களும், 4ஆவது ஓவரில் 18 ரன்களும், 5ஆவது ஓவரில் 11 ரன்களும், விளாசினர். இதனால் பவர்பிளேயில் பஞ்சாப் அணி விக்கெட் இழப்பின்று 56 ரன்கள் சேர்த்தது.

    10ஆவது ஓவரின் 4ஆவது பந்தை சிக்சருக்கும், 5ஆவது பந்தை பவுண்டரிக்கும் விரட்டி ஆர்யா 27 பந்தில் அரைசதம் அடித்தார். சுனில் நரைன் வீசிய அடுத்த ஓவரில் பஞ்சாப் 3 சிக்சர் விளாசியது. 12 ஆவது ஓவரை ரசல் வீசினார். இந்த ஓவரில் ஆர்யா ஆட்டமிழந்தார். அவர் 35 பந்தில் 8 பவுண்டரி, 4 சிக்சருடன் 69 ரன்கள் விளாசினார். அப்போது பஞ்சாப் 11.5 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 121 ரன்கள் குவித்திருந்தது.

    அடுத்த ஓவரில் பவுண்டரி அடித்து 38 பந்தில் பிரப்சிம்ரன் சிங் அரைசதம் அடித்தார். வருண் சக்ரவர்த்தி வீசிய 14ஆவது ஓவரில் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸ் விளாசினார். சிறப்பாக விளையாடிய அவர் 49 பந்தில் தலா 6 பவுண்டரி, சிக்சருடன் 83 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். அப்போது பஞ்சாப் 14.3 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் குவித்திருந்தது.

    4ஆவது விக்கெட்டுக்கு ஷ்ரேயாஸ் அய்யருடன் மேக்ஸ்வெல் ஜோடி சேர்ந்தார். மேக்ஸ்வெல் 7 ரன்கள் எடுத்த நிலையில் வருண் சக்ரவர்த்தி பந்தில் ஆட்டமிழந்தார்.

    4ஆவது விக்கெட்டுக்கு ஷ்ரேயாஸ் அய்யருடன் மார்கோ யான்சன் ஜோடி சேர்ந்தார். பஞ்சாப் அணிக்கு 17 ஆவது ஓவரில் 7 ரன் மட்டுமே கிடைத்தது. 174 ரன்கள் எடுத்திருந்தது. 18ஆவது ஓவரை ரசல் வீசினார். இந்த ஓவரில் ஒரு சிக்ஸ் உடன் 10 ரன்கள் கிடைத்தன. 184 ரன்கள் எடுத்திருந்தது.

    19ஆவது ஓவரை வைபவ் வீசினார். இந்த ஓவரில் 9 ரன்கள் கிடைக்க பஞ்சாப் 193 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி ஓவரை ரசல் வீசினார். இந்த ஓவரில் 8 ரன்கள் அடிக்க பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் எடுத்துள்ளது. ஷ்ரேயாஸ் அய்யர் 16 பந்தில் 25 ரன்களுடனும், இங்கிலீஷ் 6 பந்தில் 11 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    • பஞ்சாப் கிங்ஸ் புள்ளிகள் பட்டியலில் 5ஆவது இடத்தில் உள்ளது.
    • கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 7ஆவது இடத்தில் உள்ளது.

    ஐபிஎல் தொடரின் 44ஆவது போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கிறது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.

    பஞ்சாப் கிங்ஸ் அணி:-

    பிரியான்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங், ஷ்ரேயாஸ் அய்யர், ஜோஷ் இங்கிலிஷ், நெஹல் வதேரா, ஷஷாங்க் சிங், மேக்ஸ்வெல், ஓமர்சாய், மார்கோ யான்சன், ஆர்ஷ்தீப் சிங், சாஹல்.

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:-

    குர்பாஸ், சுனில் நரைன், ரகானே, வெங்கடேஷ் அய்யர், ரிங்கு சிங், ரசல், ரோவன் பொவேல், சேத்தன் சகாரியா, ஹர்ஷித் ராணா, வருண் சக்ரவர்த்தி, வைபவ் ஆரோரா

    • மற்ற அணிகள் சிறந்த வீரர்களை பெற்றுள்ளது. இதுதான் ஏலத்தின் நோக்கம்.
    • ஆனால் எங்களால் ஏலத்தில் சரியான வீரர்களை பெற முடியவில்லை.

    ஐபிஎல் 2025 சீசனில் இதுவரை இல்லாத அளவிற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதுவரை 9 போட்டிகளில் விளையாடி 2-ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

    சொந்த மைதானமான சேப்பாக்கத்தில் 5 போட்டிகளில் விளையாடி ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றது. மும்பைக்கு எதிரான முதல் போட்டியில் வெற்றி பெற்றது. அதன்பின் தொடர்ந்து நான்கு போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது.

    நேற்று சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிராக 154 ரன்களில் ஆல்அவுட்டாகி 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது.

    இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மெகா ஏலம் யுக்தி சரியாக அமையவில்லை. இதனால் தோல்வியை சந்தித்து வருவதாக சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் தெரிவித்துள்ளார்.

    "மற்ற அணிகள் சிறந்த வீரர்களை பெற்றுள்ளது. இதுதான் ஏலத்தின் நோக்கம். ஆனால் எங்களால் ஏலத்தில் சரியான வீரர்களை பெற முடியவில்லை. இதனால் மேலிருந்து கீழ் வரை அனைவரும் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். வீரர்களிடம் இன்னும் கொஞ்சம் அதிகமாக கேட்கிறீர்கள்" எனத் தெரிவித்துள்ளார்.

    ×