என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "KKRvPBKS"

    • டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 201 ரன்கள் குவித்தது.

    கொல்கத்தா:

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 44வது லீக் ஆட்டம் கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட்ரைடர்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 201 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் அரை சதம் கடந்து அசத்தினர்.

    பிரியன்ஷு ஆர்யா 69 ரன்னும், பிரப்சிம்ரன் சிங் 83 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    இதையடுத்து 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது. முதல் ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 7 ரன் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதிக்கப்பட்டது.

    தொடர்ந்து மழை பெய்ததால் ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.

    • இன்றைய போட்டியிலும் ஷிகர் தவான் பங்கேற்கவில்லை. சாம் கர்ரன் கேப்டனாக செயல்படுகிறார்.
    • பஞ்சாப் அணி 8 போட்டிகளில் விளையாடி 2-ல் மட்டுமே வெற்றி பெற்றது.

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா ஈடன் கார்டனில் இன்று நடைபெறும் 42-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இன்றைய போட்டியிலும் ஷிகர் தவான் களம் இறங்கவில்லை. இதனால் சாம் கர்ரன் கேப்டனாக செயல்படுகிறார்.

    இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டதில் பஞ்சாப் அணி கேப்டன் சாம் கர்ரன் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

    கொல்கத்தா அணி இதுவரை 7 போட்டிகளில் விளையாடி 5 வெற்றிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. பஞ்சாப் அணி 8 போட்டிகளில் விளையாடி 2-ல் வெற்றி பெற்று 9-வது இடத்தில் உள்ளது.

    ×