என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆடம் ஜம்பா"

    • The Hundred கிரிக்கெட் தொடர் இறுதிப் போட்டி வருகிற 31ஆம் தேதி நடக்கிறது.
    • இறுதிப் போட்டிக்கு முன்னேறிய அணிக்காக ஆடம் ஜம்பா விளையாட இருக்கிறார்.

    இங்கிலாந்தில் 100 பந்து கொண்ட ஆண்களுக்கான "The Hundred" கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் 8 அணிகள் பங்கேற்று விளையாடின. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். ஒரு அணியுடன் மட்டும் 2 முறை மோத வேண்டும். புள்ளிகள் அடிப்படையில் முதல் இடம் பிடிக்கும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறும். அந்த வகையில் ஓவல் இன்பின்சிபிள்ஸ் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

    இறுதிப் போட்டி நாளைமறுதினம் நடக்கிறது. எலிமினேட்டர் சுற்றில் நார்தன் சூப்பர் சார்ஜர்ஸ்- டிரென்ட் ராக்கெட்ஸ் அணிகள் நாளை பலப்பரீட்சை நடத்துகின்றன. புள்ளிகள் பட்டியில் 2ஆவது மற்றும் 3 ஆவது இடம் பிடித்த அணிகள் இதில் மோதுகின்றன.

    இறுதிப் போட்டியில் மோதும் இன்பின்சிபிள்ஸ் (Oval Invincibles) அணியில் ஆடம் ஜம்பா இடம் பிடித்துள்ளார். இவர் தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்ற போட்டிகளில் விளையாடுவதற்காக சென்று விட்டார். தற்போது ஆஸ்திரேலியாவில் உள்ளார்.

    அணி நிர்வாகம் இறுதிப் போட்டியில் விளையாட இவரை அழைத்துள்ளது. இதனால் ஆஸ்திரேலியாவில் இருந்து லண்டன் லார்ட்ஸ் மைதானத்திற்கு பறக்க உள்ளார். ஆஸ்திரேலியாவில் இருந்து லண்டன் சுமார் 34 ஆயிரம் கி.மீ. தொலைவில் உள்ளது. விமானத்தில் செல்ல வேண்டுமென்றால் 30 மணி நேரம் ஆகுமாம். இதனால் 20 பந்துகள் வீச ஆடம் ஜம்பா 34 ஆயிரம் கி.மீ. பறந்து செல்ல உள்ளார். இந்தத் தொடரில் ஒரு பந்து வீச்சாளர் 20 பந்துகள் மட்டுமே வீச முடியும்.

    ஆஸ்திரேலியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் அக்டோபர் 1ஆம் தேதி தொடங்குகிறது. ஒருவேளை முதல் போட்டியில் ஜம்பா விளையாடுவதாக இருந்தால், லண்டனில் இருந்து உடனடியாக நியூசிலாந்துக்கு செல்ல வேண்டியதாக இருக்கும்.

    • சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி புள்ளிப்பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது.
    • 21 வயதான கர்நாடகாவை சேர்ந்த இடதுகை ஆட்டக்காரரை SRH ஒப்பந்தம் செய்துள்ளது.

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது கடந்த மாதம் 22-ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பேட் கம்மிஸ்ஸ் தலைமையில் பங்கேற்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி புள்ளிப்பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது.

    இந்நிலையில் இந்த தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளில் இருந்து அந்த அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான ஆடம் ஜாம்பா காயம் காரணமாக வெளியேறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஆடம் ஜம்பாவிற்கு பதிலாக 21 வயதான கர்நாடகாவை சேர்ந்த இடதுகை ஆட்டக்காரரான ஸ்மரண் ரவிச்சந்திரன் என்பவரை அவரது அடிப்படை விலையான 30 லட்சத்திற்கு சன்ரைசர்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது. 

    ஸ்மரண் ரவிச்சந்திரன் கர்நாடகா அணிக்காக இதுவரை 7 முதல்தர போட்டிகளில் விளையாடி 64 ரன்கள் சராசரியுடன் 500 ரன்கள் குவித்துள்ளார். அதில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஒரு இரட்டை சதமும் அடங்கும். அதே போன்று லிஸ்ட் ஏ போட்டியில் 10 ஆட்டங்களில் விளையாடியுள்ள அவர் 72 ரன்கள் சராசரியுடனும் 2 சதங்களுடனும் 433 ரன்களை குவித்துள்ளார்.

    அதேபோன்று 6 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 170 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 170 ரன்களை குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • முதலில் பேட் செய்த ரினிகேட்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்கள் எடுத்தது.
    • நடுவர்களின் தீர்ப்பும் கொண்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

    ஆஸ்திரேலியாவில் நடக்கும் பிக்பாஸ் டி20 லீக்கில் நடந்த ஆட்டத்தில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் மற்றும் மெல்போர்ன் ரினிகேட்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் பேட் செய்த ரினிகேட்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்கள் எடுத்தது.

    இதனையடுத்து களமிறங்கிய மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 108 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதனால் ரினிகேட்ஸ் அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியின் கேப்டன் ஆடம் ஜம்பா, இந்த போட்டியின் கடைசி ஓவரின் 5-வது பந்தை வீசியபோது பவுலிங் முனையில் இருந்த பேட்ஸ்மேன் ரோஜர்ஸ் பந்துவீசும் முன்பாக கிரீஸை விட்டு வெளியேறினார். இதை கவனித்த ஜம்பா, மன்கட் முறையில் அவரை ரன் அவுட் செய்தார். இது 3-வது நடுவரின் ரிவ்யூக்கு சென்றது.


    மேலோட்டமாக பார்க்கும்போது எல்லாம் சரியாக இருந்து, அவுட் என்று அறிவிக்கப்படும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், பந்துவீசும்போது பவுலரின் கை, 90 டிகிரிக்கும் குறைவான கோணத்தில் இருக்க வேண்டும் என்பது விதி. இதை மீறி, 90 டிகிரியையும் தாண்டி ஜம்பாவின் கை சென்றுள்ளது. இதன் அடிப்படையில் ரன் அவுட் கிடையாது என்று நடுவர்கள் முடிவை அறிவித்தனர்.


    அதாவது பவுரின் கை, முன்னால் சென்று விடக்கூடாது என்பது விதிமுறை. அதற்காக இந்த 90 டிகிரி கோண அளவீடு கணக்கிடப்படுகிறது. ஜம்பாவின் மன்கட் அப்பீலும், நடுவர்களின் தீர்ப்பும் கொண்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

    • டி20 உலக கோப்பை தொடரின் ஆஸ்திரேலியா தனது முதல் போட்டியில் நியூசிலாந்திடம் தோல்வி அடைந்தது.
    • நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் ஆடம் ஜாம்பா ஒரு விக்கெட் வீழ்த்தி இருந்தார்.

    பெர்த்:

    டி20 உலக கோப்பையில் ஆஸ்திரேலியா, இலங்கை அணிகள் இன்று மோதுகின்றன. முதல் போட்டியில் நியூசிலாந்து அணியிடம் ஆஸ்திரேலியா தோல்வி அடைந்தது. நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் ஆடம் ஜாம்பா ஒரு விக்கெட் வீழ்த்தி இருந்தார்.

    இந்நிலையில், ஆஸ்திரேலிய பந்துவீச்சாலர் ஆடம் ஜம்பாவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, இலங்கைக்கு எதிரான இன்றைய போட்டியில் அவர் இடம்பெறவில்லை என அந்த அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் தெரிவித்துள்ளார். அவருக்கு பதிலாக ஆஷ்டன் அகர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    • நியூசிலாந்து, ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரில் மீண்டும் ஜம்பா இணைந்துள்ளார்.
    • ஆஷ்டன் அகர், சீன் அபோட் ஆகியோர் ஆஸ்திரேலியா அணியில் இடம் பெற்றுள்ளனர்.

    ஆஸ்திரேலியா அணி ஆகஸ்டு மாதம் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் அதை தொடர்ந்து நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரிலும் விளையாட உள்ளது. இந்த இரு அணிகளுக்கு எதிரான ஆஸ்திரேலியா ஒருநாள் அணி அறிவிக்கப்பட்டது.

    இதில் ஆஸ்திரேலியா டெஸ்ட் அணியின் கேப்டன் பேட் கம்மின்சுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. மேலும் சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜம்பா ஒருநாள் அணியில் இடம் பிடித்துள்ளார். இதற்கு முன்பு இலங்கை அணிக்கு எதிரான தொடரில் அவர் இடம் பெறவில்லை. அவரது மனைவிக்கு குழந்தை பிறந்த காரணத்தால் அந்த தொடரில் இருந்து விலகினார்.

    இந்நிலையில் நியூசிலாந்து, ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரில் மீண்டும் ஜம்பா இணைந்துள்ளார். அதே நேரத்தில் ஆஷ்டன் அகர், சீன் அபோட் அணியில் இடம் பெற்றுள்ளனர்.

    இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இடம் பெற்ற மிட்செல் ஸ்வெப்சன், ஜோஷ் இங்கிலிஸ், ரிச்சர்ட்சன் மற்றும் மேத்யூ குஹ்னெமன் ஆகியோர் இந்த அணியில் இடம் பெறவில்லை.

    ×