என் மலர்
கிரிக்கெட் (Cricket)
- திக்வேஷ் ரதி பந்தில் ராணா சிக்ஸ் விளாசினார்.
- நோட்புக் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட ராணா, ரதியை வெறுப்பேற்றியதால் மோதல்.
டெல்லி டி20 லீக்கின் எலிமினேட்டர் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் தெற்கு டெல்லி- மேற்கு டெல்லி அணிகள் மோதின. முதலில் விளையாடிய தெற்கு டெல்லி 201 ரன்கள் குவித்தது.
பின்னர் 202 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் மேற்கு டெல்லி களம் இறங்கியது. மேற்கு டெல்லி கேப்டன் நிதிஷ் ராணா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நிதிஷ் ராணா பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது திக்வேஷ் ரதி பந்து வீச வந்தார். பந்து வீசும்போது பந்தை ரிலீஸ் செய்யவில்லை. மீண்டும் பந்து வீச வரும்போது, நிதிஷ் ராணா தயாராகவில்லை. அங்கேயே மோதல் தொற்றிக் கொண்டது.
அதன்பின் வீசிய பந்தை ரிவர்ஸ் ஸ்வீப் மூலம் சிக்ஸ் விளாசினார். அத்துடன் திக்வேஷ் ரதி விக்கெட் வீழ்த்தினால் பயன்படுத்தும் Notebook கொண்டாட்டத்தை நிதிஷ் ராணா பேட்டில் கையெழுத்து போடுவது போன்று செய்து காண்பித்தார். இதனால் திக்வேஷ் ரதி, நிதிஷ் ராணாவை நோக்கி ஏதோ கூறினார்.
இதனால் ராணா கோபம் அடைந்து திக்வேஷ் ரதி நோக்கி சென்றார். வாய் தகராறு கைகலப்பாக மாறும் நிலை ஏற்பட்டது. இதனால் பெண் நடுவர் குறுக்கே வந்து இருவரையும் பிரித்து விட்டார். சக வீரர்களும் மோதலை பிரித்து விட்டனர். இதனால் இருவரும் பிரிந்து சென்றனர்.
மைதானத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட திக்வேஷ் ரதிக்கு 80 சதவீதம் அபராதமும், நிதிஷ் ராணாவுக்கு 50 சதவீதம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
கிரிஷ் ஆட்டமிழக்கும்போது, அவரை ஆட்டமிழக்கச் செய்த பாரதி என்பவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போதும் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் நடவர் தலையீடு செய்து மோதலை முடிவுக்கு கொண்டு வந்தார்.
- பும்ரா சுப்மன் கில் ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ளனர்.
- ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்காக ரோகித் சர்மா ஆயத்தமாகி வருகிறார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 9ஆம் தேதி தொடங்குகிறது. இதற்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் முடிவடைந்த பிறகு, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்தியா விளையாட இருக்கிறது.
ஆசிய கோப்பை தொடரில் பும்ரா, சுப்மன் கில் விளையாட உள்ளனர். ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா செயல்பட உள்ளார். இந்த நிலையில் பெங்களூருவில் உள்ள பிசிசிஐ-யின் சிறப்பு மையத்திற்கு (Centre of Excellence) ரோகித் சர்மா, சுப்மன் கில், பும்ரா, ஷர்துல் தாகூர் வந்துள்ளனர். இவர்கள் தங்களுடைய உடற்தகுதியை நிரூபிக்க உள்ளனர்.
ஒரு குறிப்பிட்ட காலம் விளையாடமல் இருந்து அல்லது காயத்தில் இருந்து மீண்டு வந்து, அணிக்கு திரும்பும்போது உடற்தகுதியை நிரூபிக்க வேண்டும். தற்போது பந்து வீச்சாளர்களுக்கான உடற்தகுதியில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.
ரோகித் சர்மா ஆஸ்திரேலியா தொடருக்கு முன்னதாக மூன்று போட்டிகளில் விளையாட உள்ளார்.
- 21 பந்தில் அரைசதம் விளாசிய நிலையில், 42 பந்தில் சதம் அடித்தார்.
- அவரது ஸ்கோரில் 8 பவுண்டரிகள், 15 சிக்சர்கள் அடங்கும்.
டெல்லி டி20 லீக்கின் எலிமிடேட்டர் சுற்று நேற்றிரவு நடைபெற்றது. இதில் மேற்கு டெல்லி- தெற்கு டெல்லி அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த தெற்கு டெல்லி 201 ரன்கள் குவித்தது. பின்னர் 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மேற்கு டெல்லி களம் இறங்கியது. இரண்டு விக்கெட்டுகளை விரைவாக இழந்த போதிலும், கேப்டன் நிதிஷ் ராணா ருத்ரதாண்டவம் ஆடினார்.
திக்வேஷ் வீசிய 8ஆவது ஓவரில் ஒரு பவுண்டரி, 3 சிக்சர் வரிசையாக அடித்து அசத்தினார். அத்துடன் 21 பந்தில் அரைசதம் அடித்தார். தொடர்ந்து திக்வேஷ் வீசிய 10ஆவது ஓவரிலும் இரண்டு சிக்ஸ், ஒரு பவுண்டரி விரட்டினார். தொடர்ந்து விளையாடிய அவர் 42 பந்தில் சதம் அடித்தார்.
நிதிஷ் ராணா ஆட்டமிழக்காமல் 55 பந்தில் 134 ரன்கள் விளாச 17.1 ஓவரிலேயே 3 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் மேற்கு டெல்லி அபார வெற்றி பெற்றது. நிதிஷ் ராணா 8 பவுண்டரி, 15 கிக்சர்கள் விளாசினார். ஓடாமலேயே 132 ரன்கள் விளாசினார்.
- இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவி முடிவடைந்த நிலையில், ஆர்ஆர் அணியில் இணைந்தார்.
- இவரது தலைமையில் 2025 சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் 9ஆவது இடத்தை பிடித்தது.
ஐபிஎல் கிரிக்கெட்டில் 2025 சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்து வந்த ராகுல் டிராவிட், அந்த பதவியில் இருந்து விலகியுள்ளார். இதை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் உறுதி செய்துள்ளது.
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், 2025ஆம் ஆண்டுதான் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். போட்டிக்கு முன்னதாக அவருக்கு காலில் எழும்பு முறிவு ஏற்பட்டது. இருந்தபோதிலும் லீல் சேரில் அமர்ந்தவாறு பணியாற்றினார்.
இந்த நிலையில் ராகுல் டிராவிட் இந்த முடிவை எடுத்துள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் வீரர், பயிற்சியாளர் என்ற வகையில் நீண்ட கால உறவு இருந்து வந்த நிலையில், தற்போது அந்த அணி உடனான உறவு முடிவுக்கு வருகிறது.
அணியில் தலைமை பயிற்சியாளரை தாண்டி மிகப்பெரிய பொறுப்பு வழங்க உரிமையாளர்கள் ஆஃபர் தெரிவித்த நிலையில், தற்போது மறுக்கப்பட்டதால் ராகுல் டிராவிட் இந்த முடிவை எடுதுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2025 சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் 14 போட்டிகளில் 4-ல் மட்டுமே வெற்றி பெற்று 9ஆவது இடத்தை பிடித்து ஏமாற்றம் அடைந்தது.
- 70-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
- கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என ஆர்.சி.பி அணி நிர்வாகம் தெரிவித்து இருந்தது.
இந்த ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெங்களூரு ஆர்.சி.பி. அணி வெற்றி பெற்றது. இதையடுத்து கடந்த ஜூன் மாதம் 4-ந் தேதி அந்த அணி வீரர்களுக்கு பாராட்டு விழா சின்னசாமி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான ரசிகர்கள் குவிந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 11 பேர் உயிரிழந்தனர். மேலும் 70-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இது கர்நாடகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தில் ஆர்.சி.பி. அணி, கர்நாடக கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என ஆர்.சி.பி அணி நிர்வாகம் தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 11 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என RCB Cares அறிவித்துள்ளது.
முன்னதாக, நேற்று முன்தினம் ஆர்.சி.பி. அணி நிர்வாகம் எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-
நாங்கள் இந்த தளத்தில் கருத்துகளை வெளியிட்டு 3 மாதங்கள் ஆகிவிட்டது. நாங்கள் வெளியே சென்றுவிடவில்லை. அமைதியாக இருப்பது என்பது இல்லாமல் போய்விட்டதாக இல்லை. இது துக்கம். ஐ.பி.எல். சாம்பியன் கோப்பையை வெற்றி பெற்ற பிறகு நினைவுகளை கூறும் வகையில் சக்தியுடன் நீங்கள் கொண்டாடினீர்கள். மகிழ்ச்சி நிரம்பி இருந்தது. ஆனால் ஜூன் 4-ந்தேதி (கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்தனர்) இது அனைத்தையும் மாற்றிவிட்டது.
அந்த நாளில் நமது இதயம் வெடித்து சிதறியது. அதன் பிறகு ஏற்பட்ட அமைதி நமது இடத்தை நிறுத்தி வைத்தது. இந்த அமைதியில் நாங்கள் துக்கத்தில் இருந்தோம், எல்லாவற்றையும் கவனித்து கொண்டிருந்தோம், கற்றுக் கொண்டிருந்தோம். இப்போது நிதானமாக வெறும் பொறுப்பை தாண்டி நாங்கள் மீண்டும் ஏதாவது செய்வதை தொடங்கி இருக்கிறோம். இதில் நாங்கள் உண்மையிலேயே நம்பிக்கை கொண்டுள்ளோம்.
நாங்கள் இன்று (அதாவது நேற்றுமுன்தினம்) முதல் மீண்டும் இந்த தளத்திற்கு திரும்பியுள்ளோம், கொண்டாட்டத்துடன் அல்ல, அக்கறையுடன் வந்துள்ளோம். உங்களுடன் கூட்டாக நிற்க, முன்னேறி நடக்க தயாராக உள்ளோம். கர்நாடகத்தின் பெருமையாக இருக்க நாங்கள் தொடர்ந்து பயணிக்கிறோம். இந்த ஆர்.சி.பி. கேர்ஸ் நிதி குறித்து முழு விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 17 ஆண்டுக்கு பிறகு ஸ்ரீசாந்தை, ஹர்பஜன்சிங் கன்னத்தில் அறைந்த அந்த சர்ச்சைக்குரிய வீடியோ காட்சி இப்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
- லலித் மோடி, மைக்கேல் க்ளார்க் உங்கள் இருவரையும் பார்க்க வெட்கமாக இருக்கிறது.
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் ஆனது. முதலாவது சீசனில் மொகாலியில் நடந்த ஆட்டத்தில் மும்பை அணி தோற்ற பிறகு திடீரென மும்பை இந்தியன்ஸ் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங், பஞ்சாப் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்தை கன்னத்தில் 'பளார்' விட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. கன்னத்தில் கைவைத்தபடி ஸ்ரீசாந்த் தேம்பி தேம்பி அழுதது அனைவரையும் கலங்க வைத்தது. ஆனால் இது தொடர்பான வீடியோ காட்சி மறைக்கப்பட்டது. சம்பவம் குறித்து விசாரணை நடத்திய இந்திய கிரிக்கெட் வாரியம் அந்த சீசனில் எஞ்சிய 11 ஆட்டங்களிலும், 5 ஒரு நாள் போட்டிகளிலும் விளையாட ஹர்பஜன்சிங்குக்கு தடை விதித்தது. அதன் பிறகு பலக்கட்டங்களில் ஹர்பஜன் சிங்கிடமும் சரி, ஸ்ரீசாந்திடமும் சரி எதற்காக இருவரிடையே சண்டை ஏற்பட்டது என கேட்கப்பட்ட போது பதில் சொல்லாமல் சிரித்தே மழுப்பினர்.
இந்த நிலையில் 17 ஆண்டுக்கு பிறகு ஸ்ரீசாந்தை, ஹர்பஜன்சிங் கன்னத்தில் அறைந்த அந்த சர்ச்சைக்குரிய வீடியோ காட்சி இப்போது வெளியாகி வைரலாகி வருகிறது. ஆட்டம் முடிந்து வீரர்கள் கைகுலுக்கும் போது, ஹர்பஜன்சிங், ஸ்ரீசாந்தின் கன்னத்தில் தடாலடியாக அடிப்பதும், பிறகு இருவரும் ஒருவரையொருவர் அடிப்பது போல் பாயும் போது நடுவர்கள், சக வீரர்கள் சமாதானப்படுத்துவதும் அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளது. இப்போதும் அவர்கள் எதற்காக மோதிக் கொண்டார்கள், ஹர்பஜன்சிங்கை கோபமூட்டும் வகையில் ஸ்ரீசாந்த் என்ன சொன்னார் என்பது மர்மமாகவே உள்ளது.
இந்த நிலையில், வீடியோ வெளியானதற்கு இந்திய முன்னாள் வீரர் ஸ்ரீசாந்தின் மனைவி புவனேஷ்வரி கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-
லலித் மோடி, மைக்கேல் க்ளார்க் உங்கள் இருவரையும் பார்க்க வெட்கமாக இருக்கிறது. மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக 2008-ல் நடந்த ஒரு சம்பவத்தை நீங்கள் இழுப்பதை பார்க்கும்போது மனிதாபிமானமற்றவர்களாக தெரிகிறீர்கள்.
அந்த சம்பவத்தில் இருந்து ஹர்பஜனும், ஸ்ரீசாந்தும் மீண்டு வந்துவிட்டனர். ஆனாலும் அந்த பழைய காயத்தை நீங்கள் மீண்டும் கிளறி விடுகிறீர்கள். இது அருவருப்பாக உள்ளது என கூறியுள்ளார்.
- முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 182 ரன் எடுத்தது.
- அடுத்து ஆடிய ஆப்கானிஸ்தான் 143 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
துபாய்:
ஆசிய கோப்பை தொடருக்கு தயாராகும் பொருட்டு பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) அணிகள் இடையே முத்தரப்பு டி20 தொடர் நடைபெறுகிறது.
முத்தரப்பு தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட் செய்த பாகிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 182 ரன்கள் எடுத்தனர். கேப்டன் சல்மான் ஆகா அரை சதம் கடந்து 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதையடுத்து, 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் 143 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
கேப்டன் ரஷீத்கான் அதிரடியாக ஆடி 16 பந்தில் 5 சிக்சர் உள்பட 39 ரன்கள் எடுத்தார். தொடக்க ஆட்டக்காரர் குர்பாஸ் 38 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை. இதன்மூலம் பாகிஸ்தான் அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பாகிஸ்தான் சார்பில் ஹரிஸ் ராப் 4 விக்கெட்டும், ஷாஹின் அப்ரிடி, முகமது நவாஸ் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
- முதலில் பேட் செய்த இலங்கை அணி 298 ரன்களைக் குவித்தது.
- பதும் நிசங்கா, கமிந்து மெண்டிஸ் அரை சதம் கடந்து வெளியேறினர்.
ஹராரே:
இலங்கை அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி ஹராரேயில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 6 விக்கெட்டுக்கு 298 ரன்களைக் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர் பதும் நிசங்கா பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 76 ரன்னில் அவுட்டானார். கமிந்து மெண்டிஸ் அதிரடியாக ஆடி அரை சதம் கடந்து 57 ரன்னில் வெளியேறினார்.
இதையடுத்து, 299 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பென் கர்ரன் சிறப்பாக ஆடி 70 ரன்கள் எடுத்தார்.
பொறுப்புடன் ஆடிய சிக்கந்தர் ராசா அரை சதம் கடந்தார். அணியை வெற்றி பெறவைக்கப் போராடிய அவர் 92 ரன்னில் வெளியேறினார்.
இறுதியில், ஜிம்பாப்வே அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 291 ரன்கள் மட்டுமே எடுத்து 7 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
சிக்கந்தர் ராசா அவுட்டாகும்வரை இலங்கை அணிக்கு வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையே இல்லை.
இலங்கை அணி சார்பில் தில்ஷன் மதுஷனகா 4 விக்கெட்டும், அசிதா பெர்னாண்டோ 3 விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் ஒருநாள் தொடரில் இலங்கை 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.
- இரண்டு விக்கெட்டுகள் எல்.பி.டபிள்யூ மூலம் கிடைத்தது.
- இரண்டு விக்கெட்டுகள் போல்டு மூலம் கிடைத்தது.
துலீப் கிரிக்கெட் காலிறுதியில் வடக்கு மண்டலம்- கிழக்கு மண்டலம் அணிகள் விளையாடி வருகின்றன. முதலில் பேட்டிங் செய்த வடக்கு மண்டலம் முதல் இன்னிங்சில் 405 ரன்கள் குவித்தது. அந்த அணியின் ஆயுஷ் படோனி அதிகபட்சமாக 76 ரன்கள் சேர்த்தார்.
பின்னர் கிழக்கு மண்டலம் முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர் உத்கார்ஷ் சிங் 38 ரன்களில் ஆட்டமிழந்தார். ரியான் பராக் 39 ரன்கள் அடித்தார். விராட் சிங் 69 ரன்கள் சேர்க்க மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க 230 ரன்னில் சுருண்டது.
வடக்கு மண்டல பந்து வீச்சாளர் அக்யூப் நபி அபாரமாக பந்து வீசி தொடர்ச்சியாக கடைசி நான்கு விக்கெட்டுகளையும் 4 பந்தில் வீழ்த்தி அசத்தினார். இதன்மூலம் இந்தியாவில் நடைபெறும் முதல்தர கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 4 பந்தில் 4 விக்கெட் வீழ்த்திய 4ஆவது வீரர் என்ற பெருமையை பெற்றார். அக்யூப் நபி 10.1 ஓவர்கள் வீசி 28 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட் சாய்த்தார். ஆட்டத்தின் 53ஆவது ஓவரை வீசினார். இந்த ஓவரின் 4, 5, மற்றும் 6ஆவது பந்தில் விக்கெட்டுகள் வீழ்த்தினார். பின்னர் 57ஆவது ஓவரை வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் விக்கெட் வீழத்தினார். இரண்டு விக்கெட்டுகள் போல்டு மூலமாகவம், இரண்டு விக்கெட்டுகள் எல்.பி.ட.பிள்யூ மூலமாகவும் கிடைத்தது. கிழக்கு மண்டலம் ஆல்அவுட் ஆனதும், இன்றைய 2ஆவது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
மற்றொரு காலிறுதியில் மத்திய மண்டலம்- வடகிழக்கு மண்டலம் அணிகள் விளையாடி வருகின்றன. முதலில் பேட்டிங் செய்த மத்திய மண்டலம் 532 ரன்கள் குவித்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய வடகிழக்கு மண்டலம் இன்றைய 2ஆவது நாள் ஆட்ட முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் அடித்துள்ளது. வடக்கு மண்டல அணியின் டேனிஷ் மாலேவர் 203 ரன்கள் விளாசினார். ரஜத் படிதார் 125 ரன்களும், யாஷ் ரதோட் ஆட்டமிழக்காமல் 87 ரன்களும் எடுத்தனர்.
ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த இவருக்கு 28 வயதாகிறது. 29 முதல்தர போட்டிகளில் விளையாடி 90 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். 29 லிஸ்ட் ஏ போட்டிகளில் 42 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
- The Hundred கிரிக்கெட் தொடர் இறுதிப் போட்டி வருகிற 31ஆம் தேதி நடக்கிறது.
- இறுதிப் போட்டிக்கு முன்னேறிய அணிக்காக ஆடம் ஜம்பா விளையாட இருக்கிறார்.
இங்கிலாந்தில் 100 பந்து கொண்ட ஆண்களுக்கான "The Hundred" கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் 8 அணிகள் பங்கேற்று விளையாடின. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். ஒரு அணியுடன் மட்டும் 2 முறை மோத வேண்டும். புள்ளிகள் அடிப்படையில் முதல் இடம் பிடிக்கும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறும். அந்த வகையில் ஓவல் இன்பின்சிபிள்ஸ் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
இறுதிப் போட்டி நாளைமறுதினம் நடக்கிறது. எலிமினேட்டர் சுற்றில் நார்தன் சூப்பர் சார்ஜர்ஸ்- டிரென்ட் ராக்கெட்ஸ் அணிகள் நாளை பலப்பரீட்சை நடத்துகின்றன. புள்ளிகள் பட்டியில் 2ஆவது மற்றும் 3 ஆவது இடம் பிடித்த அணிகள் இதில் மோதுகின்றன.
இறுதிப் போட்டியில் மோதும் இன்பின்சிபிள்ஸ் (Oval Invincibles) அணியில் ஆடம் ஜம்பா இடம் பிடித்துள்ளார். இவர் தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்ற போட்டிகளில் விளையாடுவதற்காக சென்று விட்டார். தற்போது ஆஸ்திரேலியாவில் உள்ளார்.
அணி நிர்வாகம் இறுதிப் போட்டியில் விளையாட இவரை அழைத்துள்ளது. இதனால் ஆஸ்திரேலியாவில் இருந்து லண்டன் லார்ட்ஸ் மைதானத்திற்கு பறக்க உள்ளார். ஆஸ்திரேலியாவில் இருந்து லண்டன் சுமார் 34 ஆயிரம் கி.மீ. தொலைவில் உள்ளது. விமானத்தில் செல்ல வேண்டுமென்றால் 30 மணி நேரம் ஆகுமாம். இதனால் 20 பந்துகள் வீச ஆடம் ஜம்பா 34 ஆயிரம் கி.மீ. பறந்து செல்ல உள்ளார். இந்தத் தொடரில் ஒரு பந்து வீச்சாளர் 20 பந்துகள் மட்டுமே வீச முடியும்.
ஆஸ்திரேலியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் அக்டோபர் 1ஆம் தேதி தொடங்குகிறது. ஒருவேளை முதல் போட்டியில் ஜம்பா விளையாடுவதாக இருந்தால், லண்டனில் இருந்து உடனடியாக நியூசிலாந்துக்கு செல்ல வேண்டியதாக இருக்கும்.
- போட்டி முடிந்த பிறகு ஹர்பஜன் சிங் ஸ்ரீசந்தை தாக்கினார்.
- ஹர்பஜன் சிங் மீது கடும் விமர்சனம் வைக்கப்பட்டது.
ஐபிஎல் டி20 லீக் தொடர் 2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த தொடரில் மும்பை இந்தியன்ஸ்- பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி முடிவடைந்த நிலையில், வீரர்கள் பரஸ்பர கைக்கலுக்களில் ஈடுபட்டனர். அப்போது ஹர்பஜன் சிங்- ஸ்ரீசந்த் இடையே தகராறு ஏற்பட்டது. ஹர்பஜன் சிங் ஸ்ரீசந்த் கன்னத்தில் அறைந்தார். இந்த விவகாரம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. சீனியர் வீரரான ஹர்பஜன் சிங் நடத்தை கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
இருந்தபோதிலும் ஸ்ரீசந்த் கன்னத்தில் ஹர்பஜன் சிங் அறைந்தது தொடர்பான வீடியோ வெளியாகவில்லை. இந்த நிலையில் ஸ்ரீசந்த்-ஐ ஹர்பஜன் சிங் தாக்கும் வீடியோவை லலித் மோடி வெளியிட்டுள்ளார்.
2008ஆம் ஆண்டு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கும்- மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராகவும் நடைபெற்ற போட்டிக்குப் பிறகு ஹர்பஜன் சிங்- ஸ்ரீசந்த் இடையில் என்ன நடந்தது என்பது 17 வருடமாக யாரும் பார்க்கவில்லை. இன்று வரை பார்க்கவில்லை என லலித் மோடி அந்த சம்பவ வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அப்போது லலித் மோடி ஐபிஎல் போட்டிக்கான தலைவராக இருந்தார். இவர் பணமோசடியில் ஈடுபட்டதாக வழக்கு தொடரப்பட்டது. இதனால் இந்தியாவில் இருந்து தப்பியோடி வெளிநாட்டில் வசித்து வருகிறார்.
- சர்வதேச கிரிக்கெட்டில் 637 கிக்சர்கள் அடித்து முதலிடத்தில் உள்ளார்.
- 2ஆவதாக கிறிஸ் கெய்ல் 553 சிக்சர்கள் அடித்துள்ளார்.
இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேனாக திகழ்ந்து வருபவர் ரோகித் சர்மா. பந்துகளை அடிக்கடி சிக்சருக்கு பறக்க விடுவதால், இவரை ரசிகர்கள் செல்லமாக ஹிட்மேன் என அழைக்கிறார்கள்.
சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் விளாசிய பேட்டர் என்ற பெருமையை தன்வசம் வைத்துள்ளார். தற்போது வரை 637 சிக்சர்கள் அடித்துள்ளார். இவருக்கு அடுத்தப்படியாக உள்ள கிறிஸ் கெய்ல் 553 சிக்சர்கள்தான் அடித்துள்ளார்.
இந்த நிலையில், நீங்கள் சிக்சர் அடிக்க விரும்பும் பந்து வீச்சாளர் யார்? என அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ரோகித் சர்மா "உண்மையை சொல்ல வேண்டுமென்றால் அனைவரது பந்திலும் சிக்ஸ் அடிக்க விரும்புவேன். ஒரு குறிப்பிட்ட பந்து வீச்சாளரை தேர்வு செய்து அடிக்க வேண்டும் என்பது கிடையாது.
என்னுடைய மனநிலை எப்போதும் ஒரே மாதிரியான நிலையில்தான் இருக்கும். வரனும் சிக்ஸ் அடிக்கனும். இதுதான் என்னுடைய மனநிலை. யார் எனக்கு பந்து வீசுகிறார்கள் என்பது பெரிய விசயம் அல்ல" எனத் தெரிவித்து்ளளார்.
அடுத்த மாதம் 9ஆம் தேதி தொடங்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் விளையாட இருக்கிறது.






