என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • ஐ.பி.எல். தொடரின் எலிமினேட்டர் சுற்று சண்டிகரில் நேற்று நடந்தது.
    • இதில் குஜராத் அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்.

    சண்டிகர்:

    நடப்பு ஐ.பி.எல். தொடரில் தற்போது பிளே ஆப் சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

    சண்டிகரில் நேற்று நடந்த ஐ.பி.எல். தொடரின் எலிமினேட்டர் சுற்றில் மும்பை இந்தியன்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய மும்பை 228 ரன்களைக் குவித்தது. அடுத்து ஆடிய குஜராத் அணி 208 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    இதன்மூலம் 20 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் விருது ரோகித் சர்மாவுக்கு வழங்கப்பட்டது.

    இந்நிலையில், எலிமினேட்டர் சுற்றில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி அகமதாபாத்தில் நடக்கும் தகுதிச்சுற்று-2ல் (ஜூன் 1) பஞ்சாப் கிங்ஸ் அணியை சந்திக்கிறது.

    இதில் வெற்றி பெறும் அணி ஜூன் 3-ம் தேதி அகமதாபாத்தில் நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் பெங்களூரு அணியுடன் மோதும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங் தேர்வு செய்தது.
    • அதன்படி, முதலில் ஆடிய மும்பை அணி 228 ரன்களைக் குவித்தது.

    சண்டிகர்:

    ஐ.பி.எல். தொடரின் பிளே ஆப் சுற்றுகள் நடைபெற்று வருகிறது. சண்டிகரில் இன்று நடைபெற்ற எலிமினேட்டர் சுற்றில் மும்பை இந்தியன்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற மும்பை பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, மும்பை அணி முதலில் களமிறங்கியது. ஆரம்பம் முதலே மும்பை வீரர்கள் அதிரடியாக ஆடினர். முதல் விக்கெட்டுக்கு 84 ரன் சேர்த்த நிலையில் பேர்ஸ்டோவ் 22 பந்தில் 47 ரன்னில் அவுட்டானார்.

    அடுத்து இறங்கிய சூர்யகுமார் யாதவ் 33 ரன்னும், திலக் வர்மா 25 ரன்னும், ஹர்திக் பாண்ட்யா 22 ரன்னும் எடுத்தனர். ரோகித் சர்மா 50 பந்தில் 81 ரன் குவித்து ஆட்டமிழந்தார்.

    இறுதியில், மும்பை அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 228 ரன்கள் குவித்தது.

    இதையடுத்து, 229 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் 1 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். குசால் மெண்டிஸ் 20 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.

    சாய் சுதர்சனுடன் வாஷிங்டன் சுந்தர் இணைந்தார். இருவரும் அதிரடியாக ஆடினர். 3வது விக்கெட்டுக்கு 84 ரன்கள் சேர்த்த நிலையில் வாஷிங்டன் சுந்தர் 48 ரன்னில் வெளியேறினார். அரை சதம் கடந்த சாய் சுதர்சன் 49 பந்தில் 80 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

    ரதர்போர்டு 24 ரன்னில் வெளியேறினார்.

    இறுதியில், குஜராத் 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 208 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் 20 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் மும்பை அணி தகுதிச்சுற்று 2-க்கு முன்னேறியது.

    • இந்திய ஏ அணியில் இடம் பிடித்த சர்ப்ராஸ் கான் 92 ரன்னில் ஆட்டமிழந்தார்.
    • இந்திய ஏ அணி 300 ரன்களை கடந்து விளையாடி வருகிறது.

    இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்த தொடர் வரும் ஜூன் மாதத்தில் இருந்து தொடங்குகிறது. இங்கிலாந்து தொடருக்கு முன்பு இந்திய ஏ அணி இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

    அதன்படி இந்த இந்திய ஏ அணியில் ஜெய்ஸ்வால், கருண் நாயர், அபிமன்யு ஈஸ்வரன், துருவ் ஜூரல், சர்துல் தாக்கூர், நிதீஷ்குமார் போன்ற வீரர்கள் இடம் பிடித்திருக்கிறார்கள். இந்த ஆறு வீரர்களுமே இந்திய மெயின் அணியில் இடம்பெற்றிருக்க கூடியவர்கள்.

    இவர்களை தவிர சர்பராஸ் கான், அன்சூல் காம்போஜ் போன்ற வீரர்கள் உள்ளனர். ருதுராஜ் இன்னும் காயம் சரியாகாததால் அவர் இந்த ஆட்டத்தில் விளையாடவில்லை.

    இந்த நிலையில் டாஸ் வென்ற இங்கிலாந்து லயன்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய கேப்டன் அபிமன்யு ஈஸ்வரன் 17 பந்துகளில் 8 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். மற்றொரு தொடக்க வீரரான ஜெய்ஸ்வால் 3 பவுண்டரி, ஒரு சிக்சர் என 55 பந்தில் 24 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். இதன் மூலம் இந்திய ஏ அணி 51 ரன்கள் இரண்டு விக்கெட்டுகளை இழந்தது.

    இதனையடுத்து கருண் நாயர் மற்றும் சர்பராஸ் கான் ஜோடி சேர்ந்து பொறுப்புடன் விளையாடினர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரை சதம் கடந்தனர். சதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்ட சர்பராஸ் கான் 92 ரன்னில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கருண் நாயர் சதம் அடித்து அசத்தினார். பயிற்சி போட்டியில் சதம் அடித்ததால் அவர் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணியில் இடம் பிடிப்பார் என தெரிகிறது.

    • மும்பை தரப்பில் ரோகித் 81 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
    • குஜராத் தரப்பில் சாய் கிஷோர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    ஐபிஎல் தொடரின் இன்றைய எலிமினேட்டர் சுற்றில் மும்பை - குஜராத் அணி விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

    அதன்படி மும்பை அணியின் தொடக்க வீரர்களாக பேர்ஸ்டோ- ரோகித் களமிறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 84 ரன்கள் எடுத்தது. 47 ரன்கள் எடுத்த போது பேர்ஸ்டோ ஆட்டமிழந்தார்.

    இதனையடுத்து ரோகித் - சூர்யகுமார் ஜோடி சேர்ந்து குஜராத் பந்து வீச்சை நாலாபுறமும் பறக்க விட்டனர். தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோகித் அரை சதம் அடித்து அசத்தினார். 20 பந்தில் 33 ரன்கள் எடுத்திருந்த போது சூர்யகுமார் ஆட்டமிழந்தார்.

    அதனை தொடர்ந்து ரோகித்துடன் திலக் ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரோகித் 81 ரன்களில் வெளியேறினார். இதனையடுத்து வந்த திலக் 11 பந்தில் 25 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

    இறுதியில் நமன் மற்றும் பாண்ட்யா ஜோடி அணியின் ஸ்கோரை கணிசமாக உயர்த்தினர். இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 228 ரன்கள் எடுத்தது. குஜராத் தரப்பில் சாய் கிஷோர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    மும்பை அணி 200 ரன்களுக்கு மேல் எடுத்தால் தோல்வியடைந்ததே இல்லை. அந்த வகையில் மும்பையின் சாதனை இலக்கை குஜராத் அணி தகர்த்து குவாலிபையர் 2 சுற்றுக்கு முன்னேறுமா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 

    • ஐபிஎல் தொடரில் 300 சிகர்கள் விளாசிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை ரோகித் படைத்துள்ளார்.
    • ஐபிஎல் தொடரில் 7000 ரன்கள் குவித்த 2-வது வீரர் என்ற சாதனையையும் ரோகித் படைத்துள்ளார்.

    ஐபிஎல் தொடரின் இன்றைய எலிமினேட்டர் சுற்றில் மும்பை - குஜராத் அணி விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

    அதன்படி மும்பை அணியின் தொடக்க வீரர்களாக பேர்ஸ்டோ- ரோகித் களமிறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 84 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோகித் அரை சதம் கடந்தார். இதில் 2 சிக்சர், 8 பவுண்டரிகள் அடங்கும்.

    இதன்மூலம் ரோகித் சர்மா 2 சாதனைகளை படைத்துள்ளார். அதன்படி இந்த போட்டியில் 2 சிக்சர்கள் விளாசியதன் மூலம் ஐபிஎல் தொடரில் 300 சிகர்கள் விளாசிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை ரோகித் படைத்துள்ளார். மொத்தமாக 2-வது வீரர் ஆவார்.

    முதல் வீரராக கிறிஸ் கெய்ல் 357 சிக்சர்களுடன் முதல் இடத்தில் உள்ளார்.

    மேலும் ஐபிஎல் தொடரில் 7000 ரன்கள் குவித்த 2-வது வீரர் என்ற சாதனையையும் ரோகித் படைத்துள்ளார். முதல் இடத்தில் விராட் கோலி 8618 ரன்களுடன் முதல் இடத்தில் உள்ளார்.

    • இவ்விரு அணிகளும் இதுவரை 7 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன.
    • குஜராத் 5 ஆட்டங்களிலும், மும்பை 2 ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளன.

    ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் வெளியேற்றுதல் (எலிமினேட்டர்) சுற்று ஆட்டத்தில் புள்ளி பட்டியலில் 3-வது இடம் பிடித்த குஜராத் டைட்டன்ஸ் அணி, 4-வது இடம் பெற்ற மும்பை இந்தியன்சை சந்திக்கிறது.

    இந்த ஆட்டத்தில் தோல்வி அடையும் அணி வெளியேறும். வெற்றி பெறும் அணி, முதலாவது தகுதி சுற்றில் தோற்ற பஞ்சாப் அணியுடன் மோத வேண்டும். இந்த மோதலில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு 2-வது அணியாக தகுதி பெறும்.

    இந்நிலையில் இந்த போட்டியில் வெற்றி பெற்ற மும்பை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    இவ்விரு அணிகளும் இதுவரை 7 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் குஜராத் 5 ஆட்டங்களிலும், மும்பை 2 ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளன.

    • குபாலிபையர் 1 சுற்றில் பஞ்சாப்- பெங்களூரு அணிகள் நேற்று மோதின.
    • இந்த போட்டியில் பஞ்சாப் அணியில் முதல் முறையாக முஷீர்கான் களமிறங்கினார்.

    முல்லான்பூர்

    18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் மாநிலம் முல்லான்பூரில் நேற்று இரவு நடந்த குவாலிபையர் 1 சுற்றில் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த பஞ்சாப் கிங்ஸ், 2-வது இடம் பெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொண்டது. இதில் ஆர்சிபி அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த ஆட்டத்தில் பஞ்சாப் அணியில் 20-வயதான முஷீர் கான் அறிமுக வீரராக களமிறங்கினார். இருப்பினும் 3 பந்துகளை எதிர்கொண்ட அவர் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.

    அவர் பேட்டிங் செய்ய வந்தபோது ஸ்லீப் பகுதியில் பீல்டிங் நின்ற விராட் கோலி, சைகை மூலம் சக வீரரிடம் 'வாட்டர் பாய்' என்று கூறுவார். இதனை கண்ட ரசிகர்கள் பலர் இப்படி ஒரு ஜாம்பவான் வீரர் அறிமுக வீரரை ஸ்லெட்ஜிங் செய்வது மிகவும் தவறானது என்று விராட் கோலியை விமர்சித்து வருகின்றனர்.

    இந்த போட்டியில் முஷீர் கான் பேட்டிங் செய்ய களமிறங்குவதற்கு சில ஓவர்களுக்கு முன் பெவிலியனில் இருந்து களத்தில் இருந்த சக வீரர்களுக்கு தண்ணீர் கொண்டு வந்தார். இதனை குறிப்பிட்டு விராட் கோலி கிண்டலடித்ததாக ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.  

    • நடப்பு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
    • குவாலிபையர் 1 சுற்றில் பஞ்சாப் அணியை எளிதாக வீழ்த்தியது ஆர்சிபி.

    ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நடப்பு தொடரின் குவாலிபையர் 1 சுற்றில் பெங்களூரு-பஞ்சாப் ஆகிய அணிகள் நேற்று மோதின. இதில் ஆர்சிபி அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி அடுத்த மாதம் 3-ந் தேதி நடைபெற உள்ளது.

    ஐபிஎல் அணிகளில் அதிக அளவு ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளதாக அணியாக ஆர்சிபி உள்ளது. ஆனால் அந்த அணி ஒருமுறை கூட கோப்பையை வெல்லாதது அந்த அணி வீரர்களை விட அந்த அணியின் ரசிகர்களுக்கு மிகுந்த வேதனையாக உள்ளது.

    ஒவ்வொரு தொடரின் போதும், எதாவது ஒரு ஆர்சிபி ரசிகர், ஆர்சிபி கோப்பையை வென்றால்தான் திருமணம் முடிப்பேன், வேலைக்கு செல்வேன் என போட்டியின் போது பேனர்களை வைப்பதை வழக்கமாக கொண்டிருந்தனர்.

    இவர்களுக்கும் மேலாக ஒரு ரசிகர் அந்த மாநிலத்தின் முதலமைச்சருக்கே ஒரு கடித்தத்தை எழுதியுள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    அதில், நடப்பு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி கோப்பையை வென்றால் அந்த நாளை பொதுவிடுமுறையாக அறிவிக்க வேண்டும் என அந்த அணியின் தீவிர ரசிகர் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும் ஒவ்வொரு ஆண்டும் அந்த நாளில் விடுமுறை கொடுத்து, ரசிகர்கள் கொண்டாடுவதற்கு வழிவகை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளார்.

    • வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து 238 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    • இந்த போட்டியில் 82 ரன்கள் குவித்த பெத்தேல் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது.

    இதில் முதல் ஒருநாள் போட்டி நேற்று பர்மிங்காமில் நடந்தது. டாஸ் ஜெயித்த வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 400 ரன்கள் குவித்தது. பெத்தேல் 82 ரன்னும், பென் டக்கெட் 60 ரன்னும், ஹாரி புரூக் 58 ரன்னும், ஜோ ரூட் 57 ரன்னும் எடுத்தனர்.

    பின்னர் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் 26.2 ஓவர்களில் 162 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனால் இங்கிலாந்து 238 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ஆட்டநாயகனாக பெத்தேல் தேர்வு செய்யப்பட்டார்.

    இந்நிலையில் நான் இந்தியாவுக்குச் செல்வதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு இருந்ததை விட இப்போது நான் சிறந்த வீரராக உணர்கிறேன் என்றும் இதற்கு விராட் கோலியின் அறிவுரை தான் காரணம் என பெத்தேல் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இது மிகவும் சிறப்பு வாய்ந்தது. மிடில் ஆர்டரில் பேட்டிங் செய்வது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நாங்கள் வலுவான நிலையில் இருந்ததால் இன்று நான் பேட்டிங் செய்ய வந்தபோது எளிதாக இருந்தது.

    ஐ.பி.எல். தொடரில் விளையாடிய அனுபவம் என் விளையாட்டுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. நான் இந்தியாவுக்குச் செல்வதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு இருந்ததை விட இப்போது நான் சிறந்த வீரராக உணர்கிறேன். அதற்கு விராட் கோலிதான் காரணம். அவர் தன்னுடைய அனுபவங்களையும் பேட்டிங் நுணுக்கங்களையும் பகிர்ந்தார்.

    என பெத்தேல் கூறினார்.

    • கே.எல். ராகுல் இங்கிலாந்தில் 9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
    • 34.11 சராசரியுடன் 2 சதங்களுடன் 614 ரன்கள் எடுத்துள்ளார்.

    இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் (ஜூன்) முதல் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஜூன் 20-ந் தேதி லீட்சில் தொடங்குகிறது. இந்த தொடரில் இந்திய அணி புதிய டெஸ்ட் கேப்டன் சுப்மன் கில் தலைமையில் விளையாட உள்ளது.

    இந்த தொடருக்கு முன்னதாக இந்தியா ஏ அணி இங்கிலாந்து லயன்ஸ் அணியுடன் பயிற்சி போட்டியில் விளையாட உள்ளது. முதல் பயிற்சி போன்று இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான 2-வது பயிற்சி போட்டியில் கேஎல் ராகுல் விளையாட உள்ளதாக பிசிசிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்தியாவின் சீனியர் அணியின் இடம் பிடித்த கேஎல் ராகுல், இந்திய ஏ அணியுடன் இணைந்து பயிற்சி போட்டியில் விளையாடுவார். அவர் வருகிற திங்கள்கிழமை விமானம் மூலம் இங்கிலாந்து செல்ல உள்ளார் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

    கே.எல். ராகுல் இங்கிலாந்தில் 9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார், 34.11 சராசரியுடன் 2 சதங்களுடன் 614 ரன்கள் எடுத்துள்ளார்.

    • குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக சதம் விளாசி சாதனைப் படைத்தார்.
    • தொடக்க வீரராக களம் இறங்கி பயமின்றி அதிரடியாக விளையாடியது அனைவரையும் ஈர்த்தது.

    ஐபிஎல் 2025 சீசன் கிரிக்கெட் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் 14 வயதேயான வைபவ் சூர்யவன்ஷி இடம் பிடித்திருந்தார். இவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர். குஜராத் டைட்டன்ஸ் அணிக்கெதிராக 35 பந்துகளில் சதம் விளாசி சாதனைப் படைத்தார். அவருக்கு கிரிக்கெட் வீரர்கள் மற்றும் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

    இந்த நிலையில் பீகார் சென்றிருந்த பிரதமர் மோடி, சூர்யவன்ஷி சந்தித்தது தொடர்பான படத்தை எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும், எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பிரதமர் மோடி "பாட்னா விமான நிலையத்தில், இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷி மற்றும் அவரது குடும்பத்தினரை சந்தித்தேன். அவரது கிரிக்கெட் திறமைகள் நாடு முழுவதும் போற்றப்படுகின்றன. அவரது எதிர்கால முயற்சிகளுக்கு எனது வாழ்த்துக்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

    • ஆர்சிபி அணி 4-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
    • புன்னகையுடனும், உற்சாகத்துடனும் இருந்த அவரின் முகம் மாறியது.

    ஐபிஎல் தொடரின் இன்றைய குவாலிபையர்-1 சுற்றில் ஆர்சிபி- பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.டாஸ் வென்ற ஆர்சிபி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    ஆரம்பம் முதலே ஆர்சிபி வீரர்கள் அசத்தலாகப் பந்து வீசினர். இதனால் பஞ்சாப் வீரர்கள் விரைவில் வெளியேறினர். இறுதியில், பஞ்சாப் கிங்ஸ் அணி 14.1 ஓவரில் 101 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    102 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆர்சிபி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் 12 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். மயங்க் அகர்வால் 19 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இறுதியில், ஆர்சிபி அணி 10 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 106 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. பிலிப் சால்ட் 56 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். இதன்மூலம்ஆர்சிபி அணி 4-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    இதனிடையே பஞ்சாப் கிங்ஸ் அணியின் தோல்வி அதன் இணை உரிமையாளரான நடிகை பிரீத்தி ஜிந்தாவை நிலைகுலைய வைத்திருக்கிறது. தனது அணி வெறும் 101 ரன்களுக்கு ஆட்டமிழந்ததை அடுத்தே பிரீத்தி ஜிந்தாவை கவலை தொற்றிக்கொண்டது.

    புன்னகையுடனும், உற்சாகத்துடனும் இருந்த அவரின் முகம் மாறியது. அரங்கில் அமர்ந்திருந்த அவர் அதன்பின் சோகத்துடனேயே காணப்பட்டார்.

    ஏமாற்றத்தாலும், வருத்தத்தாலும் அவர் கொடுத்த ரியாக்ஷன்கள் மற்றும் இறுதியில் தோல்வி உறுதியானதும் அவர் காணப்பட்ட நிலை தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    இதனால் சோகமடைந்த ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி தேற்றி வருகின்றனர். குறிப்பாக முந்திய பஞ்சாப் வெற்றியின்போது அவர் துள்ளிக்குதித்த வீடியாவுடன் இதை பலரும் ஒப்பிட்டு வருகின்றனர்.

    ×